Saturday, June 25, 2016

கல்வி முடிந்து வெளியேறுகின்ற மாணவர்களுக்கு, பிரியும் வேளையில் ஆச்சாரியார் அளிக்கும் செய்தி

கல்வி முடிந்து வெளியேறுகின்ற மாணவர்களுக்கு, பிரியும் வேளையில் ஆச்சாரியார் அளிக்கும் செய்தி போல் அமைகிறது இந்தப் பகுதி. குருகுல வாசம் முடிந்த பின் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான 15 கடமைகள் இதில் கூறப்படுகின்றன.
வேதமனூச்யாசார்யோ அந்தேவாஸினமனுசாஸ்தி I ஸத்யம் வத I
தர்மம் சர I ஸ்வாத்யாயான்மா ப்ரமதக : I ஆசார்யாய ப்ரியம்
தனமாஹ்ருத்ய ப்ரஜாதந்தும் மா வ்யவச்சேத்ஸி: II 11.1 II
பொருள்: வேதங்களைக் கற்பித்த பிறகு ஆச்சாரியார் மாணவர்களுக்கு சில அறநெறிகளைப் போதிக்கிறார்:
உண்மை பேசுங்கள். தர்ம வழியில் செல்லுங்கள். கல்வியைக் கைவிடாதீர்கள். ஆச்சாரியனுக்கு விருப்பமான செல்வத்தைக் கொடுத்து அவரை மன நிறைவு பெறச் செய்யுங்கள்; சந்ததிச் சங்கிலியை வெட்டாதீர்கள்.
(இந்த ஸ்லோகத்திலிருந்து அந்தக் காலக் கல்வி முறை பற்றி சற்று சிந்தித்து அறியலாம்! ஆசார்யனிடம் கல்வி கற்க பல மாணவர்கள் குருகுலத்துக்கு வருகிறார்கள்! இங்கு பிரச்சன உபநிஷதத்தில் அதே போல நான்கு மகான்கள் இன்னொரு முனிவரிடம் தமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வருகிறார்கள்! அவர்களைப் பரீட்சித்து சிக்ஷை அளிக்க எண்ணிய ஆசாரியார் அவர்களை ஓராண்டு குருகுலப் பணியில் ஈடுபட வைக்கிறார்; அவர்கள் ஈடுபாட்டைக் கண்டு முடிவெடுத்த பின் மட்டுமே சிக்ஷை அளிக்கிறார்! ஆனால் அவர்கள் சிக்ஷை பெற வருகையில் ஆசார்யாருக்கு கொண்டு வந்த பீஸ் என்ன தெரியுமா? நான்கு பேரும் சமித்துக் கட்டுகளை மட்டுமே கொணர்ந்தனர்! சமித்து யாகங்களுக்கு மிகவும் தேவைப்படுவது; எந்த குருவும் அந்தக் காலத்தில் சிக்ஷை அளிக்க பீஸ் கேட்டதில்லை; சிக்ஷை முடிந்த பின்னால் தான் குரு தட்சணை கொடுக்க வேண்டும்! அதுவும் கூட இப்போது நாம் இந்த கோரசுக்கு இத்தனை லட்சம் ரூபாய்கள் ஆரம்பத்திலேயே பீஸ் கட்டுகிறோமல்லவா அது போலவெல்லாம் கிடையாது. சிஷ்யனின் குடும்ப நிலையை அனுசரித்து என்ன இயலுமோ அதை கொடுத்தால் போதும்! ஏழை மாணவன் ஒரு தேங்காயை குருதட்சிணை ஆக அளித்தாலும் குருவுக்கு சம்மதமே! அதே நேரம் பணக்காரன் ஒருவனின் மகன் அவன் சக்திக்கு அளித்தால் மட்டுமே குருவின் விருப்பம் பூர்த்தியாகும்! அப்போதுதான் குருகுலத்தை நடத்த இயலும்! நன்றாக யோசித்தால் குருகுலம் என்பது அந்தக் காலத்தில் மாணவர்களுக்கு தங்குமிடம்,உணவு, உடை, நல்ல கல்வி, ஞானம், வேத அறிவு இப்படிப் பலவற்றை இலவசமாகவே கல்வி முடியும் வரை கொடுத்து வந்தன! என்ன அந்தக் கால அரசர்கள் பலரும் குருகுலங்களுக்கு செல்வத்தை வாரி வழங்கினர்; அன்று உண்மைக் கல்வி வென்றது! )
ஸத்யான்ன ப்ரமதிதவ்யம் I தர்மான்ன ப்ரமதிதிவ்யம் I குசலான்ன
ப்ரமதிதிவ்யம் I பூத்யை ந ப்ரமதிதிவ்யம் I ஸ்வாத்யாய ப்ரவசனாப்யாம் ந
ப்ரமதிதிவ்யம் I தேவபித்ரு கார்யாப்யாம் ந ப்ரமதிதிவ்யம் II 11.2 II
பொருள்: உண்மையிலிருந்து விலகாதீர்கள். தர்மத்திலிருந்து விலகாதீர்கள். நன்மை தருபவற்றிலிருந்து விலகாதீர்கள். நற்செயல்களிலிருந்து விலகாதீர்கள். கற்பதிலிருந்தும் கற்றுக் கொடுப்பதிலிருந்தும் விலகாதீர்கள். தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகாதீர்கள்.

No comments:

Post a Comment