நீருக்கு நிழல் இருக்கிறதா? என்று கேட்டால், "இல்லை' என்றுதான் சொல்வர். ஆனால், 
நீருக்கு நிழல் இருக்கிறது. நிழல் இல்லை என்றால் ஆகாயமே இல்லை என்றாகி விடும். 
நீரின் நிழல் அதனுள்ளேயே அடங்கி விடுவதால், வெளியில் தெரிவதில்லை. சிவனும் நீரைப் 
போல அருள் செய்கிறார். அவரை வணங்கும்போது, ஆன்மாவிற்கு முக்தி கிடைக்கிறது. அது 
அவருக்குள்ளேயே ஒடுங்குகிறது. இதனை உணர்த்தும் விதமாக சைவ சித்தாந்தத்தில், "நீரார் 
நிழல்' என்று சிவனை வேண்டி பாடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment