Saturday, June 8, 2019

பழங்காலத்தில் பிராமணர்கள் முழுஞாபக சக்தியையும் தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.

அலெக்சாண்டரிடம் இந்தியாவிலிருந்து வரும் போது,நான்கு வேதங்களையும் எடுத்து வருமாறு அவருடைய குரு கேட்டுக் கொண்டார்.யாரிடம் இந்த வேதங்கள் உள்ளன என்று விசாரித்ததில் ஒரு பிராமண குடும்பத்தில் இருப்பதாகவும் அதை அவர்கள் நிச்சயம் தர மாட்டார்கள் என்றும் சொன்னார்கள்.
அலெக்சாண்டர் படையுடன் அந்த வீட்டை சூழ்ந்து கொண்டு நான்கு வேதங்களையும் கொடுக்காவிடில் வீட்டிற்குத் தீ வைக்கப் போவதாக மிரட்டினார். குடும்பத் தலைவன், மறுநாள் காலை தருவதாக வாக்களித்தான்.
இரவு குறிப்பிட்ட பிரார்த்தனை செய்த பின் தான் தர முடியும் என்று கூற அவர்களால் தப்பிச் செல்ல முடியாது என்ற நிலையில் அலெக்சாண்டர் அதற்கு ஒத்துக் கொண்டார்.
மறுநாள் காலை அலெக்சாண்டர் வீட்டினுள் சென்று பார்த்த போது,நான்கு வேதங்களும் தீயில் எரிந்து கொண்டிருந்தன.'நீ என்ன செய்கிறாய்?'என்று அவர் வினவ,குடும்பத்தலைவன் சொன்னார்,
''இந்த நான்கு வேதங்களும் நெருப்புக்கு இரையாகி விட்டன.இங்கே இருக்கும் நால்வரும் என்னுடைய மகன்கள்.இரவு முழுவதும் இந்த வேதப் புத்தகங்களை நான் படிக்க,அதை இவர்கள் கவனமாகக் கேட்டு ஞாபகத்தில் வைத்துள்ளனர்.
நீங்கள் இவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். ''கவனித்துக் கேட்டது அவ்வளவையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இயலுமா? அலெக்சாண்டரால் நம்ப முடியவில்லை.
வேறு சில பிராமணர்களை வரவழைத்து இவர்கள் ஞாபகத்தில்வைத்திருப்பது சரியாக இருக்கிறதா என்பதனை சோதித்துப் பார்த்தார்.
அவர்கள் வேதத்தில் உள்ளதை எழுத்துப் பிசகாமல் திரும்பச் சொன்னார்கள். எப்படி அவர்களால் அவ்வளவையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடிந்தது? இதன் ரகசியம்.
இது தான்; உங்கள் ஞாபக சக்தியில் 90% பயனற்றவைகளாக இருக்கின்றன. நீங்கள் குப்பைகளையெல்லாம் மறந்து போகக் கூடிய தகுதி உள்ளவர்களாக இருந்தால், பிறகு எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய சக்தி வந்து விடும்.
பழங்காலத்தில் பிராமணர்கள் முழுஞாபக சக்தியையும் தயார் நிலையில் வைத்திருந்தார்கள். அதனால் அவர்களால் நன்கு வாதங்களை மட்டுமல்ல,அதற்கு மேலும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிந்தது.
சரியான கற்றுக் கொள்ளலுக்கு சரியான கவனித்தல் முதலில் அவசியம். சரியான கவனித்தலுக்கு மனதை வெறுமை செய்வது அவசியம்.
சரியாக ஞாபகத்தில் கொள்ளுதல் என்றால் தொடர்ந்து அழுக்குகளை, குப்பைகளை வெளியேற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.
மனத்தைக் குப்பைகளால் நிரப்பாதீர்கள். உங்கள் மனம் எல்லா இடங்களிலிருந்தும் செய்திகளைச் சேகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதனால் தான் உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை.
            மனதில் அவ்வளவு ஆசாபாசங்கள் உள்ளன.
                           -ஓஷோவின் பாரத தேசத்தின் சொத்து வேதங்கள் உரையில் இருந்து.....

No comments:

Post a Comment