Tuesday, February 15, 2011

திருவாரூர்ப்பிறந்தார் புராணம்

திருவாரூர்ப்பிறந்தார் புராணம்


பொங்கியமா தவமுடையார் வருண நான்கிற்
பொருந்தினர்க ளல்லாத புகழி னுள்ளார்
சங்கையிலா வருந்தவமுன் புரிந்தா ரிங்குச்
சார்விலா ரிறைவனருள் சார்த லாலே
கங்கைவாழ் சடைமுடியா னருளை நீங்காக்
கணநாத ரெனவாழுங் கருத்தார் கன்னிச்
செங்கண்வரால் வளர்வாவி திகழு மாரூர்ச்
சிறந்துளா ரெமையாளப் பிறந்து ளாரே.

பூர்வஜன்மத்திலே செய்த புண்ணியத்தினாலே திருவாரூரென்னுஞ் சிவஸ்தலத்திலே சைவமரபினராய்ப் பிறந்தவர்கள் பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நான்குவருணத்தாராயினும் சங்கரசாதியாராயினும், பரமசிவனுடைய திருவருளை அடைதலால், சிவகணநாதர்களாய் இருப்பார்கள். திருவாரூர்ப் பிறந்தாரெல்லாருஞ் சிவகணநாதர்கள் என்று சிவபெருமானே நமிநந்தியடிகணாயனாருக்கு அருளிச்செய்தனர். அந்நாயனாரும் அவர்களெல்லாருஞ் சிவகணநாத வடிவினராய்த் தோன்றக் கண்டனர்.



No comments:

Post a Comment