Thursday, November 30, 2017

சண்முகக் கவசத்தின் மகிமை

சண்முகக் கவசத்தின் மகிமை
முருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையோடு முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் பாம்பன்சுவாமிகள்.இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்ற நூலாகும். கந்த சஷ்டி கவசம் போல் இது பயமும் நோயும் தீர்க்கும் மருந்து என்றால் மிகையில்லை;
பாம்பன் சுவாமிகள்,சென்னையில் இருக்கும் தம்புச்செட்டித் தெருவில் செல்லும்போது எதிர்பாராமல் குதிரைவண்டி மோதியதில் இடக்காலில் முறிவு ஏற்பட்டது.73 வயதில் நேர்ந்த இந்த விபத்தால் இனி சுவாமிகளால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
சுவாமிகள் மீது அன்பு கொண்ட சில பக்தர்கள்,அவர் அருகே அமர்ந்து சண்முகக் கவசத்தை விடாமல் நம்பிக்கையோடு பாராயணம் செய்து வந்தனர். “சீருடைக் கணைக்கால் தன்னை சீரலை வாய்த்தே காக்க”என்னும் அடியைப் பாடியபோது சுவாமிகளின் கால் குணமானது.அப்போது வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்து ஆடிய காட்சியை சுவாமிகள் கண்டார்.
தமிழில் இருக்கும் உயிர் எழுத்துக்கள் 12 ஐயும்,மெய் எழுத்துக்கள் 18 ஐயும்,முதல் எழுத்தாகக் கொண்டு 30 பாடல்களுடன் பாடப்பட்டது சண்முக கவசம்.தினமும் ஆறுமுறை சண்முக கவசத்தைப் பாடுபவர்கள் எத்தகைய நோயிலிருந்தும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.குறிப்பாக முருகக் கடவுள் பிறந்த வைகாசி விசாகத்தன்று பாடினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.--------------------------------------------------------------““சண்முக கவசம்”-பாம்பன் சுவாமிகள்-ஆரோக்யமாக இருக்க, நோய்நொடிகள் நீங்க- தினமும்/வேண்டும் போது
அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருளது ஆகித்
ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க
இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை
முருகவேல் காக்க, நாப்பல் முழுதும் நல் குமரன் காக்க
துரிசுஅறு கதுப்பை யானைத்துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ரமணியன் காக்க
ஈசனாம் வாகுலேயன் எனது சுந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருமகன் காக்க
ஆசுஇலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்
ஏசுஇலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க
உறுதியாய் முன்கை தன்னை உமையிளமதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால்மருகன் காக்க, பின்முதுகைச் சேய் காக்க
ஊண்நிறை வயிற்விற மஞ்சை ஊர்தியோன் காக்க, வம்புத்
தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய
நாணினை அங்கி கௌரி நந்தனன் காக்க, பீஜ
ஆணியைக் கந்தன் காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க
எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
அஞ்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சரன் நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க
ஓங்கிய சீற்றமே கொண்டு உவணியில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க
ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனை மல்கட்டத்
தவ்வியே வருவாராயின் சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன் கை அயில் காக்க காக்க
கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
நடையுடை எதனாலேனும் நான் இடர்ப் பட்டிடாமல்
சடிதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க
நகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையால் எற்குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க
சலத்தில்உய் வன்மீன் ஏறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
நிலத்திலும் சலத்திலும்தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால் நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க
ஞமலியம் பரியன் கைவேல், நவக்கிரகக் கோள் காக்க
சும விழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,
திமிர்கழல் வாசம், சோகை, சிரமடி கர்ண ரோகம்
எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க
டமருகத்து அடிபோல் நைக்கும் தலையடி, கண்டமாலை
குமுறு விப்புறுதி, குன்மம், குடல்வலி ஈழை காசம்,
நிமிரொணாது இருந்தும்செட்டை நீர்ப்பிரமேகம எல்லாம்
எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க
இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை தீமந்தம்
சணத்திலே கொல்லும் சன்னிசாலம் என்று அறையும் இந்த
பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும் சக்தி வடிவேல் காக்க
தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க
நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்ப கந்தராதி
இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க
பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்க
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம் ஐ ரீம்வேல் காக்க
மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும் சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும்வேறு எந்தஇடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர் சஷ்டி நாதன் வேல் காக்க காக்க
யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
அசுரமே முதலாம் ஈராறு அம்பகன் வேலின் காக்க
சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க
சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க
ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய் வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்
எஞ்சிடாக் கதிர்காமத்தோன் இகலுடைக் கரவேல் காக்க
லகரமே போல் காளிங்கன் நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்
நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்
இகல் அயில்காக்க, வாயிவினில் குகன் கதிர்வேல் காக்க
வடதிசை தன்னில் ஈசன் மகன் அருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும் ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில்,
கீழ்க்கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க
இழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும்நல்ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்
பழஞ்சுரார் போற்றும் பாதம்பணிந்து நெஞ்சுஅடக்கும் போதும்
செழும் குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க
இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளர் அறுமுகச் சிவன்தாம் வந்தெனைக் காக்க காக்க
ஒளிஎழு காலை, முன்எல், ஓம்சிவ சாமி காக்க
திளிநாடு பிறபகல்கால் சிவகுரு நாதன் காக்க
இறகுடைக்கோழித் தோகைக்கு இறை முன் இராவில் காக்க
திறலுடைச் சூர்ப்பகைத்தே திகழ் பின் இராவில் காக்க
நறவுசேர் தாள் சிலம்பன் நடிநிசி தன்னில் காக்க
மறைதொழு குகன் எம்கோன் மாறாது காக்க காக்க
இனம் எனத்தொண்டரோடு இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந்தன்னில் சரவண பவனார் காக்க
நனி அனுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்க வந்தே!

1 comment: