Thursday, November 30, 2017

64 உபசாரங்கள்

64 உபசாரங்கள்
1.பாத்யம் - - திருவடிவகளைக் கழுவதற்கான தீர்த்தம் கொடுத்தல்.
2.ஆவராணாவரோபணம் --- -நகைகளை கழற்றுதல்.
3.ஸுகந்திதைலாப்யங்கம் -- வாஸனை எண்ணை தேய்த்தல்.
4. மஞ்ஜனசாலாப்ரவேசனம் - குளியலறைக்குச் செல்லுதல்.
5. மஞ்ஜனசாலாமணிபீடோபவேசனம் -குளியலறையிலிலுள்ள மணிமயஆஸனத்திலிருத்தல்
6. திவ்யஸ்னானீயோத் வர்த்தனம் - ஸ்நானத்திற்குரிய வாஸனைப் பொடிகளை சரீரத்தில்
தேய்த்தல்.
7. உஷ்ணோதகஸ்நானம் - வென்னீரில் குளித்தல்.
8. கனககலசச்யுதஸகலதீர்த்தாபிஷேகம்- தங்கமயமான குடங்களிலிருந்துகொட்டும் எல்லாவித தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்தல்.
9. தௌதவஸ்த்ரபரிமார்ஜ்ஜனம் -வெளுத்ததுணியால் உடம்பு துடைத்தல்
10. அருணதுகூலபரிதானம் - சிவப்பு பட்டை உடுத்துதல்.
11.அருணகுசோத்தரீயம் -சிவப்பு ரவிக்கை அணிவித்தல்.
12. ஆலேபமண்டபப்ரவேசனம் - அலங்கார அறைக்குச் செல்லுதல்.
13. ஆலேபமண்டப மணிபீடோபவேசனம் -மேற்கூறின அறையில் உள்ள ரத்னமயமான பீடத்தில் இருத்தல்.
14.சந்தனாகரு குங்கும ம்ருகமத கஸ்தூரி கோரோசனாதி திவ்யகந்தஸர்வாங்கீண விலேபனம் - அகில்,குங்குமப்பூ, புனுகு, பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, கோரோசனை முதலான வாஸனை வஸ்துக்கள் கலந்த உயர்ந்த சந்தனத்தை உடம்பில் பூசுதல்.
15. கேசபாரஸ்ய காலாகருதூபம் - தலை காய்வதற்கும், வாசனைக்கும் தூபமிடுதல்
16.மல்லிகா, மாலதி, ஜாதி,சம்பகா சோக சதபத்ர பூக குஹளி, புன்னாக கல்ஹார முக்யஸர்வர்த்து குஸுமமாலா: - மல்லிகை(பிச்சகம்-பிச்சி)மாலதி, சம்பகம், அசோகம் தாமரை, பாக்குப் பூ, குஹளி,(வாழைப்பூவில் இருக்கும் கேஸரம்) புன்னைப்பூ, செங்கழுநீர், ஆறுருதுக்களிலும் உண்டானவையாவும் வாசனையாயும் இருக்கும்புஷ்பங்களால் கட்டப்பட்ட மாலைகள்.
17. பூஷண மண்டபப்ரவேசனம் - நகைகள் அணிவதற்காக உள்ள அறையில் செல்லுதல்
18. பூஷண மண்டமணிபீடோபவேசனம் - முன்கூறிய அறையில் ரத்னபீடத்தில் இருத்தல்.
19. நவமணிமகுடம் -புதிதான ரத்ன கிரீடம் அணிதல்.
20. சந்த்ர சகலம் -சந்த்ர கலை.
21.ஸீமந்தஸிந்தூரம் -வகிட்டில் ஸிந்தூரம் வைத்தல்
22. திலகரத்னம் - நெற்றிப்பொட்டில் வைக்கும் ரத்னம்.
23. காலாஞ்ஜனம் - கறுப்பு மை.
24. வாளீயுகளம் - காதுகளில் அணியும் வாளி என்ற நகை (ஜிமிக்கி என்பர் இப்போது)
25. மணிகுண்டலயுகளம் - ரத்ன குண்டலங்கள்.
26. நாஸாபரணம் - மூக்குத்தி - புல்லாக்கு.
27. அதரயாவகம் - உதட்டின் சிவப்புசாயம்
28. ப்ரதமபூஷணம் - மாங்கல்யம்.
29. கனகசிந்தாகம் - தங்கமயமான புளியிலை போன்ற நகை.
30. பதகம் - பதக்கம்
31. மஹாபதகம் - நவரத்னங்கள் இழைத்த ஸ்ரீ சக்ரம்(பெரியோர் கூற்று)
32. முக்தாவலி - முத்துமாலை.
33. ஏகாவளி - ஒருவடமாலை (நக்ஷ்த்ர மாலை)
34. ச்சன்னவீரம் - ஒரு ஆபரண விசேஷம்.
35. கேயூரயுகளசதுஷ்டயம் - ஒவ்வொருகையிலும் இரண்டிரண்டு தோள் வளைகள்.
36. வலயாவளி - வளைகள்.
37. ஊர்மிகாவளி - மோதிரங்கள்.
38. காஞ்சீதாம -ஒட்டியாணம்.
39. கடிஸூத்ரம் - அரைஞாண்கயிறு.
40. ஸௌபாக்யாபரணம் -அரை மூடி(அரசிலை).
41. பாதகடகம் -கால்காப்பு.
42. ரத்னநூபுரம் - ரத்னமயமான கொலுசு
43. பாதாங்குளீயகம் - கால்மெட்டி.
44. ஏககரேபாசம் - ஓர்கையில் பாசக்கயிறு.
45. அன்யகரேஅங்குசம் -மற்றொருகையில் தொரட்டி
46. இதரகரேபுண்ட்ரேக்ஷுசாபம் - வேறொருகையில் நாமக்கரும்பு.
47.அபரகரேபுஷ்பபாணம் -மற்றொருகையில் புஷ்பபாணங்கள்.
48. ஸ்ரீமன்மாணிக்க பாதுகே -ரத்னமயமான மிதியடிகள்.
49. ஸ்வஸமான வேஷாபிஃ ஆவரணதேவதாபி: ஸஹ மஹா சக்ராதிரோஹணம் -தன்னைப்போலவே இருக்கும் ரூபத்துடன்கூடின ஆவரண தேவதைகளுடன் மஹாசக்ரத்தில் ஏறி இருத்தல்.
50. காமேஸ்வராங்கபர்யங்கோபவேசனம் - காமேச்வரனுடைய இடது பாகமாகிற கட்டிலில் இருத்தல்.
51. அம்ருதாஸவ சஷகம் -பானம் செய்யும் அம்ருதத்தோடு கூடிய பாத்திரம்.
52. ஆசமனீயம் - ஆசமனம்.
53. கற்பூர வீடிகா -பச்சை கற்பூரம் சேர்ந்த பாக்குடன்கூடின பீடா, (செய்விதம்- ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம், கஸ்தூரி, பாக்கு, கொப்பரை, திப்பிலி, சுக்கு, கருங்காலி, இவைகளின் பொடிகளுடன் சுண்ணாம்பு சேர்த்த வெற்றிலையை மேருபோல் செய்வது.)
54. ஆனந்தோல்லாஸவிலாஸஹாஸம் - ஆனந்த களிப்பில் ஏற்பட்ட சிரிப்பு
55. மங்களாரார்த்திகம் - தங்கம்முதலான பாத்திரங்களில் ஏற்றும் மாவிளக்கு தீபம்.
56. சத்ரம் - குடை.
57. சாமரயுகளம் - இரண்டு வெண்சாமரங்கள்.
58. தர்பணம் - கண்ணாடி.
59. தாளவ்ருந்தம் -விசிறி.
60. கந்தம் - சந்தணம்.
61. புஷ்பம் - பூ
62. தூபம் -சாம்பிராணிதூபம்
63. தீபம் - நெய்தீபம்.
64. நைவேத்யம் - நிவேதனம்.
இவை மஹாஸாம்ராஜ்ய சக்ரவர்த்தினியான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மாக்கு ஸைர விதி

No comments:

Post a Comment