விளக்கில் எண்ணெய் விட்டு  எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட 
வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு  திரிகளாவது ஏற்ற வேண்டும். 
2.  நெய் வேத்தியங்கள் நிவேதனம் செய்யும் வாழை இலையின் பக்கத்தில் 
விளக்கேற்றுவது மிகவும் சிறந்தது. 
3. ஊது பத்திகளை பூஜைக்கு வைத்த  வாழைப்பழங்களின் மேல் குத்தி ஏற்றுதல் 
கூடாது. ஊது பத்திகளுக்கென்று  உரிய ஸ்டாண்டை பயன்படுத்துதல் நல்லது. இல்லையேல் ஒரு 
சிறிய பாத்திரத்தில் அரிசியை  நிரப்பி அதில் ஊது பத்திகளைக் குத்தலாம். 
4. கற்பூரம் ஏற்றும்  போது தட்டில் சிறிதளவு திருநீறை  வைத்து அதன் மேல் 
கற்பூரத்தை  ஏற்ற வேண்டும். திருநீறு இல்லையேல் வாழை இலையிலோ வெற்றிலையையோ வைத்து 
ஏற்றலாம். பூஜைக்குரிய வெற்றிலையை வைத்து கற்பூரம் ஏற்றுதல் தவறு. 
5. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய 
பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு. 
6. சுபகாரியங்கள் வீட்டில் நடைபெற விளக்கு பூஜை செய்து  வழிபட்டால் நற்பலன்களை 
கண்டிப்பாக  பெறலாம். 
7. விளக்கு பூஜை செய்யும் போது குத்து விளக்கிற்கு முன் சிறிது மஞ்சள்  தூளால் 
சிறு விநாயகரின் சிலையை செய்து குங்குமமிட்டு அவரை அங்கு வீற்றிருக்க  செய்ய 
வேண்டும். 
8. தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய 
அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது. 
9. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் 
திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற 
வேண்டும். 
10. விநாயக பெருமானுக்கு-1, 7 தீபம், முருகருக்கு-6 தீபம், பெருமாளுக்கு-6 
தீபம், நாக அம்மனுக்கு-4 தீபம், சிவனுக்கு-3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு-2 தீபம், 
மகாலட்சுமிக்கு-8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும். 
11. தீபங்களை வாகனங்களுக்கு முன்பாகவும் ஏற்றலாம். சிவன் கோவிலில் நந்திக்கு 
முன்பாகவும், அம்மன்-சிங்கம்-நந்தி முன்பாக, பிள்ளையார்- பெருச்சாளி முன்பாக, 
பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்- மயில் முன்பாக ஏற்ற வேண்டும். 
12. தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் 
தீர செவ்வாய் ராகு காலத்திலும், கடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு 
வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு-2 அம்மனை 
தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும். 
13. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் 
ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக 
ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன 
இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, 
நிலையான அமைதியைத் தரும். 
14. காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் 
வீட்டில தீபம் ஏற்ற வேண்டும். 
15. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். 
16. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை 
பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம். 
17. புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் 
தொந்தரவுகள் அண்டாது. 
18. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. 
19. தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லட்சுமி என்று மூன்று முறையும் 
குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க 
வேண்டும். 
20. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு.  மங்களம் 
தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம்.  தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் 
இன்பம் காண்போம்.* 
மிக்க நன்றி. சாதரணமாக வீட்டில் நெய் விளக்கு எப்போதுமே ஏற்றலாமா ?
ReplyDelete