Sunday, May 1, 2016

அகத்திய முனிவருக்கு "லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையை எடுத்துரைத்தவர் ஹயக்ரீவர்.

அகத்திய முனிவருக்கு "லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையை எடுத்துரைத்தவர் ஹயக்ரீவர்.
இதைக் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், எந்த தலத்திற்கு சென்று இதை அம்மன் முன் சொல்வது? என்று ஹயக்ரீவரிடம் வேண்டினார் .அகத்தியரை திருமியச்சூர் கோவிலுக்கு சென்று சொல்ல சொன்னார் ஹயக்ரீவர் .அதன்படியே, அகத்தியரும், அவர் மனைவியும் திருமியச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து லலிதா சகஸ்ர நாமத்தை சொன்னார்கள்.
அம்பாள் மகிழ்ந்து நவரத்தினங்களாக காட்சி தந்தாள் .அப்போது பாடியதுதான்
"நவரத்தின மாலை"
ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்
"ஞானானந்த மயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே "
பிள்ளைகள் அனைவரும் மன அமைதியுடன் கல்வி கற்று, சிறப்புடன் தேர்ச்சி அடைய இந்த பாடலை பாடி பயன் பெறுங்கள்.
ஹயக்ரீவருக்கு வேக வைத்த கடலை பருப்பில் வெல்லம், தேங்காய் கலந்து நெய்வேத்தியம் செய்து வழிபட்டால், குறைவற்ற கல்வியை அள்ளி தருவார்

No comments:

Post a Comment