Thursday, February 2, 2017

ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது ஏன்?

இந்து மதத்தில் வெவ்வேறு ஜாதிகளில் திருமணம் செய்வதற்கு பெரும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். அதற்கான அர்த்தங்கள் கூட நமக்கு தெரியும்.
ஆனால் ஒரே கோத்திரத்தில் இருப்பவர்களை கூட திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவதற்கு என்ன காரணம் தெரியுமா?
ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது ஏன்?
கோத்திரம் என்பது நமது மூதாதையர் வழிதோன்றலின் ஆரம்பத்தில் இருந்து தந்தை மகன் வழியாக பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும்.
ஆனால் இந்த கோத்திர வழக்கமானது, தந்தை மகள் என்ற வழியில் பின்பற்றப்படுவது இல்லை.
ஏனெனில் மகளுக்கு திருமணம் ஆனால் அவள் அவருடைய கணவன் கோத்திரத்தின் வழியில் சேர்ந்து விடுவார்கள்.
ஒருவருடைய வம்சாவளி தடைப்பட்டு போய்விடக் கூடாது என்பதற்காக ஆண் மகன் வேண்டும் என அனைவரும் விரும்புவார்கள்.
எப்படியெனில் ஒரு மனிதனின் உடலில் 23 குரோமோசோம்கள் இருக்கும். அதில் தந்தையிடம் இருந்து, அன்னையிடம் இருந்து என மொத்தமாக ஒருவருக்கு 46 இருக்கும்.
இதில் ஒன்று தான் உடலுறவு கொள்வதற்கான குரோமோசோம் ஆகும். அந்த வகையில் ஆணுக்கு xx, பெண்ணுக்கு xy குரோமோசோம்கள் இருந்தால், அவர்களின் வம்சாவலி தொடரும் என்று நம்புகின்றார்கள்.
இதனால தான் இந்துக்கள் ஒரே கோத்திரத்தில் பெண், எடுக்கவோ, கொடுக்கவோ கூடாது என்று காரணம் கூறுகின்றார்கள்.
அதே போல இந்துக்கள் நெருங்கிய ரத்த பந்தத்தில் திருமணம் செய்துக் கொள்வதை தடுப்பார்கள்.
ஏனெனில் அப்படி திருமணம் செய்தால், ஹார்மோன்களின் தாக்கம் ஏற்பட்டு, அது அவர்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதற்காக தான் இந்த கோத்திரங்களை பின்பற்றி வருகின்றார்கள்.

No comments:

Post a Comment