Thursday, February 2, 2017

மூதேவி எங்கேல்லாம் இருப்பாள்?

மந்திரம் - காத்தல் என்று பொருள்படும் சொல்லில் இருந்து மருவி மாந்திரீகம் என்று கூறப்பட்டது.
அதாவது மாந்திரீகம் என்பதற்கு, ஒருவரின் துன்பத்தை நினைத்து, அதை அறிந்து அவர்களை காப்பது என்று பொருளாகும்.
நாம் மாந்திரீகத்தில் ஈடுபடும் போது, நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனதின் மூலம் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வதைக் குறிக்கும்.
மாந்திரீகம் பற்றி தெரியாத சில உண்மைகள்
  • நம் கர்மாவை மாற்றக் கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு.வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.
  • சனிக்கிழமை அன்று நவதானிய அடைதோசை செய்து, நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் நமக்கு ஏற்படுவது குறையும்.
  • தினமும் ஏதாவது ஒரு மந்திர ஜபம் செய்து விட்டு நமது தினசரி செய்யும் கடமைகளைத் துவக்க வேண்டும். மேலும் மந்திர ஜபம் முடிந்தவுடன் ஒரு டம்ளர் இளநீர் அருந்த வேண்டும். இதனால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நமது உடலுக்குள்ளயே பதிவாகி இருக்கும்.
  • கடலை எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தினால், அது நமது குடும்பத்தில் கலங்கத்தை உண்டாக்கும். எனவே, உணவில் அதிகமாக கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • பாமாயில் என்ற சமையல் எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதால், துர்தேவதைகள் நமது உடலுக்குள் புகுந்து நம்முடைய கை மற்றும் கால்களை முடக்கிவிடும். எனவே தொடர்ந்து பாமாயில் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • நமது வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது மிகவும் நல்லது.
  • பெண்கள் அணிகலன்கள் அணிவது மிகவும் அவசியமாகும். ஏனெனில் பெண்களின் நெற்றிச்சுட்டி அறிவுக்கண்ணைத் திறக்கும், காதணி நல்ல கண்பார்வையையும், ஒட்டியாணம் துர் ஆவிகள் பெண்களின் தொப்புள் வழியாக உடலுக்குள் நுழையாமல் தடுக்கும், காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்குகிறது.
மூதேவி எங்கேல்லாம் இருப்பாள்?
வீட்டில் விடி விளக்கு எரியச் செய்து சுத்தமான நறுமணம் கமழும் பத்தியை எரிய விட்ட பின் தூங்கச் செல்ல வேண்டும். இல்லையெனில் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவியின் தாக்குதல் இருக்கும்.
சில நிறுவனங்கள்,கடைகள்,வீடுகள் இவைகளில் மதியம் 12 மணிக்கு எல்லா விளக்குகளை ஏற்றிய பின்பும் கூட இருளடைந்து காணப்பட்டால், .அங்கு மூதேவி வாசம் செய்கிறாள் என அர்த்தமாகும்.
துர்வாடை,அழுக்குத்துணிகள்,துன்பம்,புலம்பல்,அலங்கோலமாக ஆடுதல், எதிர்மறையான எண்ணங்கள், அடிக்கடி கொட்டாவி விடுதல், தீராத மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், இவை அனைத்து செயல்களுமே மூதேவியின் அடையாளங்களாகும்.
மேலும் நமது வீட்டில் மூதேவி வராமல் இருப்பதற்கு, தீபம், உப்பு, மஞ்சள், கண்ணாடி, பட்டு ஆடைகள், தேங்காய், பால், வெண்ணெய், மாவிலை, கோமியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment