தமிழ் கடவுள் முருகனுக்குஇரண்டு மனைவியர் ஏன்..?
தமிழ் கடவுள் முருகன் என்கிறோம். ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர்.
கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள சாதாரணமான மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது.
இருப்பினும் அவருக்கு மனைவியர்
இரண்டு பேர் எதற்கு என்பதை
சற்று வேறு கோணத்தில் சந்திப்போம்.
அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும்.
மகான் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினைபாருங்கள்.
நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா".
சுழுமுனை என்பது மானுட உடலில்
உள்ள ஒரு மைய நரம்பு.
நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம்
இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது ஆகும்.
இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.
இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்.
7. தலை உச்சி (சகஸ்ராதாரம்)
6. நெற்றிக் கண் (ஆக்கினை)
5. தொண்டைக் குழி (விசுக்தி)
4. நெஞ்சுக்குழி (அனாகதம்)
3. தொப்புள் குழி (மணிப்பூரகம்)
2. தொப்புள் குழிக்கு சற்று கீழ்ப் பகுதி (சுவாதிஷ்ட்டானம்)
1. முதுகுத் தண்டின் அடிப்பாகம் உடலுக்கு உள் புறம் (மூலாதாரம்)
உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்"
இந்த ஏழு சக்கரங்களும் மையம் கொண்டிருக்கும் மைய நாடியே
சுழுமுனை நாடி.
ஒவ்வோரு உயிரிலும்
உள்ள சுழுமுனையே முருகன்.
இடகலை பிங்கலை என இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே
வள்ளி தெய்வானை.
ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே.
ஆனால் மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால்,இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
இறுதியாக ஒன்று
கடவுள் ஒருவரே.
அவர் எவராலும் பெறப்படவும் இல்லை.
அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை.
அவர் எந்த வடிவும் இல்லாத பேராற்றல்.
எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது
இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர
வேறொன்றும் இல்லை
No comments:
Post a Comment