Friday, January 20, 2017

துரதிர்ஷடம் வராமல் இருக்க செய்யக் கூடாத செயல்கள்

ஒருவரின் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் கஷ்டமான நிலைகள் தான் துரதிர்ஷடம் என்று கூறுகின்றோம்.
அப்படி ஒருவருக்கு ஏற்படும் துரதிர்ஷடமானது, அவர்களின் வாழ்வில் கடுமையான வறுமையையும், கஷ்டங்களையும் ஏற்படுத்தி விடுகிறது.
ஆனால் துரதிர்ஷடம் நாம் செய்யக் கூடிய ஒருசில தவறான செயல்கள் மூலம் தான் ஏற்படுகிறது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
துரதிர்ஷடம் வராமல் இருக்க செய்யக் கூடாத செயல்கள்
  • சுடுகாட்டில் உள்ள இறந்த நபரின் எலும்புகளைத் தொடக் கூடாது. ஏனெனில் அதை தொட்டால் நம்மை நோக்கி எதிர்மறை ஆற்றல்கள் ஈர்ப்பதோடு, நாம் செய்யும் அனைத்து செயல்களிலுமே துரதிர்ஷ்டமாக நடக்கும்.
  • நாம் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்களை தரையில் சிதற விடக் கூடாது. ஏனெனில் சிதறி இருக்கும் உணவுகளை நாம் கால்களில் மிதித்து விட்டால், அது மிகப்பெரிய பாவச் செயலாகும். இதனால் நம்மை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் சூழ்ந்துக் கொள்ளும்.
  • நாம் ஒரு சுப காரியத்தில் ஈடுபடும் போது, ஏதேனும் ஒரு நாய் வந்து நம்மை தீண்டி விட்டால், அது ஒரு கெட்ட சகுணமாக கருதப்படுகிறது. எனவே இந்த செயலானது, நமது வாழ்வில் வறுமையை ஏற்படுத்துகிறது.
  • வீட்டைப் பெருக்கி, துடைக்கும் போது, அந்த அழுக்கு நீர் நமது மேல் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்நீர் நம் உடலில் பட்டால், அது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
  • நாம் ஒரு இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வரும் போது, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் தவறாமல் குளித்துவிட வேண்டும். ஏனெனில் அது அவரது வீட்டிற்கு முடிவற்ற துர் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
  • இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டில் உள்ள மரக்கட்டைகளைத் தொடுவதும் ஒரு அபசகுணமான செயலாகும். ஏனெனில் நாம் இதைச் செய்யும் போது, அதில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நம்மை ஈர்த்து, நமது வாழ்வில் அதிக தோல்விகளை ஏற்படுத்தும்.

Tuesday, January 17, 2017

அழுகிய_தேங்காய் அபசகுனமா?

அழுகிய_தேங்காய் அபசகுனமா?
பகவானால் படைக்கப்பட்ட முக்கியப் பொருள் தேங்காய். ஒரு கண், இரண்டு கண், மூன்று கண் என தேங்காய் உண்டு. கண் நரம்பு இல்லாத தேங்காய் கிடைக்காததால் கன்னியாகுமரி பகவதி அம்மன் திருமணம் ஆகாமல் நிற்பதாக சாஸ்திரம் கூறுகிறது. ஆகவே
ஒரு கண் தேங்காய் பிரம்மனாகவும்,
...
இரண்டு கண் தேங்காய் லஷ்மியாகவும்,
மூன்று கண் தேங்காய் சிவனாகவும் போற்றப்படுகிறது.
இறைவனுக்கு நம் உள்ளத்தின் சுத்தத்தைக் காண்பிக்க தேங்காயில் சில சகுனங்கள் உண்டு.
தேங்காய் உடைக்கும் பொழுது அழுகி இருந்தால் தேவையில்லாத பயம், குழப்பம், கலக்கம் & ஏமாற்றம் அடைந்ததாக எண்ணிக்கொள்வாா்கள்
ஒரு சிலா் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதை போல தானும் பயந்து மற்றவா்களையும் பயமுறுத்துவாா்கள்
ஆனால் அழுகிய தேங்காய் ஆனந்தத்தின் அறிகுறி. அழுகிய அனைத்து தேங்காயும் காரிய சித்தி ஆவதன் அறிகுறி. ஒரு துணி எடுத்து நீரில் நனைத்து அழுக்கை துடைத்து பிழிந்தால் அழுக்கு நீர் தான் வரும் அதே போல தான் உங்கள் பீடை, சரீர பீடை, துா்சொப்னங்கள், கண்திருஷ்டி, ரோகம், ஆகியவை அனைத்தும் பிராா்த்தனை செய்து உடைக்கும் தேங்காயில் விலகியதன் அறிகுறியை காட்டுகிறது.
முழு கொப்பரையாக இருந்தால்
சுபகாரியம் உண்டாகும்
புத்திர பாக்யம் உண்டாகும்
பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்
பூ இருந்தால்
ரோக நாஸ்தி
எதிர்பாராத வரவு
சொர்ண லாபம்.
நீங்கள் உங்களையோ அல்லது இறைவனையோ முழுமையாக நம்பினால் போதும் மற்றவை அனைத்தும் நல்லபடி சுபமாகவே நடக்கும்.

தீட்டு ..........

தீட்டு ..........
தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.
ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால்,தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.
தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு. இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.
தீட்டு என்பது வேறு, அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்!
1. காமத் தீட்டு:
காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும். இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.
2. குரோதத் தீட்டு:
குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள். சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர்,
கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர். குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.
3. லோபத் தீட்டு:
லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இறக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநல வேகமே. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள் இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.
4. மதத் தீட்டு:
மதம் என்பது கர்வம் (ஆணவம்) ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது. எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது. ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர். கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.
5. மாற்சரியத் தீட்டு:
மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது. எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது.
தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு.
இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இந்தத் தீட்டுக்களையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது. இறைவனோ நம் உள்ளத்திலேயே உறைந்திருக்கிறான். நம் உடலில் இருக்கும் சத்துபோய்விட்டால், பிணம்தான். (இதைத்தான் செத்துப் போய்விட்டான் என்பது) பிணம் ஆனபிறகு இறைவனை அடையமுடியாது.
சிவலோகப் பதவி, வைகுண்டப் பதவி என்பதெல்லாம் உடலுக்கு இல்லை. பிணத்தைச் சுடுகாட்டில் அடக்கம் செய்வார்கள். உயிர் எங்கு சென்றது என்பதே யாருக்குமே தெரியாது. சத்து என்னும் உயிரே இறைவன் இதை உணர்ந்து உண்மையைக் தெரிந்து கொண்டால், எல்லாம் நமக்குப் புரியும். அரிவாள் உயர்ந்து, அன்பால் தழைத்தால், அருள் தானே நம்மை வந்தடையும்.