Tuesday, February 15, 2011

பரமனையேபாடுவார் புராணம்

பரமனையேபாடுவார் புராணம்


அருந்தமிழால் வடகலையா லருளா லொன்றா
லறிவுநெறி மருவுமருங் கவிகள் யாவுந்
திருந்தியவா னவர்பணிய மன்று ளாடுந்
தேவர்பிரான் கழலிணையே சேர வோதி
விருந்திடுநா வுடையபயன் மேவி னோர்தா
மேலானோ மெனமகிழ்ந்து விழிநீர் சோரப்
பரிந்தருளாற் பரமனையே பாட வல்ல
பான்மையா ரெமையாளு மேன்மை யாரே.

சமஸ்கிருதம் தமிழ் என்னும் பாடைகளைக் கற்று வல்லர்களாகி, சனன மரணப்பட்டு உழல்கின்ற பசுக்களாகிய பிரம விட்டுணு முதலிய தேவர்களையும் மனிதர்களையும் மதித்து அவர்களுக்குக் கர்மாநுகுணமாகக்கிடைத்த அநித்தியமுந் துக்கமுமாகிய வாழ்வை மெய்யெனக் கருதி அவர்களைப் பாடி வாணாளை வீணாளாகப் போக்காது, பதியாகிய சிவபெருமானது மகிமையை வேதசிவாகம புராணவழியால் உள்ளபடி அறிந்து அவருடைய திருவடிகளை அடைந்து, மனங்கசிந்துருக உரோமஞ்சிலிர்ப்ப ஆனந்த வருவி சொரிய அவரையே மெய்யன்போடு பாடி, "நாம் சுவதந்திரராகிய பரமசிவனுக்கே ஆளாயினோம், பரதந்தரராகிய மற்றுள்ளோர்களில் ஒருவருக்கும் குடியல்லேம். அவர்களெல்லாருக்கும் மேலானோம்" என்று இறுமாப்பு அடைந்து திரிகின்றவர்களே பரமனையே பாடுவார் என்று சொல்லப்படுவார்கள்

No comments:

Post a Comment