Monday, January 26, 2015

சகல செல்வங்கள் நிலைக்க*

சகல செல்வங்கள் நிலைக்க*
1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும
்.10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
11,சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
12,தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
13,பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
14,செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
15,சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
16,காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
17 தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
18 ,விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
19,விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?
20,வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள
்.21எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும
்.22,எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள
்.23,வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும
்.24,எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
25எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்
.27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும
்.28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாதுவெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
30,கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது
.31,பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும
்.32 ,சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாதுநகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது
.33 தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
34,செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
35,செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
36,நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும
்.37,ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.,
38,வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான
்.39,குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள
்.40,எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான
்.41,கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.
42,மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.]ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும
்43,தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும
்.44,தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாகஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும
்.45,தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.
அன்னை திருமகளை வேண்டுகிறேன்.

சிவபூஜை செய்ய நினைப்பவர்களுக்கு

சிவபூஜை செய்ய நினைப்பவர்களுக்கு
=================================
கடைகளீல் சிவலிங்கம் வாங்கி பூஜிப்பது இதன் ஆரம்ப கட்டம். முறையாக தீக்ஷை பெற்று இந்த பூஜையின் பொருளறிந்து செய்வது நற்பலனை மிகுதியாக தர வல்லது.
ஆதீனங்களில் முறையாக தீக்ஷை பெற்ற சிவ்வாச்சாரியார்களிடம் தீக்ஷை பெற்று சிவ பூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
சிவ பூஜை இரண்டு வகை.
ஆன்மார்த்தம் பரார்த்தம்
பரார்த்தம் கோவில்களில் செய்ய படுவது.ஆகமங்கள் இதற்கான விதிகளை சொல்லும்.ஆன்மார்த்த பூஜை இல்லத்தில் சிவ தீக்ஷை எடுத்த சிவனடியார்களால் அவரவர் குரு நாதரின் உபதேசப்படி செய்ய படுவது. இதற்கு இரண்டு விதமான முறைகள். ஒன்று க்ஷணிக லிங்கம் வைத்து செய்வது. மஞ்சள், விபூதி, இலைகள் இவட்ரால் / இவற்றை லிங்கமாக கற்பிதம் செய்து அன்றே பூஜை முடிந்ததும் விசர்ஜனம் செய்வது.இன்னொன்று பாண லிங்கம் பூஜை. இதற்கு நியமங்கள் வேறு.அபிஷேகம் உண்டு.ஐந்து ஆவரணங்கள் உண்டு.
இவ்விரண்டுக்குமே பொதுவானது முதல் ஆவரணம். அதன் விளக்க படம் இணைக்கப்பட்டுள்ளது.
இதில் சூரியனுக்கும் முக்கியத்துவம் அளிக்க படும். சிவ சூரியன் என்று பெயர்.அதற்கும் தனியாக ஒரு எட்டிதழ் சக்கிரம் உண்டு.
உங்கள் பார்வைக்கு இடப்புறம் மேற்கு.அங்கே ஆறு மூர்த்திகள். இவர்களை மேலை துவார குரு நாதர்கள் என்பர். வடக்கில் 9 குருனாதர்கள்.அவர்களில் மஹா விஷ்ணுவும் ஒருவர்.இவர்கள் அனுகிரஹித்தாலே சிவ பூஜை செய்ய இயலும்.

பிரதோஷங்களில் சனிப்பிரதோஷம் மிக விசேடமானது ஏன்?

பிரதோஷங்களில் சனிப்பிரதோஷம் மிக விசேடமானது ஏன்?
அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியால், சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர். இந்த தவறை பிரம்மன் எடுத்துரைத்தார். வெட்கி தலைகுனிந்த தேவர்கள் அனைவரும் சிவபெருமானை தரிசித்து மன்னிப்பு கோரினர். மகிழ்ச்சி அடைந்த ஈசன், திருநடனம் (சந்தியா நிருத்தம்) புரிந்தார். நந்தி தேவர் சுத்த மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட, மகா விஷ்ணு புல்லாங்குழலையும், பிரம்மன் தாளத்தையும், எண்ணற்ற இசைக்கருவிகளை பூதகணங்களும் வாசிக்க ஈசனின் இனிய நடனத்தை அனைவரும் கண்டுகளித்து பெருமானை துதித்து பாடி வணங்கினர். ஈசன் நடனம் புரிந்தது திரயோதசி தினத்தில் சனிக்கிழமை. எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Sunday, January 25, 2015

சம்ஸ்கிருதம் ...............................

சம்ஸ்கிருதம் ...............................
சம்ஸ்கிருதத்தை மட்டம் தட்டி, மற்ற மொழிகளை உயர்த்திப் பேசுவது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. அவர்களுடைய அறியாமையை எண்ணி சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. சம்ஸ்கிருதம் என்பது பெரிய சமுத்திரம். அதன் கரையைக் கண்டவர்கள் யாரும் இல்லை. ஏனைய பழைய மொழிகளில் உள்ள நூல்கள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டு விட்டார்கள். ஆனால் வட மொழி நூல்களைப் பட்டியல் இடுவதுகூட முடிந்தபாடில்லை. உலகம் முழுதுமுள்ள நூலகங்களில் அவ்வளவு சுவடிகள் உள்ளன.
பல நூல்களுக்கு மூல நூல் மறைந்து போயின. ஆனால் அவைகளின் மொழி பெயர்ப்புகள் சீன மொழி உள்பட பல மொழிகளில் இருக்கின்றன. மொழிபெயர்க்க ஆள் இல்லை. உலகம் முழுதும் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் பல்வேறு லிபிகளில் எழுதப்பட்டுள்ளன.
அசோகர் காலம் வரை பனை ஓலைகளிலும் மரப் பட்டைகளிலும் எழுதி வந்ததால் அவைகள் அழிந்துவிட்டன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து உலகம் முழுதும் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் தோன்றிவிட்டன. நேபாளம் முதல் இந்தோநேஷியா வரை ஆயிரக் கணக்கான பாடல் வடிவக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதே காலத்தில் மற்ற மொழிகளில் உரைநடைக் கல்வெட்டுகள்தான் கிடைக்கின்றன.
வேதங்களின் பெரும் பகுதி (சாகைகள்) அழிந்துவிட்டன. பிராமணர்கள் வாய் மொழியாக ஆசார அனுஷ்டானங்களுடன் அத்தியயனம் செய்துவந்ததால் எழுதிவைக்கவும் இல்லை. இப்போது இருக்கும் வேதங்களை டேப்புகளில் பதிவு செய்ததே 600 மணி நேரத்துக்கு வருகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத புதுமை வேதப் படிப்பில் உண்டு. இடைச் செருகல் வந்து விடக் கூடாது என்பதற்காக வேதத்தில் இருக்கும் சொற்களை ஒன்றாகவும் இரண்டாகவும் மூன்றாகவும் கூட்டிக் கூட்டி சொல்லிக் கொண்டே பாராயணம் (கண பாடம், ஜடா பாராயணம்) செய்வார்கள். இதை எல்லாம் பதிவு செய்துவிட்டார்கள் ராஜஸ்தான் பலகலைக் கழகத்தினர்.
சம்ஸ்கிருதம் மாபெரும் சமுத்திரம். கரை காணாத அளவுக்கு பெருகியது. உலகில் இதுவரை அதிலுள்ள புத்தகப் பெயர் பட்டியல் அனைத்தையும் ஒரே வால்யூமாகக் கூட கொண்டுவர முடியாத அளவுக்குப் பெரியது. கிரேக்க நாடு, முதல் காவியத்தை எழுதுவதற்குள் சம்ஸ்கிருதத்தில் 4 வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிஷத்துக்கள் எல்லாம் தோன்றிப் பெருகிவிட்டன.
3500 ஆண்டுக்கு முன் வந்த ரிக் வேதத்தில் மட்டும் சுமார் 450 கவிஞர்கள் பாடிய 1028 துதிகள். அவைகளில் 10,552 பாடல்கள். 39, 831 பதங்கள். இதில் 4,32,000 அசைகள் (சில்லபிள்) இருப்பதாக சதபத பிராமணம் கூறும். ஆயினும் இப்போதைய கணக்கில் 3,95,563 அசைகளே காணப்படுகிறது. யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இதற்குப் பின் வந்தன.
உலகிலேயே நீண்ட நூல் என்று இந்தியாவுக்கு வந்த கிரேக்க எழுத்தாளர் குறிப்பிட்ட மஹா பாரதத்தில் நூறாயிரம் ஸ்லோகங்கள்— 2 லட்சம் வரிகள்— சுமார் 10 லட்சம் சொற்கள் உள்ளன.
வால்மீகி ராமாயணத்தில் 24000 பாடல்கள் உள்ளன.
18 புராணங்களில் பல லட்சம் வரிகள் உள்ளன. உலகில் எந்த நாட்டு சமய இலக்கியமும் இதன் அருகில் கூட வரமுடியாது.
கி.மு 800 என்று ஒரு கோடு கிழித்தால், பக்கத்தில் பைபிளின் பழைய ஏற்பாடும் கொஞ்சம் சீன மொழிப் பாடல்களும் மட்டும் குட்டையாக நிற்கும். கிரேக்கம், லத்தீன், தமிழ் எல்லாம் அப்பொழுது பிறக்கக் கூட இல்லை (நூல்கள் வடிவில்).
கி.மு.800க்கு முன்னர் தோன்றிய சுருதி என்னும் வேதம் என்பதே பெரிய அளவு. அதற்குப் பின்வந்த ஸ்மிருதி எனப்படும் நீதி சாஸ்திரங்கள் வேறு.
பிரபல வரலாற்று ஆசிரியர் கே ஏ நீலகண்ட சாஸ்திரி கூறுவது: சீன மொழியில் 1700 சம்ஸ்கிருத நூல்கள் மொழி பெயர்க்கப் பட்டன. இவைகளில் 40 மில்லியன் சொற்கள் உள்ளன. இவை 2 முதல் 11 நூற்றாண்டு வரை எழுதப்பட்டவை.

சம்ஸ்கிருதத் தனிப்பாடல்கள் 
சுபாஷித ரத்ன கோஷ –1739 பாடல்கள்–223 கவிஞர்கள்
பிரசன்ன சாகித்ய ரத்னாகர–1428 பாடல்கள்,
சதுக்தி கர்ணாம்ருத 2370பாடல்கள்–485கவிஞர்கள்,
சூக்தி முக்தாவளி 2790பாடல்கள், 240கவிஞர்கள்,
சரங்கதார பத்ததி 4689பாடல்கள்–282கவிஞர்கள்
ப்ருஹத் பத்ததி 7586பாடல்கள்,
வல்லப தேவ சுபாஷிதாவளி 3527பாடல்கள் 360கவிஞர்கள்
(இது தவிர சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் நூலில் 16,000 தனிப் பாடல்கள் இருப்பதாக அறிவேன். ஒருவேளை மேற்கண்ட நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்துக் கொடுத்தார்களா என்று எனக்குத் தெரியாது. தனிப் பாடல்கள் மட்டுமே இவ்வளவு என்றால்!!! )
இரண்டாம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை சம்ஸ்கிருதத்தில் எழுதிய 872 ஆசிரியர்களின் பெயர்களை பி.வி.கானே தொகுத்துக் கொடுத்தார். சங்கரர் பெயரில் மட்டும் 272 துதிகள் இருக்கின்றன! ஸ்தல புராணங்கள், சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் யாரும் பட்டியல் இடவில்லை.
சம்ஸ்கிருதத்திலுள்ள அதிசயங்களை The Wonder That is Sanskrit (published by Sampad and Vijay, Sri Aurobindo Society,Pondichery) என்ற நூலில் படிக்கலாம். இந்த மொழியை பிராமணர்கள் கூட படிக்காமல் ஐரோப்பியர்களிடம் மட்டும் விட்டால், அவர்கள் சொன்னதே “வேதம்” என்றாகிவிடும்!!
கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து முதலிய தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் 800 சம்ஸ்கிருத கல்வெட்டுகள் இருக்கின்றன. கி.மு. 1400 முதல் சம்ஸ்கிருத சொற்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. குதிரைப் பயிற்சி தொடர்பான களிமண் பலகை– கியூனிபார்ம் எழுத்துக்– கல்வெட்டுகளில் சம்ஸ்கிருத எண்கள் உள்ளன. கி.மு. 1400ல் மிட்டன்னி ராஜாக்களின் உடன்பாட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்கள் இருக்கின்ற

சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது ஏன்..?


சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது ஏன்..?
சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது சின்ன எறும்புகளோ பூச்சிகளோ நமக்குத் தெரியாமல் உணவில் விழுந்து உயிர் விடக்கூடாது என்பதற்காகவே.
சாப்பிடும் முன் இலையின் ஓரத்தில் கைப்பிடிச் சோறு/சாதம் வைப்பது உணவு தானியங்கள் விளைவிக்கும் போது நமக்குத் தெரியாமல் சின்னச்சின்ன உயிரினங்கள் (புழு,பூச்சிகள்) கொல்லப்பட்டிருக்கும், அவைகளுக்கு வைக்கப்படும் பிண்டம் தான் அந்த கைப்பிடிச் சாதம்.
அந்தச் கைப்பிடிச் சாதம் பிற உயிர்களுக்கும் உணவாக வேண்டும் என்ற உயிரிய ஜீவகாருண்ய நோக்கமே.

Friday, January 23, 2015

மந்திரம் சொல்லும் முறை ....................


மந்திரம் சொல்லும் முறை ....................
ஒரு மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு பலவித துவக்கநிலை செயல்பாடுகள் அவசியமாகின்றன. பலவித நியதி, நியமங்களும் தேவைப்படுகின்றன. அதன்பிறகே அதன் பயன்கள் நடைமுறைக்கு வரும். ஒரு சாதாரணச் சொல்லிற்கும் மந்திரத்திற்கும் உள்ள வித்தியாசம் அது பயன்படுத்தப்படும் விதத்தில்தான் உள்ளது.
சாதாரணமாக நாம் சொல்லும் சொற்கள் காற்று என்ற ஊடகம் வாயிலாகவே நம் காதுகளை அடைகிறது. அது சொல்பவருக்கும், அதைக் கேட்பவருக்கும் இடையில் உள்ள ஒரே தொடர்பு மட்டுமே. ஆனால், மந்திரங்கள் பஞ்சபூதங்களோடும் தொடர்பு படுத்தப்படுகின்றன.
அதாவது, சாதாரண ஜபம் என்றால் ஒரு தீபம் ஏற்றி வைத்து, அந்த மந்திரத்திற்குரிய தேவதாமூர்த்தியை வணங்கிய பின்பு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஜபம் செய்ய வேண்டும் என்பதே முறையாகும்.
அதுவே ஒரு யாகமாகவோ, ஹோமமாகவோ இருந்தால், ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் அக்னி வளர்க்கப்பட்டு, மந்திர உருவுடன் அக்னி பகவானுக்கு ஆகுதியும் அளிக்கப்படும். இவ்வாறு பஞ்ச பூதங்களோடு தொடர்புபடுத்தப்படும் ஒரு சொல் மந்திரமாகிறது.
அல்லது, இயற்கையிலேயே உள்ள சப்த அதிர்வுகளைக் குறிப்பிட்ட அலையியக்கத்திற்கு உட்படுத்தி, அதன் அதிர்வெண்ணிக்கைகளால் புற இயற்கையிலும் அவ்வெளிப்பாட்டை உணர வைப்பதும் மந்திரமாகும்

வெற்றி பெற வேண்டுமா?

வெற்றி பெற வேண்டுமா? வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள். அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு.
காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
வெற்றி வேண்டுமா உங்களுக்கு?
அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா…
அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.
அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.
பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.
சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.
சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.
உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.
எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.
பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

மூலஸ்தானத்தை கருவறை என்பது ஏன்?

மூலஸ்தானத்தை கருவறை என்பது ஏன்?
சுவாமி இருக்கும் மூலஸ்தானத்தை கருவறை என்கிறார்கள்.கரு என்ற சொல் குழந்தை உருவாவதை மட்டும் குறிப்பதில்லை.ஒரு கதைஎழுதுவதற்குக் கூட கரு வேண்டும்.பணம் வைக்கும் அறையைக்கருவூலம் என்கிறோம்.அதுபோல ஒரு கோயிலின் அடித்தளமாக பிரதிஷ்டை செய்யப்படும் பிரதான மூர்த்தியின் இருப்பிடத்தை கருவறை என்று குறிப்பிடுகின்றனர்.கருவில் இருக்கும் குழந்தையைப் பாதுகாத்தால் நன்றாகப் பிறந்து வளர்ந்து ஆளாகிறது.நல்ல கருவை அடித்தளமாகக் கொண்டு எழுதப்படும் கதை மக்களிடம் சென்று சேர்ந்தால் உலகம் திருந்துகிறது.கரு வூலத்தில் இருக்கும் பொக்கிஷம் மக்களுக்கு நன்மையளிக்கிறது. இதுபோல் கருவறையில் இருக்கும் மூலமூர்த்தியை வழிபட்டால் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை உண்டாகிறது.ஆன்மிக உணர்வால் உலகமேஅமைதியாக இருக்கிறது என்ற அடிப்படையில் மூலஸ்தானத்தைகருவறை என்று அழைத்தனர்

உலகத்திலேயே சிறந்த கடவுள் வாழ்த்து காயத்ரி மந்த்ரம்.


உலகத்திலேயே சிறந்த கடவுள் வாழ்த்து காயத்ரி மந்த்ரம். இதை நான் சொல்ல விரும்பினாலும் எனக்கு முன்னால் ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொல்லிவிட்டாரே.(டாக்டர் ஹோவார்டு ச்டீங்கேரில்) இதைச் சும்மா சொல்லவில்லை. நிறைய மதங்களின் முக்ய வேதங்களை அலசி அவற்றின் சக்தியை விஞ்ஞான பூர்வமாக வடிகட்டினபிறகு தான் இந்த முடிவுக்கு வந்தார்.
அப்படி என்ன கண்டுபிடித்தார்?
1. காயத்ரி மந்த்ரத்தை உச்சரிக்கும்போது 1,10,000 ஒலி அலைகள் ஒரு வினாடியில் வெளிவருகிறது.
2. காயத்ரி மந்த்ரத்தில் தான் மற்ற மந்த்ரங்களை விட உலகத்திலேயே சக்தி அதிகம்..
3. காயத்ரி மந்த்ரத்தின் சப்த அலைகள் ஆன்ம சக்தியை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
4.ஜெர்மனியில் ஹாம்பர்க் சர்வகலாசாலை இதை ஆராய்ச்சி செய்து உயிர் வாழ உடலுக்கும் மனதுக்கும் அது தெம்பு கொடுப்பதை அறிந்தது.
5. தென் அமெரிக்காவில் சுரினாம் என்கிற நாட்டில் தினமும் மாலை ரேடியோ பரமரிபோவில் பதினைந்து நிமிஷங்களுக்கு காயத்ரி மந்த்ரம் ரெண்டு வருஷத்துக்கும் மேலே ஒலிபரப்பப்படுகிறதாம். இதை பின்பற்றி ஹாலந்து நாட்டிலும் இந்த நல்ல பழக்கம் வழக்கத்துக்கு வந்ததாம்.
இந்த காயத்ரி மந்த்ரத்தை பற்றி நமக்கு என்ன தெரியும்?
2500 லிருந்து 3500 வருஷங்களுக்கு முன்னால் சம்ஸ்க்ரிதத்தில், ரிக்வேதத்தில் தோன்றியது . அதற்கும் முன்னாலே பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே இது உச்சரிக்கப்பட்டு வந்தது என்கிறார்கள்.
இதில் என்ன வேடிக்கை என்றால் பல நூற்றாண்டுகளுக்கு மேல் நாட்டார்களுக்கு மட்டும் அல்ல, ஹிந்துக்களாகிய நம்மில் அநேகருக்கும் காயத்ரி மந்த்ரம் தெரியாது. தெரிந்தவர்கள் இதை ரகசியமாகவே பல காலம் மூடி மறைத்தார்கள். அதுவும் பெண்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதோடு பிராமணரல்லாதவர்க்கும் இது தேவையில்லை என்றும் சொல்லப்பட்டது.
அந்த காயத்ரி தேவியே மனது வைத்தாளோ என்னவோ இன்று உலகமுழுதும் காயத்ரி மந்த்ரத்தின் மகிமை பரவி ஓங்கி ஒலிக்கிறது .
அதன் அழகிய, ஒப்புமையிலாத உயர்ந்த அர்த்தம், சக்தி வாய்ந்த ஒலி, அன்றாட பாதுகாப்பாகவே அமைந்து விட்டதே. காயத்ரி மந்த்ரத்தின் பிரணவ சப்தம் மற்ற எந்த மந்திரத்திற்கும் மூலாதாரமாகவே உள்ளதே. உள்ளாம் கவர்ந்து, திறந்து,பரம்பொருளை நாடும் இந்த மந்திரம்,உலகில் எவ்வுயிர்க்கும் பொருந்தும். பல வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை ஏதோ ஒரு ஆங்கில புத்தகத்தில் முதலில் சந்திரனில் காலடி படித்த ஆம் ஸ்ட்ராங் என்ற விண்வெளி வீரர் பிரபஞ்சத்தில் சந்திரனை நோக்கி இறங்கும்போது ஓம் என்ற மனம் கவரும் சப்தம் கேட்டது என்று எழுதினகாக, படித்த ஞாபகம். வேறுசிலரும் இதை பற்றி படித்திருக்கலாம். அறிந்திருக்கலாம்.
தவம் என்றாலே நம் கண் முன் தோன்றி, மனத்தில் முதலில் இடம்பெறும் விச்வாமித்ரருக்கு உபதேசிக்கப்பட்டது காயத்ரி மந்த்ரம். இது மனித குலத்திற்கு கிடைத்த விலையில்லா பரிசு. சுத்தமான இதயத்திலிருந்து வெளிவரும் இந்த மந்திரம் உலக அமைதியை காக்கிறது. அளவற்ற ஞானம் தருகிறது.
'ஹே பரப்ரம்மமே உன்னிலிருந்து வெளிப்படும் அந்த ஞான ஒளி என்னிலிருக்கும் அஞ்ஞான இருளை விரட்டி ஞானப்ரகாசம் அருளவேண்டும்"
காயத்ரி மந்த்ரம் சொல்பவனை விடுங்கள். அது எவன் காதில் விழுகிறதோ அவனே புனிதமாகிறான். ஆத்மாவிலிருந்து புறப்படும் பிரம்ம உபதேசம் அல்லவா அது?.
காயத்ரி என்றால் என்ன? ''காய"" என்பது உயிரூட்டும் சக்தி. ''த்ரி'' என்றால் அது செய்யும் மூன்று வேலை: அதாவது பாதுகாக்கிறது, புனிதப்படுத்துகிறது, பரமனிடம் கொண்டு சேர்க்கிறது.
வேதங்களில் நாம் அறியும் ஏழு லோகங்கள் நாம் இருக்கும் இந்த லோகத்தைவிட,படிப்படியாக மேன்மை பெற்றவை. ஒன்றைக்காட்டிலும் மற்றொன்று அதி உன்னதமானது. எப்படி எலிமெண்டரி ஸ்கூலிலிருந்து, காலேஜ் வரை போகிறோமோ அப்படி. புரிகிறதா? இந்த காயத்ரி மந்த்ரம் தான் நம்மை கடத்திச்செல்லும் ஸ்கூல் வேன் .
நான் சொல்லவந்தது சொல்வது எல்லாமே ஒண்ணாம் க்ளாஸ் வாத்தியார் உபதேசம். காயத்ரி பற்றி தெரிய மகான்கள் எழுதியது பேசியது எல்லாம் படித்து கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். என்னிடம் அதை எதிர்பார்க்ககூடாது. ஏன் என்றால் நானே இன்னும் தேடுகிறேன். தேடத் தேட பூமிக்கடியிலே தோண்டினால் கிடைக்கும் தங்கம், வைரம் எல்லாம் போல நிறைய விஷயங்கள் புலப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அள்ள அள்ள குறையவில்லை. அள்ளி மாளவில்லை.
காயத்ரி மந்த்ரம் விடாமல்சொல்பவனைப் பார்த்த்தாலே அவனிடம்ஒரு தனி தேஜஸ், உள்ளே இருக்கும்ஓஜஸ் வேறு வெளியே ஒளி வீசும்.அதன் 24 அக்ஷரத்வனி அலாதி. சூக்ஷ்ம சரரஆத்மாவின் குரல் அது.
காயத்ரி மந்த்ரத்தை பாட்டு போலவோ, ராகம் போட்டோ, ஆலாபனத்தோடா, பக்க வாத்யத்தோடா பாடுவார்கள்? சிலர் செய்வது வேதனையாக இருக்கிறது. அது மனத்தை தொடவில்லை.
மந்த்ரத்து க்கெல்லாம் அதற்கென்று உச்சரிப்பு, ஒரு முறை இருக்கிறது. அர்த்தத்தை புரிந்துகொண்டு முழுமனத்தோடு தக்க குரு உபதேசத்தோடு சொன்னால் கைமேல் பலன். பழம் பழுக்கும், இனிய ருசி காரண்டீ . காயத்ரி மந்த்ரம் பற்றி இன்னும் கொஞ்சம் விஷயம் கைவசம் இருக்கிறது. டைம் கிடைத்தால் இன்னும் அப்புறம் சொல்கிறேனே.

Wednesday, January 21, 2015

தாகம் தீர்க்கும் வழிபாடும் அதன் சிறப்பும் !!!

தாகம் தீர்க்கும் வழிபாடும் அதன் சிறப்பும் !!!
நாம் நம்முடைய பல்வேறு ஆசைகள் ஈடேறுவதற்கு இறைவனைத் தொழுகிறோம். இதை நாம் தூய மனமும், சுத்தமான உடலும், உண்மையான வாக்கும் கொண்டு செய்யவேண்டும். உடம்பைப் பொறுத்தவரை, தூய்மையை அடைய நன்கு அழுக்கு நீங்கத் தேய்த்துக் குளித்தால் போதும். சாதாரணமாக நீரில் மூழ்கிக் குளித்தாலோ, எண்ணெய் தேய்த்துக் குளித்தாலோ, இந்தத் தூய்மையை உடல் பெற்றுவிடும். இந்த நீராடுதல் நைமித்திக ஸ்நானம், காம்ய ஸ்நானம், நித்ய ஸ்நானம் என்று மூன்று விதமாக அமையலாம். நதியில் மூழ்கி நீராடும் போது, நமது மனத்தில் வேண்டிக் கொண்டது நிறைவேற, இத்தனை தடவைகள் மூழ்கி எழுந்திருக்க வேண்டும் என்ற நியதி உண்டு. இதை வேண்டிக்கொண்டபடி உரிய அளவில் செய்து முடிக்க வேண்டும். இது காம்ய ஸ்நானம். நைமித்திக ஸ்நானம் என்பது குடும்பத்தில் நெருங்கிய உறவினர் இறந்துவிடும்போது செய்யும் ஸ்நானம். இது வீட்டிலும், உடம்பிலும் உள்ள கிருமிகளின் பாதிப்பு, நீங்க செய்யப்படுவதாகும். சூரிய அல்லது சந்திர கிரகண காலங்களிலும் பீடை நீங்க இவ்வாறு செய்வதுண்டு. நித்ய ஸ்நானம் என்பது அன்றாடம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள நீரில் மூழ்கிச் செய்வதாகும். இதைக் குளம் குட்டைகளிலும் பீடை நீங்க இவ்வாறு செய்வதுண்டு.
நித்ய ஸ்நானம் என்பது தூய்மைப்படுத்திக் கொள்ள நீரில் மூழ்கிச் செய்வதாகும். இதைக் குளம் குட்டைகளிலோ, கிணற்றிலோ, நீரைப் பயன்படுத்திச் செய்து முடிக்கலாம். இதில் ஓடும் நதியில் நீரில் ஸ்நானம் செய்வது சிலாக்கியமானது. குட்டையில் நீராடுவது அடுத்த ரகம். கடைசி ரகத்தைச் சேர்ந்தது கிணற்றில் நீராடுவது. சில சமயம் உடம்பு முழுவதும் விபூதி பூசிக்கொண்டு ஸ்நானம் செய்த உணர்வை பெறுவது உண்டு. இதற்கு விபூதி ஸ்நானம், பஸ்ம ஸ்நானம் என்ற பெயர்களும் உண்டு. உடல் நலம் சரியாக இல்லாத நிலையில் இதைச் செய்யலாம். தூய்மை பெற, ஆண்கள் தலைமுடி நனைய மூழ்கி ஸ்நானம் செய்வதுதான் உத்தமம். பெண்கள் கழுத்துக்குக் கீழே ஸ்நானம் செய்தால் போதுமானது. ஸ்நானம் செய்யும் போது கடவுளை நினைத்துக் கொண்டு கங்கை, யமுனா, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி ஆகிய புண்ணிய நதிகளை நினைவு கூர்ந்து நீராட வேண்டும். இதனால் உடலும் புனிதம் அடையும் புண்ணியமும் கிடைக்கும். இவ்வாறு ஸ்நானம் செய்தபிறகு கடவுளை வணங்கிப் பிரார்த்தனை செய்ய, தூய்மையான உள்ளம் தேவை. அத்துடன் உடல்மீது அணிந்த உடையும், தூய்மையாக இருக்க வேண்டும். பூஜை செய்யும்போது ஈரத்துணியை உடுத்தி இருப்பது தவறானதாகும். உடுத்த உடை காய்ந்து உலர்ந்து இருக்க வேண்டும். பூஜை செய்யும் நேரத்தில், அன்று நனைத்து உலர்த்தி, காயவைத்த உடையை அறிவதே சிறப்பு. முந்தைய நாள் இவ்வாறு உலர்த்திக் காயவைத்த உடைகள் இரண்டாம் பட்சமானதுதான். மழையினால் காற்றில் சிலசமயம் துணிகள் உலருவது சிரமமாக இருக்கும். அப்போது துணியை ஏழு தடவைகள் நன்கு உதறிவிட்டால் காயவைத்ததற்குச் சமானம் ஆகும்.

முதல்நாள் உலர்த்திக் காயவைத்த உடைகளைக் கையில் எடுத்துக் கொண்டுபோய் குளியல் அறையில் வைத்துக்கொண்டு, பின் ஸ்நானம் செய்தபின் உடுத்திக் கொள்கிறார்கள். இவற்றைத் தூய்மையான மடி வஸ்திரத்துக்கு ஒப்பிட முடியாது. வர்ண உடைகளை பூஜை செய்யும் போது அணியக் கூடாது. வேஷ்டியின் இரண்டு முனைகளையும் சேர்த்துத் தைத்த கைலி போன்றவற்றையும் வஸ்திரமாக அணியக் கூடாது. புண்ணியதினங்களிலும் பண்டிகை நாட்களிலும் பட்டு வஸ்திரம் அணியலாம். பூஜாவஸ்திரம் அணிவதும் ஒன்றல்ல. பூஜைக்கேற்ப உரிய முறையில் அது பாங்காக அமைவது தான் உத்தமம். நாம் பூஜை செய்யும்போதும், கோயிலுக்குச் செல்லும்போதும் முறையான உடைகளை அறிந்து செல்ல வேண்டும். அது நம்முடைய பண்பாட்டை எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். பூஜை அல்லது பிரார்த்தனையில் ஈடுபடும்போது கடவுளைப் பற்றிய சிந்தனையின்றி வேறு எதுவுமே மனத்தில் இருக்கக் கூடாது. இதற்கு மனத்தூய்மை மிகவும் முக்கியம். எந்த காரியத்தை எடுத்துக் கொண்டாலும் வெற்றி அடைவதற்கு உள்ளத் தூய்மை மிகவும் அவசியமானது, கோபம், வெறுப்பு, கர்வம், பொறாமை ஆகிய உணர்வுகளுடன் பூஜையை மேற்கொண்டால், நாம் செய்வது பயனற்றதாக ஆகிவிடும். மனம் அமைதியாகவும், கட்டுப்பாடுடனும், நல்ல எண்ணங்களுடன் அமைவது மிக முக்கியம் எந்தக் காரியத்தை மேற்கொண்டாலும், அதில் வெற்றி கிடைக்க இவை முக்கியம். பூஜையைப் பொறுத்தவரை இது மிகவும் அவசியம். பூஜைக்கு அமரும்போது உள்ளம் அமைதியாக இருக்க வேண்டும். மற்ற விஷயங்கள் அப்போது நினைவில் வரவே கூடாது. பூஜை முடியும்வரையில் இவ்வாறு நிச்சலனமான மனத்துடன் ஆழ்ந்து ஈடுபடவேண்டும். பூஜையின் போதோ, பிரார்த்தனையின் போதோ கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைக் கணக்கிடவே கூடாது. இது அபசாரம் ஆகும். வீட்டில் பூஜையில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமன்றி, ஆலயங்களில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கும் இது மிகமுக்கியம். பகவானின் அருகில் இருக்கும்போது அதற்கு அருகதை உள்ளவர்களாக நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஆசௌசம் அல்லது துடக்கு தீட்டு

ஆசௌசம் அல்லது துடக்கு தீட்டு 
--------------------------------------
ஆசௌசம் என்பது விதிவிலக்கு காலமாகும். இவை பற்றிய விபரங்கள் ஏறத்தாழ (700)எழுநூறு வருடங்களுக்கு முன்னர் சிதம்பரத்தில் வாழ்ந்த அகோர சிவாச்சாரியார் என்பவரினால் ஆகம நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டு எழுதப்பட்ட அகோரசிவ பத்ததி என்னும் சைவ சமயக் கிரியைகளுக்கான கை நூலில் உள்ளது. இலங்கையில் யாழ்ப்பாண மரபில் ஆலய உற்சவங்களும் மற்றும் கிரியைகளும் இந்த அகோரசிவ பத்ததி வழியாகவே நடாத்தப்படுகின்றன. இதேபோல தமிழ் நாட்டில் கூடுதலாக வழக்கில் உள்ளது மற்றும் பலதேசங்களிலும்,பறசார்த்தப்படுகின்றன,சோமசம்பு சிவாச்சாரியார் செய்த சோமசம்பு பத்ததி ஆகும். இப்போது எமக்கு இலங்கை நாட்டு சமயக்கிரியைகள் மற்றும் வழமைகளுக்கும் நமது இந்தியா நாட்டு வழமைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் ஏன் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
சைவத்தின் இருபத்தெட்டு(28)ஆகமங்களிலும் ஆசௌச விதி என்று ஒரு அத்தியாயம் உள்ளது. இவை விரிவாகவும் ஒன்றுக்கொன்று சில வேறுபாடுகளுடனும் இருப்பதால் மேற்சொன்ன தொகுப்பு நூல்களான பத்ததிகள் மிகவும் பயனுள்ள கைநூல்கள் ஆகின்றன. ஆசௌசம் பற்றிய விபரங்கள் மட்டுமே உள்ளதாக ஆசௌச தீபிகை என்ற தமிழ் நூல் ஒன்றும் உள்ளது.
ஒரு குடும்பத்தில் மரணம், பிறப்பு, பூப்பு போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தவிடத்து இக்காலத்தில் கோயில் வழிபாடு, தனிப்பட்ட ஆத்மார்த்த பூசை, அதிதிகளை வரவேற்று உபசரித்தல் போன்ற கடப்பாடுகளில் இருந்து அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படுகின்றது. இது அவர்களின் அதீத துக்கம் அல்லது சந்தோஷத்தைக் கொண்டாடும் காலமாகும். எமது வழமையில் 'செத்த வீடு கொண்டாடுதல்' என்று சொல்லும் மரபும் கவனிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் இவ்விதமான மன அதிர்வுகளிலிருந்து தமது வழமை நிலைக்குத் திரும்பும்வரை அவர்களுக்கு அளிக்கப்படும் விடுமுறையே ஆசௌச காலம் ஆகும். இது மறைமுகமாக அவர்களின் மனத்தேறலுக்கான கால அவகாசத்தையும் இத்தனை நாட்கள் என்று உணர்த்தி இதன் பின்னர் அவர்கள் தமது வழமைக்குத்திரும்ப வேண்டிய கடப்பாட்டையும் காட்டி நிற்கின்றது. பிறப்பு என்றால் அந்த புதிய சீவனுக்கு உரிய வரவேற்பை அளிக்கவும், தம்மை அந்த புதிய உறவுடன் நன்கு பிணைத்துக்கொள்ளவும் (Bonding), பிறந்த குழந்தையுடனும் பெற்ற தாயுடனும் காலத்தை நன்றாகவும் ஒன்றாகவும் கழிக்கவும் இந்த ஆசௌச காலம் வழி செய்கின்றது.
இவ்விதமான மன எழுச்சியும் தாக்கமும் இறுக்கமான பாசப்பிணைப்புள்ள எமது பாரம்பரிய குடும்பங்களில் நெருங்கிய உறவுமுறைகளை நேரடியாகப் பாதிக்கின்றது. அதிலும் பெண்ணானவள் சிறு வயதிலேயே திருமணமாகி கணவன் வீட்டுக்கு வந்து அவனின் உறவுகளையே தன்னுறவுகளாகக்கொண்டு வாழும் மரபில் அவளுக்குத் தன் பிறந்த வீட்டு நிகழ்வுகளைவிட புகுந்த வீட்டு நிகழ்வுகளே தன் சொந்த நிகழ்வுகளாக மனதைத் தாக்குகின்றன. அதானால்தான் திருமணமான பெண்களுக்கு அவர்களது பிறந்த வீட்டு சன்ன மரண ஆசௌசங்களின் துடக்கு அல்லது பாதிப்பு இல்லை என்று எமது பாரம்பரியத்தில் சொல்லப்படுகிறது.
அதாவது திருமணமான பெண்ணுக்கு அவளின் கணவனுடைய ஆசௌசமே அவளுடைய ஆசௌசம். அவளுக்கு என்று புறம்பாக ஆசௌசம் இல்லை.
ஆணுக்கு தந்தை ஊடாக உள்ள ஆண் சந்ததி உறவுகளின் ஏழு தலைமுறை வரை ஆசௌசம் உள்ளது.
இவர்களை தாயத்தார்கள் என தமிழ் நாட்டிலும், துடக்குக்காரர் என யாழ்ப்பாண மரபிலும் கூறுவர். இது அக்காலத்தில் நிலவிய ஆணாதிக்க தந்தை வழி சமுதாயத்தின் மரபையும் பிணைப்புகளையும் காட்டி நிற்கின்றது. குடும்பங்களில் உள்ள நெருக்கமான பாசப்பிணைப்பால் அங்கு நிகழும் பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்வுகளால் அதிக மன எழுச்சிக்கு உள்ளாவது இவர்களே. வெறுமனே சனன மரண நிகழ்வுகள் மட்டுமல்லாது இக்குடும்பங்களில் எந்த நல்லது கெட்டது நிகழ்ந்தாலும் அதில் பங்கு பற்றி தோள் கொடுத்து உதவும் கடப்பாடும் இந்த உறவுகளுக்கு உள்ளது.
ஆசௌசம் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தப் பொறுப்பும், கடப்பாடும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மறைமுகமாக வலியுறுத்தப்படுகின்றது. இதனாலேயே பெண்களுக்கு அவர்களின் பிறந்த வீட்டு ஆசௌசங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
இந்த ஆசௌச காலமும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரே விதமாக இருப்பதில்லை. இது அந்தந்த நிகழ்வுகளின் மனத்தாக்கங்களுக்கு ஏற்ப கால வரையைறகளைக் கொண்டுள்ளது. அதிலும் ஒரே நிகழ்வுக்கு எல்லாக் குடும்பங்களிலும் ஆசௌசம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
உதாரணமாக பிராமணர்களுக்கு மரண ஆசௌசம் பத்து நாட்களாகும்.
“தசமராத்ரீ ஜாதம் ந்தோஹன் தசராத்ரீ ரதுஹந்தீ”
என்று வேதம் சொல்லுகின்றது. இது அவரவர் ஆத்மீக நிலை மற்றும் ஆத்மீக அறிவைப் பொறுத்து வேறுபடுகின்றது. ஆத்மீகத்தை முழுநேரத் தொழிலாகக்கொண்ட பிராமணர்கள் இறப்பையும், பிறப்பையும் வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளாகப் புரிந்து கொள்ளுதலினாலும், அவற்றின் தாற்பரியத்தை நன்கு உணர்ந்திருப்பதினாலும் அவர்களுக்கு இவற்றால் ஏற்படும் மன எழுச்சிகள் குறைவு. எனவே அவர்களுக்கு துடக்கு காலமும் குறைவு. இதுவே சாதாரண குடிமகனுக்கு முப்பது நாட்களாக உள்ளது.
இந்த பின்புலத்தை விளங்கிக்கொண்டால் தற்காலத்தில் இந்த ஆசௌச விதிகளை நாம் எப்படி கடைப்பிடிக்கவேண்டும் என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம், காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் இவற்றை அனுசரிக்கவும் முடியும். உதாரணமாக மனைவியின் உறவுகளுடன் சேர்ந்து வாழும் கணவனுக்கு அந்த உறவுகளின் இறப்பு மற்றும் பிறப்புகளில் அதிக பிணைப்பும், மன ஈடுபாடும் உள்ளன. இங்கு அவனுக்கு அவர்களின் ஆசௌசத்தில் பங்கு உண்டு. இவ்வாறே தனது பெற்றோருடன் ஒன்றாக வாழும் மனைவிக்கு அவளின் பிறந்த வீட்டு உறவுகளின் சுக துக்கங்களின் பாதிப்பு நிறையவே உண்டு. ஆகவே அவளுக்கு பிறந்த வீட்டு ஆசௌசத்திலும் பங்கு உண்டு. இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு மேல் உறவுகளே தெரியாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழுகின்றவர்களுக்கு அவர்களின் குடும்ப உறவுகளின் சுக துக்கங்கள் பெரும் மனப்பாதிப்பை உண்டுபண்ணுவதில்லை. இந்நிலையில் ஏழு தலைமுறைத் துடக்கு என்பது இங்கு அர்த்தமற்றதொன்றாகி விடுகின்றது.
பிராமணனாகப் பிறந்தும் வேத அத்தியயனமோ, சமயக் கல்வியோ இல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழும் பிராமணருக்கு பிறப்பு, இறப்பு பற்றிய தத்துவங்களும், தாற்பரியமும் தெரிந்திருக்க நியாயமில்லை. இந்நிலையில் அவர்களுக்கு குறுகிய காலத்தில் துக்கம் கொண்டாடுதலை முடிக்கும்போது, இழப்பு மனநிலைத் துயரத்தைக் கொட்டி முடிக்க சந்தர்ப்பம் இல்லாமையால் அவர்கள் நாட்பட்ட இழப்பு துக்க நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது அவர்களின் கல்வி, தொழில், மற்றும் வாழ்க்கை சார்ந்த வினைத்திறனைப் பாதிக்கின்றது.
இவர்கள் தமது வாழ்க்கையில் வழமை நிலைக்குத் திரும்புதலில் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளுகின்றார்கள்.
சைவத்திலே ஐந்து வகையான ஆசௌசங்கள் அல்லது துடக்கு கூறப்படுகின்றன. இவற்றை பஞ்ச ஆசௌசம் என்பர்.
1. ஜனன ஆசௌசம் அல்லது பிறப்பு துடக்கு; இது ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பதனால் அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் துடக்காகும்.
2. மரண ஆசௌசம் அல்லது மரணத்துடக்கு; இது ஒரு குடும்பத்தில் மரணம் நிகழும்போது அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் துடக்காகும்.
3. சூதக ஆசௌசம் அல்லது பூப்புத்தீட்டு; ஒரு பெண் பருவமடையும்போதும் அதன் பின்னர் மாதாமாதம் மாதவிடாய் குருதிப்போக்கு வரும்பொழுதும் அவளுக்கு மட்டும் ஏற்படும் துடக்கு இது.
இதன்போது ஐந்தாம் நாள் தலை முழுகி பால் அல்லது பஞ்ச கவ்வியம் உண்ண இந்த துடக்கு விலகும். பெரும்பாடு போன்ற மாதவிடாய்க் குருதிப்போக்கு தீட்டாக கருதப்படுவதில்லை. ஆதாரம்- பராசர ஸ்மிருதி. நன்றாகவே அவதாணிக்க.
4. உச்சிஷ்ட ஆசௌசம் அல்லது எச்சில் துடக்கு; இன்னொருவரின் எச்சில்பட்ட உணவு அல்லது பானத்தை அருந்துவதால் ஏற்படும் துடக்கு. இது ஸ்நானத்தினாலும், பிராயச்சித்தத்தினாலும் போகும். எல்லாருக்கும் உரியது
5. ஜாதி ஆசௌசம் அல்லது சாதித் துடக்கு; இறை சிந்தனை மற்றும் நல்ல வாழ்நெறி இல்லாதவர்களுடன் இணங்குவதால் ஏற்படும் தோஷம்.
இது பிறப்பால் மட்டும் வருவது இல்லை, குணத்தாலும், பண்பாலும், வாழ்க்கை நெறியாலும் வருவது. இதனாலேயே
சம்பந்தர் பல குடிப்பிறந்த சிவ தொண்டர்களுடன் ஒன்றாக உண்டு குடித்து உறங்கி யாத்திரை செய்து வந்தார்.
வீர சைவ மரபில் உள்ளவர்களுக்கு மட்டும் இவ்விதமான ஆசௌசங்கள் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
1.1. தாய்க்கும் தந்தைக்கும் ஆண்குழந்தை பிறந்தால் 30 நாட்களும்
பெண்குழந்தை பிறந்தால் 40 நாட்களும் துடக்கு உண்டு.
பிராமணர்களுக்கு இது (10)பத்து நாட்கள்.
1.2. ஆண் குழந்தை பிறந்தால் தந்தை வழி ஆண் சந்ததி உறவுகளின் ஏழு தலைமுறைக்கு துடக்கு உண்டு. இவர்களையே உறவுகளில் துடக்குகாரர் என்று கூறும் வழமை யாழ்ப்பாணத்தில் உள்ளது.இந்தியாவிலும் உள்ளது,
1.3. பெண் குழந்தை பிறந்தால் குழந்தையின் ஆண் சகோதரர்களுக்கும், தந்தைக்கும், தந்தையின் சகோதரர்களுக்கும், தந்தை வழிப்பாட்டனுக்கும், அப்பாட்டனின் உடன் பிறந்தோருக்கும் 40 நாள் துடக்கு உண்டு.
1.4. நிறை மாதத்தில் குழந்தை பிறந்து இறந்தாலும் இறந்து பிறந்தாலும் இவ்வாறே பிறப்புத் துடக்கு உறவுகளுக்கு உண்டு. ஆனால் இதற்கு மரணத்துடக்கு இல்லை.
1.5. ஏழாம் எட்டாம் ஒன்பதாம் மாதங்களில் இவ்வாறு பிறந்து இறந்தாலோ அல்லது இறந்து பிறந்தாலோ தாய்க்கும், தந்தைக்கும் முன் சொன்னவாறே பூரண துடக்கு உண்டு. முன் சொன்ன மற்ற உறவுகளுக்கு கேள்விப்பட்டதில் இருந்து துடக்கு. இது அவர்கள் தலை முழுகியவுடன் கழியும்.
1.6. கர்ப்பத்தில் ஏழு மாதங்களுக்கு முன்னர் கருச்சிதைவு நடந்தால் எத்தனையாவது மாதத்தில் கரு கலைந்ததோ அத்தனை நாட்களுக்கு தாய்க்கு மாத்திரம் துடக்கு உண்டு.
உதாரணமாக நான்காம் மாதம் கருச்சிதைவானால் பிராமணப் பெண்ணுக்கு நான்கு நாட்கள் துடக்கு. ஏனையோருக்கு இதன் மூன்று மடங்கு அதாவது 12 நாட்கள் துடக்கு.
1.7. ஒரு குழந்தையின் பிறப்பு பற்றிய விபரத்தை அதன் துடக்கு கழிந்த காலத்தின் பின் கேள்விப்பட்டால் கேள்விப்பட்டதில் இருந்து ஏற்படும் துடக்கு தந்தைக்கு மட்டுமே. இது தலை முழுகுவதால் விலகும்.
“ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானிடம் ஆசூச மாமே”
-திருமந்திரம் 2551-
“ஆசூச மில்லை அருநிய மத்தருக்
ஆசூச மில்லை அரனைஅர்ச் சிப்பவர்க்
காசூச மில்லையாம் அங்கி வளர்ப்போரக்
காசூச மில்லை அருமறை யோர்க்கே”

ஆலயத்துள் நுழையும் போது கோபுரப் படிகளை தொட்டு வணங்குவோம் ............


ஆலயத்துள் நுழையும் போது கோபுரப் படிகளை தொட்டு வணங்குவோம் ............

ஆலயத்துள் நுழையும் போது கோபுரப் படிகளை தொட்டு வணங்குவது 
ஆலயம் என்பது நாமறியாமலே பல ஞானிகளும் பெரியவர்களும் கூடும் இடம் ஆலயத்துள் ஆண்டவன் ஒருவனே பெரியவனஅங்கே வேறெவரையும் வணங்கக் கூடாது என்பதற்காக, இறைதரிசனத்துக்கு முன்பே, அங்கு காலடி பதித்த அத்தகைய பெரியவர்களின் திருப்பாதங்களுக்கு நம் வணக்கத்தைச் செலுத்துமுகமாக ஆலயப்படியை தொட்டு வணங்குகிறோம்.ஆலயங்களுக்கு ஏழை, எளியவரும் வருவதுண்டு. நம் ஆணவத்தையும் பகட்டையும், வீண்பெருமையையும் அங்கேயே விட்டுவிட்டு, இறையடியார்களான அவர்களுக்கும் வணக்கம் தெரிவித்துவிடுவதாகவும் ஆகிற

Tuesday, January 20, 2015

எவ்வளவு உயர்ந்த ஆன்மிக நிலையில் இருந்தாலும் ஜபம், பூஜை அவசியம்.!!

எவ்வளவு உயர்ந்த ஆன்மிக நிலையில் இருந்தாலும் ஜபம், பூஜை அவசியம்.!!
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் குரு மகான் ஸ்ரீ தோத்தாபுரி ஸ்வாமிகள். இவர் எல்லா சித்திகளையும் பெற்றவர். கடவுளைக் கண்ட ஞானி. ஆனாலும்கூட இவர் தினசரி காலை, மாலை வேளைகளில் ஜபம், பூஜை, கிரியைகளை செய்து வந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஒரு சந்தேகம், கடவுள் காட்சி பெற்ற நம் குருவானவர் ஏன் தினசரி காலை, மாலை வேளைகளில் ஜபம், பூஜை புனஷ்காரங்கள் செய்கிறார். இதைத் தனது குருவிடமே நேரிடையாகவே கேட்கவும் செய்தார்.
"ஸ்வாமி, கடவுள் காட்சி கண்ட தாங்கள் ஏன் இன்னமும் ஜபம், பூஜை இவற்றில் ஈடுப்பட்டு வருகிறீர்கள்? இவையெல்லாம் ஆரம்பகால ஆத்மா சாதகர்களுக்கு தேவைப்படலாம். தாங்கள் ஏன் செய்கிறீர்கள் என்பதை அறிய விழைகிறேன்" என்றார்.
அதற்கு ஸ்ரீ தோத்தாபுரி, "ஒருநாள் செம்பில் பால் வாங்கிப் பயன்படுத்திவிட்டு கழுவாமல் மறுநாள் அதே செம்பில் பால் வாங்கினால் அந்தப் பால் எப்படி கெட்டு விடுமோ அதுபோல தினசரி பூஜை, கிரியைகளால் மனதிலுள்ள அழுக்கைக் களைய வேண்டும். ஒரு நாள் விட்டாலும் மனதில் அழுக்கு படிந்துவிடும், எனவே எவ்வளவு உயர்ந்த ஆன்மிக நிலையில் இருந்தாலும் ஜபம், பூஜை போன்ற கிரியைகளை அவசியம்மேற்கொள்ள வேண்டும்" என்று பதில் கூறினார்.!!
"பொழுது அறு காலத்து என்றும் பூசனை விடாது செய்து தொழுத கை தலைமேல் ஏறத் துளும்பு கண்ணீருள் மூழ்கி அழுது அடி அடைந்த அன்பன் அடியவர்க்கு அடிமை செய்வாம் " 

ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது

ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது
அவை....
1:மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
2:குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.
3:புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்,விவசாயம் செழிக்கும்
4:வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.
5:உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
6:வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி,சூன்னியம் விலகும்.
7:விபூதியார் வினாயர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்
8:சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
9:சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்
10:வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்
11:வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்
12:சர்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்கரை நோய்யின் வீரியம் குறையும்.

கலியுகம் நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு வரமா? சாபமா?

கலியுகம் நமது ஆன்மீக
முன்னேற்றத்துக்கு வரமா? சாபமா?
சந்தேகமில்லாமல்
வரமே தான்.எப்படி என்பதை விளக்கவே
இந்த பதிவு!!!
நான்கு யுகங்களாக
நமது இந்து தர்மம்,காலத்தைப்
பிரித்திருக்கிறது.அவை:கிருத
யுகம்,திரோதாயுகம்,துவாபர
யுகம் மற்றும் கலியுகம்
முதல் யுகமான க்ருதயுகத்தின்
கால அளவு 17,28,000
ஆண்டுகள்(இந்த யுகத்தின்
முடிவில் இராமாயணம்
நிகழ்ந்தது)
இரண்டாம் யுகமான
திரோதாயுகத்தின் கால
அளவு 12,96,000 ஆண்டுகள்
மூன்றாம் யுகமான
துவாபரயுகத்தின் கால
அளவு 8,64,000 ஆண்டுகள்
(இந்த யுகத்தின் முடிவில்
மஹாபாரதம் நிகழ்ந்தது)
தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பது க
லியுகம் ஆகும்.கலியுகத்தின்
கால அளவு 4,32,000
ஆண்டுகள்.இப்போது நாம்
கலியுகம் துவங்கி 5113
ஆண்டுகள் தான்
ஆகின்றன.கலியின் தாக்கம்
பூமியில் பிறக்கும்
ஒவ்வொரு உயிருக்கும்
இருந்தே தீரும்;நல்ல
விஷயங்கள் மனதிற்குள்
ஊடுருவும் முன்பு,தீய மற்றும்
அழிவுதரும்
விஷயங்களே மனதை ஆக்கிரமிக்கின்றன.
முதல் யுகமான க்ருதயுகத்தில்
பத்து ஆண்டுகளாக தினமும்
ஜபம் செய்தால்,என்ன
புண்ணியம்
கிடைக்குமோ,அதே புண்ணியம்
கலியுகத்தில்
ஒரே ஒரு நாள் ,ஒரே ஒரு மணி நேரம்
ஒரு சிவாலயத்தில்
ஓம்சிவசிவஓம் ஜபித்தால்
கிடைத்துவிடும்.
க்ருதயுகத்தில் ஆயுள்
முழுவதும் ஜபம்
செய்தால்,என்ன புண்ணியம்
கிடைக்குமோ,அதை விடவும்
அதிகமான புண்ணியம்,நாம்
வாழ்ந்து வரும் கலியுகத்தில்
ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம்
வீதம்
ஓராண்டுக்கு ஓம்சிவசிவஓம்
ஜபித்தால் கிடைத்துவிடும்.
க்ருதயுகம் முழுவதும்
வாழ்ந்து ஏதாவது ஒரு கடவுளை
நினைத்து ஏராளமான யாகங்கள்
நடத்தினால்,அந்த கடவுளின்
அருள்
கிடைக்கலாம்;கிடைக்காமல்
போகலாம்.ஆனால்,நாம்
வாழ்ந்து வரும் கலியுகத்தில்
ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம்
வீதம்
மூன்றே மூன்று ஆண்டுகளுக்கு
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண
பைரவர் வழிபாடு வீட்டில்
செய்தாலே,க்ருதயுகம்
முழுவதும் யாகங்கள் செய்த
புண்ணியத்தை விடவும் அதிக
புண்ணியமும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண
ஆகர்ஷண பைரவரின்
தரிசனமும்,நிலையான செல்வச்
செழிப்பும்,கர்மவினையே இல்லாத
நிலையும்,நமது அடுத்த ஏழு
தலைமுறை(நமது குழந்தைகள்,அவர்களின்
குழந்தைகள்
என்று அடுத்தடுத்து ஏழு தலைமுறை)
க்கும் நிம்மதியும்,செல்வச்
செழிப்பும் உண்டாகும்.
ஏராளமான கவனத் திசைத்
திருப்பல்கள்,முதுகெலும்பில்லாத
கருத்துக்களை நகைச்சுவையான
விதத்தில் பரிமாறி நம்மை நாகரீக
முட்டாளாக்கும்
நாத்திகம்,காமத்தின் மீதான
அளவற்ற
ஆர்வம்,ஒரே ஒரு விஷயத்தின்
மீது அளவற்ற
பைத்தியம்,எல்லோரிடமும்
விரைவாக பணம் சம்பாதிக்கத்
தூண்டும் முதலாளித்துவம் என
கலிகாலத்தில் நம்மை சிந்திக்க
வைக்கவிடாமல் தடுக்கும்
குழப்பம் நிறைந்த யுகத்தில்
இப்படி நமது இந்து தர்மத்தை
விடாப்பிடியாக பின்பற்றுவோர்
நாம் அனைவருமே சித்தர்களின்
வழித்தோன்றல்கள் என்றால்
நம்பவா போகிறீர்கள்?
நீங்கள் நம்பாவிட்டாலும்
அதுதான்
உண்மை.ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம்
வீதம்
மூன்றே மூன்று மாதங்களுக்கு தினமும்
ஓம்சிவசிவஓம்
ஜபித்துப்பாருங்கள்;உங்களது வாழ்க்கை,
சிந்தனை,செயல்
இவை அனைத்திலும்
ஒரு உள்முகமான பயணம்
துவங்கியிருக்கும்;ஏராளமான
நமது வாசக,வாசகிகளின்
அனுபவம் அது.
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண
பைரவர் மூல
மந்திரத்தை உங்கள் வீட்டில்
உள்ள அவரின் படத்தின் முன்பாக
ஜபிக்க வேண்டும்;
ஒரு நாளுக்கு 33 முறை வீதம்
குறைந்தது ஆறு மாதங்களுக்கு இவ்வாறு
செய்வதால்,உங்களின் கடன்கள்
எப்படித் தீருகின்றன
அல்லது உங்களுக்கு வர
வேண்டிய பணம்
எப்படி வந்து சேருகின்றது அல்லது
உங்களது குடும்பப்பிரச்னைகள்
எப்படி தீர்ந்து குடும்ப
ஒற்றுமை ஏற்படுகிறது அல்லது உங்களின்
நீண்டகால மற்றும் நியாயமான
ஏக்கங்கள்
எப்படி நிறைவேறுகின்றன
என்பதை நீங்களே உணரலாம்.
கலியுகத்தில் நாம்
பிறந்தது நமது ஆன்மீக
முன்னேற்றத்துக்கு வரம்
மட்டுமே;வரம் மட்டுமே;வரம்
மட்டுமே!!!
நமக்குத்
தேவை மனத்தை முழுக்க
முழுக்க இந்த
வழிபாடு அல்லது மந்திர
ஜபத்தை நோக்கித் திருப்பக் கூடிய
மனவலிமை மட்டுமே