Monday, February 14, 2011

சிறப்புலிநாயனார்

சிறப்புலிநாயனார் புராணம்


திருவாக்கூர் அருமறையோர் உலகம் ஏத்தும்
சிறப்புலியார் மறப்புலியார் உரிமேற் செங்கண்
அரவார்த்தார் வருமேற்றார்க்கு அன்ப ரானார்க்கு
அமுதளிப்பார் ஒளிவெண்ணீறு அணிந்த மார்பர்
பெருவாக்கான் மறைபரவி யாகம் போற்றும்
பெற்றியினார் ஐந்தெழுத்தும் பிறழாது ஓதிக்
கருவாக்கா இறைவந்தாள் இணைகள் சேர்ந்த
கருத்தினார் எனையாவும் திருத்தி னாரே.

சோழநாட்டிலே, திருவாக்கூரிலே, பிராமணகுலத்திலே, சிறப்புலிநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்கள் எழுந்தருளி வந்தபொழுது, அவர்களை நமஸ்கரித்து இன்சொற்களைச் சொல்லி, அவர்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வேண்டுந் திரவியங்களெல்லாவற்றையுங் கொடுப்பவர். ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை அன்பினோடு ஜபிப்பவர். பரமசிவனைக் குறித்து யாகங்கள் செய்பவர். அவர் இன்னும் பல சிவபுண்ணியங்களைச் செய்துகொண்டிருந்து சிவபதம் அடைந்தார்.





No comments:

Post a Comment