Thursday, May 5, 2016

இந்து மதத்தின் படி பெண்கள் எப்படி இருக்க வேண்டும் !

இந்து மதத்தின் படி பெண்கள் எப்படி இருக்க வேண்டும் !


ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் வாழ்க்கையின் அடித்தளம்பெண்மையே ஆகும். பெண் ஆணுக்குத் 
தாயாய், சகோதரியாய், மனைவியாய், மகளா ய் இன்னும் பல வகைகளில் உறவு உடைய வளாகி நலம் செய்கிறாள். சிறந்த பெண்ணொருத்தி தான் வாழும் இல்லத்தையே கோவிலாக மாற்றுகிறாள்.
குடும்பம் அமை தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது குடு ம்பத் தலைவியின் கையில் தான் இருக்கிற து. கணவனையும், கணவன் வீட்டாரையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னை அமை த்துக் கொள்ளும் பெண் வாழ்க்கையில் வெற்றி அடைகிறாள்.
கணவனை எப்பொழு தும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதோ அல்லது வேதனையில் ஆழ்த்துவதோமனைவியின் கையில்தான் இருக்கி றது. நல்ல மனைவி எண்ணத்தால் கூட கணவனை விட்டு விலகி இருக்கக் கூடாது.
மனித வாழ்வின் மகத்துவம் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதிலே தான் இருக்கிறது. விட்டுக் கொடுத்தல் எனும் பண்பு குடும்ப வாழ்விற்கு மிகவும் முக்கியமானது என்பதை மனைவியே உணர வேண்டும்.
பெண்கள் எப்படி இருக்க வேண்டும் !
பெண்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதி க்கத் துணிவு கொள்ள வேண்டும்.
பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜையறையில் திரு விளக்கேற்றி வைக்க வேண்டும்.
பெண்கள் எப்பொழுதும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
பெண்கள் இரவில் விளக்கு வைத்தபின்பு அழக்கூடாது.
சுமங்கலிப் பெண்கள் நெற்றியில் குங்குமத் திலகமிட்டுக் கொள்வது அவசியம்.
பெண்கள் கைகளில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக்  கூடாது.

வீட்டிற்கு யாரும் சுமங்கலிகள் வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்பதுடன் மட்டும் அல்லாமல் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள் இவற்றுடன் குங்குமமும் கொடுக்க வேண்டும்.

1 comment:

  1. இந்து முறைபடி ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும்...

    ReplyDelete