இந்து சமயத்தில் திருவிளக்கு வழிபாடு உன்னதமானதான இடத்தைப் பிடித்துள்ளது. எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்தில் எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடாகும். ஆதியில் வேதரிஷிகள் ஹோமம் வளர்த்து இறைவனை வழிபட்டனர். இந்த முறையே தற்போது தீப வழிபாடாக மாறியிருக்கிறது. விளக்கு வழிபாடு சுற்றுப்புறத்தில் இருக்கும் இருளை அகற்றுவதோடு நம் மனதின் இருளையும் அகற்றுகிறது. வீட்டின் வாசலை மெழுகி மாக்கோலம் இட்டு அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, பின் அதனை வீட்டு பூஜையறையில் வைத்தால் அவ்விளக்குடன் மகாலட்சுமியும் நம் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம். தற்போது பெண்கள் குழுவாக சேர்ந்து கோயில்களில் விளக்கு வழிபாடு செய்வது பிரபலமடைந்து வருகிறது. இந்த விளக்கு வழிபாட்டால், பல ஹோமங்களை நடத்துவதால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விளக்கை ஏற்றி வழிபடாதவர்கள் அவ்விளக்கு அணைந்து விடாமல் பாதுகாக்கவாவது செய்யலாம்.
விளக்குபூஜை எப்போது ?
பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். மாதங்களுக்கேற்ப இப்பலன்கள் வேறுபடுகின்றன
சித்திரை - தானிய வளம் உண்டாகும்.
வைகாசி - செல்வம் செழிக்கும்.
ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும்.
ஆடி - ஆயுள்பலம் கூடும்.
ஆவணி - புத்தித்தடை நீங்கும்
புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும்
ஐப்பசி - நோய்கள் உண்டாகும்
கார்த்திகை - நற்பேறு கிட்டும்
மார்கழி - ஆரோக்கியம் கூடும்.
தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
மாசி - துன்பங்கள் நீங்கும்.
பங்குனி - தர்மசிந்தனை வளரும்.
விளக்கு பூஜையின்போது கவனிக்கவேண்டியவை
* விளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும். பூஜைக்கு உடைந்த, கீறல் விழுந்த விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. திரி ஏற்றியபின்பு விளக்கு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* விளக்கிற்கு பூமாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்டலாம். சுடரில் இருந்து பத்தி, சூடத்தை கண்டிப்பாக கொளுத்தக் கூடாது.
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு பக்கம் பார்த்து வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்குகளை தீக்குச்சியால் நேராக பற்ற வைக்காமல் துணைவிளக்கின் உதவியோடு மட்டுமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை எல்லோரும் சேர்ந்து ஒரே மாதிரியான குரலில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
ராஜயோகம் தரும் வழிபாடு
வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரமாக எரிந்ததால் அது அணையும் நிலையில் மிகக்குறைவான சுடருடன் எரிந்தது. அவ்விளக்கில் இருந்த நெய்யை உண்பதற்காக ஒரு எலி தீபத்தை நோக்கி தாவியது. அப்போது எலி தன்னை அறியாமலேயே திரியை தூண்டிவிட்டது. இந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தி மன்னனாக பிறந்தது. வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தால் மோட்சமும் அடைந்தது. தெரியாமல் திரியை தூண்டிவிட்டதற்கே ஒரு எலிக்கு ராஜயோகம் கிடைத்தது என்றால் நாம் இறைவனை எண்ணி ஏற்றும் விளக்கிற்கு என்ன பலன் கிடைக்கும்.
ஐந்து முக விளக்குகள் ஏன் ?
நாம் வாழும் உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலும் ஐம்பொறிகளால்தான் இயங்குகிறது. பெண்கள் வைத்திருக்க வேண்டிய நற்குணங்களும் ஐந்து. இவ்வாறு, ஐந்து என்ற எண் நம் வாழ்க்கையில் பிரதானமாக இருக்கிறது. இதனை உணர்த்தும் விதமாகத்தான் குத்து விளக்கை ஐந்து திரியுடன் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டது.
எதற்காக எட்டு?
திருவிளக்கு பூஜைக்கு பயன்படும் குத்துவிளக்கின் மீது எட்டு இடங்களில் பொட்டு வைக்கவேண்டும் என்பது நியதி. இதற்கு காரணம் இருக்கிறது. உச்சியில் ஒன்று, அதற்கு கீழ் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் குறிக்கும் பொருட்டு மூன்று பொட்டுகள், அதனையடுத்து கைகளாக கருதி இரண்டு மற்றும் திருவடியில் ஒன்று என பொட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குபூஜை பரிபூரணமானதாய் இருக்கும் என்பதாக ஐதீகம்.
பூஜைக்கு தயாராவோம்!
முதலில் பூஜை செய்யும் இடத்தை மெழுகியும், விளக்கை நன்கு துலக்கியும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை செய்வதற்கு முன்பு அவ்விடத்தில் தலைவாழை இலையை விரித்து, அதில் முனை முறியாத அரிசியை (அட்சதை) பரப்பி, அதன் மீது விளக்கை வைத்து சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து மலர்களாக அலங்கரிக்க வேண்டும். பின்பு துணை விளக்கினால் திரியை ஏற்ற வேண்டும். எச்செயலைச் செய்யும் முன்பும் விநாயகரை வழிபடவேண்டும் என்பதால் மஞ்சளில் சிறிய விநாயகரைப் பிடித்து ஒரு வெற்றிலையில் வைத்து அவரையும் அலங்கரிக்க வேண்டும். பின்பு பூஜைக்கு தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு, விளக்கை வணங்கி விட்டு அமரவேண்டும். பின் ஓம் ஒளிர்வளர் விளக்கே போற்றி என்று சொல்லிக்கொண்டே திரியை ஏற்ற வேண்டும். பின் தொடர்ந்து அம்பாள் துதிப்பாடல்களை பாடியபடி பூஜையை துவங்கிவிடலாம்.
திரிகளும், பயன்களும்
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.
விளக்கு பூஜைக்கான விதிகள்
* திருவிளக்கு பூஜைக்கு எவர்சில்வர் விளக்குகள் உகந்தது அல்ல என்பதால் பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* பூஜையின்போது, தலைவாழை இலை மீது குத்து விளக்கை வைக்க வேண்டும். இதனால் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும் என்பதாக ஐதீகம்.
* விளக்கின்மீது எட்டு இடங்களில் சந்தனம், குங்குமப்பொட்டு வைக்க வேண்டும்.
* ஒரு திரி கொளுத்துவதனால் கிழக்கு முகமாக மட்டுமே கொளுத்த வேண்டும்.
* கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் அணைக்கலாம்.
விளக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள்
விளக்கு பூஜைக்கு தயாராகும் முன்பு கீழ்கண்ட பொருட்களை முன்னதாகவே தயாராக வைத்துக்கொள்ளுங்கள். திருவிளக்கு, தேவையான எண்ணெய், சாம்பிராணி, கற்பூரம், கோலமிடுவதற்கு பச்சரிசி மாவு, வாழை இலை, சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, மாலை, அட்சதை அரிசி, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கிழங்கு, நைவேத்திய பொருட்கள், துணை விளக்கு, தீர்த்த பாத்திரம், தாம்பாளம் மற்றும் அமர்ந்து கொள்வதற்கு சிறிய விரிப்பு.
கணபதி பாடல்
விளக்கு துதிப்பாடல் பாடுவதற்கு முன்பு மஞ்சளால் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையாரை கீழ்க்கண்ட பாடலைப்பாடி பூஜை செய்ய வேண்டும்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துப் போற்றுகின்றேனே.
எண்ணெயும் பலன்களும்
குத்துவிளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கேற்ப பலன்களும் மாறுபடுகிறது. சுடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது.
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும்.
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
திருவிளக்கில் எத்தனை பொட்டு வைப்பது?
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
விளக்கேற்றும் பலன்கள்
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்
யாருக்கு என்ன எண்ணெய்
கணபதி - தேங்காய் எண்ணெய்
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
ருத்திரர் - இலுப்பெண்ணெய்
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்
விளக்கேற்றும் திசைகள்
கிழக்கு - துன்பங்கள் நீங்கி குடும்பம் விருத்தி பெறும்
மேற்கு - கடன், தோஷங்கள் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
நல்ல நாளில் விதிவிலக்கு
விளக்கை செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் துலக்க கூடாது என்றாலும் விசேஷ நாட்களான பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை தீபம், குடும்பத்தில் நடத்தப்படும் சுபநிகழ்ச்சிகள் மற்றும் இதர விழாக்களின்போது, பரிசுத்தமான நீரால் விளக்கை துலக்கி, சுத்தமான புதிய துணியால் துடைத்து விபூதியால் விளக்கை தேய்க்க வேண்டும். விசேஷ நாட்களில் துலக்க விதிவிலக்கு உண்டு.
விளக்கு துலக்கும் பலன்கள்
* ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கு துலக்கி தீபமேற்றினால் கண் தொடர்பான நோய்கள் குணமாகும், பார்வை பிரகாசமடையும்.
* திங்களன்று விளக்கு துலக்கினால் மனசஞ்சலங்கள், குழப்பங்கள் நீங்கி மனதில் அமைதி ஏற்படும். தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளரும்.
* வியாழக்கிழமை துலக்கினால் குருபார்வை கிடைத்து கோடி நன்மைகள் உண்டாகும், கவலைகள் நீங்கி மனம் நிம்மதியடையும்.
* சனிக்கிழமையன்று விளக்கை கழுவினால் வாகனங்களில் பாதுகாப்பான பயணம் கிட்டும்.
விளக்கு துலக்க வேண்டிய நாட்கள்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது.
திங்கள் வியாழக்கிழமைகளில் விளக்கேற்றி குளிர வைத்த பிறகு (சுமார் இரவு 9 - 9.30 மணிக்குள்) விளக்கை துலக்குவது நல்லது. வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநதியட்சணி குடியேறுகிறாள். எனவே விளக்குகளை திங்கள் மற்றும் வியாழன் முன்னிரவிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் துலக்குவதே நல்லது.
திருவிளக்கு வழிபாடு
விளக்கே
திருவிளக்கே
வேந்தன்
உடன்பிறப்பே
!ஜோதி
மணிவிளக்கே
! சீதேவி
பொன்மணியே
!அந்தி
விளக்கே
! அலங்கார
நாயகியே
!காந்தி
விளக்கே
! காமாட்சித்
தாயாரே
!பசும்பொன்
விளக்கு
வைத்துப்
பஞ்சுத்
திரிபோட்டு
குளம்போல
எண்ணெய்விட்டு
கோலமுடன்
ஏற்றிவைத்தேன்
;ஏற்றினேன்
நெய்விளக்கு
எந்தன்
குடிவிளங்க
வைத்தேன்
திருவிளக்கு
மாளிகையும்
தான்விளங்க
மாளிகையில்
ஜோதியுள்ள
மாதாவைக்
கண்டு
மகிழ்ந்தேன்
!யான்
தரணியிலே
ஜோதியுள்ள
தாயாரைக்
கண்டுவந்தேன்
!மாங்கல்யப்
பிச்சை
மடிப்பிச்சை
தாருமம்மா
!சந்தானப்
பிச்சையுடன்
தனங்களும்
தாருமம்மா
!பெட்டி
நிறையப்
பூஷணங்கள்
தாருமம்மா
!பட்டி
நிறையப்
பால்
பசுவைத்
தாருமம்மா
!கொட்டகை
நிறையக்
குதிரைகளைத்
தாருமம்மா
!புகழுடம்பைத்
தாருமம்மா
!பக்கத்தில்
நில்லுமம்மா
!அல்லும்பகலும்
எந்தன்
அண்டையிலே
நில்லுமம்மா
!சேவித்து
எழுந்திருந்தேன்
;தேவி
வடிவங்கண்டேன்
வச்சிரக்
கிரீடங்கண்டேன்
;வைடூர்ய
மேனி
கண்டேன்
முத்துக்
கொண்டை
கண்டேன்
;முழுப்பச்சை
மாலை
கண்டேன்
சவுரி
முடி
கண்டேன்
தாழைமடல்
சூடக்
கண்டேன்
பின்னழகு
கண்டேன்
;பிறைபோல
நெற்றி
கண்டேன்
சாந்துடன்
நெற்றி
கண்டேன்
;தாயார்
வடிவம்
கண்டேன்
குறுக்கிடும்
நெற்றி
கண்டேன்
;கோவைக்கனி
வாயும்
கண்டேன்
கமலத்
திருமுகத்தில்
கஸ்தூரிப்
பொட்டும்
கண்டேன்
மார்பில்
பதக்கம்
மின்ன
மாலையசையக்
கண்டேன்
கைவளையல்
கலகல
என
கணையாழி
மின்னக்
கண்டேன்
தங்க
ஒட்டியாணம்
தகதகவென
ஜொலிக்கக்
கண்டேன்
காலிற்
சிலம்புகண்டேன்
;காலணி
பீலி
கண்டேன்
மங்கள
நாயகியை
மனங்குளிரக்
கண்டு
மகிழ்ந்தேன்
அடியாள்
நான்
அன்னையே
அருந்துணையே
!அருகிருந்து
காருமம்மா
!வந்தவினையகற்றி
மகாபாக்கியம்
தாருமம்மா
!தாயாகும்
உந்தன்
தாளடியில்
சரணம்
என்றேன்
மாதாவேயுன்றன்
மலரடியில்
நான்
பணிந்தேன்
.இந்த
அகவலைப்
பாடி
முடித்த
பின்னர்
தீபாராதனை
செய்து
வேண்டிய
வரங்களைத்
தந்தருளும்படி
பிரார்த்திக்க
வேண்டும்
.
திருவிளக்கு போற்றி
ஓம்
பொன்னும்
மெய்ப்பொருளும்
தருவாய்
போற்றி
ஓம்
போகமும்
திருவும்
புணர்ப்பாய்
போற்றி
ஓம்
முற்றறிவு
ஒளியாய்
மிளிர்ந்தாய்
போற்றி
ஓம்
மூவுலகும்
நிறைந்திருந்தாய்
போற்றி
ஓம்
வரம்பில்
இன்பமாய்
வளர்ந்திருந்தாய்
போற்றி
ஓம்
இயற்கையாய்
அறிவொளி
ஆனாய்
போற்றி
ஓம்
ஈரேழுலகும்
ஈன்றாய்
போற்றி
ஓம்
பிறர்
வயமாகா
பெரியோய்
போற்றி
ஓம்
பேரின்பப்
பெருக்காய்
பொலிந்தாய்
போற்றி
ஓம்
பேரருட்
கடலாம்
பொருளே
போற்றி
ஓம்
முடிவில்
ஆற்றல்
உடையாய்
போற்றி
ஓம்
மூவூலகுந்
தொழ
மூத்தோய்
போற்றி
ஓம்
அளவிலாச்
செல்வம்
தருவாய்
போற்றி
ஓம்
ஆனந்த
அறிவொளி
விளக்கே
போற்றி
ஓம்
எனும்
பொருளாய்
உள்ளோய்
போற்றி
ஓம்
இருள்
கெடுத்து
இன்பருள்
ஈந்தாய்
போற்றி
ஓம்
மங்கள
நாயகியே
மாமணி
போற்றி
ஓம்
வளமை
நல்கும்
வல்லியே
போற்றி
ஓம்
அறம்
வளர்நாயகி
அம்மையே
போற்றி
ஓம்
மின்
ஒளியம்மையாம்
விளக்கே
போற்றி
ஓம்
மண்
ஒளிப்பிழம்பாய்
வளர்ந்தாய்
போற்றி
ஓம்
தையல்
நாயகித்
தாயே
போற்றி
ஓம்
தொண்டர்
அகத்தமர்
தூமணி
போற்றி
ஓம்
முக்கட்
சுடரின்
முதல்வி
போற்றி
ஓம்
ஒளிக்குள்
ஒளியாய்
உயர்வாய்
போற்றி
ஓம்
சூளாமணியே
சுடரொளி
போற்றி
ஓம்
இருள்
ஒளித்து
இன்பமும்
ஈவோய்
போற்றி
ஓம்
அருள்
மொழிந்து
எம்மை
ஆள்வாய்
போற்றி
ஓம்
அறிவினுக்கு
அறிவாய்
ஆனாய்
போற்றி
ஓம்
இல்லக
விளக்காம்
இறைவி
போற்றி
ஓம்
சுடரே
விளக்காம்
தூயாய்
போற்றி
ஓம்
இடரைக்
களையும்
இயல்வினாய்
போற்றி
ஓம்
இடரைக்
களையும்
இயல்பினாய்
போற்றி
ஓம்
எரிசுடராய்
நின்ற
இறைவி
போற்றி
ஓம்
ஞானச்
சுடர்
விளக்காய்
நின்றாய்
போற்றி
ஓம்
அருமறைப்
பொருளாம்
ஆதி
போற்றி
ஓம்
தூண்டு
சுடரனைய
ஜோதி
போற்றி
ஓம்
ஜோதியே
போற்றி
சுடரே
போற்றி
ஓம்
ஓதும்
உள்ஒளி
விளக்கே
போற்றி
ஓம்
இருள்
கெடுக்கும்
இல்லக
விளக்கே
போற்றி
ஓம்
சொல்லக
விளக்காம்
ஜோதி
போற்றி
ஓம்
பலா
காண்
பல்லக
விளக்கே
போற்றி
ஓம்
நல்லக
நமசிவாய
விளக்கே
போற்றி
ஓம்
உவப்பிலா
ஒளிவளர்
விளக்கே
போற்றி
ஓம்
உணர்வு
சூழ்
கடந்தோர்
விளக்கே
போற்றி
ஓம்
உடம்பெனும்
மனையக
விளக்கே
போற்றி
ஓம்
உள்ளத்
தகளி
விளக்கே
போற்றி
ஓம்
உயிரெணும்
திரிமயக்கு
விளக்கே
போற்றி
ஓம்
இடர்படும்
ஞானத்தீ
விளக்கே
போற்றி
ஓம்
நோக்குவார்க்கு
எரிகொள்
விளக்கே
போற்றி
ஓம்
ஆதியாய்
நடுவுமாகும்
விளக்கே
போற்றி
ஓம்
அளவிலா
அளவுமாகும்
விளக்கே
போற்றி
ஓம்
ஜோதியாய்
உணர்வுமாகும்
விளக்கே
போற்றி
ஓம்
தில்லைப்
பொதுநட
விளக்கே
போற்றி
ஓம்
கற்பனை
கடந்த
ஜோதி
போற்றி
ஓம்
கருணை
உருவாம்
விளக்கே
போற்றி
ஓம்
அற்புத
கோல
விளக்கே
போற்றி
ஓம்
அருமறைச்
சிரத்து
விளக்கே
போற்றி
ஓம்
சிற்பர
வியோம
விளக்கே
போற்றி
ஓம்
பொற்புடன்
நடஞ்செய்
விளக்கே
போற்றி
ஓம்
உள்ளத்
திருளை
ஒழிப்பாய்
போற்றி
ஓம்
கள்ளப்
புலனைக்
கரைப்பாய்
போற்றி
ஓம்
உருகுவோர்
உள்ளத்து
ஒளியே
போற்றி
ஓம்
பெருகுஅருள்
சுரக்கும்
பெரும
போற்றி
ஓம்
இருள்சேர்
இருவினை
எறிவாய்
போற்றி
ஓம்
அருவே
உருவே
அருவுருவே
போற்றி
ஓம்
நந்தா
விளக்கே
நாயகி
போற்றி
ஓம்
செந்தாமரைத்
தாள்
தந்தாய்
போற்றி
ஓம்
தீப
மங்கள
ஜோதி
போற்றி
ஓம்
மதிப்பவர்
மாமணி
விளக்கே
போற்றி
ஓம்
பாகம்
பிரியா
பராபரை
போற்றி
ஓம்
ஆகம
முடிமேல்
அமர்ந்தாய்
போற்றி
ஓம்
ஏகமும்
நடஞ்செய்
எம்மான்
போற்றி
ஓம்
ஊழி
ஊழி
உள்ளோய்
போற்றி
ஓம்
ஆழியான்
காணா
அடியோய்
போற்றி
ஓம்
ஆதியும்
அந்தமும்
அற்றாய்
போற்றி
ஓம்
அந்தமில்
இன்பம்
அருள்வாய்
போற்றி
ஓம்
முந்தை
வினையை
முடிப்போய்
போற்றி
ஓம்
பொங்கும்
கீர்த்தி
பூரண
போற்றி
ஓம்
தன்னருள்
சுரக்கும்
தாயே
போற்றி
ஓம்
அருளே
உருவாய்
அமைந்தோய்
போற்றி
ஓம்
இருநில
மக்கள்
இறைவி
போற்றி
ஓம்
குருவென
ஞானம்
கொடுப்போய்
போற்றி
ஓம்
ஆறுதல்
எமக்கிங்
களிப்போய்
போற்றி
ஓம்
தீதெல்லாம்
தீர்க்கும்
திருவே
போற்றி
ஓம்
பக்தியில்
ஆழ்ந்த
பரமே
போற்றி
ஓம்
எத்திக்குந்
துதி
ஏய்ந்தாய்
போற்றி
ஓம்
அஞ்சலென்
றருளும்
அன்பே
போற்றி
ஓம்
தஞ்சமென்
றவரைச்
சார்வோய்
போற்றி
ஓம்
ஓதுவார்
அகத்துறை
ஒளியே
போற்றி
ஓம்
ஓங்காரத்
துள்ளொழி
விளக்கே
போற்றி
ஓம்
எல்லா
உலகமும்
ஆனாய்
போற்றி
ஓம்
பொல்லா
வினைகள்
அறுப்பாய்
போற்றி
ஓம்
புகழ்
சேவடி
என்மேல்
வைத்தோய்
போற்றி
ஓம்
செல்வாய
செல்வம்
தருவாய்
போற்றி
ஓம்
பூங்கழல்
விளக்கே
போற்றி
போற்றி
ஓம்
உலகம்
உவப்புற
வாழ்வருள்
போற்றி
ஓம்
உயிர்களின்
பசிப்பிணி
ஒளித்தருள்
போற்றி
ஓம்
செல்வம்
கல்வி
சிறப்பருள்
போற்றி
ஓம்
நல்லன்பு
ஒழுக்கம்
நல்குவாய்
போற்றி
ஓம்
விளகிட்டார்க்கு
மெய்நெறி
விளக்குவாய்
போற்றி
ஓம்
நலம்
எலாம்
உயிர்க்கு
நல்குக
போற்றி
ஓம்
தாயே
நின்னருள்
தந்தாய்
போற்றி
ஓம்
தூய
நின்திருவடி
தொழுதனம்
போற்றி
ஓம்
போற்றி
என்பார்
அமரர்
விளக்கே
போற்றி
ஓம்
போற்றி
என்பார்
மனிதர்
விளக்கே
போற்றி
ஓம்
போற்றி
என்
அன்புபொலி
விளக்கே
போற்றி
ஓம்
போற்றி
போற்றி
திருவிளக்கே
போற்ற
மங்கல விளக்கே மாதா போற்ற
மங்கையர்
போற்றும்
மாமணி
போற்றி
குங்குமம்
மஞ்சள்
கொடுப்பாய்
போற்றி
குலநலம்
காக்கும்
கோமகள்
போற்றி
சங்கடம்
எல்லாம்
சரிப்பாய்
போற்றி
சந்தோஷம்
என்றும்
தருவாய்
போற்றி
பொங்கிப்
பெருகும்
பொலிவே
போற்றி
புன்னகை
மிளிரும்
பூவே
போற்றி
செந்தாமரை
வாழ்
திருவே
போற்றி
சிந்தா
குலந்தீர்
சிவையே
போற்றி
வந்தா
தரிக்கும்
வாணி
போற்றி
கொந்தார்
மலர்ப்பூங்குழலீ
போற்றி
அந்தாதி
இல்லா
அன்னையே
போற்றி
அன்பும்
அறிவும்
அளிப்பாய்
போற்றி
இன்பம்
தீர்க்கும்
துணையே
போற்றி
அன்பர்
அகத்தில்
அமர்வாய்
போற்றி
அழியா
ஆன்ம
அழகே
போற்ற
வழியாய்
வந்து
வாழ்த்துவாய்
போற்றி
பழியாவும்
களைத்தருள்
பாலிப்பாய்
போற்றி
விழியாய்த்
திகழ்திரு
விளக்கே
போற்றி
அண்டம்
அனைத்தும்
ஈன்றாய்
போற்றி
தெண்டர்க்
கென்றும்
சுகம்நீ
போற்றி
கண்டார்
உள்ளம்
கவர்வாய்
போற்றி
வண்டார்
பூங்குழல்
வஞ்சீ
போற்றி
பூவும்
பொட்டும்
காப்பாய்
போற்றி
தேவை
அனைத்தும்
தெரிவாய்
போற்றி
ஆவல்
மிகுந்தார்
அகத்தாய்
போற்றி
காவல்
நிற்கும்
கருணையே
போற்றி
பொன்னும்
மெய்பொருளும்
பொழிவாய்
போற்றி
புலமைத்
திறம்நீ
புகட்டுவாய்
போற்றி
துன்னும்
இருளைத்
துரத்துவாய்
போற்றி
மன்னும்
புகழில்
மகிழ்வாய்
போற்றி
நீராய்
நெருப்பாய்
நிறைந்தாய்
போற்றி
ஆரா
அமுதம்
அனையாய்
போற்ற
சீராய்
ஞானம்
சேர்ப்பாய்
போற்றி
பேரா
வினைகளைப்
பேர்ப்பாய்
போற்றி
பொன்னே
மணியே
பூவே
போற்றி
அன்னே
அழியா
அன்பே
போற்றி
முன்னும்
பின்னும்
இல்லாய்
போற்றி
மின்னும்
மகுடம்
மிளிர்வாய்
போற்றி
சுடரே
போற்றி
ஜோதியே
போற்றி
இடரைக்
களையும்
இன்னொளி
போற்றி
ஊனில்
உயிராய்
ஒளிர்வாய்
போற்றி
தேனில்
இனிப்பாய்
திகழ்வாய்
போற்றி
பொற்றா
மரையில்
பொலிவாய்
போற்றி
வற்றாச்
செல்வம்
வழங்குவாய்
போற்ற
மூலப்
பொருளாம்
முதல்வீ
போற்றி
காலக்
கடலின்
களிப்பே
போற்றி
கோலக்
கிளியாம்
குமரீ
போற்றி
மாலுக்
கினியநல்
மனைவியே
போற்றி
வரந்தர
விரைந்தே
வருவாய்
போற்றி
நிரந்தர
சுகந்தரும்
நிமலீ
போற்ற
இகபர
சுகந்தரும்
இறைவீ
போற்றி
ஈடொன்
றில்லா
ஈசையை
போற்றி
அம்மா
தாயே
அபயம்
போற்றி
செம்மா
துளம்பூ
நிறத்தாய்
போற்றி
பெம்மான்
இடத்தமர்
பிறைநுதல்
போற்றி
இம்மா
நிலத்தை
ஈன்றாய்
போற்ற
அக
இருள்
அகற்றும்
விளக்கே
போற்றி
ஆன்ம
சுகந்தரும்
விளக்கே
போற்றி
ஆய
கலைதரும்
விளக்கே
போற்றி
தூய
நிலை
தரும்
விளக்கே
போற்றி
ஏகம்
ஆன
என்தாய்
போற்றி
மோகம்
தீர்க்கும்
மோகினி
போற்றி
யாகம்
வளர்க்கும்
யாமினி
போற்றி
யோகம்
வளர்க்கும்
உமையவள்
போற்றி
கண்ணே
கண்ணின்
மணியே
போற்றி
பண்ணே
பண்ணின்
சுவையே
போற்றி
நங்காய்
நந்தா
விளக்கே
போற்றி
தங்க
மேனி
விளக்கே
போற்றி
வேதப்பொருளாம்
விளக்கே
போற்றி
நாதக்
கனலாம்
நாரீ
போற்றி
இல்லக
விளக்காம்
எழிலே
போற்றி
சொல்லக
விளக்காம்
சுடரே
போற்றி
தொல்லக
விளக்காம்
ஜோதீ
போற்றி
நல்லக
விளக்காம்
நாயகீ
போற்றி
கற்பனைக்
கெட்டாக்
கவினொளி
போற்றி
காரிருள்
அகற்றும்
கதிரொளி
போற்ற
சொற்பதம்
கடந்த
தூயொளி
போற்றி
அற்புதம்
பலசெய்யும்
அருளொளி
போற்றி
நற்பதம்
வழங்கும்
நாயகீ
போற்றி
பற்பல
வடிவாம்
நாயகி
போற்றி
கற்பகத்
தருவே
கண்ணொளி
போற்றி
விற்பனர்
போற்றும்
வியனொளி
போற்றி
இருவினை
இடர்தீர்
இன்னொளி
போற்றி
கருவினை
களைந்தருள்
தண்ணொளி
போற்றி
அடிமுடி
காணா
அனலே
போற்றி
கடிமலர்ப்
பாதப்
புனலே
போற்ற
அம்மா
அன்னபூரணி
போற்றி
அன்பே
ஆதி
காரணி
போற்றி
ஞால
விளக்கே
நடனீ
போற்றி
கோல
விளக்கே
கோமதீ
போற்றி
மூலவிளக்கே
மூகாம்பிகை
போற்றி
மோன
விளக்கே
முத்தே
போற்றி
ஞான
விளக்கே
நலமே
போற்றி
கருணை
விளக்கே
காமாட்சி
போற்றி
காருண்ய
விளக்கே
மீனாட்சி
போற்றி
அறிவொளி
யூட்டும்
விளக்கே
போற்ற
உறவென
வளர்க்கும்
விளக்கே
போற்றி
பேரின்பக்
கடலே
பேரொளி
போற்றி
பேரருட்
கடலாம்
பெண்மயில்
போற்றி
இல்லற
விளக்காம்
இறைவீ
போற்றி
நல்லறம்
வளர்க்கும்
நாயகீ
போற்றி
கண்கண்ட
தெய்வக்
கலைவிளக்கே
போற்றி
மாங்கல்யம்
காக்கும்
மணிவிளக்கே
போற்றி
தீங்கனைத்தும்
போக்கும்
திருவிளக்கே
போற்ற
அஷ்டலட்சுமி அஷ்டோத்திரம
ஓம்
அகில
லட்சுமியை
நம
ஓம்
அன்ன
லட்சுமியை
நம
ஓம்
அலங்கார
லட்சுமியை
நம
ஓம்
அஷ்ட
லட்சுமியை
நம
ஓம்
அமிர்த
லட்சுமியை
நம
ஓம்
அமர
லட்சுமியை
நம
ஓம்
அம்ச
லட்சுமியை
நம
ஓம்
அபூர்வ
லட்சுமியை
நம
ஓம்
ஆதி
லட்சுமியை
நம
ஓம்
ஆத்ம
லட்சுமியை
ந
ஓம்
ஆனந்த
லட்சுமியை
நம
ஓம்
இஷ்ட
லட்சுமியை
நம
ஓம்
இன்ப
லட்சுமியை
நம
ஓம்
இதய
லட்சுமியை
நம
ஓம்
ஈஸ்வர்ய
லட்சுமியை
நம
ஓம்
ஈகை
லட்சுமியை
நம
ஓம்
உண்மை
லட்சுமியை
நம
ஓம்
உதய
லட்சுமியை
நம
ஓம்
உத்தம
லட்சுமியை
நம
ஓம்
உபாசன
லட்சுமியை
ந
ஓம்
ஊர்ஜித
லட்சுமியை
நம
ஓம்
எட்டு
லட்சுமியை
நம
ஓம்
ஏக
லட்சுமியை
நம
ஓம்
ஐஸ்வர்ய
லட்சுமியை
நம
ஓம்
ஒற்றுமை
லட்சுமியை
நம
ஓம்
ஒளிப்பிரகாச
லட்சுமியை
நம
ஓம்
ஓங்கார
லட்சுமியை
நம
ஓம்
ஒளதார்ய
லட்சுமியை
நம
ஓம்
ஒளஷத
லட்சுமியை
நம
ஓம்
ஒளபாஷன
லட்சுமியை
ந
ஓம்
கருணை
லட்சுமியை
நம
ஓம்
கனக
லட்சுமியை
நம
ஓம்
கபில
லட்சுமியை
நம
ஓம்
கந்த
லட்சுமியை
நம
ஓம்
கஸ்தூரி
லட்சுமியை
நம
ஓம்
குக
லட்சுமியை
நம
ஓம்
சந்தான
லட்சுமியை
நம
ஓம்
சங்கு
லட்சுமியை
நம
ஓம்
சக்கர
லட்சுமியை
நம
ஓம்
சர்வ
லட்சுமியை
ந
ஓம்
சந்தோஷ
லட்சுமியை
நம
ஓம்
சரச
லட்சுமியை
நம
ஓம்
சகல
லட்சுமியை
நம
ஓம்
சுப்பு
லட்சுமியை
நம
ஓம்
ஞான
லட்சுமியை
நம
ஓம்
தர்ச
லட்சுமியை
நம
ஓம்
தன
லட்சுமியை
நம
ஓம்
தவ
லட்சுமியை
நம
ஓம்
நவ
லட்சுமியை
நம
ஓம்
தான
லட்சுமியை
ந
ஓம்
வைர
லட்சுமியை
நம
ஓம்
நீல
லட்சுமியை
நம
ஓம்
முத்து
லட்சுமியை
நம
ஓம்
பவள
லட்சுமியை
நம
ஓம்
மாணிக்க
லட்சுமியை
நம
ஓம்
மரகத
லட்சுமியை
நம
ஓம்
கோமேதக
லட்சுமியை
நம
ஓம்
பதுமராக
லட்சுமியை
நம
ஓம்
பத்ம
லட்சுமியை
நம
ஓம்
வைடூர்ய
லட்சுமியை
ந
ஓம்
பிரம்ம
லட்சுமியை
நம
ஓம்
விஷ்ணு
லட்சுமியை
நம
ஓம்
சிவ
லட்சுமியை
நம
ஓம்
ஜோதி
லட்சுமியை
நம
ஓம்
தீப
லட்சுமியை
நம
ஓம்
தீன
லட்சுமியை
நம
ஓம்
தீர்த்த
லட்சுமியை
நம
ஓம்
திவ்விய
லட்சுமியை
நம
ஓம்
தைரிய
லட்சுமியை
நம
ஓம்
தான்ய
லட்சுமியை
ந
ஓம்
வீர
லட்சுமியை
நம
ஓம்
வித்ய
லட்சுமியை
நம
ஓம்
விஜய
லட்சுமியை
நம
ஓம்
விபுல
லட்சுமியை
நம
ஓம்
விமல
லட்சுமியை
நம
ஓம்
ஜெய
லட்சுமியை
நம
ஓம்
கெஜ
லட்சுமியை
நம
ஓம்
வர
லட்சுமியை
நம
ஓம்
மஹா
லட்சுமியை
நம
ஓம்
வேணு
லட்சுமியை
ந
ஓம்
பாக்கிய
லட்சுமியை
நம
ஓம்
பால
லட்சுமியை
நம
ஓம்
பக்த
லட்சுமியை
நம
ஓம்
பாமா
லட்சுமியை
நம
ஓம்
புவன
லட்சுமியை
நம
ஓம்
புனித
லட்சுமியை
நம
ஓம்
புண்ணிய
லட்சுமியை
நம
ஓம்
பூமி
லட்சுமியை
நம
ஓம்
சோபித
லட்சுமியை
நம
ஓம்
ராம
லட்சுமியை
ந
ஓம்
சீதா
லட்சுமியை
நம
ஓம்
சித்த
லட்சுமியை
நம
ஓம்
சிங்கார
லட்சுமியை
நம
ஓம்
ஸ்வர்ண
லட்சுமியை
நம
ஓம்
நாக
லட்சுமியை
நம
ஓம்
யோக
லட்சுமியை
நம
ஓம்
போக
லட்சுமியை
நம
ஓம்
புவன
லட்சுமியை
நம
ஓம்
கோமள
லட்சுமியை
நம
ஓம்
மாத
லட்சுமியை
ந
ஓம்
பிதா
லட்சுமியை
நம
ஓம்
குரு
லட்சுமியை
நம
ஓம்
தெய்வ
லட்சுமியை
நம
ஓம்
தாமரை
லட்சுமியை
நம
ஓம்
நித்திய
லட்சுமியை
நம
ஓம்
சாந்த
லட்சுமியை
நம
ஓம்
பிரசன்ன
லட்சுமியை
நம
ஓம்
மங்கள
லட்சுமியை
ந
திருவிளக்கு பாடல்
மங்கலப்
பொருளாம்
விளக்கிதுவே
மாதர்
ஏற்றும்
விளக்கிதுவே
பொங்கும்
மனத்தால்
நித்தமுமே
போற்றி
வணங்கும்
விளக்கிதுவ
இருளை
நீக்கும்
விளக்கிதுவே
இன்பம்
ஊட்டும்
விளக்கிதுவே
அருளைப்
பெருக்கும்
விளக்கிதுவே
அன்பை
வளர்க்கும்
விளக்கிதுவ
இல்லம்
தன்னில்
விளக்கிதுவே
என்றும்
ஏற்றித்
தொழுதிடவே
பல்வித
நன்மைப்
பெற்றிடலாம்
பாரில்
சிறந்தே
வாழ்ந்திடலாம
விளக்கில்
ஏற்றும்
ஜோதியினால்
விளங்காப்
பொருளும்
துலங்கிடுமே
விளக்கில்
விளங்கும்
ஜோதிதனை
விமலை
என்றே
உணர்ந்திடுவோம.
தீபமங்கள ஜோதி நமோ நமோ
தூய அம்பல லீலா நமோ நமோ
தேவ குஞ்சரி பாகா நமோ நமோ
அருள் தாராய் என நாளும் உன் புகழே பாடி
நான் இனி அன்புடன் ஆச்சார பூஜை
செய்து உய்ந்திட அருள் செய்வாய