Saturday, December 2, 2017

வீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்?

வீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன?

 

 
தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்தத் தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.
வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை. இந்தக் கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திருவிளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.
தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்:
• கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.
• பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.
• சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.
• தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும்.
• திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டில் அண்டாது.
• மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.
தீபத்தின் வகைகள்:
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபங்களில் பலவகைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
சித்ர தீபம்
வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.
மாலா தீபம்
அடுக்கடுக்கான தீபத் தட்டுகனில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.
ஆகாச தீபம்
வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.
ஜல தீபம்
தீபத்தை எற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.
படகு தீபம்
கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்குப் பெயர் படகு தீபம் ஆகும்.
சர்வ தீபம்
வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகம்.
மோட்ச தீபம்
முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.
சர்வாலய தீபம்
கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.
அகண்ட தீபம்
மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.
லட்ச தீபம்
ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும்.
மாவிளக்கு தீபம்
அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்

Thursday, November 30, 2017

சண்முகக் கவசத்தின் மகிமை

சண்முகக் கவசத்தின் மகிமை
முருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையோடு முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் பாம்பன்சுவாமிகள்.இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்ற நூலாகும். கந்த சஷ்டி கவசம் போல் இது பயமும் நோயும் தீர்க்கும் மருந்து என்றால் மிகையில்லை;
பாம்பன் சுவாமிகள்,சென்னையில் இருக்கும் தம்புச்செட்டித் தெருவில் செல்லும்போது எதிர்பாராமல் குதிரைவண்டி மோதியதில் இடக்காலில் முறிவு ஏற்பட்டது.73 வயதில் நேர்ந்த இந்த விபத்தால் இனி சுவாமிகளால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
சுவாமிகள் மீது அன்பு கொண்ட சில பக்தர்கள்,அவர் அருகே அமர்ந்து சண்முகக் கவசத்தை விடாமல் நம்பிக்கையோடு பாராயணம் செய்து வந்தனர். “சீருடைக் கணைக்கால் தன்னை சீரலை வாய்த்தே காக்க”என்னும் அடியைப் பாடியபோது சுவாமிகளின் கால் குணமானது.அப்போது வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்து ஆடிய காட்சியை சுவாமிகள் கண்டார்.
தமிழில் இருக்கும் உயிர் எழுத்துக்கள் 12 ஐயும்,மெய் எழுத்துக்கள் 18 ஐயும்,முதல் எழுத்தாகக் கொண்டு 30 பாடல்களுடன் பாடப்பட்டது சண்முக கவசம்.தினமும் ஆறுமுறை சண்முக கவசத்தைப் பாடுபவர்கள் எத்தகைய நோயிலிருந்தும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.குறிப்பாக முருகக் கடவுள் பிறந்த வைகாசி விசாகத்தன்று பாடினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.--------------------------------------------------------------““சண்முக கவசம்”-பாம்பன் சுவாமிகள்-ஆரோக்யமாக இருக்க, நோய்நொடிகள் நீங்க- தினமும்/வேண்டும் போது
அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருளது ஆகித்
ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க
இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை
முருகவேல் காக்க, நாப்பல் முழுதும் நல் குமரன் காக்க
துரிசுஅறு கதுப்பை யானைத்துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ரமணியன் காக்க
ஈசனாம் வாகுலேயன் எனது சுந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருமகன் காக்க
ஆசுஇலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்
ஏசுஇலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க
உறுதியாய் முன்கை தன்னை உமையிளமதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால்மருகன் காக்க, பின்முதுகைச் சேய் காக்க
ஊண்நிறை வயிற்விற மஞ்சை ஊர்தியோன் காக்க, வம்புத்
தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய
நாணினை அங்கி கௌரி நந்தனன் காக்க, பீஜ
ஆணியைக் கந்தன் காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க
எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
அஞ்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சரன் நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க
ஓங்கிய சீற்றமே கொண்டு உவணியில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க
ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனை மல்கட்டத்
தவ்வியே வருவாராயின் சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன் கை அயில் காக்க காக்க
கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
நடையுடை எதனாலேனும் நான் இடர்ப் பட்டிடாமல்
சடிதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க
நகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையால் எற்குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க
சலத்தில்உய் வன்மீன் ஏறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
நிலத்திலும் சலத்திலும்தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால் நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க
ஞமலியம் பரியன் கைவேல், நவக்கிரகக் கோள் காக்க
சும விழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,
திமிர்கழல் வாசம், சோகை, சிரமடி கர்ண ரோகம்
எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க
டமருகத்து அடிபோல் நைக்கும் தலையடி, கண்டமாலை
குமுறு விப்புறுதி, குன்மம், குடல்வலி ஈழை காசம்,
நிமிரொணாது இருந்தும்செட்டை நீர்ப்பிரமேகம எல்லாம்
எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க
இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை தீமந்தம்
சணத்திலே கொல்லும் சன்னிசாலம் என்று அறையும் இந்த
பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும் சக்தி வடிவேல் காக்க
தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க
நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்ப கந்தராதி
இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க
பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்க
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம் ஐ ரீம்வேல் காக்க
மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும் சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும்வேறு எந்தஇடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர் சஷ்டி நாதன் வேல் காக்க காக்க
யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
அசுரமே முதலாம் ஈராறு அம்பகன் வேலின் காக்க
சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க
சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க
ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய் வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்
எஞ்சிடாக் கதிர்காமத்தோன் இகலுடைக் கரவேல் காக்க
லகரமே போல் காளிங்கன் நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்
நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்
இகல் அயில்காக்க, வாயிவினில் குகன் கதிர்வேல் காக்க
வடதிசை தன்னில் ஈசன் மகன் அருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும் ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில்,
கீழ்க்கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க
இழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும்நல்ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்
பழஞ்சுரார் போற்றும் பாதம்பணிந்து நெஞ்சுஅடக்கும் போதும்
செழும் குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க
இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளர் அறுமுகச் சிவன்தாம் வந்தெனைக் காக்க காக்க
ஒளிஎழு காலை, முன்எல், ஓம்சிவ சாமி காக்க
திளிநாடு பிறபகல்கால் சிவகுரு நாதன் காக்க
இறகுடைக்கோழித் தோகைக்கு இறை முன் இராவில் காக்க
திறலுடைச் சூர்ப்பகைத்தே திகழ் பின் இராவில் காக்க
நறவுசேர் தாள் சிலம்பன் நடிநிசி தன்னில் காக்க
மறைதொழு குகன் எம்கோன் மாறாது காக்க காக்க
இனம் எனத்தொண்டரோடு இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந்தன்னில் சரவண பவனார் காக்க
நனி அனுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்க வந்தே!

சுவாசம் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்

மூச்சுப் பயிற்சியின் ரகசியம் :
கோரக்கர் சந்திரரேகை என்ற நூலில் கோரக்கர் சித்தர் ,  மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது வடக்குப் பக்கம் பார்த்தவாறு கைகால்களை ஆட்டாமல் அசைக்காமல் நிமிர்ந்த வாக்கில் அமர்ந்து கொண்டு மூச்சை சூரிய கலையிலும், சந்திர கலையிலும் மாற்றி மாற்றி இழுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் கைகால்களை ஆட்டாமல் கை வைக்காமல் மூச்சுப் பயிற்சி எப்படி செய்வது , அவ்வாறு செய்யும் முறை உண்டா?
" காற்றே கடவுள் "
அனைவரும் மறைத்து வைத்த சூட்சுமத்தை திறக்கின்றோம். இந்த சரீரத்துள்ளே எண்ணற்ற ரகசியங்களை இறைவன் புதைத்து வைத்துள்ளான். அது எவ்வாறு என்று வெளிப்படையாக கூறுகின்றோம்.
ஒரு நாழிகைக்கு 360 சுவாசம் , ஒரு நாளைக்கு 21,600 சுவாசம். மூச்சுப் பயிற்சியில் " பூரகம் " என்பது மூச்சை உள்ளே இழுப்பது, " கும்பகம் " என்பது உள்வாங்கிய மூச்சை (காற்று) உள்ளே நிறுத்துவது, " ரேசகம் " என்பது மூச்சை வெளியிடுவது. நமக்கு எந்த நாசியில் சுவாசம் ஒடுகின்றதோ அதற்கு "பூரணம் " என்று பெயர்.
" சீதாக்காயம் " என்று கோரக்கர்  சித்தர் கூறியிருக்கிறார். சீதாக்காயம் என்பது நமது நாசி (மூக்கு ) தான். நாசிக்குமேல் காசி என்று கூறுவார்கள். அது என்னவென்றால் " சுழிமுனை" என்து ஆகும்.
              நமக்கு இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசியில் சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும். இரண்டு நாசிகளிலும், மூச்சுக் காற்று வந்தால் அதற்கு " சுழிமுனை " என்று பெயர். பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரிய கலையில் ஓடும். அதிக வெயில் அடிக்கும் பொழுது சந்திர கலையில் சுவாசம் ஓடும். இது இயற்கையாகவே அமைந்துள்ள அற்புதம் ஆகும். ஏனெனில் உடலில் சூடும், குளிர்ச்சியும், சமநிலையில் இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு குறைபாடு இந்தாலும் நமது உடலல் பல உபாதைகள் ஏற்படும். நம் மூச்சுக் காற்றிலே இறைவன் எவ்வளவு சூட்சுமத்தை வைத்துள்ளான் பார்த்தீர்களா?
உடலைச் கீங்காரித்தாய் !
உயிர்க்கு என்ன செய்தாய் ?
மேலும் ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் மூன்று நாட்கள் ஓடினால் அவருக்கு ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஒடினால் மூன்று மாதத்தில் மரணம் ஏற்படும். சூரிய கலையில் ஓடக்கூடிய காற்று 8 அங்குலம் . சந்திர கலையில் ஓடும்
காற்று 16 அங்குலம். மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும். இதே முறையில் ஒரு வனுக்கு சுவாசம் தொடர்ந்து ஓடினால் அவன் 120 வருடங்கள் வாழ்வான். இவ்வாறு சுவாசம் குறைய ஆயுளும் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.
               அதனால்தான், சுவாசத்தை அடக்குவதால் ஆமைகள் 300 வருடங்கள், 400 வருடங்கள் வாழ்கின்றன. அதேபோல்தான் பாம்பு 800 வருடம், 1000 வருடம் வாழ்கின்றன. இதைப் பற்றி உணர்ந்த நாம் பின்பற்றுவதில்லை.
நம்முள் சுவாசம் நடக்கும் அளவு
அமர்ந்திக்கும் போது - 12 அங்குலம்
நடக்கும் போது             - 16 அங்குலம்
ஓடும் போது                  - 25 அங்குலம்
உறங்கும் போது          - 36 அங்குலம்
உடலுறவு கொள்ளும் - 64 அங்குலம் போது
சுவாசம் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்
11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்
10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்
9 அங்குலமாக குறைந்தால்  விவேகி ஆவான்
8 அங்குலமாக குறைந்தால்  தூர திருஷ்டி காண்பான்
7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்
6 அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்
5 அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும்
4 அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும்
3 அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்
உதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை அன்ன பாணம் நீங்கும்
எந்தெந்த நாட்கள் எந்த சுவாசம் ஓட வேண்டும்  என்பதைப் பற்றி காண்போம்
ஞாயிறு, செவ்வாய் , சனி – இம் மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும்.
வெள்ளி, திங்கள் , புதன் – இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும்.
வியாழக்கிழமை -பூர்வபட்சம் (வளர்பிறை) –சந்திர கலை ஓட வேண்டும்.
அமரபட்சம் (தேய்பிறை ) – சூரிய கலை ஓட வேண்டும்.
இம் முறையில், அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்கு வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும். சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.

64 உபசாரங்கள்

64 உபசாரங்கள்
1.பாத்யம் - - திருவடிவகளைக் கழுவதற்கான தீர்த்தம் கொடுத்தல்.
2.ஆவராணாவரோபணம் --- -நகைகளை கழற்றுதல்.
3.ஸுகந்திதைலாப்யங்கம் -- வாஸனை எண்ணை தேய்த்தல்.
4. மஞ்ஜனசாலாப்ரவேசனம் - குளியலறைக்குச் செல்லுதல்.
5. மஞ்ஜனசாலாமணிபீடோபவேசனம் -குளியலறையிலிலுள்ள மணிமயஆஸனத்திலிருத்தல்
6. திவ்யஸ்னானீயோத் வர்த்தனம் - ஸ்நானத்திற்குரிய வாஸனைப் பொடிகளை சரீரத்தில்
தேய்த்தல்.
7. உஷ்ணோதகஸ்நானம் - வென்னீரில் குளித்தல்.
8. கனககலசச்யுதஸகலதீர்த்தாபிஷேகம்- தங்கமயமான குடங்களிலிருந்துகொட்டும் எல்லாவித தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்தல்.
9. தௌதவஸ்த்ரபரிமார்ஜ்ஜனம் -வெளுத்ததுணியால் உடம்பு துடைத்தல்
10. அருணதுகூலபரிதானம் - சிவப்பு பட்டை உடுத்துதல்.
11.அருணகுசோத்தரீயம் -சிவப்பு ரவிக்கை அணிவித்தல்.
12. ஆலேபமண்டபப்ரவேசனம் - அலங்கார அறைக்குச் செல்லுதல்.
13. ஆலேபமண்டப மணிபீடோபவேசனம் -மேற்கூறின அறையில் உள்ள ரத்னமயமான பீடத்தில் இருத்தல்.
14.சந்தனாகரு குங்கும ம்ருகமத கஸ்தூரி கோரோசனாதி திவ்யகந்தஸர்வாங்கீண விலேபனம் - அகில்,குங்குமப்பூ, புனுகு, பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, கோரோசனை முதலான வாஸனை வஸ்துக்கள் கலந்த உயர்ந்த சந்தனத்தை உடம்பில் பூசுதல்.
15. கேசபாரஸ்ய காலாகருதூபம் - தலை காய்வதற்கும், வாசனைக்கும் தூபமிடுதல்
16.மல்லிகா, மாலதி, ஜாதி,சம்பகா சோக சதபத்ர பூக குஹளி, புன்னாக கல்ஹார முக்யஸர்வர்த்து குஸுமமாலா: - மல்லிகை(பிச்சகம்-பிச்சி)மாலதி, சம்பகம், அசோகம் தாமரை, பாக்குப் பூ, குஹளி,(வாழைப்பூவில் இருக்கும் கேஸரம்) புன்னைப்பூ, செங்கழுநீர், ஆறுருதுக்களிலும் உண்டானவையாவும் வாசனையாயும் இருக்கும்புஷ்பங்களால் கட்டப்பட்ட மாலைகள்.
17. பூஷண மண்டபப்ரவேசனம் - நகைகள் அணிவதற்காக உள்ள அறையில் செல்லுதல்
18. பூஷண மண்டமணிபீடோபவேசனம் - முன்கூறிய அறையில் ரத்னபீடத்தில் இருத்தல்.
19. நவமணிமகுடம் -புதிதான ரத்ன கிரீடம் அணிதல்.
20. சந்த்ர சகலம் -சந்த்ர கலை.
21.ஸீமந்தஸிந்தூரம் -வகிட்டில் ஸிந்தூரம் வைத்தல்
22. திலகரத்னம் - நெற்றிப்பொட்டில் வைக்கும் ரத்னம்.
23. காலாஞ்ஜனம் - கறுப்பு மை.
24. வாளீயுகளம் - காதுகளில் அணியும் வாளி என்ற நகை (ஜிமிக்கி என்பர் இப்போது)
25. மணிகுண்டலயுகளம் - ரத்ன குண்டலங்கள்.
26. நாஸாபரணம் - மூக்குத்தி - புல்லாக்கு.
27. அதரயாவகம் - உதட்டின் சிவப்புசாயம்
28. ப்ரதமபூஷணம் - மாங்கல்யம்.
29. கனகசிந்தாகம் - தங்கமயமான புளியிலை போன்ற நகை.
30. பதகம் - பதக்கம்
31. மஹாபதகம் - நவரத்னங்கள் இழைத்த ஸ்ரீ சக்ரம்(பெரியோர் கூற்று)
32. முக்தாவலி - முத்துமாலை.
33. ஏகாவளி - ஒருவடமாலை (நக்ஷ்த்ர மாலை)
34. ச்சன்னவீரம் - ஒரு ஆபரண விசேஷம்.
35. கேயூரயுகளசதுஷ்டயம் - ஒவ்வொருகையிலும் இரண்டிரண்டு தோள் வளைகள்.
36. வலயாவளி - வளைகள்.
37. ஊர்மிகாவளி - மோதிரங்கள்.
38. காஞ்சீதாம -ஒட்டியாணம்.
39. கடிஸூத்ரம் - அரைஞாண்கயிறு.
40. ஸௌபாக்யாபரணம் -அரை மூடி(அரசிலை).
41. பாதகடகம் -கால்காப்பு.
42. ரத்னநூபுரம் - ரத்னமயமான கொலுசு
43. பாதாங்குளீயகம் - கால்மெட்டி.
44. ஏககரேபாசம் - ஓர்கையில் பாசக்கயிறு.
45. அன்யகரேஅங்குசம் -மற்றொருகையில் தொரட்டி
46. இதரகரேபுண்ட்ரேக்ஷுசாபம் - வேறொருகையில் நாமக்கரும்பு.
47.அபரகரேபுஷ்பபாணம் -மற்றொருகையில் புஷ்பபாணங்கள்.
48. ஸ்ரீமன்மாணிக்க பாதுகே -ரத்னமயமான மிதியடிகள்.
49. ஸ்வஸமான வேஷாபிஃ ஆவரணதேவதாபி: ஸஹ மஹா சக்ராதிரோஹணம் -தன்னைப்போலவே இருக்கும் ரூபத்துடன்கூடின ஆவரண தேவதைகளுடன் மஹாசக்ரத்தில் ஏறி இருத்தல்.
50. காமேஸ்வராங்கபர்யங்கோபவேசனம் - காமேச்வரனுடைய இடது பாகமாகிற கட்டிலில் இருத்தல்.
51. அம்ருதாஸவ சஷகம் -பானம் செய்யும் அம்ருதத்தோடு கூடிய பாத்திரம்.
52. ஆசமனீயம் - ஆசமனம்.
53. கற்பூர வீடிகா -பச்சை கற்பூரம் சேர்ந்த பாக்குடன்கூடின பீடா, (செய்விதம்- ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம், கஸ்தூரி, பாக்கு, கொப்பரை, திப்பிலி, சுக்கு, கருங்காலி, இவைகளின் பொடிகளுடன் சுண்ணாம்பு சேர்த்த வெற்றிலையை மேருபோல் செய்வது.)
54. ஆனந்தோல்லாஸவிலாஸஹாஸம் - ஆனந்த களிப்பில் ஏற்பட்ட சிரிப்பு
55. மங்களாரார்த்திகம் - தங்கம்முதலான பாத்திரங்களில் ஏற்றும் மாவிளக்கு தீபம்.
56. சத்ரம் - குடை.
57. சாமரயுகளம் - இரண்டு வெண்சாமரங்கள்.
58. தர்பணம் - கண்ணாடி.
59. தாளவ்ருந்தம் -விசிறி.
60. கந்தம் - சந்தணம்.
61. புஷ்பம் - பூ
62. தூபம் -சாம்பிராணிதூபம்
63. தீபம் - நெய்தீபம்.
64. நைவேத்யம் - நிவேதனம்.
இவை மஹாஸாம்ராஜ்ய சக்ரவர்த்தினியான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மாக்கு ஸைர விதி

Wednesday, November 29, 2017

பஞ்சகச்சம் –இதை பற்றிய ஒரு ச்லோகம்

பஞ்சகச்சம் –இதை பற்றிய ஒரு ச்லோகம்
குக்ஷித்வயே ததா ப்ருஷ்டே நாபௌ த்வௌ பரிகீர்த்திதௌ
பஞ்சகச்சா:ஸ்து தே ப்ரோக்தா: சர்வ கர்மஸு ஷோபனா: -….
குக்ஷி என்றால் இடுப்பு,
குக்ஷித்வயே = இரண்டிடுப்பில் ( வலது இடுப்பில் ஒன்று இடது இடுப்பில் ஒன்று )
ததா = அவ்வாறு
ப்ருஷ்டே =பின்புறத்தில் ஒன்று
நாபௌ = தொப்புளில் இரண்டு
கச்சம் என்றால் சொருகுதல்
பஞ்சகச்சா: = ஐந்து சொருகலானது
சர்வ கர்மஸு = எல்லா காரியங்களிலும்
ஷோபனா: = மன்களகரமானதாக
ப்ரோக்தா: = கூறப்படுகிறது
அதாவது வலது இடுப்பில் ஒரு சொருகல், இடது இடுப்பில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று,
தொப்புள் பகுதியில் இரண்டு என்று ஐந்து சொருகுதல் முறையையே பஞ்சகச்சம் என்று பெரியோர்களால் கூறப்படுகிறது.
✌️

தீர்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்

#தீர்க_சுமங்கலி_பவா என்றல் என்ன?  -  அறிந்துகொள்ளுங்கள்
🌼 தீர்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
🌼 திருமணத்தில் ஒன்று,
🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!.
#இவைகள்_பற்றி_ஒரு_சிறு_விளக்கம் ;
🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.
🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.
🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.
🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.
🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.
🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு ⚜சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
⚜செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், ⚜சந்திரனுக்கு ஒரு மாதமும்,
⚜புதனுக்கு ஒரு வருடமும்,
⚜வியாழனுக்கு 12 வருடங்களும்,
⚜வெள்ளிக்கு ஒரு வருடமும்,
⚜சனி பகவானுக்கு 30 வருடங்களும், ⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், ⚜கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.
🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.
🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.
🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.
🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.
🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.
🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.
🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?
🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.
🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...
⚜அக்னி,
⚜சூரியன்,
⚜சந்திரன்,
⚜வாயு,
⚜வருணன்,
⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
⚜அமிர்த கடேஸ்வரர்,
⚜நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.
🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,
🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,
🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,
🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.
🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.
🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.
🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.
🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.
🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.
🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.
🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்
🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது

மலர்கள் மலரும் நேரங்களை பார்த்து கடிகாரம் இல்லாத காலத்தில் நேரத்தை அறிந்தது

மலர்கள் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.
மலர்கள் (உபயோகிக்கும் காலம்)
1.தாமரை மலர் - 7 நாட்கள்
2.அரளிமலர்      - 3 நாட்கள்
3.தாழம் பூ           - 5 நாட்கள்
4.சண்பகம்           - 1 நாள்
5.விஷ்னுகிரந்தி - 3 நாள்
6.வில்வ பத்திரம் - 6 மாதங்கள்
7. துளசி                 - 3 மாதங்கள்
பஞ்ச வில்வம்
1. வில்வம்
2.கிளுவைப் பத்திரம்
3.மாவிலங்கை
4.விளா
5.நொச்சி
மலரும் நேரங்களை பார்த்து கடிகாரம் இல்லாத காலத்தில் நேரத்தை அறிந்தது.
அந்தி மந்தாரை மலந்தால்  மாலை 6.00 மணி , மல்லிகை மலந்தால்  மாலை 7.00 மணி , பாரிஜாதம் மலர்ந்தால் மணி 8.00 மணி, மாதவி புஷ்பம் மலந்தால் இரவு 9.00 மணி , நன்றாக இருட்டி இருட்டு ஆட்சி செய்யும் போது இரவு 12.00 மணிக்கு மலரும் பூ இருவாச்சி , காலை 6,00 மணிக்கு சூரியன் உதிக்க அத்துடன் மலர்வது தாமரை. இவ்வாறு மலர்கள் மலர்வதைக் கொண்டு பண்டைகாலத்தில்  நேரத்தை கணக்கிட்டு அறிந்த கொண்டனர்.
உதயகால பூஜைக்கு ஏற்ற மலர்கள்
நந்தியாவட்டை, சிரியாவர்த்தம், வெள்ளெருக்கு, வெண்தாமரை, புன்னை.
நன்பகலில் பூஜைக்கு ஏற்ற மலர்கள்
செந்தாமரை, செங்கழுநீர், செவ்வரளி, செங்கடம்பு.
சாயரட்சையில் , அர்த்தசாம காலத்தில் பூஜைக்குரிய மலர்கள்
வெள்ளெருக்கு, வெள்ளரளி, பிச்சி பூ, மந்தாரை, புன்னை, மல்லிகை, முல்லை, மனோரஞ்சிதம்,

தட்சிணாமூர்த்தி அமைப்பின் சிறப்புகள்

படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமார்கள் எனப்படும் சனகாதி முனிவர்கள் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.
இதனை உணர்ந்த சிவபெருமான் தானும் சத்தியுடன் இருப்பதை கண்டால் பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார். பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு தட்சிணாமூர்த்தியாக இருந்து சிவபெருமான் பதில் தந்தார். எனினும் ஞானத்தின் கேள்விகள் அதிகரித்தவண்ணமே இருந்தன. பின்பு தட்சிணாமூர்த்தி சின் முத்திரையை அவர்களுக்கு காண்மித்தார். பிரம்ம குமாரர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் உண்டாயிற்று. அவர்கள் ஞானம் பெற்றனர்.

உருவம்

தட்சிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் / ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லை / ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். அவர் தியானத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

பாடல்

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

(திருவிளையாடற் புராணம் - பாடல் - 13)
விளக்கம்
கல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்குமுனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்
நான்மறை: ரிக்கு, எசுர், சாமம், அதர்வணம் / தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், சாமம் ஆறங்கம் : சிட்சை, வியாகரணம், நிருத்தம், கற்பம் சந்தம், சோதிடம்




அமைப்பின் சிறப்புகள்

திருமேனி

பளிங்கு போன்ற வெண்ணிறம் தூய்மையை உணர்த்தும்.

வலப் பாதம் முயலகனை மிதித்தமர்ந்திருத்தல்

அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை.

திருக்கரத்திலுள்ள நூல்

இது சிவஞான போதமாகும். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி கொண்டு திகழ்கின்றது. ஞானத்தாலேயே வீடு பேறுகிட்டும்.

திருக்கரத்தில் உருத்திராக்கமால

36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துவது. உருத்திராக்க மாலை கொண்டு திருவைந்தெழுத்தைப் பன்முறை எண்ணிப் பல்காலும் உருவேற்றித் தியானித்தலே ஞானம்பெறும் நெறி என உணர்த்தலும் ஆகும்.

இடக்கரத்தில் அமிர்தகலசம்

அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல்.

சின்முத்திரை

ஞானத்தின் அடையாளம், பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொடவும், ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் உயிரையும், மற்ற மூன்று விரல்களுள் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். உயிரானது மும்மலங்களின்றும் நீங்கி இறைவன் திருவடி அடைந்து இன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும்.

புலித்தோல்

தீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றல்

தாமரை மலர்மீது அமர்தல்

அன்பர் இதயதாமரையில் வீற்றிருப்பவர். தாமரை மலர் ஓங்காரத்தை உணர்த்துவது.

நெற்றிக்கண்

காமனை எரித்த கண்ணுதல்; ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் எவரும் ஐம்பொறி அவர்களை அறுந்தொழித்துப் புலனடக்கம் உடையராதல், துறவின் சிறப்பு.

ஆலமரமும் அதன் நிழலும்

மாயையும் அதன் காரியமாகிய உலகமும்

தென்முகம்

அவரை நோக்கி வடக்காகத் தியானிக்க வேண்டும் என்ற குறிப்பு.

அணிந்துள்ள பாம்பு

குண்டலினி சக்தியைக் குறிப்பது.

வெள்விடை

தருமம்

சூழ்ந்துள்ள விலங்குகள்

பசுபதித்தன்மை அணைத்து உயிர்களுக்கும் அவரே தலைவர்.

முயலகன்

முயலகன் வடிவம் அறியாமையைக் குறிப்பதால் அறிவுப் பிழம்பாகிய ஆலமர் செல்வன் அறியாமையாகிய முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பு. [2]

ஞான தட்சிணாமூர்த்தி, வியாக்யான தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீர தட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி, ராஜ தட்சிணாமூர்த்தி, பிரம்ம தட்சிணாமூர்த்தி, சுத்த தட்சிணாமூர்த்தி என்று தட்சிணாமூர்த்தி பல வடிவங்களில் உள்ளதாக ஆகமங்கள் கூறுகின்றன.

 

Monday, November 27, 2017

சம்ஸ்கிருதம் பற்றி அறிந்திராத தகவல்கள் உங்களுக்காக...........

சம்ஸ்கிருதம் பற்றி அறிந்திராத தகவல்கள் உங்களுக்காக........... ...............................
சம்ஸ்கிருதத்தை மட்டம் தட்டி, மற்ற மொழிகளை உயர்த்திப் பேசுவது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. அவர்களுடைய அறியாமையை எண்ணி சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. சம்ஸ்கிருதம் என்பது பெரிய சமுத்திரம். அதன் கரையைக் கண்டவர்கள் யாரும் இல்லை. ஏனைய பழைய மொழிகளில் உள்ள நூல்கள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டு விட்டார்கள். ஆனால் வட மொழி நூல்களைப் பட்டியல் இடுவதுகூட முடிந்தபாடில்லை. உலகம் முழுதுமுள்ள நூலகங்களில் அவ்வளவு சுவடிகள் உள்ளன.
பல நூல்களுக்கு மூல நூல் மறைந்து போயின. ஆனால் அவைகளின் மொழி பெயர்ப்புகள் சீன மொழி உள்பட பல மொழிகளில் இருக்கின்றன. மொழிபெயர்க்க ஆள் இல்லை. உலகம் முழுதும் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் பல்வேறு லிபிகளில் எழுதப்பட்டுள்ளன.
அசோகர் காலம் வரை பனை ஓலைகளிலும் மரப் பட்டைகளிலும் எழுதி வந்ததால் அவைகள் அழிந்துவிட்டன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து உலகம் முழுதும் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் தோன்றிவிட்டன. நேபாளம் முதல் இந்தோநேஷியா வரை ஆயிரக் கணக்கான பாடல் வடிவக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதே காலத்தில் மற்ற மொழிகளில் உரைநடைக் கல்வெட்டுகள்தான் கிடைக்கின்றன.
வேதங்களின் பெரும் பகுதி (சாகைகள்) அழிந்துவிட்டன. பிராமணர்கள் வாய் மொழியாக ஆசார அனுஷ்டானங்களுடன் அத்தியயனம் செய்துவந்ததால் எழுதிவைக்கவும் இல்லை.
இப்போது இருக்கும் வேதங்களை டேப்புகளில் பதிவு செய்ததே 600 மணி நேரத்துக்கு வருகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத புதுமை வேதப் படிப்பில் உண்டு. இடைச் செருகல் வந்து விடக் கூடாது என்பதற்காக வேதத்தில் இருக்கும் சொற்களை ஒன்றாகவும் இரண்டாகவும் மூன்றாகவும் கூட்டிக் கூட்டி சொல்லிக் கொண்டே பாராயணம் (கண பாடம், ஜடா பாராயணம்) செய்வார்கள். இதை எல்லாம் பதிவு செய்துவிட்டார்கள் ராஜஸ்தான் பலகலைக் கழகத்தினர்.
சம்ஸ்கிருதம் மாபெரும் சமுத்திரம். கரை காணாத அளவுக்கு பெருகியது. உலகில் இதுவரை அதிலுள்ள புத்தகப் பெயர் பட்டியல் அனைத்தையும் ஒரே வால்யூமாகக் கூட கொண்டுவர முடியாத அளவுக்குப் பெரியது.
கிரேக்க நாடு, முதல் காவியத்தை எழுதுவதற்குள் சம்ஸ்கிருதத்தில் 4 வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிஷத்துக்கள் எல்லாம் தோன்றிப் பெருகிவிட்டன.
3500 ஆண்டுக்கு முன் வந்த ரிக் வேதத்தில் மட்டும் சுமார் 450 கவிஞர்கள் பாடிய 1028 துதிகள். அவைகளில் 10,552 பாடல்கள். 39, 831 பதங்கள். இதில் 4,32,000 அசைகள் (சில்லபிள்) இருப்பதாக சதபத பிராமணம் கூறும். ஆயினும் இப்போதைய கணக்கில் 3,95,563 அசைகளே காணப்படுகிறது. யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இதற்குப் பின் வந்தன.
உலகிலேயே நீண்ட நூல் என்று இந்தியாவுக்கு வந்த கிரேக்க எழுத்தாளர் குறிப்பிட்ட மஹா பாரதத்தில் நூறாயிரம் ஸ்லோகங்கள்— 2 லட்சம் வரிகள்— சுமார் 10 லட்சம் சொற்கள் உள்ளன.
வால்மீகி ராமாயணத்தில் 24000 பாடல்கள் உள்ளன.
18 புராணங்களில் பல லட்சம் வரிகள் உள்ளன.
உலகில் எந்த நாட்டு சமய இலக்கியமும் இதன் அருகில் கூட வரமுடியாது.
கி.மு 800 என்று ஒரு கோடு கிழித்தால், பக்கத்தில் பைபிளின் பழைய ஏற்பாடும் கொஞ்சம் சீன மொழிப் பாடல்களும் மட்டும் குட்டையாக நிற்கும். கிரேக்கம், லத்தீன், தமிழ் எல்லாம் அப்பொழுது பிறக்கக் கூட இல்லை (நூல்கள் வடிவில்).
கி.மு.800க்கு முன்னர் தோன்றிய சுருதி என்னும் வேதம் என்பதே பெரிய அளவு. அதற்குப் பின்வந்த ஸ்மிருதி எனப்படும் நீதி சாஸ்திரங்கள் வேறு.
பிரபல வரலாற்று ஆசிரியர் கே ஏ நீலகண்ட சாஸ்திரி கூறுவது: சீன மொழியில் 1700 சம்ஸ்கிருத நூல்கள் மொழி பெயர்க்கப் பட்டன. இவைகளில் 40 மில்லியன் சொற்கள் உள்ளன. இவை 2 முதல் 11 நூற்றாண்டு வரை எழுதப்பட்டவை.
சம்ஸ்கிருதத் தனிப்பாடல்கள்
சுபாஷித ரத்ன கோஷ –1739 பாடல்கள்–223 கவிஞர்கள்
பிரசன்ன சாகித்ய ரத்னாகர–1428 பாடல்கள்,
சதுக்தி கர்ணாம்ருத 2370பாடல்கள்–485கவிஞர்கள்,
சூக்தி முக்தாவளி 2790பாடல்கள், 240கவிஞர்கள்,
சரங்கதார பத்ததி 4689பாடல்கள்–282கவிஞர்கள்
ப்ருஹத் பத்ததி 7586பாடல்கள்,
வல்லப தேவ சுபாஷிதாவளி 3527பாடல்கள் 360கவிஞர்கள்
(இது தவிர சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் நூலில் 16,000 தனிப் பாடல்கள் இருப்பதாக அறிவேன். ஒருவேளை மேற்கண்ட நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்துக் கொடுத்தார்களா என்று எனக்குத் தெரியாது. தனிப் பாடல்கள் மட்டுமே இவ்வளவு என்றால்!!! )
இரண்டாம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை சம்ஸ்கிருதத்தில் எழுதிய 872 ஆசிரியர்களின் பெயர்களை பி.வி.கானே தொகுத்துக் கொடுத்தார். சங்கரர் பெயரில் மட்டும் 272 துதிகள் இருக்கின்றன! ஸ்தல புராணங்கள், சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் யாரும் பட்டியல் இடவில்லை.
சம்ஸ்கிருதத்திலுள்ள அதிசயங்களை The Wonder That is Sanskrit (published by Sampad and Vijay, Sri Aurobindo Society,Pondichery) என்ற நூலில் படிக்கலாம். இந்த மொழியை பிராமணர்கள் கூட படிக்காமல் ஐரோப்பியர்களிடம் மட்டும் விட்டால், அவர்கள் சொன்னதே “வேதம்” என்றாகிவிடும்!!
கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து முதலிய தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் 800 சம்ஸ்கிருத கல்வெட்டுகள் இருக்கின்றன. கி.மு. 1400 முதல் சம்ஸ்கிருத சொற்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. குதிரைப் பயிற்சி தொடர்பான களிமண் பலகை– கியூனிபார்ம் எழுத்துக்– கல்வெட்டுகளில் சம்ஸ்கிருத எண்கள் உள்ளன. கி.மு. 1400ல் மிட்டன்னி ராஜாக்களின் உடன்பாட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்கள் இருக்கின்றன.

மனைவி பற்றி ஒரு சிறு குறிப்பு!

பல்வேறு மொழிகளில் மனைவியை எப்படி அழைக்கிறார்கள் -- மனைவி பற்றி ஒரு சிறு குறிப்பு!
 நமது மனையில் வெற்றிகரமாக வீற்றிருப்பவள் என்பதால், *மனைவி* என்றும்...
நமது வாழ்வில் கடைசிவரை தொண தொணவென்று துணையாய் வருபவள் என்பதால், *துணைவி* என்றும்...
பொன் நகையை வாங்கி தருமாறு நம்மை ஆட்டி வைப்பதால் , *பொண்டாட்டி* என்றும்...
நம்மை அவ்வப்போது பஞ்சராக்கும் ஜாதி என்பதால், *பொஞ்சாதி* என்றும்...
காஃபியை ஆத்திக் கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால், *ஆத்துக்காரி* என்றும்...
ஷாப்பிங் போய் விட்டு வீட்டுக்கு வந்ததும் நம்மை பார்த்து அவள் கேட்டதை எல்லாம் வாங்கித்தர முடியாத துப்பு கெட்டவன் என்று காரி துப்புவதால், *வீட்டுக்காரி* என்றும்...
கடைசிவரை வந்து உனக்கு பீப்பீ ஊதப்போவது நாந்தான்யா என்பதால், *பீபி* (ஹிந்தி) என்றும்...
உனக்கு கடைசிவரை நாந்தான் எல்லாம் என்பதால், *பெல்லாம்* (தெலுகு) என்றும்...
நம்மை மதி கெட்டவன் என்று கூறி அடிக்கடி அவள் சிரிப்பதால் *ஸ்ரீமதி* (நேபாளி) என்றும்...
 அவ்வப்போது  நமது மனதை கார்த்திகை தீபம் போல்  சூடாக்குவதால்,  *மனகார்த்தி* (கன்னடம்) என்றும்...
கணவனை என்றும் திட்டிக் கொண்டே இருக்கின்றாள் என்பதால், *கன்டித்தி* (கன்னடம்) என்றும்...
நம்மை திட்டுவதற்கு முன் இங்க பாருய்யா என்று ஆரம்பிப்பதால், *பாரியா* (மலையாளம்) என்றும்...
வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு அறியாத Wi-Fi போல் நம் மேல் கண்காணிப்பு அலைவரிசையாய் தொடர்வதால் *Wife* (ஆங்கிலம்) என்றும்...
கடைசிவரை நம்மை விட்டுப் பிரியாமல் ஜவ்வு மிட்டாய் போல் ஒட்டிக் கொண்டு வருவதால் *ஜவ்ஜத்* (அரபிக்) என்றும்...
வேலைக்கு செல்லும்போது அசையும் சொத்து போல கையசைத்து பை பை சொல்வதால், *அஷாவா பபாய்* (பிலிப்பைன்ஸ்) என்றும்...
காலம் முழுவதும் நாந்தான்யா உனக்கு பவுலர் என்று  நம் மீது எதையாவது வீசிக்கொண்டு இருப்பதால், *பவுள* (சிங்களம்) என்றும்...சொல்கிறார்கள்
 இது மனைவியின் திட்டு காதில் விழாமல் இருக்க விட்டத்தை பார்த்து யோசிக்கும் போது வந்த நொந்து போன கருத்துகள்....
.😤😤
இது What's up இல் பகிரப்பட்ட ஒரு மொழியியல் அறிஞரின் கருத்து...
"ஐயா...நான் அவனில்லை"

பெண்ணைப் பெற்றவர்க்கு என்ன பெருமை?

       இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில் உள்ளது.
       இதைச் சொல்லி பெண் குழந்தை மட்டும் உள்ளவர்கள் புத் என்கிற நரக வாசத்தை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லையா என்று கேட்பதுண்டு. சாஸ்த்ரத்தை நேரடியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்து கொள்வதினால் வருகின்ற விளைவு இது.
       அரைகுறை ஞானம் ஆபத்து என்பார்கள். அப்படியானால் பெண்ணைப் பெற்றவர்க்கு என்ன பெருமை? என்று பார்க்க வேண்டும்.
      கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்த்ரத்தின் அர்த்தத்தை தெரிந்து கொண்டால் இந்த சந்தேகமே நமக்கு வராது. அது என்ன ஸங்கல்பம் என்றால்....
தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண......
என்று மந்த்ரம் வருகிறது.
      தசாநாம் பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள் . தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள். ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும் தானமாகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது. தானத்திலேயே மிகச் சிறந்த தானம் கன்னிகாதானம்.
       ஒரு நல்ல பெண்ணைப் பெற்றெடுத்து அவளைத் தன் குலத்துக்கு இல்லாமல் வேறு குலத்துக்கு திருமணம் செய்வித்து அந்த குலத்தினுடைய சந்ததியை வ்ருத்தி செய்வதற்கு உதவுகின்றார் என்றால் இந்த தானம் எவ்வளவு பெரிய தானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
( படித்ததைப் பகிர்கிறேன்)

பட்டாசு, போதும் பட்டாச்சு

*பட்டாசு, போதும் பட்டாச்சு !*
-------------------------------------------------
*நாம் அன்றாட கேட்கும் சப்தத்தின் அளவு சராசரியாக 30 டெஸிபல். மனிதனால் 60 டெசிபல் வரை செவிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கேட்க முடியும். பல்லுயிர்கலுக்கான டெஸிபலின் அளவு மேலும் குறையலாம்.*
*ஆனால் பட்டாசின் ஒலி அளவு தெரியுங்களா ? 60 முதல் 120 டெஸிபல் வரை. 125 டெஸிபல் அளவிற்கு பட்டாசு தயாரித்தால் அவர் 1986 ம் ஆண்டு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றவாளி ஆவார்.*
*சரி பட்டாசில் என்னதான் உள்ளது ? வாருங்கள் பார்ப்போம்.*
*1 - பொட்டாசியம்*
*2 - பாஸ்பரஸ்*
*3 - சல்பர்*
*4 - துத்தநாகம்*
*5 - ஆண்டிமோனி சல்பைடு*
*6 - காட்மியம் காரீயம்*
*7 - நைட்ரேட்*
*8 - ஆர்செனிக் பேரியம்*
*9 - காப்பர் காம்பவுண்ட்*
*10 - லெட் காம்பவுண்ட்*
*11 - ஹெக்சா குளோரோ பென்சின்*
*12 - நைட்ரஜன் டை ஆக்சைட்*
*13 - லித்தியம் காம்பவுண்ட்*
*14 - சோடியம்*
*15 - அலுமினியம் பவுடர்*
*16 - மேக்னீசியம் பவுடர்*
*17 - அயர்ன் பவுடர்*
*18 - பொட்டாசியம் நைட்ரேட்*
*19 - பொட்டாசியம் பெர்குலோரெட்*
*20 - ஸ்ட்ரோன்ஷியம் நைட்ரேட்*
*21 - பொட்டாசியம் குளாரேட்*
*இந்த 21 இரசாயணங்கள் உங்கள் 21 தலைமுறையை உரு தெரியாமல் அழிக்கும் அளவிற்கு வல்லமை பெற்றவை.*
*பட்டாசால் ஐம்பூதங்கள் பாதிக்கின்றன*
*நீர்*
------
*பட்டாசு வெடித்தபின் அதன் கழிவுகள் நீரில் கலந்து செல்லும் இடமெல்லாம் சின்னாபின்னம் ஆக்கிவிடும். நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. நச்சுக்கள் நிலத்தடி நீரில் கலந்து நிலத்தடிநீர் மாசுபடுகிறது.*
*நிலம்*
------------
*பட்டாசின் கழிவுகளை நிலத்தில் கொட்டுவதன் மூலம் நில ஊர்வன உயிர்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள்  அழித்தொழிக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மட்கும் குப்பையை கூட மக்க வைக்க முடியாத அளவிற்கு மண் மலடாகிறது.*
*நெருப்பு*
-----------------
*பட்டாசு வெடிக்கும் போது உண்டாகும் வெப்ப மிகுதியால் சுற்றுச்சூழலின் தட்பவெட்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது.*
*காற்று*
--------------
*பட்டாசில் இருந்து வெளிப்படும் புகை மற்றும் இதன் கழிவுகளை எரிக்கும் போது ஏற்படும் புகையால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. இதன் மூலம் பறக்கும் இனங்களை இனப்படுகொலை செய்கிறோம்.*
*ஆகாயம்*
------------------
*21 நச்சு இரசாயனங்கள் வழி மண்டலத்தில் நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களை மிக அதிக அளவு உமிழ்கின்றன. இதனால் புவி வெப்பமயமாதல், ஓசோன் மண்டல ஓட்டை போன்ற பேராபத்து நிகழ்கின்றன.*
*நம்மை ஆட்டிப்படைக்கும் பஞ்சபூதங்களையே இந்த அளவிற்கு சீரழிக்கும் பட்டாசு நம்மை சும்மா விட்டுவிடுமா என்ன ?*
*இதோ பட்டாசால் மனிதனுக்கு ஏற்படும் பேராபத்துக்கள்.*
*1 - கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும்*
*2 - காது கேளாமை*
*3 - சளி*
*4 - இருமல்*
*5 - தும்மல்*
*6 - ஆஸ்துமா*
*7 - மூச்சுத்தினறல்*
*8 - நுரையீரல் புற்றுநோய்*
*9 - சொரியாஸிஸ்*
*10 - கண் பார்வை இழப்பு*
*11 - தைராய்டு*
*12 - மூளை செயல்பாடு பாதிப்பு*
*13 - அனீமியா*
*14 - சிறுநீரக கோளாறு*
*15 - கல்லீரல் பாதிப்பு*
*16 - வாந்தி*
*17 - தலைவலி*
*18 - வயிறுக் கோளாறுகள்*
*19 - சைனஸ்*
*20 - மூக்கு, தொண்டை பாதிப்பு*
*21 - இரத்த அழுத்தம்*
*22 - மாரடைப்பு*
*23 - தூக்கமின்மை*
*24 - குழந்தையின்மை*
*25 - புற்றுநோய் மற்றும் தீக்காயங்கள், தீ விபத்து*
*இவை அனைத்து தீபாவளி நமக்கு கொடுக்கும் அன்பு பரிசுகள்.*
*மனிதனை பாதாளத்தில் தள்ளும் பட்டாசுகள் பல்லுயிர்களை சும்மாவிட்டுவிடுமா ?*
*1 - பறவையின் கரு கலைக்கப்படுகிறது.*
*2 - பறவை இனங்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறது.*
*2 - நிலஊர்வன உயிர்கள் அழிக்கப்படுகிறது*
*3 - நிலத்தில் வாழும் பிற உயிர்கள் அழிக்கப்படுகிறது.*
*3 - நீர்நிலை உயிர்கள் அழிக்கப்படுகிறது*
*ஒரு நாட்டின் வளமே பல்லுயிர்களால் தான் கட்டமைக்கப்படுகிறது. பல்லுயிர்களை அழித்துவிட்டு நாடு எப்படி வளமாகும் ?*
*நீ இல்லாமல் பல்லுயிர்கள் வாழும்*
*ஆனால் பல்லுயிர்கள் இல்லாமல் ஒரு நொடி கூட உன்னால் வாழ முடியாது.*
*சமுதாய பாதிப்புகள்*
---------------------------------------
*பறவைகள் இல்லையேல் காடுகள் இல்லை*
*காடுகள் இல்லையேல் ஓடைகள் இல்லை*
*ஓடைகள் இல்லையேல் ஆறுகள் இல்லை*
*ஆறுகள் இல்லையேல் நீர் இல்லை*
*நீர் இல்லையேல் வேளாண்மை இல்லை*
*வேளாண்மை இல்லையேல் உணவு இல்லை*
*உணவு இல்லையேல் மனிதன் இல்லை*
*நீ வெடிக்கும் பட்டாசு உனக்கு நீயே வைக்கும் வேட்டு என்று இப்பொழுது புரிகிறதா ?*
*ஏன் ஆறுகள் வறண்டு உள்ளது என்பது புரிகிறதா ?*
*ஏன் நமக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என புரிகிறதா ?*
*ஏன் விவசாயம் அழிந்து வருகிறது என தெரிகிறதா ?*
*கொண்டாட்டங்கள் அன்பு, வளம், வளர்ச்சி, மகிழ்ச்சியை தர வேண்டுமே தவிர அழிவை அல்ல.*
*பண்பாடு*
-------------------
*வீட்டு வாசலில் சாணம் தெளித்து மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*
*அரிசிமாவில் கோலமிட்டு எறும்புகளுக்கும், பூச்சிகளுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*
*தானியங்களை அள்ளி இறைத்து பறவைகளுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*
*இன்னும் எத்தனை எத்தனை சொல்லிக்கொண்டே போகலாம்.*
*"பகுத்துத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்"*
*என்ற உயர்ந்த நெறியை வாழ்க்கை முறையாக கொண்டு வளர்ந்த நாம்.*
*இன்று*
*கொண்டாட்டம் என்ற பெயரில் அனைத்து உயிர்களையும் அழித்தொழித்துவிட்டு நம்மை நாமே அழித்துகொள்கிறோம்.*
*பல்லுயிர்களை அழித்துவிட்டு ஒரு நொடி கூட நம்மால் இந்த மண்ணில் உயிரோடு வாழ முடியாது.*
*பல்லுயிர்களை வாழவைத்து*
*நாம் வாழ்வோம்.*
*வரும் மாதம் தேதி (ஐப்பசி 1 - Oct -18) வரும் தீபாவளி பண்டிகையில் பல்லுயிர்களை பாதுகாத்து செடி, கொடி, மரங்களை நட்டு "பசுமை தீபாவளியாக" கொண்டாட இன்றே உறுதிமொழி ஏற்போம்.*
*பட்டாசுகள் ஒழியட்டும்*
*பல்லுயிர்கள் தழைக்கட்டும்*
*நன்றி*
_இரா.மதிவாணன்

திபாவளி ஸ்நானம்

திபாவளி ஸ்நானம்.
அபாமார்கமதோ தும்பீம் ப்ரபுன்னாடமதாபராம்
ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாயவை
அபாமார்கலதே தேவி அபவர்கப்ரதேஸுபே
அலக்ஷ்மீம் நாசயமே கேஹே ம்ருத்யும் வாரயவாரய போ
ஸீதாலோஷ்டஸமாயுக்த ஸகண்டகதளான்வித
ஹரபாபமபாமார்கம் ப்ராம்யமாண: புந: புந:
என்கிற வாக்கியத்தின்படி அபாமார்கம் என்னும் நாயுருவிக்கொடி அல்லது தும்பீ என்னும் சுரைக்காய் இலை கொண்டு 3முறை தலையை சுற்றி வாசலில் எறிந்து பிறகு
ஆஷ்வயுக் கிருஷ்ணபக்ஷஸ்ய சதுர்தஸ்யாம் விதூதயே
திலதைலேநகர்தவ்யம் ஸ்நானம் நரகபீருணா
என்கிற வாக்கியத்தின்படி ஐப்பசி கிருஷ்ண சதுர்த்தசியில்
நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் கங்கா ஸ்நானம் செய்து நீராடி புத்தாடை அணிந்து மனத்துக்கினியானை பாடி ஏழ்மை துக்கம் விரோதி இவைகள் நீங்கி லக்ஷ்மீ கடாக்ஷம் பெருகி நீரும் உம்மை சேர்ந்தவர்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ  பிரார்த்திக்கிறேன்.
🌺🔱 ஸ்ரீ ஞானாக்ஷி வித்யாலயம் 🔱🌺
சிவஸ்ரீ.Dr. V. கார்த்திகேய சிவாச்சாரியார்,BA, MBA, Phd.
ஸ்ரீ வித்யா உபாசகர்,ஸ்ரீ வித்யா கேந்திரம்,சென்னை.103

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் - தமிழில்

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் - தமிழில்
.

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்


முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்


மோதகத்தை மகிழ்ச்சியோடு கரத்தி லேந்தும் நாதனே!
முக்தியினை பக்தருக்கு அருளும் டுண்டி ராஜனே!
பிறைமதியை முடியில் சூடிக் காட்சி தரும் காந்தனே!
போற்றித் துதிக்கும் அடியவரைக் காத்தருளும் வேந்தனே!
தன்னையாளும் தலைவனில்லா தலைவனேவி நாயகா!
தாரணியைக் காக்கவென்று தானவனைக் கொன்றவா!
பக்தர்களின் பாவங்களை நாசம் செய்யும் நாயகா!
பணிந்து உன்னை வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!
நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்


உன்னை வணங்கித் தொடங்கி விட்டால் விக்னம் தீர்த்து அருளுவாய்!
உதய காலக் கதிரவன் போல் ஒளி மிகுந்து விளங்குவாய்!
தேவர்களைக் காத்திடவே அசுரர்களைச் சிட்சிப்பாய்!
ஆபத்துகள் எதுவந்தாலும் அடியவரை இரட்சிப்பாய்!
உம்பருக்கு அரசனே நவநிதிக்கும் நாதனே!
யானைகளின் ராஜனே கணங்களுக்குத் தலைவனே!
தேவருக்கு தேவனாகி மஹா தேவன் ஆனவா!
தெண்டனிட்டு வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!

ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

அகிலமெல்லாம் சுகம்பெறவே வரமளிக்கும் கணபதி!
அசுரயானை கஜாசுரனைக் கொன்றழித்த கணபதி!
பானை வயிற்றில் புவனமெல்லாம் பொத்திக் காக்கும் கணபதி!
யானை முகத்து ஐங்கரனே அழிவில்லாத கணபதி!
பிள்ளைகளின் பிழைகள் தம்மை மன்னித்தருளும் கணபதி!
பிழைகள் தம்மைப் பொறுத்து நல்ல வழியில் செலுத்தும் கணபதி!
பக்தருக்கு மகிழ்ச்சி, கீர்த்தி, மேன்மை நல்கும் கணபதி!
பணிந்து உன்னை வணங்குகின்றேன் காத்திடுவாய் கணபதி!


அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்

ஏழை பங் காளனாகி காக்கும் ஏக தந்தனே!
அநாதியான வேதங்களும் வணங்கும் வக்ர துண்டனே!
திரிபுரத்தை ஒரு சிரிப்பால் எரித்த ஈசன் மைந்தனே!
தானவரின் கர்வந் தன்னை ஒடுக்கும் ஐந்து கரத்தனே!
காலனையும் கலங்கச் செய்யும் காலனே கஜானனே!
விஜயன் போன்ற வீரர்களும் பணியும் விகட ராஜனே!
முதற் பொருளாய்த் தோன்றி உலகை வழி நடத்தும் ஜேஷ்டனே!
மாசில்லாத அன்பினாலே வணங்குகின்றோம் நேசனே!

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

வெண்மையான தந்தம் மின்னத் திகழும் விக்ன ராஜனே!
இடது காலால் காலன் தன்னை உதைத்த சிவனின் பாலனே!
கற்பனைக்கும் எட்டாத வடிவம் கொண்ட கஜமுகா!
துக்கம் தீர்த்து விக்னங்களைக் களைந்து விடும் ஹேரம்பா!
தவ முனிவர் தேவர் மூவர் யாவருடைய மனதிலும்
நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நிகரில்லாத நாயகா!
ஒற்றைத் தந்தத்தோடு திகழும் ஒப்பில்லாத உன்னையே
ஒரு மனதாய் உள்ளத்திலே சிந்திக்கின்றேன் உண்மையே!

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்

காலையிலே எழுந்ததுமே கணபதியை நெஞ்சிலே
கருத்துடனே நினைத்தபடி சிரத்தையுடன் வணங்கியே
மஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த நூலையே
மந்திரமாய் மனதில் வைத்து ஜெபித்து வரும் போதிலே
பிணிகளெல்லாம் நொடியினிலே விட்டு விலகி ஓடுமே!
பிறவிப்பிணி என்னும் பெரிய பிணியும் தீர்ந்து போகுமே!
ஆனைமுகன் அருளினாலே கல்வி செல்வம் கவித்துவம்
ஆரோக்யம் ஆயுள் என்று நன்மை அனைத்தும் சேருமே!

--கவிநயா 

விக்ன விநாயகனின் திருவடிகள் சரணம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

Sunday, November 26, 2017

சிவாலயங்களில் ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள் மரபே பூஜை செய்யவேண்டும்.

சிவாலயங்களில் ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள் மரபே பூஜை செய்யவேண்டும். அவர்களுக்கே அதிகாரம் உள்ளது என்று ஆகமங்களும், திருமுறைகளும் கூறுகின்றன.
   சைவசமய நூல்கள் கூறுவதோடு அல்லாமல் வீரசைவ நூல்களும் இதனை வலியுறுத்துகின்றன.
  14 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரசைவ அருளாளர் ஸ்ரீ ஆதிசிவப்பிரகாச சுவாமிகள்.இவர்கள் வீரசைவ மரபை, தத்துவங்களை விளக்கும் பல நூல்களை அருளியுள்ளார்கள்.அவற்றில் தலையாய நூல் //அத்துவித வெண்பா // என்பது.இது புகழ்பெற்ற வீரசைவ அருள்நூலாகும்.
 இந்நூலில்,
"ஆன பரார்த்தமொன்றொன் றான்மார்த்த மாமென்னத்,
தானினிய சைவநூறானுரைக்கும் -மான வினை
தாமிரண்டும் பூசிப்பர் தங்குஞ் சிவத்துவசரானவர்,
 கள் என்றே அறி " (பாடல் 96)
  அதாவது பரார்த்தம், ஆன்மார்த்தம் என்று இருவித பூஜை கள்.இதில் ஆன்மார்த்தம் தீக்ஷை  பெற்றோர் அனைவரும்  செய்யவேண்டியது, .பரார்த்தம், ஆன்மார்த்தம் என்ற இரண்டும் செய்யும் அதிகாரம் சிவத்துவிஜர் என்ற ஆதிசைவர்களுக்கு உரிமையானது.
"சொல்லுஞ் சிவத்துவசர்  சொற்றவிரண் டர்ச்சனைக,
ளல்லலறச் செய்த லறமாகு -மல்லாதா
ராம்வருண நாலினுக்கு மான்மார்த்த. பூசை செய்ய,
யாம்பரிவா லேயுரைத்த தாம் " (பாடல் 97)
 அதாவது "சிவன் முகத்தில் உதித்த சிவத்துவிஜரே் ஆன்மார்த்தபூசை, பாரார்த்தம் என்ற கோயில் பூஜை  ஆகிய இரு பூஜைகளும் செய்வது அறமாகும்.
 மற்ற நால்வருணமாகிய பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், ஆகியவர்கள் ஆன்மார்த்தம் மட்டும் செய்வதே அறம்.
"ஓதுகின்ற நால்வருணத் துற்றவர்தாஞ் சுத்தரென,
வோதும் பரார்த்தத்தைப் பூசிக்க -னீதிக்கு
பஞ்சமதாம் பூமிமிகும் பார்வேந்தர்க் கிளனாவா,
மஞ்சப் புவி கலகமாம், "-(பாடல் 98).
அதாவது வேதாகமங்களால் சொல்லப்பட்டவண்ணம், பிராமணர் உள்ளிட்ட நால்வர்ணத்தாரும் ஆகமப்பிரகாரந் தீட்சாசுத்தர்களாகாய், சுத்தசைவர்களாய் இருக்கினும், முன்சொல்லப்பட்ட, பரார்த்தம் என்ற ஆலய பூஜை செய்வார்களாயின்,
 நீதிகுன்றும் -
         தர்மம், அறம் தோற்க்கும்.அழியும்.
 பஞ்சம தாம் பூமிமிகும் -  
        மழையின்மையால் பஞ்சம்      ஏற்ப்படும்.அல்லது அதிக மழையால் பூமி அழியும் .
பார்வேந்தர்க்கு இன்னாவா-
        அத்தேசத்தை  ஆளும் அரசர்க்கு வாராத துன்பங்கள் எல்லாம் வரூம். மரணம் ஏற்படும்.
 மஞ்சப் புவி கலகமாம் -
      அத்தேசத்தில் சகல உயிர்களும் பயத்தோடு வாழும். புதுப் புது கலகம் ஏற்படும்.
 எனவே நமது சமயநூல்கள் அனைத்தும் ஆதிசைவர்க்கே ஆலயபூஜை அதிகாரம் என்று கூறுகின்றது.
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேயசிவம்.

உபதேசம் பெறாமல், எப்படியோ கற்றுக்கொண்ட மந்திரங்களை ஜபிக்கலாமா?

கே‌ள்‌வி:உபதேசம் பெறாமல், எப்படியோ கற்றுக்கொண்ட மந்திரங்களை ஜபிக்கலாமா? அதனால் பலன் உண்டா?


ரமண‌ர்:கண்டபடி மந்திரங்களை ஜபிக்கக்கூடாது. மந்திரத்தை உச்சரிக்க யோக்கியதை வேண்டும். உபதேசம் பெற்று ஜபிக்க வேண்டும். அப்போதுதான் அதனால் நன்மையுண்டாகும்.இவ்வாறு கூறிய ரமணர், அதை விளக்கும் வகையில் ஒரு கதையைக் கூறினார்.ஒரு நாள் ஒரு ராஜா தனது மந்திரியின் மாளிகைக்கு விஜயம் செய்தார். அப்போது அவர் பூஜை அறையில் மந்திர ஜபம் செய்து கொண்டிருப்பதாகப் பணியாட்கள் சொல்லவே, அவர் ஜபம் முடித்து வருவதற்காக அரசர் காத்திருந்தார்.ஜபத்தை முடித்துக்கொண்டு மந்திரி வந்தவுடன் அரசர் கேட்டார். 'என்ன மந்திரம் ஜபித்தீர்கள்? 'காயத்திரி மந்திரம்' என்றார் மந்திரி. எனக்கும் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுங்களேன் என்று அரசன் கேட்டபோது மந்திரி பணிவடக்கத்துடன், 'நான் அதனை மற்றவர்க்கு வழங்க அருகதையற்றவன்' என்று தட்டிக் கழித்தார்.அரசன் மேலும் வற்புறுத்தவில்லை. அதன்பிறகு சில நாட்களில் வேறு யாரிடமிருந்தோ அந்த மந்திரத்தைக் கற்றுக்கொண்டு, அடுத்த தடவை மந்திரியை அரண்மனையில் சந்தித்தபோது, தான் கற்ற மந்திரத்தை உச்சாடனம் செய்துகாட்டி, 'சரியாகச் சொல்கிறேனா?' என்று வினவினார். அதற்கு மந்திரி, 'உங்கள் உச்சாடனம் சரிதான். ஆனாலும் நீங்கள் அந்த மந்திரத்தை ஜபிப்பது உசிதமல்ல' என்றுரைத்தார். ஏனோ? என்று அரசன் வினவினார்.உடனே மந்திரி, அருகிலிருந்த ஓர் காவலாளியைக் கூப்பிட்டு, "அரசனைக் கைது செய்!" என்று உத்தரவிட்டார். அவனோ திகைப்புற்று அவ்வுத்தரவுக்கு பணியவில்லை. திரும்பத் திரும்ப உத்தரவிட்டும் காவலாளி அசையாது வாளாவிருந்தான். தன்னைக் கைது செய்யுமாறு கூறுமளவிற்கு இந்த மந்திரிக்கு எவ்வளவு திமிர் என்று ராஜாவுக்கு வந்ததே கோபம்! "இந்த மந்திரியைக் கைது செய்" என்று அரசர் ஆக்ரோஷத்துடன் உத்தரவிட்ட மாத்திரத்திலேயே காவலாளி மந்திரியைக் கைது செய்து விலங்கிட்டான். மந்திரி சிரித்தார். சொன்னார், "அரசே நீங்கள் 'ஏன்' என்று கேட்டீர்களே அதற்கான விளக்கமிது!" "அதெப்படி" என்று கடுகடுத்தார் அரசர்."எவ்வாறென்றால், உத்தரவு ஒன்றேதான். அதை நிறைவேற்றுபவனும் அதே காவலாளிதான். ஆனால் அதிகாரம் வகிப்பவரோ வெவ்வேறு. நான் உத்தரவு இட்டபோது அதற்குப் பலனில்லை. ஆனால், நீங்கள் அதே உத்தரவு இட்டபோது உடனடியாகப் பலன் கிட்டியது. இதேபோன்றுதான் மந்திர உச்சாடனமும்" என்றார் மந்திரி மந்தகாசத்துடன்.

இழந்தது எவை

🦀🦀இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்🦀
🦀🦀இழந்தது எவை என இறைவன் கேட்டான்🦀
🦀🦀பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்🦀
🦀பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்🦀
🦀🦀கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்🦀
🦀🦀கோலம் மாறி அழகையும் இழந்தேன்🦀
🦀🦀வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்🦀
🦀🦀எதை என்று சொல்வேன் நான்🦀
🦀🦀இறைவன் கேட்கையில்🦀
🦀🦀எதையெல்லாம் இழந்தேனோ 🦀
🦀🦀அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்🦀
🦀🦀அழகாகச் சிரித்தான் இறைவன்🦀
🦀🦀கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்🦀
🦀🦀உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்🦀
🦀"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"🦀
🦀🦀"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"🦀
🦀🦀சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல🦀
🦀🦀தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்🦀
🦀திகைத்தேன் 🦀
🦀🦀இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்🦀
🦀🦀வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்🦀
🦀🦀இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்🦀
🦀🦀இறைவன் மறைந்தான்..
 படித்ததில் பிடித்தது🦀
👏👏👏👏👏👏👏

சந்தியா வந்தன மகிமை

சந்தியா வந்தன மகிமை – 1:
சோம்பல் நீக்கம்
கடவுள் நமக்கு உதவவேண்டுமென்றால் அந்த உதவியை பெற நம்மை நாம் தயார் செய்து கொள்ளவேண்டும். சந்தியாவந்தனத்தை அதிகாலையில் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் விடிவதற்கு முன் எழுவது பழக்கமாகி சோம்பல் நீங்குவதுடன் நாளடைவில் நம் செயல் திறன் அதிகரித்து வாழ்வில் ஏற்படும் இடர்களை சந்திக்கும் திறமை நமக்கு ஏற்படும்.
சந்தியா வந்தன மகிமை – 2:
ஆரோக்கியம் பிராணாயாமம் செய்வது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை வளர்க்க பெரிதும் உதவும். தொடர்ந்து உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் சிறிது நேரம் ஓய்வு கிடைப்பதால் மனஅழுத்தம் குறைந்து ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.
சந்தியா வந்தன மகிமை – 3:
தவறான செயல்களுக்கு தடை
அவ்வப்பொழுது சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் கடவுள் ஞாபகம் ஏற்படுவதால் தவறான செயல்கள் செய்யும் வாய்ப்பு வெகுவாக குறையும். மனம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்காமல் ஒரு சிலநிமிடம் ஓய்வெடுப்பதால் புத்தியின் வார்த்தைகளை செவிகொடுத்து கேட்க அவகாசம் கிடைக்கும். ஆசைகள் அளவுக்கு மீறாமல் ஒரு நிதானம் ஏற்படும்.
பிடித்தது பிடிக்காதது என்ற அடிப்படையில் செயல்படும் மனம் நிலையாத இன்பங்களை தேடுவதிலேயே அனைத்து நேரத்தையும் செலவிடும் தன்மை உடையது. சந்தியாவந்தனம் செய்வதனால் நிலையான இன்பத்தை தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள் என்ற புத்தியின் அறிவுரையை திரும்ப திரும்ப கேட்பதன் மூலம் விரைவில் மனம் திருந்தி அதனுடன் ஒத்துழைக்க ஒத்துக்கொள்ளும்.
சந்தியா வந்தன மகிமை – 4:
 சரியான செயல்களுக்கு ஊக்கம்
நல்லது கெட்டது என்ற அடிப்படையில் செயல்படும் புத்திக்கு சந்தியாவந்தனம் ஊக்கம் அளிக்கிறது. நிலையான இன்பத்தை பெற தர்மமான காரியங்களை மட்டும் செய்து வாழ்வில் அதர்மத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை சந்தியாவந்தனம் நினைவுபடுத்தும்
.
சந்தியா வந்தன மகிமை – 5:
பாதையில் கவனம் வேலை செய்து பணம் சம்பாதித்து உலக இன்பங்களை அனுபவிப்பது முக்தியடைய வெகு அவசியமான ஒரு செயல். ஆனால் அதிலேயே முழுகவனத்தையும் செலுத்திவிட்டால் முக்தியடைய முடியாது. சந்தியாவந்தனம் என்பது நாம் வேலை செய்வதன் காரணம் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல என்றும் வேதாந்தத்தை படிக்க தேவையான மனப்பக்குவத்தை பெறுவதற்காகவே என்றும் நாளில் மூன்று முறை நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே செய்யும் வேலைகளை கர்ம யோகமாக செய்யவும், புலன்களை அடக்கி மனதை புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சந்தியாவந்தனம் உதவுகிறது.
சந்தியா வந்தன மகிமை – 6:
 இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு புத்திக்கூர்மை உண்டாகும்.
சந்தியா வந்தன மகிமை –7:
 மனதில் சாந்தமும் தெளிவும் உண்டாகும்.தன் நம்பிக்கை வளரும்
சந்தியா வந்தன மகிமை – 8:
மூக்கு ,நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்

Sunday, March 5, 2017

உக்ர தெய்வ வழிபாடு தேவையா?


 

உக்ர தெய்வ வழிபாடு தேவையா?

 

சைவத்தின் மேல் வேறு சமயம் இல்லை, இதில் எனக்கு உடன்பாடு ஜாஸ்தி. எனவே தற்காலத்தில் சில சுயநலவாதிகளால் பெரிது படுத்தப் பட்ட ப்ரத்யங்கிரா, சரபர், சூலினி, காளி, சண்டி,…இதுபோன்ற உக்ர தெய்வ வழிபாட்டில் எனக்கு அதிக ஈடுபாடு இல்லை, ஏனெனில் வள்ளுவர் சொன்னது போல கனி இருக்க காயை ஏன் சுவைப்பானேன்?

 

நம்முடைய சிவாலய தெய்வங்களையும், நவக்ரஹ தைவதைகளையும் விட வேறு தெய்வம் தேவையில்லையே? ஆனால் மக்கள் இவைகளை மறந்து, தேவையற்ற வழிபாடுகளை மேற்கொள்வது வருத்தமளிக்கிறது? இது எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு பரவலான கேள்வி!

 

மேலோட்டமாக ஒன்றயும், உள்ளார்ந்து ஒன்றயும் உணருகிறேன்.

 

மேலோட்டம்:

 

மேலோட்டமென்றால் வீர சைவர்கள் என்போர் சிவபெருமானின் வழிதோன்றல்கள் அவர்கள் அப்படி பேசுவது இயல்பு, காரணம் அவர்களின் ஆத்மார்த்தமான குரு சாட்சாத் எம்பெருமான், அப்புறம் அவர்கள் எப்படி மற்றவற்றை விரும்புவார்கள். இது பொதுவான விருப்பமாகும்.

 

 

இறைவன் என்பது உருவமற்றது, நாமமற்றது, எங்கெங்கிலும் வியாபித்திருப்பது எதிலும் உள்ளது, எல்லாமானது, நிலையானது என்பார் பெருந்தகையோர்.

 

ஸ்ரீ ஸ்ரீ சிவனாரின் ருத்ர தாண்டவ நிலையில் அவிழ்சடையினின்றும் தோன்றியவர் ஸ்ரீ ஸ்ரீ வீரபத்திரர். இவர்தாம் சைவர்களின் மூலக் கடவுளானாவர். இவரை பின்பற்றியே சைவர்கள் வாழவேண்டும். இந்த வீரபத்திரரை வணங்கும் வீரசைவர்கள் புடலங்காய் உண்பது கூடாது. அங்காளம்மனை வணங்கமாட்டார்கள். அந்த அம்மன் இருக்கும் திசைகூட பார்க்கமாட்டார்கள் என்பது போல பல ச்மப்ரதாயங்கள் உண்டென்ற போதும் இன்று இவைகள் புறக்கணிக்க அல்லது மறைக்கப்பட்டுவிட்டது.

 

ஆனால் தங்களின் குறிப்பில் உள்ள சரபர், பிரத்யங்கரா, சூலினி, சண்டி, காளி போன்ற இறைவனார் திருமேனிகள் உருவகப்படுத்திக் காட்டப்பட்டிருப்பது ஏன்? என பார்ப்போமா?

 

முதலில் யார் இவர்கள்?

 

பிரத்யங்கரா, சூலினி, காளி இவர்கள் மூவரும் ஒரே உருவத்திலிருந்து பிரிந்தவர்கள்தான். எப்படி ?

 

ஸ்ரீ ஸ்ரீ அம்பாளின் நிலைகள் ஐந்தாகும்,

 

1. சுவாமியுடன் அம்பாள்.

 

2. பிரகாரத்தில் துர்கா,

 

3. தனது கோயிலில் சூலினி, காளி, சண்டி

 

4. தனது கோயிலில் பிரத்யங்கரா

 

5. தனது கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

 

இவ்வாறாக அம்பாளே ஐந்து நிலைகளில் இருந்து அருள்பாலிப்பதாக சாக்தம் கூறுவது பொய்யல்லவே !

 

அப்புறம் ஏன் இந்த பேதம் !!!

 

சரி சரபர் யார் ?

 

சாட்சாத் சிவனேயல்லவா !

 

சைவ வைணவ சேர்க்கையை மறைமுகமாக வரவேற்கும் நிலையை காட்டும் உருவம்தானே சரபர்.

 

சரபரின் கைப்பிடியுள் சிக்கிக்கொண்ட ஸ்ரீ நரசிம்ஹரை அணைத்து ஆலிங்கனம் செய்து இரண்டும் ஒன்றே எனும் பொருள் காட்டும் உயர்ந்த நோக்கல்லவா அது! அதனை சைவர்கள் வெறுப்பானேன் ?

 

சைவர்கள் ஒற்றுமைக்கு எதிரானவர்களா என்ன?

 

வேறு மாதிரியாக பார்ப்போம்.

 

நமது குடும்பத்திற்காக ஒரு மருத்துவர் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். எந்த நோய்க்கும் அவரிடம்தான் போவது நமது குடும்ப வழக்கம். ஆனால் சில தீர்க்க முடியாத நோய்களுக்கு அவரே வேறு மருத்துவருக்கு சிபாரிசு செய்வதில்லையா, கடிதம் தருவதில்லையா? எல்லாவித சங்கடங்களையும், தோஷங்களையும் திருக்கோயிலில் குடிகொண்ட எம்பெருமானாரால் தீர்க்க முடியும் என்றாலும் சில விசேஷமான தீர்வுகளுக்கு சுவாமியின் வேறு சில திருஉருவங்கள் பொறுப்பேற்று தீர்த்து வைக்கின்றன.

 

உதாரணமாக

 

பெரும் பணக்காரர் ஒருவர் தனது பாதுகாப்பிற்காக சிலரை பணியமர்த்தி உள்ளார் என வைத்துக்கொள்வோம். அவருக்கு ஏதேனும் ஒன்று என்றால் இந்த பாதுகாவலர்கள் சும்மாயிருக்கமாட்டார்கள் அடிதடி என்று கொலைவரை செய்வார்கள், அவர்களுக்கு உணவு தந்து உடை தந்து அவர்களை தன்னுடனேயே வைத்து அவர்களிடம் தன்னை பற்றி யாராவது ஏதாவது பேசினால் உடனே கோபம் அளவிற்கு அவர்களை உசுப்பேற்றி வைத்திருக்கிறார் அந்த பணக்காரர்.

 

அந்த அடியாட்களுக்கு குடும்பம் இல்லையா? இருக்கிறது, குழந்தைகள் இருப்பார்கள், தாய் தந்தை இருப்பார்கள், அவர்கள் தனது வீட்டில் சிரிப்பார்கள், குழந்தைகளோடு விளையாடுவார்கள், மனைவியோடு சந்தோஷிப்பார்கள்.

 

ஆனால் அந்த பணக்காரர் அவர்களின் கோபத்தை மட்டுமே தனக்காக பயன்படுத்துவதால் அவர்கள் இங்கே வந்தால் கோபஸ்வரூபமாக (உக்ர ரூபமாக) காட்சி தருகிறார்கள்.

 

இதனைப் போலவே எம்பெருமானின் கோபாக்னியை (வீரபத்திரரின்) மட்டும் பயன்படுத்தும் போது அது ஒரு சில விஷயங்களுக்கு தீர்வாகிறது.

 

சாந்தமாக தீர்க்க முடியாதா என்ற கேள்வி எழும்.

 

காலில் குத்திய முள்ளை எடுக்க இன்னொரு கூர்முனை ஊசிதான் தேவை, அதை விடுத்து கொஞ்சம் பஞ்சை வைத்து கொண்டு முள்ளே வெளியே வா என்றால் முள் வராது.

 

பழமொழி: அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவான்.

 

இப்போது புரிந்ததா?  ஏன் உக்ர தெய்வ வழிபாடு என்று. யும் அளித்து ராஜயோகம் தருவாள் என்பது சத்தியம்.

மந்திரம்

மந்திரம் என்ற சொல் நினைபவனை காப்பது என்ற பொருள் தரும். மந் - என்றால் நினைதல், அறிதல் என்றும், திரம் - காத்தல் என்றும் பொருள்படும். எனவே மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள்படும். இத்தகைய மந்திரமானது பலவகை
1 மூல மந்திரம், 2. பீச மந்திரம் 3. பஞ்ச மந்திரம்
4. சடங்க மந்திரம், 5. சங்கிதா மந்திரம், 6. பத மந்திரம்
7. மாலா மந்திரம், 8. சம்மேளன மந்திரம், 9. காயத்திரி மந்திரம்
10. அசபா மந்திரம், 11. பிரணாப்பிரதிட்டா மந்திரம் 12. மாதிருகா மந்திரம்,
13. மோன மந்திரம், 14. சாத்திய மந்திரம், 15. நாம மந்திரம்
16. பிரயோக மந்திரம், 17. அத்திர மந்திரம், 18. விஞ்சை மந்திரம்
19. பசிநீக்கு மந்திரம், 20. விண்ணியக்க மந்திரம், 21. வேற்றுரு மந்திரம்
22. துயில் மந்திரம், 23. திரஸ்கரிணீ மந்திரம், 24. சட்கர்ம மந்திரம்,
25. அஷ்ட கர்ம மந்திரம், 26. பஞ்சகிருத்திய மந்திரம், 27. அகமருடண மந்திரம்,
28.எகாஷர மந்திரம், 29. திரயஷரி மந்திரம், 30. பட்சாஷார மந்திரம்,
31. சடஷர மந்திரம், 32. அஷ்டாஷர மந்திரம், 33. நவாக்கரி மந்திரம்,
34. தசாஷர மந்திரம், 35. துவாதசநாம மந்திரம், 36. பஞ்சதசாக்கரி மந்திரம்
37. சோடஷாஷரி மந்திரம், 38. தடை மந்திரம், 39. விடை மந்திரம்,
40. பிரசாத மந்திரம், 41. உருத்திர மந்திரம், 42. சூக்த மந்திரம்
43. ஆயுள் மந்திரம், 44. இருதய மந்திரம், 45. கவச மந்திரம்,
46. நியாச மந்திரம், 47. துதி மந்திரம், 48. உபதேச மந்திரம்,
49. தாரக மந்திரம், 50. ஜெபசமர்பண மந்திரம், 51. ஜெப மந்திரம் என பலவகைப்படும்.
இவையன்றி 52. நீலகண்ட மந்திரம் , 53. மிருத்யுஞ்சய மந்திரம் , 54. தஷிணாமூர்த்தி மந்திரம் , 55. சரப மந்திரம் , 56. வீரபத்ர மந்திரம் , 57. பைரவ மந்திரம் , 58. விநாயக மந்திரம் , 59. சண்முக மந்திரம் , 60. நரசிங்க மந்திரம் , 61. நவகிரக மந்திரம் , 62. வாலை மந்திரம் , 63. புவனை மந்திரம் , 64. திரிபுரை மந்திரம் , 65. துர்க்கை மந்திரம், 66. அசுவாரூடி மந்திரம், 67. சப்தமாதர் மந்திரம், 68. முப்பத்துமுக்கோடி தேவர்கள் மந்திரம், 69. பதினெண் கண மந்திரம், 70. யோகினியர் மந்திரம், 71. காலக் கடவுளர் முதலாக உள்ள எல்லாக் கடவுளருக்கும் தனித் தனியே சிறப்பாய் உள்ள மந்திரங்களும், சல்லிய தந்திராதி சித்த மந்திரங்களும், திராவிடாதி லௌகீக தேசத்தில் ( நமது பாரத தேசத்தில் ) உள்ள பாஷைகளில் ( மொழிகளில் ) உள்ள மந்திரங்கள் என்று எண்ணிறைந்த கணக்கில் அடங்காத மந்திரங்கள் உள்ளன.
இவ்வாறு பல திறன் உள்ளதாகவும், எண்ணிரைந்ததாகவும் உள்ள மந்திரங்கள் அனைத்தும் ஏழுகோடி மந்திரங்களில் அடங்கும். இதனை வடநூலார் சப்த கோடி மகா மந்திரம் என்பர். ஏழு கோடி மந்திரம் - ஏழு வகையான முடிபினை உடைய மந்திரம் என்பது பொருள்.
அவையாவன 1. நம, 2. சுவதா, 3. சுவாகா, 4. வௌஷடு, 5. வஷடு, 6. உம், 7. படு என்பனவாம். இதற்க்கு இவ்வாறு இல்லாமல் ஏழுகோடியாகிய எண்களை கொண்ட மந்திரங்கள் என்றும் அவை இது இதுவென்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்னும் வடசமஸ்கிருத நூலில் பொருள் கூறப்பட்டிருக்கிறது

Saturday, March 4, 2017

முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா? பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறக்குமா?

முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா? பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறக்குமா?
திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது? ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள்?
அடியேன் சமீபத்தில் படித்த ஒரு நிகழவு தங்களுக்காக,
குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.
அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி
செய்தேன்.
அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.
அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன்.
நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார்.
நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் வறியவன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான்.
மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.
அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது.
அதன்படி,அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.
தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும்
கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.
திருதராஷ்டிரா, இப்போது சொல்... அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.
வசிஷ்டரின்  சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார்.
ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார்.
அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது.
ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன்.
புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய்.
அத்தகைய நீதி  பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர்,
போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி,
நூறு குழந்தைகள் என  நல்வாழ்க்கையைத் தந்தது.
ஆனால், நான்
சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை  உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.
அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு  பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.
ஆனால் தினம்தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு, கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.
தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார். தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.
"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் "

ப்ருஹ்மயக்ஞம்

ப்ருஹ்மயக்ஞம் செய்வோம்.

அந்தணர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தான் கற்றுக்கொண்ட வேதத்தை தினசரி சிறிதளவாவது சொல்வதற்குத்தான் ப்ருஹ்ம யக்ஞம் என்று பெயர்.

தினசரி காலையில் ஸந்தியாவந்தனம்,ஓளபாசனம் பூஜை முதலிவற்றை முடித்துவிட்டு குரு முகமாக கற்றுக்கொண்ட ஶ்ரீ ருத்ரம், சமகம், புருஷ சூக்தம், ஶ்ரீ ஸூக்தம், துர்கா ஸுக்தம், பாக்கிய ஸூக்தம் போன்ற வேத பாகங்களை சிறிதாவது சொல்ல வேண்டும்., அல்லது காயத்ரியாவது சொல்லலாம்

ஆசனத்தின் மீது அமர்ந்து கொன்டு கிழக்கு முகமாக வலது காலை இடது துடை மேல் போட்டுக்கொன்டு .வேதம் சொல்ல வேண்டும்.

வேதம் கற்றவர்கள் முதல் நாள் முடிவடைந்த பகுதியில் தொடங்கி , தொடர்ந்து அடுத்த நாள் சொல்ல வேண்டும்.. இதற்கு பிறகு தேவர்கள், ரிஷிகள், பித்ருக்களுக்கு ஜலத்தால் தர்பணம் செய்ய வேண்டும்.

இதுவே ப்ருஹ்மயக்ஞம் எனப்படும். தேவ, ரிஷி பித்ரு அருளை மிக சுலபமாக பெற்று தரும் இந்த ப்ருஹ்ம யக்ஞ தர்பணம் தினமும் செய்ய வேண்டும்.

க்ருஷ்ண யஜுர் வேதம் தைத்திரீய ஆரண்யகம் சொல்கிறது: உத்தமம் நாககும் ரோஹதி; உத்தம: ஸமாநானாம் பவதி; யாவந்தகும் ஹவா: அக்ஷய்யஞ்சாபபுநர் ம்ருத்யுஞ் ஜயதி; ப்ருஹ்மண: ஸாயுஜ்யம் கச்சதி என்று.

தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்பவர் இறந்த பின்னர் ஸ்வர்க்கம் செல்வர்;

இவ்வுல்கில் ஜீவித்திருக்கும் வறை தமக்கு சமமானவர்களுக்குள் சிறந்தவராக இருப்பர், செல்வம் நிறைந்த பூமி முழுவதும் தானம் செய்த பலனுக்கு அதிகமாகவே பலன் கிடைக்கும்.; துர் மரணம் வராது; ஸ்வர்க்கத்தை அடைவான்; ப்ருஹ்ம ஸாயுஜ்யம் என்னும் முக்தி அடைவான் என அர்த்தம்.

வேதம் சொல்வது, ப்ருஹ்ம யக்ஞத்தின் முதல் பகுதி... மாத்யானிகம் செய்த பிறகுத்தான் ப்ருஹ்ம யக்ஞ தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்ய வேண்டும். வேதம் சொல்வதை காலையிலும் செய்யலாம். மாத்யானிகம் செய்த பிறகு வேதம் சொல்லி விட்டு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யலாம்

.மாத்யானிகத்திற்கு முன்பு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யக்கூடாது. ப்ருஹ்மசாரி உள்பட அந்தணர் எல்லோரும் தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். இதனால் மறைந்த முன்னோர்களுக்கு தேவையான ஆஹாரம் கிடைக்கிறது. சந்தோஷ மடைகிறார்கள்.(.யஜுர் வேதம்).

முறையாக நான்கு வேதங்களின் ஆரம்பத்தையும் சொல்லிவிட்டு அதன் முடிவில் தேவ ரிஷி பித்ரு தர்பணம் கரிஷ்யே என்று சொல்லி தர்பணம் செய்கிறோம்.; இவ்விரண்டும் சேர்ந்ததே ப்ருஹ்ம யக்ஞம்.

பித்ருக்கள் என்பவர் பல வகை குழுவாக இருக்கிறார்கள். இவர்களில் நித்ய (திவ்ய) பித்ருக்கள் என்பவர் சிலர். தினசரி ஸ்நானம் செய்த பிறகு குடுமி முடியை முன் பக்கமாக விட்டூக்கொன்ட ஜலம் பூமியில் விழுவதை குடிக்கிறார்கள். வஸ்த்ரம் பிழியும் தண்ணீரையும் குடிக்கிறார்கள்.

ப்ருஹயக்ஞம் பித்ரு தர்பண நீரையும் இவர்கள் தான் சாப்பிடுகிறார்கள்.

அமாவாசை முதலிய நாட்களில் அதிவ்ய பித்ருக்களுக்கு தர்பணம்

செய்கிறோம். தந்தை உள்ள இல்லாத எல்லோரும் பூணல் இடம் போட்டுக்கொண்டு ப்ருஹ்மயக்ஞ தர்பணம் செய்யலாம்.. இதனால் தர்பணம் செய்பவருக்கும் அவரின் பெற்றோருக்கும் ஆயுள் அதிக மாகும்.

ப்ருஹ்மோபதேசம் (பூணல் கல்யானம்) முதல் கடைசி காலம் வரை தினமும் ப்ருஹ்மயக்ஞம் அந்தணர்கள் செய்ய வேண்டும்.

அமாவாசை தர்பணம் செய்த பிறகு ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். ச்ராத்தம் முடிந்த பிறகு பின்ட பித்ரு தர்பணம் செய்த பிறகு பரேஹணி தர்பணம் செய்த பிறகு ப்ரஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.

ப்ருஹ்மயக்ஞத்தில் கூறப்படும் ஸோம பித்ருமான் முதலான பித்ருக்கள் நித்ய பித்ருக்கள் ஆவார்கள். ப்ருஹ்மசாரி உள்பட பெற்றோர்கள் இருப்பவர்களும் தர்பணம் செய்யலாம். ஆசார பூஷணம் பக்கம் 168ல் அபஸவ்யம் த்விஜாக்ர்யாணாம் பித்ர்யே ஸர்வத்ர கீர்த்திதம் ஆப்ரகோஷ்டந்து கர்தவ்யம் மாதாபித்ரோஸ்து ஜீவதோ:

என்ற சாஸ்த்ர வாக்யபடி , தாய் தந்தை யுள்ளவர்கள் ப்ருஹ்ம யக்ஞம் போன்ற கர்மாக்களில் , பித்ருக்களுக்கு தர்பணம் செய்யும்போது , பூணலை இடமாக போட்டுக்கொள்ள வேண்டும்.

ஆனாலும் பூணல் முழங்கைக்கு மேல் போகாமல் இருக்குமாறு இடம் போட்டுக்கொண்டு தர்பணம் செய்ய வேண்டும் தந்தை இல்லாத எல்லோரும் முழுமையாக பூணலை இடம் போட்டுக்கொள்ளலாம்..