Monday, February 14, 2011

ஐயடிகள்காடவர்கோனாயனார்

ஐயடிகள்காடவர்கோனாயனார் புராணம்


வையநிகழ் பல்லவர் தங் குலத்து வந்த
மாமணிவா நிலமுழுது மகிழ்ந்து காக்கு
மையடிகள் காடவர்கோ னருளா னூல்க
ளறிந்தரசு புரிந்திடுத லமையு மென்றே
பொய்யனைய வுடல்வாழ்வு கழியு மாறு
பொருந்தியிடும் புகழ்வெண்பா புலியூர் மேவுஞ்
செய்யதிரு வடிமுதலாப் பதிக டோறுஞ்
செப்பினா ரென்வினைக டப்பி னாரே.

தொண்டைமண்டலத்திலே, காஞ்சிபுரத்திலே, பல்லவர் குலத்திலே, சைவத்திருநெறி வாழும்படி அரசியற்றும் ஐயடிகள் காடவர்கோனாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் எவ்வுயிர்களும் இம்மைமறுமையின்பங்களையும் முத்தியையும் அடைதல்வேண்டும் என விரும்பி, பிறதேசங்களையுந் தமக்கு அதீனப்படுத்தி, சைவந்தழைத்தோங்க அரசர்களும் பணிசெய்ய அரசியற்றினார். சிலகாலஞ்சென்ற பின், அரசாட்சி துன்பமயமெனக் கருதி, அதனை வெறுத்து, அப்பாரத்தை இறக்கித் தம்முடைய புத்திரன்மேல் ஏற்றி, பூமியிலுள்ள சிதம்பரமுதலாகிய சிவஸ்தலங்கடோறுஞ் சென்று, சுவாமிதரிசனம்பண்ணி, திருப்பணிசெய்து, ஒவ்வொரு திருவெண்பாப் பாடினார். இந்தப் பிரகாரம் நெடுங்காலந் திருத்தொண்டு செய்து கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.





No comments:

Post a Comment