Wednesday, May 18, 2016

புண்யாகவாசனம்

புண்யாகவாசனம்
பு - பாபநாசனம்
ண்ய - தேகசுத்தி
ஹ - ஸ்தான (இட)சுத்தி
பாபநாசத்தையும், தேகசுத்தியையும் ஸ்தானசுத்தியையும் தருவதால் "புண்யாகவாசனம்" என்ற பெயர்பெற்றது. இதை விக்னேஸ்வர பூஜைக்குப் பின் செய்ய வேண்டும்.
புண்யாகவாசனம், சர்வபாபத்தையும் போக்குவதாலும், சர்வசித்திகளையும் உண்டாக்குவதாலும், நித்யகர்மாக்களிலும், விசேஷக்கிரியைகளிலும், இஷ்டமான கார்யம் (காம்யம்) செய்யும் போதும் இடங்களை சுத்தமாக்கும்போதும், பிம்பங்களைச் சுத்தமாக்க விரும்பும்போதும் மற்ற மங்களகரமான காரியங்களை மேற்கொள்ளும்போதும் புண்யாகவாசனம் செய்ய வேண்டும்.
ஏன் செய்யவேண்டுமென்றால், எல்லா காரியங்களையும் செய்யும்போதும் புண்யாகவாசன ஜலத்தைப் புரோக்ஷணம் செய்வதானது சுபத்தைத்தரும். செய்யும் கிரியை மூலம் நல்ல பலனைக் கொடுக்கச் செய்யும். இல்லையெனில் அநேக இடையூறுகள் வந்து சேரும். எனவே, அவசியம் புண்யாகவாசனம் செய்தல் வேண்டும். மேலும், எங்கெல்லாம் புண்யாகவாசனம் இன்றி செயல்கள் செய்யப்படுகின்றனவோ அங்கெல்லாம் அச்செயல்கள் எந்தவித நற்பலனையும் தராது. மாறாக, அங்கு பூத, பிரேத, பிசாசங்கள் வந்து கூடும் என்று காரணாகமம் கூறுகிறது. எனவே, அவசியம் புண்யாகவாசனம் செய்வது நன்மை பயக்கும்.
விநாயகர் பூஜைக்குப் பின்னரும் மற்ற செயல்களைத் தொடங்கும் முன்னரும் புண்யாகவாசனத்தைச் செய்ய வேண்டும்.
புண்யாகவாசனம் மூவகையாகச் சொல்லப்படுகிறது.
1. சுத்தம் 2. மிஸ்ரம் 3. கேவலம்.
(1) சுத்தம்: சாங்கமான ஆவரணத்தோடும் அந்தந்த தியானத்தோடும் வேத மந்திரங்களோடும் வருணனை ஆவாஹித்துப் பூஜிப்பது சுத்தம் எனப்படும்.
(2) மிஸ்ரம்: ஆவரண பூஜையின்றி வேத மந்திரங்களை மட்டும் சொல்லி ஆவாஹித்து பூஜிப்பது மிஸ்ரம் எனப்படும்.
(3) கேவலம்: வருணனின் பெயர்களை மட்டும் சொல்லிப் பூஜிப்பது கேவலம் எனப்படும்.
சிவாலயங்களில் சுத்த புண்யாகவாசனத்தையும், பிதுர் காரியங்களில் மிஸ்ர புண்யாகவாசனத்தையும், அந்தியேஷ்டியில் கேவல புண்யாகவாசனத்தையும் செய்தல் வேண்டும்.
இதில நித்தியம், நைமித்தியம், காமியம் இவைகளில் சுத்த புண்யாகவாசனமே செய்தல் வேண்டும்.

No comments:

Post a Comment