Thursday, August 6, 2026

 மனித உடலில் "பஞ்ச பிராணன்கள்" (அல்லது பஞ்ச வாயுக்கள்) எனப்படும் ஐந்து முக்கிய சக்திகள்/காற்றுகள் இயங்குகின்றன. யோக மரபு மற்றும் ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி, ஒருவரின் சுவாசம் அல்லது இருதய துடிப்பு நிற்பது மட்டுமே முழுமையான மரணம் அல்ல. இந்த ஐந்து வாயுக்களும் உடலை விட்டு குறிப்பிட்ட வரிசையில், வெவ்வேறான கால இடைவெளிகளில் வெளியேறுகின்றன.  

​உயிர் பிரிந்த பின் இந்த ஐந்து வாயுக்களும் வெளியேறும் முறை மற்றும் கால அளவு



வாயுவின் பெயர்உடலில் செய்யும் பணிஉயிர் பிரிந்த பின் வெளியேறும் காலம் & விதம்

1. சமான வாயு (Samana Vayu)உடலின் வெப்பம் மற்றும் செரிமானத்தை பராமரித்தல்.21 முதல் 24 நிமிடங்களுக்குள்: சுவாசம் நின்றவுடன் முதலில் வெளியேறும் வாயு இதுதான். இதனால் தான் உடல் உடனடியாகக் குளிர்ந்து போகத் தொடங்குகிறது.

2. பிராண வாயு (Prana Vayu)சுவாசம் மற்றும் சிந்தனை செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல்.48 முதல் 90 நிமிடங்களுக்குள்: சுவாச இயக்கம் மற்றும் மூளையின் நுண்ணிய அலைகள் முற்றிலும் நின்று, இந்த வாயு வெளியேறுகிறது.

3. உதான வாயு (Udana Vayu)உடலின் மிதப்புத் தன்மை (Buoyancy) மற்றும் தொண்டை/பேச்சு பகுதி.6 முதல் 12 மணி நேரத்திற்குள்: இது வெளியேறியவுடன் உடலின் கனத்தன்மை அதிகரிக்கும் (உடல் மிகவும் கனமாக மாறுவது போல இருக்கும்).

4. அபான வாயு (Apana Vayu)கழிவு நீக்கம் மற்றும் உடலின் கீழ்நோக்கிய ஆற்றல்.8 முதல் 18 மணி நேரத்திற்குள்: உடல் உணர்ச்சிகள் மற்றும் கழிவு மண்டலங்களின் பிடிப்பு முற்றிலும் விடுபட்டு வெளியேறுகிறது.

5. வியான வாயு (Vyana Vayu)உடல் செல்களை ஒன்றிணைத்து, உடலைப் பாதுகாக்கும் ஆற்றல்.11 முதல் 14 நாட்களுக்குள்: இதுவே மிக மெதுவாக வெளியேறும் வாயு. இயல்பான மரணங்களில், செல்கள் சிதையும் வரை இந்த ஆற்றல் உடலின் நுண் அமைப்புகளில் நிலைத்திருக்கும்.




​குறிப்பு (தனஞ்சயன் வாயு): முதன்மை ஐந்து வாயுக்கள் தவிர, 'உப வாயுக்கள்' ஐந்தில் ஒன்றான தனஞ்சயன் என்னும் காற்று, உடல் முற்றிலுமாக மக்கி அழியும் வரை அல்லது தகனம் செய்யப்படும் வரை உடலிலேயே தங்கியிருந்து இறுதியில் வெளியேறும் என்பது நம்பிக்கை.

  

​இதனாலேயே பண்டைய முறைப்படி உடலைத் தகனம் செய்யும் அல்லது அடக்கம் செய்யும் சடங்குகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்யப்படுகின்றன

 தர்ப்பை:-



நம் முன்னோர் நமக்கு அளித்த பல நடைமுறைகள் எல்லாம்,
நம் வாழ்வின் நலனுக்காக அமைந்தவையே!
நாம் அவற்றின் காரணத்தை உணராமல்,
அவற்றை நவீன கண்டு பிடிப்புகளுடன் ஒப்பிட்டு,
அதன் எளிமையான பயன் பாட்டையே நாம் புறக்கணிக்கிறோம்.
அப்படி முன்னோர் வகுத்த வாழ்வியல் நெறியில்,
ஒரு சூட்சுமான செயல்பாடு தான் தர்ப்பை புல் பயன்பாடு.
தர்ப்பை புல் மனிதனுக்கும் இறைவனுக்கும் தொடர்பு தரும் சாதனமாக, வேதங்களின் மூலம் அறியப்படுகிறது.
உலகம் தோன்றிய போதே தோன்றிய தொன்மையான புல் என தர்ப்பை புல்லை முன்னோர் போற்றுவர்.
தர்ப்பை புல்லின் உச்சியில் சிவபெருமானும்,
மத்தியில் பிரம்மனும்,
அடியில் விஷ்ணுவும்
இருப்பதாக ஐதீகம்.
தர்ப்பை புல் காய்ந்தாலும், அதன் தன்மை மாறாது உயிர்ப்புடன் இருக்கும் என்பதே தர்ப்பை புல்லின் சிறப்பாகும்.
தர்ப்பை புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது, நீருக்குள் பல நாட்கள் கிடந்தாலும் அழுகாது.
இந்து சமய சடங்குகளில், பிறப்பில் இருந்து இறப்பு வரை முக்கிய இடம் தர்ப்பை புல்லுக்கு உண்டு.
தர்ப்பை புல்லில் ஏழு வகை உண்டு....
குசை, காசம், தூர்வை, விரிகி, மஞ்சம்புல்,
விசுவாமித்திரம், யவை
என்பவை அவை.
தோற்றத்தை பொறுத்து இவை ஆண், பெண், அலி என மூன்று வகைப்படும்.
நுனிப்பகுதி பருத்துக் காணப்படுவது பெண் தர்ப்பை எனவும்,
அடிப்பகுதி பருத்து இருந்தால் அது அலி தர்ப்பை எனவும்,
அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருந்தால் ஆண் தர்ப்பை எனவும் கூறப்படுகிறது.
தர்ப்பை புல்லின் மகிமைகளை யஜூர், அதர்வண வேதங்களிலும்,
சம்ருதி சிந்தாமணி, சம்ருதி பாஸ்கரம், விஷ்ணு புராணம் போன்றவற்றிலும்,
நிகண்டு ரத்தினாகரம், ராஜ நிகண்டு போன்ற ஆயுர்வேத நூல்களிலும் காணலாம்.
தர்ப்பை புல்லினால் செய்யப்படும் மோதிரம் போன்ற அமைப்புக்கு பவித்ரம் என்று கூறுவர்.
பவித்ரம் என்றால் பரம சுத்தமானது என்று அர்த்தம்.
பவித்ரத்தை எல்லா விதமான கிரியைகளுக்கும் கை விரலில் மோதிரமாக அணிந்து கொள்ளும் வழக்கம் புராண காலத்தில் இருந்தே உள்ளது.
நமது வலது கை மோதிர விரல் மூளையுடன் தொடர்புடையது.
இந்த விரலில் பவித்ரம் அணிந்து ஹோமம், ஜப வேள்வி சடங்குகளில் ஈடுபட,
அது அண்ட வெளியில் உள்ள ஆற்றலை மூளைக்கு கொண்டு சேர்க்கும்.
பவித்ரம் அணியாமல் மேற்கொள்ளும் எந்த ஆன்மீக சடங்குகளும்,
மின்சாரம் இல்லாத கணினி போல அவற்றால் எந்த பலன்களும் இல்லை.
தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ,
அதே போல் தர்ப்பை அணிந்து இருப்பவரிடம் பாவம் ஒட்டாது என்கிறது தர்ம சாஸ்திரம்.
உபாசனையில் ஜபம் மற்றும் வேள்விக்கு இடையூறு செய்யும் கண்ணுக்கு புலப்படாத,
அரக்கர்கள், பூதங்கள், பிசாசுகள், பிரம்மராக்ஷகர்
முதலியோர் நம் கையில் உள்ள தர்ப்பையை பார்த்ததும் விலகியே ஓடுவர்.
மின்சாரம் பாயாத பொருட்களில் தர்ப்பையும் ஒன்று ஆனால், மின்சாரத்தை விட பல மடங்கு செயல் திறன் கொண்டது.
அக்னி பரிசுத்தமானது தான்
என்றாலும் அதன் தூய்மையை வலுப்படுத்த தர்ப்பை உதவும்.
ஆகவே தான் இதற்கு அக்னி கர்பம் என்ற பெயர் உண்டு.
தர்ப்பை புல்லுக்கு மந்திர சக்தியை உள் வாங்கி கொள்ளும் தன்மை மிக மிக அதிகம்.
ஆகவே அது தீய எண்ணங்களையும்,
கர்ம வினைகளையும்
நம்மிடம் ஒட்டாமல் இருக்க செய்யும்.
தர்ப்பை புல்லில் ஆன ஆசனம் மிகவும் விசேஷம்.
தர்பாசனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பல மடங்கு சக்தி உண்டு.
கலச ஸ்தாபனம் போது மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பார்கள்.
அந்த தர்ப்பையின் வழியாகத் தான் ப்ராண சக்தி கும்பத்துக்குள் வரும்.
சிறந்த புனிதமான தெய்வீக சக்தியைக் கொண்ட தேவர்களும்,
பித்ருக்களும் நம் கண்களுக்கு தெரியாத ஒளி ரூபத்தில் வந்து அந்த
தர்ப்பையில் அமர்கின்றனர்.
தர்ப்பை உஷ்ண வீரியமும், அதி வேகமும் கொண்டது.
மேலும் பஞ்ச லோகங்களில்
தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு.
எனவே தான் கோவில் கும்பாபிஷேகங்களில் தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையை பயன் படுத்துவார்கள்.
அதை நாடி சந்தானம்
அல்லது உயிர் கொடுத்தல் என்று சொல்வார்கள்.
கோவில் கும்பாபிஷேகங்களில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றிய பின், அந்த நீரை கூடியுள்ள மக்களின் மீது தெளிப்பதன் விளக்கமும் இது தான்.
உபாசனையின் போது கையில் ஒரு பிடி தர்ப்பையும், ஆசனமாக நான்கு பிடி தர்ப்பையையும் வைத்து மந்திரம் சொல்ல எல்லா தேவதைகளையும்
தொடர்பு கொண்டு பல்வேறு செய்திகளை அறியலாம்.
நன்கு உரு ஏற்றிய
தர்ப்பையை எரித்து சாம்பலாக்கி அதில் சிறிது நெய் விட்டு மை போல
குழைத்து புருவங்களில் தடவ எல்லா விதமான தோஷங்களும் விலகி
ஓடும்; ஜன வசீகரம் ஏற்படும்.
பொதுவாக ஹோமங்களின் முடிவில் இதை ஹோமபூஜா ரக்ஷசையாக இதை செய்வார்கள்.
தர்ப்பை புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது.
ஒரு புல்லை கொண்டு செய்யும் பவித்திரம்
இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும்,
இரண்டு புற்களை கொண்டு
செய்யப்படும் பவித்திரம்
தினசரி நடை முறைகளுக்கும்,
மூன்று புற்கள்
கொண்டு செய்யப்படும் பவித்திரம் அமாவாசை அன்று செய்யப்படும் நீத்தார்
சடங்கு போன்றவற்றிலும்,
நான்கு புற்களினால் செய்யப்பட்ட பவித்திரம்
கோயில் நடை முறைகளுக்கும் பயன் படுத்தப்படுகின்றது.
தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும்,
பித்ரு கார்யங்களில் தெற்கு நுனியாகவும் தர்ப்பை புல்லை உபயோகப் படுத்துவர்.
சிராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆசனம், கூர்ச்சம் போன்றவைகள்
தர்ப்பை புல்லில் தான் செய்யப்படுகின்றன.
தேவ தர்ப்பணத்திற்கு நுனியாலும்,
மனித தர்ப்பணத்திற்கு மத்தியாலும்,
பித்ரு தர்ப்பணத்திற்கு மடித்து நுனியாகவும், தர்பணாதிகள் செய்ய
வேண்டும் என்று சாஸ்திரம் வரையறுத்துள்ளது
கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம்.
எனவே தான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய
கிருமிகளால் உணவு கெடாமல் இருக்க தூய்மையான தர்ப்பையை பரப்புகிறார்கள்.
தர்ப்பை புல்லில் ஊறிய நீரும், தூய்மையையும் உடலுக்கு நலத்தையும் தருவதாகும்.
தர்ப்பை புல் இட்ட நீரை வீடுகளில் தெளித்து வர, அங்கு எந்த தொற்று வியாதியும் அணுகாது.
வீடுகளில், உயரமான இடங்களில், வாசல்களில் கொத்தாக தர்ப்பை புல்லை கட்டி வைக்க, எந்தவித தொற்று பாதிப்புகளும் அணுகாமல் இருக்கும்.
வியாதி உள்ளவர்கள் தங்கும் இடங்களில் தர்ப்பை புல்லை வைக்க வியாதிகள் பரவாது நலம் பெறுவர்.
முன்பு திருநள்ளாறு தர்ப்பைப் புல் வளரும் காடாக இருந்து உள்ளது.
ஆகவே அங்கு வீற்றிருக்கும் ஈஸ்வரனுக்கு 'தர்பாரண்யேஸ்வரர்
என்று பெயர்.
திருநள்ளாறு கோயிலில் தர்ப்பை புல்லே தலவிருட்சமாக வணங்கப்படுகிறது

 "எல்லா கோயிலிலும் மூலஸ்தானத்திற்கு எதிராக பெரிய நிலைக் கண்ணாடி இருக்கும்!ஏன்?"




கோவிலுக்கு வருபவன் கர்ப்பக்கிரஹத்தில் மூலஸ்தானத்தில் இருக்கிறான் என கருதி உள்ளே வந்து பூஜித்து அர்ச்சித்து தரிசித்து பிரசாதம் பெற்று திரும்பினால் நேர் எதிரே இருப்பது அந்த பெரிய நிலைக்கண்ணாடியே!
அதை பார்த்து அதிலும் சுவாமி உருவம் தெரிவதையும் காண்பான்?
பூசாரி தரும் விபூதியை சரியாக இட்டுக் கொள்ளவா?
கூட்ட நேரத்தில் அது விழியாக பார்க்கவா?
*அடேய், மடையா கடவுள் மூலஸ்தானத்தில் இல்லையடா!*
*உன்னுள் தான் இருக்கிறார்!*
அதை நீயே உன் கண் மூலமாக பார் என உணர்த்தவே!?
கண்ணாடியில் சுவாமியும் தெரியும் நம் உருவமும் தெரியுமல்லவா?
அதை நம் கண்ணால் தானே பார்க்கிறோம்!
கண்ணாடி வழியே தான் பார்க்க முடியும்?!
கண்ணை நாடி - கண்ணிலே ஆடிக் கொண்டிருக்கும் ஜோதியை நாடிப்பார் என்பதே!
அந்த ஜோதி தான் ஆதி!
நமது கண்ணும் கண்ணாடி போன்றதே!
நம் உருவத்தை எதிரில் நிற்பவர் கண்ணில் அதனுள் ஒளியில்வை!
காண்பாய் உன்னை நீயே!
நீயே ஆத்மா

 தமிழ் கடவுள் முருகனுக்குஇரண்டு மனைவியர் ஏன்..?




தமிழ் கடவுள் முருகன் என்கிறோம். ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர்.
கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள சாதாரணமான மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது.
இருப்பினும் அவருக்கு மனைவியர்
இரண்டு பேர் எதற்கு என்பதை
சற்று வேறு கோணத்தில் சந்திப்போம்.
அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும்.
மகான் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினைபாருங்கள்.
நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா".
சுழுமுனை என்பது மானுட உடலில்
உள்ள ஒரு மைய நரம்பு.
நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம்
இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது ஆகும்.
இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.
இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்.
7. தலை உச்சி (சகஸ்ராதாரம்)
6. நெற்றிக் கண் (ஆக்கினை)
5. தொண்டைக் குழி (விசுக்தி)
4. நெஞ்சுக்குழி (அனாகதம்)
3. தொப்புள் குழி (மணிப்பூரகம்)
2. தொப்புள் குழிக்கு சற்று கீழ்ப் பகுதி (சுவாதிஷ்ட்டானம்)
1. முதுகுத் தண்டின் அடிப்பாகம் உடலுக்கு உள் புறம் (மூலாதாரம்)
உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்"
இந்த ஏழு சக்கரங்களும் மையம் கொண்டிருக்கும் மைய நாடியே
சுழுமுனை நாடி.
ஒவ்வோரு உயிரிலும்
உள்ள சுழுமுனையே முருகன்.
இடகலை பிங்கலை என இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே
வள்ளி தெய்வானை.
ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே.
ஆனால் மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால்,இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
இறுதியாக ஒன்று
கடவுள் ஒருவரே.
அவர் எவராலும் பெறப்படவும் இல்லை.
அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை.
அவர் எந்த வடிவும் இல்லாத பேராற்றல்.
எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது
இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர
வேறொன்றும் இல்லை

 பூஜை  துவக்கத்தில் தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது?




சங்கல்பம் என்னும்  உறுதி மொழி. இப்படி நடக்க வேண்டும் என பிராத்திப்பது.. இந்த இடத்தில், இந்த நேரத்தில், இந்த நாளில்.. இப்படி துல்லியமாக கூறி, பிரபஞ்ச சக்தியிடம் முறையிடுவது.. மேலும்...


சங்கல்பம்


சங்கல்பம் என்பது உறுதி பூணுதல் ஆகும். திடசங்கற்பம் என இதனைக் கூறுவர். சங்கல்பம் இல்லாமல் எந்த ஒரு கிரியையும் நடைபெறுவதிற் பயனில்லை. இறை சந்நிதியில் நாம் செய்யப்போகும் கிரியையை விளக்கமாக கூறி, அதனை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதயும் கூறி, இதன நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும். சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும். என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும், அழகாகவும் கூறப்பெறுகின்றது. பொருளுணர்ந்து இதனைக் கூறும்போது அதனைச் சுவைத்து இன்புறலாம்.


அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் எவ்வளவு தூரம் வரலாற்று உணர்வு உடையவர்களாக, காலக் கணக்குகளை நுணுக்கமாகப் பேணி வந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதும், புவியியல் அறிவிலும் சளைக்காத ஞானம் உடையவர்களாகப் பிரதேசங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் அறிந்து வியப்புற முடிகின்றது.


கிரியைகள் நடைபெறும் காலமும் இடமும் மிக முக்கியமானவை. அதனால் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இக்கிரியையைச் செய்கிறோம் எனக் கூறிக்கொள்வது மரபு.


இப்போது சாதாரணமாக நாம் அறிந்தவரையி ஆண்டு, மாதம், திகதி கூறுவதுடன் காலநிர்ணயம் முடிந்து விடுகிறது. பூவுலகத்தில், ஆசியாக் கண்டத்தில், இலங்கைத்தீவில், யாழ்ப்பாணப் பிரதேசத்தில்… என்னும் கிராமத்தில் என்று கூறுவதுடன் இடநிர்ணயம் முடிந்துவிடுகின்றது. ஆனால் இங்கே சுருக்கமாகன முறையிலும், விரிவான முறையிலும் தேவைக்கு ஏற்ற வகையிற் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற வேறு வேறு வகையான சில சங்கல்ப வாக்கியங்களின் தமிழ்க் கருத்து தரப்படுகின்றது.


“மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர 

ப்ரீர்த்யர்த்தம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சுப திதௌ அஸ்ய தேவஸ்ய… அஹம் அத்ய கரிஷ்யே”


என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து போவதற்காகவும், பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காலவும் இன்றைய இந்த சுபதினத்தில், இன்ன தெவத்தின், இன்ன கிரியையை நான் செய்கிறேன். இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும். 


ஒரு பெரிய திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் உட்பிரிவுகளாயமையும் சிறு கிரியைகள் ஒவ்வொன்றும் தொடங்கும் போது இவ்வாறு சிறு சங்கல்பங்களைச் சிவாச்சாரியார் செய்வது மரபு. ஆனால் ஆரம்பத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் உபயகாரர்கள் ஆகியோரின் பெயர், நட்சத்திரம் முதலியன கூறி; கிரியை நடைபெறும் இடம், நாள், நட்சத்திரம், திதி, கிழமை, பட்சம், மாதம், அயனம், வருடம் என்பன யாவும் கூறி இந்த சங்கல்பம் நடைபெறும்.


பொதுவாக நாளாந்தம் நடைபெறும் பூஜை, அர்ச்சனை முதலியவற்றிற் பயன்படுத்தப்படும் சங்கல்பம் ஒன்றின் முழுமையான கருத்தை இங்கு பார்ப்போம்.


“இறைவனின் கட்டலைப்படி, முதலாவது பிரமனின் இரண்டாவது பரார்த்தத்திற் சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது கால கட்டத்தில், கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் (இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரபவ முதலிய அறுபது வருடத்தில்)..…

என்ற பெயரையுடைய வருடத்தில்…. அயனத்திலே…. ருதுவிலே…. மாதத்திலே…. பட்சத்திலே…… திதியிலே….. நட்சத்திரத்திலே… கிழமையிலே அமைகின்ற இன்றைய சுபதினத்திலே… நட்சத்திரத்திற் பிறந்த…. பெயரையுடைய இந்த எசமானனுடையதும் (கர்த்தா) அவரது குடுமபத்தினரதும், இக் கிராமத்தில் இருக்கும் மக்களதும் சுகநலங்களுக்காகவும், தைரியம், வீரம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வரியங்கள் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும், தர்மம், அர்த்தம், காம்யம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களின் சித்திக்காகவும், சந்தான விருத்தியின் பொருட்டும் தெரிந்தோ தெரியாமலோ சென்ற பிறப்புகளிலும், இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அகலுவதற்காகவும்…. இடத்திலுள்ள…. என்ற பெயரையுடைய இறைவனின்….. என்ற கிரியையைக் குருமுகமா நான் செய்கிறேன்.


இங்கு இரு வகையான சங்கல்பங்கள் பார்க்கப்பட்டன. சங்கல்பத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருக்கும். ஒன்று “நான் இன்ன பலனை உத்தேசித்து இந்தக் கிரியையைக் குருமூலமாகச் செய்யப் போகிறேன்” என்று திடமாக உறுதி கொள்ளுதல்.


அதன் அங்கமாக வரும் மற்ற இரு பகுதிகளும் காலம் பற்றியதும் இடம் பற்றியதுமாகும். “இன்ன லாலத்தில் நான் செய்கிறேன்: என்பதை வருடம், அயனம், மாதம், பட்சம், திதி, நட்சத்திரம், வாரம் இவற்றைச் சொல்லிச் சுருக்கமாக நிறைவு செய்தல் முன்பு காட்டப்பெற்ற சங்கல்பத்தில் காணப்படும் ஒருவகை முறை. இதன் விரிவான முறையில் உலகின் உற்பத்தி முதல் இன்றுவரையான காலப்ப்குதிகளைச் சுவைபட வர்ணித்துக் கூறுதல்.


இதேபோல சங்கல்பத்தின் மூன்றாவது பகுதி, கிரியை நடைபெறும் இடத்தைப் பற்றியது. “எந்தச் சுவாமியின் சந்நிதியில்” எனச் சுருக்கமாகச் செய்யும் முறையும் உண்டு. அண்டங்கள் யாவற்றையும் வர்ணித்துக் கூறி அதனுள்ளே நமது கிராமம் வரை கூறிக்கொண்டு வருதல் விரிவான முறையாகும். இந்த முறையிற் சங்கல்பம் சொல்லி முடிக்கச் சுமார் ஒருமணி நேரம் தேவை. ஆனால் அதன் சுருக்கத்தை விளங்கிக் கூறும்போது சுவையான இலக்கியத்தைப் படிப்பதுபோல கற்பனை வளமும் சொல்லாட்சியும் சுவைத்து மகிழத்தக்கதாக இருக்கும். அந்த விரிவான மஹா சங்கல்பத்திலும் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.


ஓம் ஸ்ரீ பகவானும், மஹாபுருஷ்னும், ஸ்ரீமத் ஆதிநாராயண மூர்த்தியும் மனோதீதமான அளவிலாற்றலோடு சலனமின்றி இருக்கின்றவரும் அனந்தகோடி சூரியப்பிரபையோடு கூடினவரும் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவுடைய சுய மாயையாற் கற்பிக்கப்பட்டனவும் பெரும் ஜலப்பிரவாக மத்தியிலே சுற்றுகின்றனவும் அநேக வடிவுடையனவும் ஆகிய அநேககோடி பிரமாண்டங்களில் ஒன்றானதும்,


வெளிப்படாத சமநிலைக்களமுடைய பிரகிருதியானது மஹான், அகங்காரம், பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் முதலிய ஆவரணங்களாற் சூழப்பெற்றதுமாகிய;


இந்த பெரிய பிரமாண்ட கண்ட மத்தியில் எல்லாவற்றையும் அதிட்டிக்கும் ஆதிவராகத்தின் கொம்பிலே உலகிற்கு மூலஸ்கந்தமாகிய ஆதாரசக்தி ஆதி கூர்னங்களும் அனந்த, வாசுகீ, தக்ஷ, சங்கபால, குளிக, பத்ம, மஹாபத்ம, கார்க்கோடகர்களாகிய அட்டமஹா நாகங்களும்;


ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்னும் அட்டமா யானைகளும் ஆகியா இவற்றின் மேல் வைக்கப்பட்டுள்ளதும்;


அதலம், விதலம், சதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம் என்னும் ஏழுலகங்களுக்கு மேலுள்ளதும்;


பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்னும் ஏழுலகங்களுட் கீழுள்ள பூலோகமும்;


சக்கர்வாள சைல வலய நடுவிலே சூழப்படுவதால் பெரிய நாளம்போன்ற ஆதிசேடனது ஆயிரம் முடி வரிசைகளில் அலங்காரமாகத் தாபிக்கப்பட்டுள்ளதும் திக்கு யானைகளின் துதிக்கைகளால் தூக்கப்பட்டுள்ளதும் புறத்தே பேரிருளாற் சூழப்பட்டதும் அகத்தே சூரிய கிரணப் பிரகாச முடையதும்; அம்புவதி, நயனவதி, சித்தவதி, காந்தர்வவதி, காஞ்சிவதி, அளகாவதி, அசோகவதி என்னும் புண்ணிய புரிகளால் மேலிடப்பட்டுள்ளதும்;


இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் லோகபாலகர்களால் அதிட்டிக்கப்பட்டதும்;


சக்கரவாளகிரியால் சூழப்பட்டதும்; உப்பு, கருப்பஞ்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தஜலம் என்னும் ஏழு சமுத்திரங்களினால் சூழப்பட்டதும்;


ஜம்பு, ப்லக்ஷம், சால்மலி, குசம், கிரவுஞ்சம், சாகம், புஷ்கரம், என்னும் ஏழு தீவுகளொடு விளங்குவதும், மஹேந்திரம், மலயம், சையம், சுத்தி, ருக்ஷம், விந்தியம், பாரியாத்திரம் என்னும் ஏழு குலமலைகளொடு விளங்குவதும், மதங்கம், ஹிரண்யசிருங்கம், மாலியவான், கிஷ்கிந்தம், ருஷ்யசிருங்கம் என்னும் ஐந்து மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும், இமயம், ஏமகூடம், சுதாசலம், நிசாசலம், சுவேதாசலம், சுநாசலம், சிருங்கவதம் என்னும் ஏழு பெரு மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும்;


இந்திரகண்டம், கசேருகண்டம், தாமிரகண்டம், கபத்திகண்டம், நாககண்டம், சௌம்யகண்டம், கந்தர்வகண்டம், சரபகண்டம், பரதகண்டம் என்னும் ஒன்பது கண்டமயமானதும்;


மஹாமானசத் தாமரைவடிவவான ஐம்பது கோடி யோசனை விசாலமுடைய பூமண்டல நடுவிலே, சுமேரு, சிஷதம், ஏமகூடம், சந்திரகோணகூடம், மஹேந்திரகூடம்,விந்த்யாசலம், சுவேதாசலம் என்பனவற்றுக்கும், ஹரிவர்ஷம், கிம்புருவர்ஷம் என்பவற்றுக்குத் தெற்கே கர்மபூமியில்; மது, வன, குலம் என்பவற்றுக்குத் தென்புறத்திலே; பொதியமலைக்கு வடக்கே, தென்சமுத்திரத்திற்கும் இமயமலைக்கும் நடுவே உள்ளதும், ஒன்பது யோசனை அளவு கொண்டதும், பாரதம், கிம்புருஷ்ம், ஹரி, இளாவிருதம், குரு, பத்திராள்வம், ரம்யம், ஹிரண்மயம், கேதுமாலம் என்னும் ஒன்பது வர்ஷ்ங்களில் ஒன்றாகிய பாரத வர்ஷத்திலே, ஸ்வர்ணப்ரஸ்தம், சந்த்ரம், சுபித்தி, ஆவர்த்தகரமணம், மதங்கஜாவரணம், மஹ்வாரண, பாஞ்ச ஜன்யவகம், சிங்களம், இலங்கை என்னும் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்ட பாஸ்கர க்ஷேத்ரத்திலே, தண்டகாரண்யம், கதளிகாரண்யம், வடாரண்யம், தேவதாரண்யம் என்னும் பதினொரு வனங்களோடு கூடியதும்;


அங்கம், வங்கம், கலிங்கம், காம்போஜம், கௌசலம், காஸ்மீரம், கசூரம், கர்ஜூரம், பர்ப்பரம், மருதம், குரு, காந்தாரம், சௌவீரம், சௌராஷ்டிரம், மத்ரம், மகதம், ஆந்திரம், நிஷதம், சிந்து, தசார்ணம், மாளவம், நேபாளம், பாஞ்சாலம், வங்காளம், மலையாளம், சீழம்,, கேரளம், சிங்களம், கௌடம், கோடம், கீகடம், கர்நாடகம், கரகாடம், மரகாடம், பாநாடம், பாண்டியம், புளிந்தம், குந்தம், திரிகர்த்தம், லாவந்தி, அவந்தி, விதேயம், விதர்ப்பம், கேகயம், கோசலம், கொங்கணம், டங்கணம், ஹூணம், மற்சம், வற்சம், சகலம்பாகம், பாஹ்லிஙகம், யவனம், சாளுவம், சப்பன்னம், என்னும் ஐம்பத்தாறு தேசங்களாககிய பலவித பாஷைகளையுடைய விஷேடித்த இராச்சியங்களினாலே அலங்கரிக்கப்பட்டதும்;


ஸ்வாம்யவந்தி குருக்ஷேத்திரத்திலே, கங்கை, யமுனை, துங்கபத்ரை, சந்த்ரபாகை, ப்ரணீதை, பம்பை, பாபப்ரசமனீ, பயோக்ஷி, பல்குனி, பவநாசினி, பீமரதி, சரஸ்வதி, குமுதவதி, சிந்துநதி, அர்ஜூனி, கிருஷ்ணவேணி, பிநாகினி, கோதாவரி, மலாபஹாரி, தாம்ரபர்ணி, காவேரி, வேகவதி, வஞ்சுழி, சரயு முதலிய ஆயிரம் நதிகளோடு விளங்குவதும்;


அயோத்தி, மதுரை, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரக முதலிய முக்திநகரங்களோடு கூடியதும் சுநகம், வற்சநகம், குல்மநகம், சவாமிநகம், மஹாமானச ஸ்ரீஓருஹ வடிவான புஷ்கரத்யம், திரிகூடம், கைலாசம் என்னும் இவைகளின் நடுவாகிய பூமண்டத்தில்;


பாற்கடல் நடுவே ஆதிசேடனது படமாகிய மஞ்சத்திற் சயனிக்கும் மஹாவிஷ்ணுவினுடைய உந்திக்கலத்திற் தோன்றியவரும் சகல வேத நிதியாயுள்ளவரும்;


சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் முதலிய மகானகளுக்கும் இந்திரன் முதலிய முபத்து முக்கோடி தேவர் திர்யக் மனுடர் மலை முதலிய எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேத சராசரங்களுக்கும் அனேககோடி பிரMஆண்டங்களுக்கும் ஆதாரபூதமான சிருஷ்டியில் முயன்றவரும், இரண்டுபரார்த்தம் சீவிப்பவருமான பிரம்மாவின் முதற் பரார்த்தமாகிய ஐம்பது வௌஅது கழிந்தபின் இரண்டாம் பரார்த்தமாகிய ஐம்பது வருடத்தின் முதலாம் வருடத்திலே ,முதலாம் மாதத்திலே முதலாம் பக்ஷத்திலே முதலாம் நாளிலே பகலிலே இரண்டாம் சாமத்திலே மூன்றாவது முகூர்த்தத்திலே பதின்மூன்றாம் நாழிகையிலே நாற்பத்திரண்டு வினாடி சென்று நாற்பத்திமூன்றாம் வினாடியிலே முதற்பிராணம் தொடங்கும் காலத்திலே;


பார்த்திவம், அனந்தம், கூர்மம், பதுமம், வராகம், சுவேதவராகம், பிரளயம், என்னும் ஏழு கற்பங்களுள் சுவேதவராக கற்பத்திலே;


சுவாயம்புவர், சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷூஷர், வைவஸ்வதர், சூரியசாவவர்ணி, பிரமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, இந்திரசாவர்ணி, அக்கினிசாவர்ணி, ரௌச்சியர், பௌச்சியர் என்னும் பதினான்கு மநுக்களின் காலமாகிய மன்வந்தரங்கஊள் ஏழாவதாகிய வைவஸ்வத மன்வந்தரத்திலே; 


இருபத்தேழு சதுர்யுகம் கழிய இப்போது நிகழும் இருபத்தெட்டாவது சதுர்யுகத்திலே;


பதினேழுலக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் வருடமுடைய கிருதயுகம்கழிய;


பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்றாறாயிரம் வருடமுடைய திரேதாயுகமும் கழிய;


எட்டுலக்ஷத்து அறுபத்துநாலாயிரம் வருடமுடைய துவாபரயுகமும் கழிய;


நாலுலக்ஷத்து முப்பத்தீராயிரம் வருடமுடைய நிகழ்வதான கலியுகத்திலே;


ஐயாயிரத்தொரு வருடம் கழிய ஐயாயிரத்திரண்டாம் வருடமும் மற்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமம், த்சரதராமம், பலபத்திரராமம், பௌத்தம், கல்கி என்னும் பத்து அவதாரங்களுள்ளே ஒன்பதான பௌத்த அவதாரத்திலே;


யுதிஷ்டிர, விக்கிரம, சாலிவாகன, விஜயாபிநந்தன, நரசிங்கத் துருபத, நாகார்ச்சுன சகர்களாகிய ஆறு சக்கரவத்திகளின் அப்தங்களுள்ளே மூன்றாவதாகிய சாலிவாகன சகாப்தத்திலே;


ஆயிரத்தெண்ணூற்றிருபத்திரண்டு வருடங்கழிய நிகழ்கின்ற ஆயிரத்தெண்ணூற்றிருபத்து மூன்றாம் வருஷ்மாகிய வழங்குகின்ற சௌரமானம், சாந்திரமானம், சாவனமானம், நக்ஷ்த்திரமானம், பார்ஹஸ்பத்தியமானம் என்னும் காலவகைகளாய் நடைபெறும் பிரபவ முதலிய அறுபது வருஷங்களுள்ளே:


மூன்றாம் விம்சதியான – சௌரமான – சார்வரி என்னும் பெயருடைய வருஷ்த்திலே தக்ஷிணாயத்திலே சரத்ருதுவிலே ஐப்பசித் மாதத்திலே பூர்வபக்ஷத்திலே வியாழக்கிழமையோடு கூடியதும், விசாகநக்ஷ்த்திரத்தோடு கூடியதும், ஆயுஷ்மான் யோகம், பாலவகரணம், துலாலக்னம் முதலிய புண்ணீய விசேஷங்களோடு கூடியதும் ஆகிய துவிதியை என்னும் புண்ணிய திதியிலே அநாதியே அவித்தையின் தொடர்பால் நிகழுகின்ற இந்தப் பெரிய சம்சாரசக்கரத்திலே பலவிதமாகிய கன்மகதிகளாற் பலவிதமாகிய யோனிகளிற் பின்னும் பின்னும் பலதரம் பிறந்து யாதோ ஒரு புண்ணிய கர்ம விசேஷத்தால் இப்போது மானுட உடம்பில் பிறவி விசேடத்தை அடைந்துள்ளேன்.


கோத்திரத்தில்……, நக்ஷத்திரத்தில்…, ராசியில் பிறந்த…… பெயருடைய எனது பிறவிப் பயிற்சியால் உடம்பெடுத்த நாள்முதல் இந்தக்கணம் வரையும் இடையில் நிகழ்கின்ற பால்யம், கௌமாரம், யைவனம், வார்த்திகம் என்னும் பருவங்களில்;


மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் செய்யப்படும் வினைகளால் சாக்கியம், சொப்பனம், சுழுத்தி என்னும் அவஸ்தகளில், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் இவைகளினாலே, மெய்ம் வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்களினாலும்; வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்களாலும் அறிந்தும், அறியாமலும் என்னாற் சய்யப்பட்ட புத்திபூர்வமாக விளங்குகின்ற பிரமஹத்தி கட்குடி, பொற்களவு முதலிய மகாபாதஙகங்களும் உபபாதங்களும்;


அறியாமையினால் ஒருதரம் செய்யப்பட்டவையும், அறிந்து ஒருமுறை செய்யப்பட்டவையும், அறிந்தும் அறியாமலும் ஒருமுறை செய்யப்பட்டவையும்,மிகப்பயின்று செய்யப்பட்டவையும், இடையீடின்றிப் பயிற்சியாகாக்ச் செய்யப்பட்டவையும், நெடுங்காலம் பயிலப்பட்டவையும், ஒன்பதும் ஒன்பது வகையும், பலவும் பலவையும் ஆகிய எல்லப் பாவங்களையும்;


உடனே தீர்த்தற்பொருட்டு ரத்னாகரம், மஹோததி ஆகிய இரு சமுத்திரங்களுக்கு நடுவே கந்தமான பர்வதத்திலே பாஸ்கரக்ஷேத்திரத்திலே காசி விஸ்வேஸ்வரர் ராமநாதர் சேதுமாதவர் காலபைரவ்ர் சீதா ல்க்ஷ்மண பரத சத்துருக்ன ஹனுமாரோடு கூடிய ராமச்சந்திரர் என்பவர்களின் சந்நிதியில்;


சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சந்நிதியில், ஹரிகரர் முதலிய பல தேவர்களின் சந்நிதியில், தவப்பிராமணர்கள் சந்நிதியில்;


இயன்ற நியமஙத்தோடும் இயன்ற வகையில் இயன்ற டிரவியங்களோடு தர்மசாஸ்திரங்களிற் சொல்லியபடி சபையினரை வழிபடுதலை முன்னிட்டு அச் சபையாருபதேசித்தபடி சர்வ பாபப் பிராயச்சித்தமாக சர்வ பாபங்களும் ஒழியும் பொருட்டு ஸ்ரீராமதனுஷ்கோடிஸ்நானத்தை (பொருத்தமான கிரியையை கூறவேண்டும்) நான் செய்கிறேன்.


இந்த சங்கற்பத்தில் மிகப்பல விடயங்கள் பற்றி நாம் மனங்கொள்ளலாம்.

1.    நாம் ஆலயங்களைலே கிரியைகள் ஆற்றத் தொடங்கும்போது திரிகரணங்களாலும் இறைவனை நாடி அவனையே சிந்தித்து மன ஒருமைப்பாடு கொண்டு அதன்பின் இச்செயலை நான் செய்து முடிப்பேன் என்று உறுதிகூறி சங்கல்பப் செய்வதன் அவசியம் புரிந்து கொள்ளப்படுவது.


2.    அந்த சங்கல்பத்திலே என்ன கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.


3.    அங்கு பயன்படுத்தப்படும் சொற்செட்டான வார்த்தைப் பிரயோகங்களும் அழ்கான அடுக்கு மொழிகளும் அற்புதமான கற்பனை வளமும் சுவைத்து இன்புறத்தக்கன.


4.    புவியியல் ரீதியாக, உலக அமைப்பும் அதன் உட்பிரிவுகளும்சொல்லப்படும் முறை வியப்போடு உற்றுநோக்கத்தக்கவை. அதுமட்டுமன்றிப் புராண இதிக்ஹாசங்களிற் சொல்லப்பட்ட இத்தகைய விடயங்களையும் புவியியல், விஞ்ஞான, வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்தல்.


5.    காலம் பற்றிய சிந்தனை எவ்வாறு நம் முன்னோர்கள் உள்ளத்தில் தெளிவுபடுதப்பட்டிருந்தது என்பதை அறிவதோடுபருவகாலங்கள், அதன் உட்பிரிவுகள் இவைபற்றிய விரிவான சிந்தனைகள் அவதானிக்கத்தக்கவை.


6.    இவற்றோடு தத்துவார்த்தமான இன்னொரு சிந்தனையும் நமது உள்ளத்தில் துளிர்விடவேண்டும். நாம் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறோம். அந்தக் கிராமத்தின் பெயரையும் விரிவான சங்கல்பங்களின்போது சொல்கிறோம். அந்தக்கிராமத்தை அடுத்த நகரம், மாகாணம், நாடு, கண்டம் என விரிந்து கொண்டு போகின்ற இந்தப் பிரபஞ்சம் எனும் பெரும் அண்டத்தை இங்கு நாம் மனக்கண்ணீற் காண முடிகிறது. நாம் இந்தப் பேரண்டத்தின் ஒரு துளியில் நிற்கின்றோம் என எண்ணி நமது சிறுமையையும் ஆண்டவனின் பெருமையையும் கருதவேண்டும். இதேபோல் நமது வாழ்நாள் ஆகக்கூடியது நூறு ஆண்டுகள். இந்தச் சங்கல்பத்திலே சொல்லப்படுகின்ற காலக்கணக்குகள் – யுக யுகாந்திரமாக இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் ஆண்டவனின் மகத்துவம்தான் என்னே என்ற வியப்பும் குறிப்பிடத்தக்கதன்றோ?

Tuesday, July 28, 2026

 ஸ்ரீ வைஷ்ணவத்தில் *வடகலை* மற்றும் *தென்கலை




ஸ்ரீ வைஷ்ணவத்தில் *வடகலை* மற்றும் *தென்கலை* என்பவை ராமானுஜருக்குப் பிறகு உருவான இரண்டு முக்கியப் பிரிவுகளாகும். இவை இரண்டும் பெருமாள் வழிபாடு, நாலாயிர திவ்யப்பிரபந்தம் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும், கோட்பாடுகள், வழிபாட்டு முறைகள் மற்றும் வெளிப்பாடுகளில் சில வித்தியாசங்களைக் கொண்டுள்ளன.

## 1. அடிப்படை அறிமுகம்

 * *வடகலை:* 'வடமொழி' (சமஸ்கிருதம்) வேதங்கள் மற்றும் உபநிடதங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பிரிவு. காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு பரவியது. இதன் முதன்மை ஆச்சரியார் *ஸ்ரீ வேதாந்த தேசிகர்*.

 * *தென்கலை:* 'தமிழ்' ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்த பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பிரிவு. ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு பரவியது. இதன் முதன்மை ஆச்சரியார் *ஸ்ரீ மணவாள மாமுனிகள்*.

## 2. முக்கிய வேறுபாடுகள்

| வேறுபாடு | வடகலை (Vadakalai) | தென்கலை (Thenkalai) |

|---|---|---|

| *திருமண் (நாமம்)* | *'U' வடிவம்:* மூக்கின் மேல் பகுதி வரை மட்டும் வெள்ளை நிறத் திருமண் இடப்படும். | *'Y' வடிவம்:* மூக்கின் தண்டு வரை இறங்கி வரும் வகையில் திருமண் இடப்படும். |

| *சரணாகதித் தத்துவம்* | *மர்க்கட நியாயம் (குரங்குக்குட்டி தத்துவம்):* தாய் குரங்கை எப்படிக் குட்டி இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறதோ, அதுபோல பக்தனும் தன் முயற்சியால் இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். | *மார்ஜார நியாயம் (பூனைக்குட்டி தத்துவம்):* பூனை தன் குட்டியைத் தானே கவ்வி எடுத்துச்செல்வது போல, இறைவன் தன் அருளால் பக்தனைக் காப்பார்; பக்தனின் முயற்சி தேவையில்லை. |

| *பிராட்டி (லட்சுமி) நிலை* | மகாலட்சுமியும் இறைவனுக்கு நிகரான தெய்வமாகவே கருதப்படுகிறார். மோட்சம் அளிக்கும் வல்லமை பெற்றவர். | மகாலட்சுமி இறைவனுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையே பரிந்துரை செய்யும் 'புருஷகாரம்' (மத்தியஸ்தர்) மட்டுமே. |

| *மொழி முன்னுரிமை* | வடமொழி வேதங்களுக்கும் தமிழ் திவ்யப்பிரபந்தங்களுக்கும் சமமான முக்கியத்துவம். | தமிழ் திவ்யப்பிரபந்தத்திற்கே முதன்மை முக்கியத்துவம். |

> *முக்கியக் குறிப்பு:* இந்த இரு பிரிவுகளுக்கும் இடையே தத்துவ விளக்கங்களிலும் வெளிப்பாடுகளிலும் மட்டுமே வேறுபாடுகள் உள்ளனவே தவிர, *ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள்* என்பதிலும், ஆழ்வார்கள்-ஆச்சாரியார்கள் மீதான பக்தியிலும் இரு பிரிவினருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை

 

 *ஸ்மார்த்தம், **சைவம்*



*ஸ்மார்த்தம், **சைவம்* ஆகிய இரண்டுமே இந்து மதத்தின் முக்கியமான பிரிவுகளாக இருந்தாலும், அவற்றின் தத்துவம், வழிபாடு மற்றும் வழிபாட்டு முறைகளில் சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.

அவற்றுக்கிடையே உள்ள முக்கிய வேறுபாடுகளை கீழே உள்ள அட்டவணை மற்றும் விளக்கங்கள் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்:

## 1. முதன்மைத் தெய்வம் (Primary Deity)

 * *சைவம் (Shaivism):* *சிவபெருமானை மட்டுமே* முழுமுதற் கடவுளாகவும், பரம்பொருளாகவும் வழிபடுகிறது. மற்ற தெய்வங்கள் சிவனுக்குக் கட்டுப்பட்டவர்களாகவோ அல்லது அவரின் அம்சங்களாகவோ கருதப்படுகிறார்கள்.

 * *ஸ்மார்த்தம் (Smartism):* *ஷண்மத வழிபாடு* (ஆறு தெய்வ வழிபாடு) முறையைப் பின்பற்றுகிறது. சிவபெருமான், விஷ்ணு, அம்பிகை (சக்தி), விநாயகர், முருகன், சூரியன் ஆகிய ஆறு தெய்வங்களையும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறான வடிவங்களாகக் கருதிச் சமமாக வழிபடுகிறது.

## 2. தத்துவப் பிரிவு (Philosophy)

 * *சைவம்:* பெரும்பாலும் *சைவ சித்தாந்தம்* (அல்லது காஷ்மீர சைவம்) போன்ற தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது.

   * இதில் *பதி* (இறைவன்), *பசு* (ஆன்மா), *பாசம்* (மலங்கள்/பந்தம்) ஆகிய மூன்றும் என்றும் நிலையானவை. ஆன்மா இறைவனை அடைந்து இன்புறுமே தவிர, முற்றிலும் இறைவனாகவே மாறிவிடாது என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

 * *ஸ்மார்த்தம்:* ஆதிசங்கரரால் பரப்பப்பட்ட *அத்வைத வேதாந்தம்* (Advaita Vedanta) தத்துவத்தைப் பின்பற்றுகிறது.

   * இதன் கூற்றுப்படி, *"பிரம்மம் ஒன்றே உண்மை; உலகம் ஒரு மாயை"* (Jiva = Brahman). ஆன்மாவும் (ஜீவாத்மா) இறைவனும் (பரமாத்மா) அடிப்படையில் ஒன்றுதான்; அறியாமையால் மட்டுமே இரண்டும் வேறாகத் தெரிகின்றன.

*ஸ்மார்த்தம், **சைவம்* ஆகிய இரண்டுமே இந்து மதத்தின் முக்கியமான பிரிவுகளாக இருந்தாலும், அவற்றின் தத்துவம், வழிபாடு மற்றும் வழிபாட்டு முறைகளில் சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.

அவற்றுக்கிடையே உள்ள முக்கிய வேறுபாடுகளை கீழே உள்ள அட்டவணை மற்றும் விளக்கங்கள் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்:

## 1. முதன்மைத் தெய்வம் (Primary Deity)

 * *சைவம் (Shaivism):* *சிவபெருமானை மட்டுமே* முழுமுதற் கடவுளாகவும், பரம்பொருளாகவும் வழிபடுகிறது. மற்ற தெய்வங்கள் சிவனுக்குக் கட்டுப்பட்டவர்களாகவோ அல்லது அவரின் அம்சங்களாகவோ கருதப்படுகிறார்கள்.

 * *ஸ்மார்த்தம் (Smartism):* *ஷண்மத வழிபாடு* (ஆறு தெய்வ வழிபாடு) முறையைப் பின்பற்றுகிறது. சிவபெருமான், விஷ்ணு, அம்பிகை (சக்தி), விநாயகர், முருகன், சூரியன் ஆகிய ஆறு தெய்வங்களையும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறான வடிவங்களாகக் கருதிச் சமமாக வழிபடுகிறது.

## 2. தத்துவப் பிரிவு (Philosophy)

 * *சைவம்:* பெரும்பாலும் *சைவ சித்தாந்தம்* (அல்லது காஷ்மீர சைவம்) போன்ற தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது.

   * இதில் *பதி* (இறைவன்), *பசு* (ஆன்மா), *பாசம்* (மலங்கள்/பந்தம்) ஆகிய மூன்றும் என்றும் நிலையானவை. ஆன்மா இறைவனை அடைந்து இன்புறுமே தவிர, முற்றிலும் இறைவனாகவே மாறிவிடாது என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

 * *ஸ்மார்த்தம்:* ஆதிசங்கரரால் பரப்பப்பட்ட *அத்வைத வேதாந்தம்* (Advaita Vedanta) தத்துவத்தைப் பின்பற்றுகிறது.

   * இதன் கூற்றுப்படி, *"பிரம்மம் ஒன்றே உண்மை; உலகம் ஒரு மாயை"* (Jiva = Brahman). ஆன்மாவும் (ஜீவாத்மா) இறைவனும் (பரமாத்மா) அடிப்படையில் ஒன்றுதான்; அறியாமையால் மட்டுமே இரண்டும் வேறாகத் தெரிகின்றன.

## 3. புனித நூல்கள் (Sacred Texts)

 * *சைவம்:* வேதங்களுடன் சேர்த்து, *28 ஆகமங்கள்* மற்றும் பன்னிரு திருமுறைகள் (தேவாரம், திருவாசகம் போன்றவை), பெரியபுராணம் மற்றும் சைவ சித்தாந்த சாஸ்திரங்களை முதன்மையாகக் கொள்கிறது.

 * *ஸ்மார்த்தம்:* *வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் ஸ்மிருதிகள்* (மனுஸ்மிருதி, பகவத் கீதை, இதிகாசங்கள்) ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ('ஸ்மிருதி'களைப் பின்பற்றுபவர்களே 'ஸ்மார்த்தர்கள்' எனப்படுகின்றனர்).

## 4. முக்கிய வேறுபாடுகளின் தொகுப்பு

| அம்சம் | சைவம் (Shaivism) | ஸ்மார்த்தம் (Smartism) |

|---|---|---|

| *முதன்மைக் கடவுள்* | சிவபெருமான் மட்டுமே | ஆறு தெய்வங்களும் சமமானவர்களே (பஞ்சாயதன/ஷண்மத பூஜை) |

| *அடிப்படைத் தத்துவம்* | சைவ சித்தாந்தம் (பதி-பசு-பாசம்) | அத்வைதம் (ஆன்மாவும் பிரம்மமும் ஒன்றே) |

| *முக்கிய நூல்கள்* | சிவ ஆகமங்கள், திருமுறைகள் | வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் |

| *இறைவனின் வடிவம்* | சிவனுக்கு உருவமும் (லிங்கம்/நடராஜர்), அருவுருவமும் உண்டு | இறைவன் உருவமற்றவர்; வழிபாட்டிற்காக உருவங்கள் கொள்ளப்படுகிறார் |

> *சுருக்கமாகச் சொன்னால்:*

> சிவனை மட்டுமே பரம்பொருளாகக் கொண்டு, ஆகம வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவது *சைவம்*.

> அனைத்து தெய்வங்களையும் ஒரே பரம்பொருளின் வடிவங்களாகப் பார்த்து, அத்வைதத் தத்துவத்தின்படி வாழ்வது *ஸ்மார்த்தம்*.

Monday, July 27, 2026

 *‘லக்ஷ்மி’ (Lakshmi)* என்ற சமஸ்கிருதச் சொல்லிற்கு பல நற்குணங்கள் மற்றும் மேன்மையான பொருள்கள் உள்ளன.

பிரதானமாக, இச்சொல் *‘லக்ஷ்யா’ (Lakshya)* என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது. அதற்கு *“குறிக்கோள்”* அல்லது *“இலக்கு”* என்று பொருள்.

### முதன்மைப் பொருள்கள்:

 1. *செல்வம் மற்றும் வளம்:* நிதிச் செல்வம் மட்டுமல்லாது அறிவு, ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி, தானியம் போன்ற அனைத்து வகையான நல்வளங்களையும் குறிக்கும்.

 2. *அதிர்ஷ்டம் (Good Fortune):* நற்பேறு மற்றும் நல்வாய்ப்பைக் குறிக்கிறது.

 3. *அழகு மற்றும் மங்கலம்:* கண்கள் மற்றும் மனதைக் கவரும் பேரழகு, புனிதத்தன்மை (மங்கலம்) ஆகியவற்றைக் குறிக்கும்.

 4. *இலக்கு / நோக்கம்:* வாழ்க்கையின் சரியான இலக்கை அடைவதைக் குறிக்கும்.

> *இந்து ஆன்மீகத்தில்:*

> இந்து சமயத்தில், லக்ஷ்மி என்பவர் *செல்வம், அதிர்ஷ்டம், வளம் மற்றும் அழகின் பெண் தெய்வமாக* (மகாலக்ஷ்மி) போற்றப்படுகிறார். இவர் திருமாலின் (விஷ்ணு) தேவியாவார்



: *லட்சுமி* (Lakshmi / இலக்குமி) என்ற சொல்லுக்குப் பல ஆழமான அர்த்தங்களும் பொன்னான கருத்துகளும் உண்டு.

### 1. சொற்பொருள் (Word Meaning)

 * *இலட்சியம் / குறிக்கோள்:* சமஸ்கிருதத்தில் 'லக்ஷ்' (Laksh) என்ற வேர்ச்சொல்லில் இருந்து லட்சுமி என்ற பெயர் வந்தது. இதன் பொருள் *"குறிக்கோள்"* (Goal) அல்லது *"இலக்கு"* என்பதாகும். வாழ்க்கையின் உயரிய இலக்குகளை அடையச் செய்பவள் என்பது இதன்கருத்து.

 * *லட்சணம்:* தமிழ் மற்றும் வடமொழியில் 'லட்சணம்' பொருந்தியவள் — அதாவது *அழகு, மங்கலம், நற்குணங்கள், நேர்த்தி* நிறைந்தவள் என்று பொருள்.

### 2. முதன்மை அர்த்தங்கள்

 1. *செல்வம் & வளம்:* பொருள் செல்வம் மட்டும் அல்லாது கல்வி, தைரியம், வெற்றி, ஆரோக்கியம், நன்மக்கள் பேறு போன்ற அனைத்து விதமான வளங்களையும் குறிக்கும்.

 2. *மங்கலம் (Auspiciousness):* நன்மைகள், சுபகாரியங்கள் மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறாள்.

 3. *திருமகள் (Goddess Lakshmi):* இந்து சமயத்தில் திருமாலின் (விஷ்ணு) தேவியாகவும், அகில உலகிற்கும் நன்மைகளை அள்ளித்தரும் தாயாகவும் போற்றப்படுகிறாள்.

> *சுருக்கமாக:*

> 'லட்சுமி' என்றால் வெறுமனே பணத்தைக் குறிப்பது மட்டும் அல்ல; *நற்குணம், சுபிட்சம், அழகு, மற்றும் தெளிவான இலக்கு (Goal)* ஆகிய அனைத்தின் சேர்க்கையே லட்சுமி என்பதாகும்.

 *‘லக்ஷ்மி’ (Lakshmi)* என்ற சமஸ்கிருதச் சொல்லிற்கு பல நற்குணங்கள் மற்றும் மேன்மையான பொருள்கள் உள்ளன.

பிரதானமாக, இச்சொல் *‘லக்ஷ்யா’ (Lakshya)* என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது. அதற்கு *“குறிக்கோள்”* அல்லது *“இலக்கு”* என்று பொருள்.

### முதன்மைப் பொருள்கள்:

 1. *செல்வம் மற்றும் வளம்:* நிதிச் செல்வம் மட்டுமல்லாது அறிவு, ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி, தானியம் போன்ற அனைத்து வகையான நல்வளங்களையும் குறிக்கும்.

 2. *அதிர்ஷ்டம் (Good Fortune):* நற்பேறு மற்றும் நல்வாய்ப்பைக் குறிக்கிறது.

 3. *அழகு மற்றும் மங்கலம்:* கண்கள் மற்றும் மனதைக் கவரும் பேரழகு, புனிதத்தன்மை (மங்கலம்) ஆகியவற்றைக் குறிக்கும்.

 4. *இலக்கு / நோக்கம்:* வாழ்க்கையின் சரியான இலக்கை அடைவதைக் குறிக்கும்.

> *இந்து ஆன்மீகத்தில்:*

> இந்து சமயத்தில், லக்ஷ்மி என்பவர் *செல்வம், அதிர்ஷ்டம், வளம் மற்றும் அழகின் பெண் தெய்வமாக* (மகாலக்ஷ்மி) போற்றப்படுகிறார். இவர் திருமாலின் (விஷ்ணு) தேவியாவார்



*பூச்சொரியல்* (பூச்சொரிதல்) என்பது




 *பூச்சொரியல்* (பூச்சொரிதல்) என்பது தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கோயில்களில் நடைபெறும் ஒரு முக்கியமான திருவிழா நிகழ்வாகும்.

இறைவனுக்கு அல்லது இறைவிக்கு (அம்மனுக்கு) பலவிதமான நறுமணம் மிக்க மலர்களைப் பொழிந்து (சொரிந்து) வழிபாடு செய்வதே *பூச்சொரிதல்* எனப்படும்.

### பூச்சொரியல் திருவிழாவின் சிறப்பம்சங்கள்:

 * *அம்மன் வழிபாடு:* இந்த விழா முக்கியமாக மாரியம்மன், செல்லியம்மன் போன்ற அம்மன் கோயில்களில் வசந்த காலத்திலும் (சித்திரை, வைகாசி மாதங்களில்) மற்றும் வெயில் காலத்திலும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

 * *நேர்த்திக்கடன் & பிரார்த்தனை:* பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தவும், நோய்களிலிருந்து விடுபடவும், உலக நன்மைக்காகவும் கூடைகளில் பல வகையான பூக்களை ஏந்தி வந்து அம்மன் சிலைக்கு சொரிந்து வழிபடுவார்கள்.

 * *குளிர்ச்சி தரும் வழிபாடு:* வெயில் காலத்தில் அம்மனின் உக்கிரத்தைக் தணித்து, அவளைக் குளிர்ப்பிப்பதற்காக இந்தப் பூச்சொரிதல் நடத்தப்படுவதாக ஐதீகம்.

### புகழ்பெற்ற பூச்சொரிதல் விழாக்கள்:

தமிழ்நாட்டில் *சமயபுரம் மாரியம்மன் கோவில்* பூச்சொரிதல் விழா உலகப்புகழ்பெற்றது. இது தவிர, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், புன்ன his நல்லூர் மாரியம்மன் கோவில் போன்ற பல தளங்களிலும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறும்.

சுருக்கமாகச் சொன்னால், பூச்சொரியல் என்பது *"மலர்களால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபடும் ஒரு பக்திப் பெருவிழா"* ஆகும்

 தமிழ் கலாச்சாரத்தில் *காமாட்சி விளக்கு* மற்றும் *குத்துவிளக்கு*


தமிழ் கலாச்சாரத்தில் *காமாட்சி விளக்கு* மற்றும் *குத்துவிளக்கு* ஆகிய இரண்டுமே பூஜைக்கும் மங்கள நிகழ்வுகளுக்கும் மிக முக்கியமானவை. எனினும், இரண்டிற்கும் தனித்துவமான சிறப்புகளும் வேறுபாடுகளும் உண்டு.

## 1. காமாட்சி விளக்கு

காமாட்சி அம்மனின் சொரூபமாகவே இந்த விளக்கு பார்க்கப்படுகிறது. வீட்டில் எப்போதும் நிலைத்திருக்க வேண்டிய முக்கிய விளக்கு இதுவாகும்.

### சிறப்புகள்:

 * *அம்பிகையின் அருள்:* விளக்கில் காமாட்சி அம்மனின் உருவமும் (சில சமயங்களில் லக்ஷ்மி அல்லது கஜலக்ஷ்மி), அவருக்கு இருபுறமும் யானைகள் அல்லது பூக்கள் செதுக்கப்பட்டிருக்கும்.

 * *குலதெய்வ அருள்:* காமாட்சி விளக்கை ஏற்றி வழிபடுவது குலதெய்வத்தையும், அனைத்து தேவதைகளையும் ஒரே நேரத்தில் வழிபடுவதற்குச் சமம் என்பது நம்பிக்கை.

 * *மங்களம் & பரம்பரை:* திருமணத்தின் போது மணப்பெண்ணுக்குத் தாய் வீட்டிலிருந்து கொடுக்கப்படும் மிக முக்கியமான மங்களப் பொருள் இது. தலைமுறை தலைமுறையாக இது வீட்டில் பராமரிக்கப்படும்.

### பயன்பாடு:

 * ஒரே ஒரு முகத்தைக் கொண்ட இந்த விளக்கை எப்போதும் *கிழக்கு நோக்கி* மட்டுமே ஏற்ற வேண்டும்.

 * வீட்டின் பூஜை அறையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டு தினமும் ஏற்றப்படும்.

## 2. குத்துவிளக்கு

குத்துவிளக்கு என்பது இறைவனின் முப்பெரும் தேவிகளின் (மும்தேவிகள்) தத்துவத்தை உணர்த்தும் ஒரு வடிவம்.

### சிறப்புகள்:

 * *மும்மூர்த்தி / மும்தேவிகள் தத்துவம்:*

   * *அடிப்பகுதி (பீடம்):* பிரம்மா (சரஸ்வதி)

   * *நடுப்பகுதி (தண்டு):* விஷ்ணு (லக்ஷ்மி)

   * *மேற்பகுதி (அகல்/சுடர்):* சிவன் (பார்வதி)

 * *அஷ்டலக்ஷ்மி கடாட்சம்:* குத்துவிளக்கின் ஐந்து முகங்கள் அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை ஆகியவற்றைக் குறிக்கின்றன.

### பயன்பாடு:

 * ஒன்றுக்கு மேற்பட்ட முகங்களைக் (பொதுவாக 5 முகங்கள்) கொண்டது.

 * பூஜை அறைகள், திருமணங்கள், வீடுகளின் முகப்பு, மற்றும் அனைத்து சுபநிகழ்ச்சிகளிலும் ஏற்றப்படும்.

## காமாட்சி விளக்கு vs குத்துவிளக்கு: முக்கிய வேறுபாடுகள்

| அம்சம் | காமாட்சி விளக்கு | குத்துவிளக்கு |

|---|---|---|

| *உருவம்* | பீடமும், பின்புறம் காமாட்சி அம்மன் அல்லது லக்ஷ்மியின் உருவமும் இருக்கும். | நீண்ட தண்டும், மேலே 5 முகங்கள் கொண்ட அகலும் இருக்கும். |

| *திரி / முகங்கள்* | ஒரே ஒரு திரி (ஒரு முகம்) மட்டுமே இடப்படும். | 1, 2, அல்லது 5 முகங்களில் திரியிட்டு ஏற்றலாம். |

| *திசை* | பெரும்பாலும் *கிழக்கு* நோக்கி மட்டுமே ஏற்றப்படும். | தேவைக்கேற்ப பல்வேறு திசைகளில் (கிழக்கு, மேற்கு, வடக்கு) ஏற்றலாம். |

| *இடம்* | பூஜை அறையில் ஒரே இடத்தில் நிலையாக வைக்கப்படும். | சுப நிகழ்ச்சிகள், நுழைவாயில், விழா மேடைகள் என தேவைப்படும் இடங்களுக்கு நகர்த்தலாம். |

| *தத்துவம்* | பெண் தெய்வம் / குலதெய்வத்தின் நேரடி வடிவம். | மும்மூர்த்திகள் மற்றும் மும்தேவிகளின் கூட்டு வடிவம். |

> *முக்கியக் குறிப்பு:* பூஜை அறையில் காமாட்சி விளக்கை ஏற்றி வைத்து விட்டு, அதன் இருபுறமும் குத்துவிளக்குகளை ஏற்றி வைப்பது வீட்டில் அளப்பரிய லக்ஷ்மி கடாட்சத்தையும், அமைதியையும் தரும் என்பது ஐதீகம்.

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களிலும், வீடுகளிலும்‘ஆடி கூழ்’* காய்ச்சி ஊற்றுவது




 ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களிலும், வீடுகளிலும் வேப்பிலை மாலை கட்டி *‘ஆடி கூழ்’* காய்ச்சி ஊற்றுவது தமிழகத்தில் மிக முக்கிய பாரம்பரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணியில் ஆன்மீக மற்றும் அறிவியல் ரீதியான பல சுவாரஸ்யமான காரணங்கள் உள்ளன:

### 1. ஆன்மீகக் காரணம்

 * *அம்மனின் குளிர்ச்சி:* ஆடி மாதம் கோடை காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் இடைப்பட்ட காலம். இந்த காலத்தில் அன்னை பராசக்தி (மாரியம்மன்) பூமிக்கு வந்து மக்களைக் காப்பதாக நம்பிக்கை. அம்மனின் வெப்பத்தைத் தணித்து, அவளைக் குளிர்விப்பதற்காக தானியங்களால் செய்யப்பட்ட கூழ் படைக்கப்படுகிறது.

 * *பசிப்பிணி போக்குதல்:* எளிய மக்களும் பசியின்றி இருக்க வேண்டும் என்பதற்காக, ஊர் மக்கள் அனைவரும் தானியங்களை ஒன்றாகச் சேர்த்து, கூழ் காய்ச்சி ஏழை எளியவர்களுக்கு ‘அன்னதானமாக’ வழங்கும் வழக்கம் உருவானது.

### 2. அறிவியல் மற்றும் ஆரோக்கியக் காரணம்

> *"உணவே மருந்து"* என்ற பழமொழிக்கு மிகச்சிறந்த உதாரணம் ஆடி கூழ்.

 * *நோய் எதிர்ப்பு சக்தி:* ஆடி மாதத்தில் பருவநிலை மாறுபடுவதால் அம்மை நோய், காய்ச்சல், வயிற்று உபாதைகள் மற்றும் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகம்.

 * *தானியங்களின் சக்தி:* கூழ் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் *கேழ்வரகு (ராகி)* மற்றும் *கம்பு* ஆகியவை உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்; செரிமான மண்டலத்தைச் சீராக்கும்.

 * *மூலிகைகளின் பங்கு:* கூழுடன் சேர்க்கப்படும் சின்ன வெங்காயம், மோர் மற்றும் துணையாக வைக்கப்படும் வேப்பிலை ஆகியவை இயற்கையான *‘ஆண்டிபயாடிக்’ (Antibiotic)* ஆகச் செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

### 3. சமூகக் காரணம்

கூழ் ஊற்றுவது என்பது தனிநபர் சார்ந்த வழிபாடு மட்டுமல்ல; அது ஒரு *சமுதாய திருவிழா*. ஊர் மக்கள் அனைவரும் வேறுபாடின்றி ஒன்று கூடி, கூழ் காய்ச்சி பகிர்ந்து உண்பதன் மூலம் மக்களிடையே ஒற்றுமையும், சகோதரத்துவமும் வளர்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், *ஆடி கூழ் வார்க்கும் பழக்கம் என்பது இறை வழிபாட்டோடு சேர்த்து, நமது முன்னோர்கள் உடலையும் சமூகத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உருவாக்கிய ஒரு அறிவியல் பூர்வமான பாரம்பரியம் ஆகும்!

 அம்மனுக்கு வேப்பஞ்சேலை சாற்றுவதன் பின்னணி என்ன?


ஆடி மாதம் தொடங்கியவுடன் தமிழகம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோயில்கள் பக்தர்களின் கூட்டத்தால் களைகட்டுகின்றன. வேப்பஞ்சேலை சாற்றுதல், கூழ் வார்த்தல், பானகம் படைத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்கள் இந்த மாதத்தில் சிறப்பாக நடைபெறுகின்றன. இவ்வழக்கங்களுக்குப் பின்னால் ஆழமான புராண வரலாறும், ஆன்மிகப் பொருளும் மறைந்துள்ளன.


பிருகு குலத்தைச் சேர்ந்த மகா முனிவரான ஜமதக்கினி முனிவர் தனது மனைவி ரேணுகாதேவியுடன் அறநெறி வழியில் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு தன்னுவன், அனுவன், விஸ்வாவசு மற்றும் பரசுராமன் என நான்கு மகன்கள் இருந்தனர்.


அமைதியாகச் சென்றுகொண்டிருந்த அந்த இல்லற வாழ்வில் எதிர்பாராத சோகம் நிகழ்ந்தது. ஜமதக்கினி முனிவருடன் ஏற்பட்ட பகையின் காரணமாக, கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள் முனிவரைக் கொன்று விட்டனர். கணவரின் மறைவைத் தாங்க முடியாத ரேணுகாதேவி, அவருடன் உயிர்துறக்க முடிவு செய்து எரியும் சிதையில் குதித்தார்.


அந்த வேளையில் தேவேந்திரன், வருண பகவானை வேண்டி மழை பொழியச் செய்தார். தீ அணைந்தாலும், அதற்குள் ரேணுகாதேவியின் ஆடைகள் முழுவதும் எரிந்து போயின. உடல் முழுவதும் தீக்கொப்புளங்கள் தோன்றின.


அந்த நிலையிலிருந்து தன்னை மறைத்துக் கொள்ள, அருகிலிருந்த வேப்பிலைகளை ஆடையாக அணிந்து கொண்டார். இதுவே இன்று வரை மாரியம்மனுக்கு வேப்பஞ்சேலை சாற்றும் வழக்கத்தின் அடிப்படையாகக் கருதப்படுகிறது.


பின்னர், பசியால் வாடிய ரேணுகாதேவி அருகிலிருந்த மக்களிடம் உணவு கேட்டார். அவர்கள், "நீங்கள் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்; எங்கள் உணவை உங்களுக்கு வழங்குவது முறையல்ல" என்று பணிவுடன் கூறி, அதற்கு பதிலாக வெல்லம், இளநீர், பச்சரிசி மாவு, பானகம் ஆகியவற்றை சமர்ப்பித்தனர். அவற்றை உண்டு ரேணுகாதேவி தனது பசியைத் தீர்த்துக் கொண்டார்.


இந்த நிகழ்வை நினைவுகூர்ந்தே இன்றும் மாரியம்மன் கோயில்களில் பச்சரிசி மாவு, வெல்லம், பானகம், கூழ் போன்றவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.


அதன்பிறகு, சலவைத் தொழிலாளர்கள் வாழ்ந்த பகுதிக்குச் சென்ற ரேணுகாதேவி, அவர்கள் வழங்கிய ஆடையை அணிந்தார். இருப்பினும், கணவரை இழந்த துயரத்திலிருந்து அவரால் மீள முடியவில்லை. அவர் கண்ணீர் மல்க நின்றபோது, தேவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். அப்போது சிவபெருமானும் அருள்காட்சி அளித்தார்.


அவர் ரேணுகாதேவியிடம்,


"நீ ஆதிபராசக்தியின் அம்சமாக பூமியில் விளங்குவாய். மக்களை நோய்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றும் சக்தி உனக்குக் கிடைக்கும். உன் உடலில் தோன்றிய கொப்புளங்கள் உலக மக்களுக்கு அம்மை நோயாக வெளிப்படும். அதற்கான மருந்தாக நீ அணிந்த வேப்பிலை அமையும். மேலும், நீ உண்ட வெல்லம், இளநீர், பச்சரிசி மாவு, பானகம் ஆகியவற்றை மக்கள் உனக்கு நைவேத்தியமாகப் படைப்பார்கள். உன்னை மனமுருகி வழிபடுவோரின் துயரங்களை நீ போக்குவாய்."


என்று அருளாசி வழங்கி மறைந்தார்.


அதன் பின்னரே ரேணுகாதேவி "முத்துமாரியம்மன்" என்ற திருநாமத்தைப் பெற்றார். உடலில் முத்து போன்ற அம்மைக் கொப்புளங்களை நீக்கி அருள் புரியும் தாயாக அவர் போற்றப்படத் தொடங்கினார்.


இந்த தெய்வீக நிகழ்வு மழைக்காலம் தொடங்கும் ஆடி மாதத்தில் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதனால்தான் ஆடி மாதத்தில் மாரியம்மன் கோயில்களில் வேப்பஞ்சேலை சாற்றுதல், கூழ் வார்த்தல், பானகம் படைத்தல், அம்மனை வழிபடுதல் போன்ற வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.


வேப்பிலை என்பது ஒரு சாதாரண இலை மட்டுமல்ல; நோய்களை நீக்கும் இயற்கை மருந்து மட்டுமல்ல; முத்துமாரியம்மனின் கருணை, அருள், பாதுகாப்பு ஆகியவற்றின் அடையாளமாகவும் பக்தர்கள் கருதுகின்றனர். அதனாலேயே இன்றும் எண்ணற்ற பக்தர்கள் ஆடி மாதத்தில் வேப்பஞ்சேலை சாற்றி, அம்மனின் அருளைப் பெற்று வாழ்வில் நலமும் வளமும் பெறுகின்றனர்.

  அம்மன் ஆலயங்களில் , சூலத்தில்   எலுமிச்சம்பழத்தை குத்தி வைப்பதற்குப் பின்னணியில்  உள்ள காரணங்கள் :






அம்மன் ஆலயங்களில் வேல், சூலம் அல்லது வாலில் (உதாரணமாக, அனுமன் வாலில்) எலுமிச்சம்பழத்தை குத்தி வைப்பதற்குப் பின்னணியில் ஆன்மீக, அறிவியல் மற்றும் தத்துவார்த்தக் காரணங்கள் உள்ளன. அவை:

​1. எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்தல் (எதிர்மறை சக்தி உறிஞ்சி)

​ஆன்மீக நம்பிக்கைப்படி, எலுமிச்சம்பழத்திற்கு எதிர்மறை ஆற்றல்களை (Negative Energy), கண் திருஷ்டி மற்றும் தீய சக்திகளைத் தன்வயப்படுத்தி உறிஞ்சும் சக்தி உண்டு.

​சூலம்: சூலம் என்பது இச்சை, கிரியை, ஞானம் எனும் மூன்று சக்திகளின் வடிவம். இதில் எலுமிச்சை குத்தப்படும்போது, கோயிலுக்குள் வரும் பக்தர்களின் தீய எண்ணங்கள், பயம் மற்றும் திருஷ்டிகள் அம்மனின் சூலத்தால் அழிக்கப்பட்டு, எலுமிச்சம்பழத்தால் உறிஞ்சப்படுவதாக நம்பப்படுகிறது.

​2. 'வாசி' மற்றும் பிராண சக்தி (அறிவியல் & ஆன்மீகம்)

​எலுமிச்சம்பழத்தில் உள்ள அமிலத்தன்மையும் (Citric Acid), அதன் இயற்கை நறுமணமும் காற்றில் உள்ள கிருமிகளை அழித்து, சூழலைத் தூய்மைப்படுத்தும் திறன் கொண்டவை.

​தெய்வச் சிலைகள் மற்றும் ஆயுதங்கள் ஆற்றல் கடத்தியாக (Energy Conductors) செயல்படுகின்றன. சூலத்தின் கூர்மையான முனைகளில் பிராண சக்தி அடர்த்தியாக இருக்கும். எலுமிச்சம்பழம் அந்த ஆற்றலைத் தக்கவைத்து, நீண்ட நேரம் சுற்றிலும் நேர்மறை அதிர்வுகளைப் பரப்ப உதவுகிறது.

​3. சாந்தப்படுத்துதல் (உக்கிரத்தைக் குறைத்தல்)

​அம்மன் சிலைகளுக்கோ அல்லது சூலத்திற்கோ ஆவாஹனம் செய்யப்படும் தெய்வ சக்தி மிகவும் உக்கிரமானது (High Vibrational Energy).

​எலுமிச்சம்பழத்திற்கு 'குளிர்ச்சி' தரும் குணம் உண்டு. தெய்வத்தின் அல்லது ஆயுதங்களின் உக்கிரத்தைக் தணித்து, அதைச் சாந்தப்படுத்தி, பக்தர்களுக்கு அருள் புரியும் வண்ணம் மாற்றுவதற்காக எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது.

​4. பலி கொடுப்பதற்கு மாற்றாக (அஹிம்சை)

​பண்டைய காலத்தில் காளி மற்றும் துர்க்கை வழிபாடுகளில் விலங்குப் பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. பிற்காலத்தில் ஆன்மீகப் பெரியோர்களால் அஹிம்சை முறையைப் பரப்ப, விலங்குப் பலிக்கு மாற்றாக எலுமிச்சம்பழம் பலியிடும் முறை கொண்டுவரப்பட்டது.

​எலுமிச்சம்பழத்தைக் குத்துவது என்பது நமது அகந்தையை (Ego) வெட்டிப் பலியிடுவதன் தத்துவார்த்தக் குறியீடாகும்.

​குறிப்பு: அனுமன் வாலில் எலுமிச்சை குத்தப்படுவது அல்லது மாலை அணிய வைக்கப்படுவதும் அவரது உக்கிரத்தைக் கட்டுப்படுத்தி, பக்தர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்கே ஆகும்.

​சுருக்கமாகச் சொன்னால், பக்தர்களின் தீமைகளை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் வழங்குவதற்கே இச்சடங்கு பின்பற்றப்படுகிறது.

Wednesday, July 22, 2026

 ஸ்ரீ கணபதி தாளம் 




ஸ்ரீ கணபதி தாளம் என்பது விநாயகப் பெருமானைப் போற்றிப் பாடும் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அழகான ஒரு தாள லய ஸ்லோகமாகும். இது விநாயகரின் வடிவத்தையும், அவரின் நடனத்தையும் தாளக் கட்டுகளுடன் (Beats) விவரிக்கிறது.

​இந்த ஸ்லோகத்தின் சில முக்கியமான வரிகள் மற்றும் அதன் பொருள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

​ஶ்ரீ கணபதி தாளம் வரிகள் (Sri Ganapathi Thalam Lyrics):

​விகடோத்கடஸுந்தரதந்திமுகம் புஜகேந்த்ரஸுஸர்பகதாபரணம் |

கஜநீலகஜேந்த்ர கணாதிபதிம் ப்ரணதோஸ்மி விநாயக ஹஸ்திமுகம் || 1 ||

​ஸுர ஸுர கணபதி ஸுந்தரகேஶம் ருஷி ருஷி கணபதி யஜ்ஞஸமாநம் |

பவ பவ கணபதி பத்மஶரீரம் ஜய ஜய கணபதி திவ்யநமஸ்தே || 2 ||

​கஜமுகவக்த்ரம் கிரிஜாபுத்ரம் கணகுணமித்ரம் கணபதிமீஶப்ரியம் || 3 ||

​கரத்ருதபரஶும் கங்கணபாணிம் கபலிதபத்மருசிம் |

ஸுரபதிவந்த்யம் ஸுந்தரந்ருத்தம் ஸுரசிதமணிமகுடம் || 4 ||

​ப்ரணமத தேவம் ப்ரகடித தாலம் ஷட்கிரி தாலமிதம் |

தத்தத் ஷட்கிரி தாலமிதம் தத்தத் ஷட்கிரி தாலமிதம் || 5 ||

​(இசை மற்றும் மத்தளத் தாளக் கட்டுகள் தொடங்கும் பகுதி):

​கடதட விகளிதமதஜல ஜலதி- கணபதிவாத்யமிதம்

தத்தத் கணபதிவாத்யமிதம் ||

​தத்ததிம் நம் தரிகு தரிஜணகு குகு தத்தி குகு தகிட டிண்டிங்கு டிகுண குகு தத்தி

தத்த ஜம் ஜம் துரித...

​தகதகிட தகதகிட தகதகிட தத்தோம்

ஶஶிகலித ஶஶிகலித மௌலிநம் ஶூலிநம் |

தகதகிட தகதகிட தகதகிட தத்தோம்

விமலஶுபகமலஜலபாதுகம் பாணிநம் |

​தித்தகிட தித்தகிட தித்தகிட தத்தோம்

ப்ரணதகுரு ஶிவதநய கணபதி தாலநம் |

கணபதி தாலநம் கணபதி தாலநம் ||

​இதன் சிறப்பு மற்றும் பயன்கள்:

​தாள லயம்: இந்த ஸ்லோகம் வெறும் மந்திரமாக இல்லாமல், பரதநாட்டியம் அல்லது மிருதங்க வாசிப்பிற்கு ஏற்ற தாளக் கட்டுகளோடு (Rhythmic beats) அமைந்திருக்கும்.

​தடைகள் நீங்கும்: சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற நாட்களில் இந்த தாளப் பாடலைக் கேட்பதால் அல்லது பாடுவதால் நம் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.

​நேர்மறை ஆற்றல்: வீடுகளில் இதை ஒலிப்பதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் மறைந்து, சுபிட்சமும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது நம்பிக்கை.

  ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம்



ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம் (Devi Khadgamala Stotram) என்பது ஸ்ரீ வித்யை வழிபாட்டில் மிக முக்கியமானது. இது பராசக்தியின் ஸ்ரீ சக்ரNavavarna (ஒன்பது ஆவரணங்கள்) தேவதைகளை போற்றி துதிப்பதாகும்.

​இதனை தினமும் பாராயணம் செய்வதால் மன அமைதி, சகல சௌபாக்கியங்கள் மற்றும் அம்பிகையின் அருள் கிட்டும் என்பது நம்பிக்கை.

​அதன் சுருக்கமான, முதன்மையான துதி வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

​த்யானம்

​த்ருஸ்சந்தன ஜவாரித குங்குமார்த்தாம்,

மந்தார குந்த குஸுமைக்ருத சேகராந்தாம் |

தாராகிரேந்த்ர தனயாம் ஸஹசா ஸ்மராமி,

பாஸாங்குஸௌ தனுகஸான் தததீம் கராப்ஜைஹி ||

​மூல ஸ்துதி (துவக்கம்)

​ஓம் அஸ்ய ஸ்ரீ சுத்த சக்தி மாலா மஹா மந்த்ரஸ்ய, உபஸ்தேந்த்ரிய அதிஷ்டாயீ வரூணாதித்ய ரிஷயஹ, தேவீ காயத்ரீ சந்தஹ, ஸாத்விக ககார பட்டாரக பீடஸ்த காமேஸ்வரீ காமேஸ்வரா தேவதா...

​(இதன் முக்கிய ஆவரண தேவதைகளின் போற்றிகள் பின்வருமாறு அமையும்)

​ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் ஸௌஹ்:

​ஓம் நமஸ்த்ரிபுரஸுந்தரி |

​ஹ்ருதயதேவி, ஸிரோதேவி, ஸிகாconfigதேவி, கவசதேவி, நேத்ரதேவி, அஸ்த்ரதேவி |

​காமேஸ்வரி, பகமாலினி, நித்யக்லின்னே, பேருண்டே, வஹ்னிவாஸினி, மஹாவஜ்ரேஸ்வரி, ஸிவதூதி, த்வரிதே, குலஸுந்தரி, நித்யே, நீலபதாகே, விஜயே, ஸர்வமங்களே, ஜ்வாலாமாலினி, சித்ரே, மஹாநித்யே |

​பரமேஸ்வர பரமேஸ்வரி |

​மித்ரேஸமயி, ஷஷ்டீஸமயி, உட்டீஸமயி, சர்யநாதமயி |

​லோகமுத்ராமயி, அகஸ்த்யமயி, காலதாபனமயி, தர்மாசார்யமயி |

​முக்தகேஸீஸ்வரமயி, தீபகலாநாதமயி, விஷ்ணுதேவமயி, ப்ரபாகரதேவமயி, தேஜோதேவமயி, மநோஜதேவமயி, கல்யாணதேவமயி, வாஸுதேவமயி, ரத்னதேவமயி, ஸ்ரீராமானந்தமயி |

​ஸ்ரீ சக்ர ஆவரண தேவதைகள் (சுருக்கம்)

​ப்ரதமாவரணம் (முதல் சுற்று - த்ரைலோக்ய மோஹன சக்ரம்):

அணிமா, லகிமா, மஹிமா, ஈஸித்வ, வஸித்வ, ப்ராகாம்ய, புக்தி, இச்சா, ப்ராப்தி, ஸர்வகாம ஸித்திகள்.

​த்விதீயாவரணம் (இரண்டாம் சுற்று - ஸர்வாஸா பரிகூரக சக்ரம்):

காமாகர்ஷிணி, புbackgroundத்த்யாகர்ஷிணி, அஹங்காராகர்ஷிணி, ஸப்தாகர்ஷிணி, ஸ்பர்ஸாகர்ஷிணி, ரூபாகர்ஷிணி, ரஸாகர்ஷிணி, கந்தாகர்ஷிணி தேவதைகள்.

​த்ருதீயாவரணம் (மூன்றாம் சுற்று - ஸர்வ ஸம்க்ஷோபண சக்ரம்):

அநங்ககுஸுமா, அநங்கமேகலா, அநங்கமதநா, அநங்கமதநாதுரா தேவதைகள்.

​சதுர்த்தாவரணம் (நான்காம் சுற்று - ஸர்வ ஸௌபாக்ய தாயக சக்ரம்):

ஸர்வஸம்க்ஷோபிணி, ஸர்வவித்ராவிணி, ஸர்வாகர்ஷிணி, ஸர்வஹ்லாதினி தேவதைகள்.

​பஞ்சமாவரணம் (ஐந்தாம் சுற்று - ஸர்வார்த்த ஸாதக சக்ரம்):

ஸர்வஸித்திப்ரதா, ஸர்வஸம்பத்ப்ரதா, ஸர்வப்ரியங்கரி, ஸர்வமங்களகாரிணி தேவதைகள்.

​ஷஷ்டாவரணம் (ஆறாம் சுற்று - ஸர்வ ரக்ஷாகர சக்ரம்):

ஸர்வஜ்ஞா, ஸர்வஸக்தி, ஸர்வைஸ்வர்யப்ரதா, ஸர்வஜ்ஞாநமயி தேவதைகள்.

​ஸப்தமாவரணம் (ஏழாம் சுற்று - ஸர்வ ரோகஹர சக்ரம்):

வஸினி, காமேஸ்வரி, மோதினி, விமலா, அருணா, ஜயினி தேவதைகள்.

​அஷ்டமாவரணம் (எட்டாம் சுற்று - ஸர்வ ஸித்திப்ரத சக்ரம்):

பாஸினி, அங்குஸினி, மஹாஸரஸ்வதி, மஹாலக்ஷ்மி, மஹாசாளினி தேவதைகள்.

​நவமாவரணம் (ஒன்பதாம் சுற்று - ஸர்வாநந்தமய சக்ரம் - பிந்து ஸ்தானம்):

ஸ்ரீ ஸ்ரீ மஹாபட்டாரிகா, ஸர்வஸாம்ராஜ்யதாயினி, ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பரா பட்டாரிகா தேவி நமோ நமஹ!

​பலஸ்ருதி (பலன்கள்)

​ஏஷா வித்யா மஹாவித்யா ஸ்ரீவித்யா பின்களாமதா |

தஸ்மாத் க்ருஹ்யா ப்ரயத்னேன மாலா மந்த்ரமனுத்தமம் ||

​இந்த கட்கமாலா ஸ்தோத்திரத்தை முழுமையாகவோ அல்லது தினமும் ஒரு முறையாவது பாராயணம் செய்வது, ஸ்ரீ சக்ர நவாபரண பூஜை செய்த முழு பலனையும் தரவல்லது.

​குறிப்பு: கட்கமாலா ஸ்தோத்திரம் மிக நீண்ட மற்றும் சக்திவாய்ந்த மந்திர ஒலிகளைக் கொண்டது. இதன் முழு வடிவத்தை துல்லியமான சமஸ்கிருத/தமிழ் உச்சரிப்புடன் குருமுகமாகவோ அல்லது ஒலிவடிவக் கேட்டு பழகுவதோ மிகவும் சிறந்தது.

 தமிழர் பண்பாட்டிலும் ஆன்மீகத்திலும் திருவிழாக்களும் மகோற்சவங்களும் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றன. இவை வெறும் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல, அதற்கும் பின்னால் ஆழமான ஆன்மீக, சமூக, மற்றும் அறிவியல் காரணங்கள் உள்ளன.

​திருவிழாக்கள் மற்றும் மகோற்சவங்கள் நடத்தப்படுவதற்கான முக்கிய காரணங்கள் இதோ:

​1. ஆன்மீகக் காரணம் (இறைவனுடனான இணைப்பு)

​மன அமைதி: அன்றாட வாழ்க்கையின் ஓட்டப்பந்தயத்தில் இருந்து விடுபட்டு, இறை சிந்தனையில் மூழ்கி மன அமைதி பெற இவை உதவுகின்றன.

​அதிர்வுகள் மற்றும் ஆற்றல்: கோவில்களில் கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை பல சடங்குகள் பிரபஞ்ச ஆற்றலை (Cosmic Energy) ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. திருவிழாக் காலங்களில் வலம் வரும் சுவாமி சிலைகள் மூலமாக இந்த நேர்மறை ஆற்றல் ஊர் முழுவதும் பரவுகிறது என்பது நம்பிக்கை.

​2. சமூக ஒற்றுமை (Social Bonding)

​ஒன்று கூடுதல்: சாதி, மத, பொருளாதார வேறுபாடுகளைக் கடந்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணையும் ஒரு பொதுவான மேடையாக திருவிழாக்கள் அமைகின்றன.

​உறவுகள் பலப்படுதல்: வெளியூர்களில் வாழும் சொந்தங்கள், நண்பர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை இது வழங்குகிறது.

​3. கலை மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு

​பாரம்பரியக் கலைகள்: நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம், தெருக்கூத்து, கரகாட்டம், காவடியாட்டம் போன்ற பாரம்பரிய கலைகள் அழியாமல் இருப்பதற்கும், கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கும் திருவிழாக்கள் பெரிய ஆதரவாக இருக்கின்றன.

​கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை: தேரோட்டம் போன்ற நிகழ்வுகள் நம் முன்னோர்களின் மரவேலைப்பாடு மற்றும் பொறியியல் திறனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கின்றன.

​4. பொருளாதாரச் சுழற்சி (Economic Boost)

​திருவிழாக் காலங்களில் தற்காலிகக் கடைகள், பூக்கள், பழங்கள், இனிப்புகள், பொம்மைகள் விற்பனை அமோகமாக நடக்கும். இதனால் உள்ளூர் வியாபாரிகள், நெசவாளர்கள், மண்பாண்டக் கலைஞர்கள் எனப் பல தரப்பு மக்களின் பொருளாதாரம் உயர்கிறது.

​5. உளவியல் மற்றும் ஆரோக்கியக் காரணம்

​மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும்: திருவிழாக்களில் உள்ள வண்ணங்கள், விளக்குகள், மங்கள இசை மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் மனித மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களைச் சுரக்கச் செய்து, மன அழுத்தத்தைக் குறைக்கின்றன.

​தான தர்மம்: திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குவது முக்கிய அங்கமாகும். இது பசிப்பிணியைப் போக்குவதுடன், பகிர்ந்தளிக்கும் நற்பண்பை வளர்க்கிறது.

​சுருக்கமாகச் சொன்னால்: உடலுக்கு ஓய்வும், மனதிற்கு மகிழ்ச்சியும், ஆன்மாவிற்குப் புத்துணர்ச்சியும் தந்து, சமூகத்தை ஒற்றுமைப் பாதையில் வழிநடத்தவே நம் முன்னோர்கள் திருவிழாக்களையும் மகோற்சவங்களையும் உருவாக்கினார்கள்.

கணபதி ஹோமம்




 இந்து மத வழிபாடுகளில் மிக முக்கியமான மற்றும் முதன்மையான ஹோமங்களில் ஒன்று கணபதி ஹோமம் ஆகும். எந்த ஒரு புதிய செயலையும் தொடங்குவதற்கு முன்போ அல்லது வீட்டில் நற்காரியங்கள் நடக்கும்போதோ கணபதி ஹோமம் செய்வது வழக்கம்.

​இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் இதோ:

​1. விக்னங்களை (தடைகளை) நீக்க

​முழுமுதற் கடவுளான விநாயகர் "விக்னேஸ்வரன்" என்று அழைக்கப்படுகிறார். அதாவது தடைகளை நீக்குபவர் என்று பொருள். நாம் தொடங்கும் தொழில், திருமணம், புதுமனை புகுவிழா போன்ற எந்தவொரு காரியமும் எந்தவித தடங்கலும் இல்லாமல், சுமுகமாக நடந்து முடிவதற்காக விநாயகரை வேண்டி இந்த ஹோமம் செய்யப்படுகிறது.

​2. எதிர்மறை ஆற்றல்களை விரட்ட

​வீடு அல்லது அலுவலகங்களில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் (Negative vibrations), திருஷ்டிகள் மற்றும் தீய சக்திகளை நீக்கி, நேர்மறை ஆற்றலை (Positive energy) அதிகரிக்க இந்த ஹோமம் துணைபுரிகிறது. ஹோமத்தில் வளர்க்கப்படும் வளார்ப்புகளும், ஓதப்படும் மந்திரங்களும் அந்த இடத்தை சுத்தி செய்கின்றன.

​3. அஷ்ட ஐஸ்வரியங்கள் பெருக

​கணபதி ஹோமம் செய்வதால் குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி, மற்றும் மனநிம்மதி நிலைத்திருக்கும். மேலும், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபமும், அஷ்ட ஐஸ்வரியங்களும் (செல்வம்) பெருகும் என்பது நம்பிக்கை.

​4. கிரக தோஷங்கள் நீங்க

​ஜாதகத்தில் உள்ள கேது தோஷம் அல்லது இதர நவகிரக தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறைய கணபதி ஹோமம் சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது.

​எப்போது செய்வது சிறப்பு?

​வளர்பிறை சதுர்த்தி அல்லது சங்கடஹர சதுர்த்தி நாட்களில் செய்வது மிகவும் விசேஷம்.

​அதிகாலை நேரமான பிரம்மா முகூர்த்தத்தில் (காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்) இந்த ஹோமத்தை செய்வது மிகச் சிறந்த பலன்களைத் தரும்.

​சுருக்கமாகச் சொன்னால்: "தொட்டதெல்லாம் துலங்கவும்", தொடங்கும் காரியங்கள் தடையின்றி வெற்றியாகவும், வீட்டில் அமைதியும் செல்வமும் நிறையவே கணபதி ஹோமம் செய்யப்படுகிறது

 


வலஞ்சுழி விநாயகர்  இடஞ்சுழி விநாயகர் 


விநாயகர் வழிபாட்டில் தும்பிக்கை அமைந்து இருக்கும் திசையை வைத்து அவரை வலஞ்சுழி விநாயகர் மற்றும் இடஞ்சுழி விநாயகர் என இரு வகையாகப் பிரித்து வழிபடுகிறோம். இதன் ஆன்மீக மற்றும் தத்துவ விளக்கங்களை கீழே காண்போம்:

​1. இடஞ்சுழி கணபதி (வல்லப கணபதி / சௌமிய கணபதி)

​விநாயகர் சிலைகளில் பெரும்பாலானவற்றில் தும்பிக்கை அவருடைய இடது பக்கமாக வளைந்து, இடது கையில் இருக்கும் மோதகத்தை (கொழுக்கட்டையை) தொட்டுக் கொண்டிருப்பது போல் அமைந்திருக்கும்.

​தத்துவம்: மனித உடலின் இடது பக்கத்தில் இடா நாடி (சந்திர நாடி) பாய்கிறது. இது குளிர்ச்சி, அமைதி, சௌமியம் மற்றும் கருணையைக் குறிக்கும்.

​பலன்கள்: இடஞ்சுழி விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. இவர் சாந்த ரூபமானவர் என்பதால், இவரை வழிபடக் கடுமையான விரத விதிகளோ, ஆசாரங்களோ தேவையில்லை.

​வழங்கும் நன்மைகள்: குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி, மன நிம்மதி, மற்றும் பொருள் சேர்க்கை (செல்வம்) உண்டாகும்.

​2. வலஞ்சுழி கணபதி (வலம்புரி விநாயகர் / உக்கிர கணபதி)

​விநாயகரின் தும்பிக்கை அவரது வலது பக்கமாக வளைந்து, வலது தோள் நோக்கி அமைந்திருந்தால் அவர் வலஞ்சுழி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவரைத் தரிசிப்பது மிகவும் அரியது



​தத்துவம்: மனித உடலின் வலது பக்கத்தில் பிங்கள நாடி (சூரிய நாடி) பாய்கிறது. இது வெப்பம், வீரியம், உக்கிரம் மற்றும் ஞானத்தைக் குறிக்கும்.

​விதிமுறைகள்: சூரிய நாடி என்பதால் இவரிடம் ஆன்மீக ஆற்றல் மற்றும் உக்கிரம் அதிகமாக இருக்கும். எனவே, இவரை வீட்டில் வைத்து வழிபடும் போது மடி-ஆசாரம், தூய்மை மற்றும் நிவேதன முறைகளை மிகக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தவறு நேர்ந்தால் எதிர்மறை ஆற்றல் உருவாகும் என்பதால், பெரும்பாலும் இவரைப் பெரிய கோயில்களிலேயே பிரதிஷ்டை செய்வார்கள்.

​புகழ்பெற்ற தலம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமிமலைக்கு அருகில் உள்ள திருவலஞ்சுழி என்ற ஊரில் உள்ள வெள்ளை விநாயகர் கோயில் இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

​வழங்கும் நன்மைகள்: இவரைத் தீவிரமாக வழிபட்டால், உலக ஆசைகள் நீங்கி முக்தி (மோட்சம்), ஞானம் மற்றும் ஆன்மீகப் பாதையில் உயர்ந்த நிலையை அடையலாம்.

அம்சம்இடஞ்சுழி கணபதிவலஞ்சுழி கணபதி

தும்பிக்கை திசைஇடது பக்கம்வலது பக்கம்

தொடர்புடைய நாடிசந்திர நாடி (குளிர்ச்சி)சூரிய நாடி (வெப்பம்/ஆற்றல்)

குணம்சாந்தம், சௌமியம்உக்கிரம், ஞானம்

வழிபாட்டு இடம்வீடு மற்றும் அனைத்துக் கோயில்கள்பெரும்பாலும் கோயில்கள் (கடுமையான விதிகள்)

முக்கிய பலன்லௌகீக இன்பம், செல்வம், அமைதிஆன்மீகம், ஞானம், மோட்சம்

 திருஷ்டி நீக்கும் எளிய பரிகாரங்கள் (Remedies)



​நம்பிக்கையின் அடிப்படையில் திருஷ்டியைக் கழிக்கப் பின்வரும் முறைகள் பின்பற்றப்படுகின்றன:

​உப்பு கொண்டு சுற்றுதல்: ஒரு கைப்பிடி கல்லுப்பை எடுத்து, திருஷ்டி உள்ள நபரை முன்னால் அமர வைத்து, வலப்புறமாக மூன்று முறையும், இடப்புறமாக மூன்று முறையும் சுற்றி அதை ஓடும் நீரில் அல்லது வாஷ்பேசினில் கரைத்து விட வேண்டும்.

​மிளகாய், உப்பு, கடுகு: காய்ந்த மிளகாய் (3 அல்லது 5), சிறிதளவு கல்லுப்பு, மற்றும் கடுகை ஒன்றாக கையில் எடுத்துக்கொண்டு நபரைச் சுற்றி எரியும் அடுப்பில் அல்லது கற்பூரம் ஏற்றி அதில் போட்டுவிட வேண்டும்.

​எலுமிச்சை வெட்டுதல்: ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அதில் குங்குமம் தடவி, வீட்டின் வாசலின் இருபுறமும் வைக்கலாம் அல்லது வாசலில் நின்று மூன்று முறை சுற்றி தெருவில் வீசிவிடலாம் (யாரும் மிதிக்காதவாறு).

​வீட்டின் நுழைவாயில்: வீட்டின் வாசலில் திருஷ்டி பொம்மை (Drishti Bommai), கற்றாழை, அல்லது பூசணிக்காய் தொங்கவிடுவது மற்றவர்களின் நேரடிப் பார்வை வீட்டின் மேல் விழாமல் தடுக்கும்.

​முக்கியக் குறிப்பு: திருஷ்டி கழிப்பது என்பது எதிர்மறை எண்ணங்களில் இருந்து நம்மை மனரீதியாகவும், நம் சூழலை ஆரோக்கிய ரீதியாகவும் பாதுகாத்துக் கொள்ள நம் முன்னோர்கள் உருவாக்கிய ஒரு வழிமுறையாகும்.

 

கண் திருஷ்டி (Evil Eye)



கண் திருஷ்டி (Evil Eye) என்பது ஒருவருடைய தீவிரமான பொறாமை, பேராசை அல்லது அதீத வியப்பு கலந்த பார்வையின் மூலம் மற்றவர்களுக்கு ஏற்படும் எதிர்மறை ஆற்றல் (Negative Energy) அல்லது பாதிப்பைக் குறிக்கும். "கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது" என்ற பழமொழி இதன் தீவிரத்தை விளக்குகிறது.

​ஒருவரின் வளர்ச்சி, அழகு அல்லது வெற்றியைக் கண்டு மற்றவர்கள் ஏங்கும் போது உருவாகும் அந்தப் பார்வை, சம்பந்தப்பட்ட நபருக்கு உடல்நலக் குறைவு, காரியத் தடை அல்லது வீட்டில் அமைதியின்மை போன்றவற்றை ஏற்படுத்தும் என்பது பாரம்பரிய நம்பிக்கை.

​ஏன் எலுமிச்சை, உப்பு, காய்ந்த மிளகாய் பயன்படுத்துகிறார்கள்?

​நமது முன்னோர்கள் திருஷ்டி கழிக்கப் பயன்படுத்திய பொருட்கள் வெறும் ஆன்மீகம் மட்டுமல்லாமல், அறிவியல் பூர்வமான காரணங்களையும் (ஆரோக்கியம் மற்றும் கிருமிநாசினி பண்புகள்) கொண்டிருந்தன.

​1. கல்லுப்பு (Sea Salt)

​ஆன்மீகக் காரணம்: உப்பு எதிர்மறை ஆற்றலை (Negative Waves) மிக வேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது. ஒருவரைச் சுற்றி இருக்கும் தீய அதிர்வுகளைத் தன்னுள் இழுத்துக் கொள்ளும்.

​அறிவியல் காரணம்: உப்பு ஒரு இயற்கை கிருமிநாசினி. காற்றில் பரவும் நுண்கிருமிகளை அழித்து, சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

​2. காய்ந்த மிளகாய் (Dried Red Chillies)

​ஆன்மீகக் காரணம்: தீய பார்வையின் வீரியத்தைக் குறைக்கவும், கெட்ட எண்ணங்களை எரிக்கவும் மிளகாய் பயன்படுத்தப்படுகிறது. திருஷ்டி சுற்றிய மிளகாயை எரியூட்டும்போது நெடி வரவில்லை என்றால், கடுமையான திருஷ்டி இருந்ததாக நம்பப்படுகிறது.

​அறிவியல் காரணம்: மிளகாயில் உள்ள 'கேப்சைசின்' (Capsicin) மற்றும் அதன் காரமான நெடி காற்றில் பரவும் பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும், அந்தத் காரத்தன்மை மூளைக்கு ஒருவித சுறுசுறுப்பைத் தரும்.

​3. எலுமிச்சம் பழம் (Lemon)

​ஆன்மீகக் காரணம்: எலுமிச்சை துர்கை மற்றும் காளி தேவியின் வழிபாட்டிற்கு உகந்தது. இது துர்சக்திகளை விரட்டி, நேர்மறை ஆற்றலை நிலைநிறுத்த உதவும்.

​அறிவியல் காரணம்: எலுமிச்சையின் நறுமணமும் அதிலுள்ள சிட்ரிக் அமிலமும் காற்றில் உள்ள துர்நாற்றத்தை நீக்கி, பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டவை. கடைகள் மற்றும் வீடுகளின் வாசலில் எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாயைக் கட்டுவது இதனால்தான்.

சமய வழிபாடுகளில் (பூஜைகளில்) நீர் பயன்படுத்தப்படுவதற்கு மிக ஆழமான ஆன்மீக மற்றும் அறிவியல் பூர்வமான காரணங்கள்




 இந்து சமய வழிபாடுகளில் (பூஜைகளில்) நீர் பயன்படுத்தப்படுவதற்கு மிக ஆழமான ஆன்மீக மற்றும் அறிவியல் பூர்வமான காரணங்கள் உள்ளன. நீர் என்பது வெறும் திரவம் மட்டுமல்ல, அது தூய்மை மற்றும் பிரபஞ்ச ஆற்றலின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

​பூஜைகளில் நீர் பயன்படுத்தப்படுவதற்கான முக்கிய காரணங்கள் இதோ:

​1. தூய்மைப்படுத்துதல் (சுத்தி செய்தல்)

​வழிபாட்டைத் தொடங்குவதற்கு முன் உடலையும், மனதையும், பூஜை செய்யும் இடத்தையும் தூய்மைப்படுத்துவது அவசியம்.

​புரோக்ஷணம்: "ஓம் அபவித்ர பவித்ரோ வா..." என்ற மந்திரத்தைக் கூறி பூஜை பொருட்கள் மற்றும் நம் மீது நீரைத் தெளிப்பார்கள். இது புறத் தூய்மையோடு அகத் தூய்மையையும் தருவதாக நம்பப்படுகிறது.

​2. பஞ்சபூத வழிபாடு

​இப்பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனது. இறைவனும் இப்பஞ்சபூதங்களின் வடிவமாகவே இருக்கிறார். பூஜையில் நாம் காட்டும் தூபம் (காற்று), தீபம் (நெருப்பு), மலர்கள் (நிலம்), மணி ஓசை (ஆகாயம்) போல, தீர்த்தம் என்பது நீரின் வடிவமாக இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது.

​3. எதிர்மறை ஆற்றலை ஈர்த்தல்

​அறிவியல் பூர்வமாக, நீருக்குச் சுற்றியுள்ள அதிர்வுகளையும் ஆற்றலையும் ஈர்க்கும் குணம் உண்டு.

​பூஜையின் போது ஓதப்படும் மந்திரங்களின் நேர்மறை அதிர்வுகளை (Positive vibrations) கலசத்தில் உள்ள நீர் ஈர்த்துக் கொள்கிறது.

​அதனால்தான், பூஜை முடிந்ததும் அந்த நீர் "தீர்த்தமாக" நமக்கு வழங்கப்படுகிறது. அதை அருந்தும் போது நம் உடலுக்குள் நல்ல ஆற்றல் பாய்கிறது.

​4. உபசாரங்கள் (விருந்தினர் மரியாதை)

​இறைவனை நம் வீட்டிற்கு வரும் உயரிய விருந்தினராகக் கருதி உபசரிப்பது பூஜையின் முறை (ஷோடச உபசாரங்கள்).

​பாத்யம்: கால்களைக் கழுவ நீர் தருதல்.

​அர்க்கியம்: கைகளைக் கழுவ நீர் தருதல்.

​ஆசமனீயம்: பருகுவதற்கு நீர் தருதல்.

​அபிஷேகம்: இறைவனுக்குத் தூய்மையான நீரால் நீராட்டுதல்.

​5. பிராண சக்தி மற்றும் தாகம் தணித்தல்

​உயிரினங்கள் வாழ்வதற்கு நீர் இன்றியமையாதது. இறைவனுக்கு நிவேதனம் (உணவு) படைக்கும் போது, "பிராணாய ஸ்வாஹா..." என்று கூறி நீரைச் சுற்றி அர்ப்பணிப்பார்கள். உணவு உண்ட பின் தாகம் தணிக்க நீர் தேவை என்பது போல, இறைவனுக்கும் நீர் படைக்கப்படுகிறது.

​சுருக்கமாகச் சொன்னால்: நீர் என்பது உயிரோட்டத்தின் அடையாளம். இறை வழிபாட்டில் நம்மிடம் உள்ள அகங்காரத்தைக் கழுவி, மனதைத் தூய்மையாக்கிக் கொள்ளும் ஒரு உன்னதக் குறியீடாகவே நீர் பயன்படுத்தப்படுகிறது