Thursday, July 4, 2013

பூமி பூஜை போடுவது எப்படி?

பணம் இருந்தால் வீடுகட்டிக் குடியேறி விடலாம். நன்றாக வாழத் தொடங்கலாம் என்று கைநிறைய பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு வாஸ்து பகவான் விழிக்கும் நாளில் குறித்த நேரத்தை விட்டு தொடங்குகின்றனர்.

முதலில் வாஸ்து பகவான் விழித்தெழும் நாளைக்குறித்து வைத்துக்கொண்டு பூஜை பொருட்களை சேகரித்து முதல் நாளே தயாராகிவிட வேண்டும். வாஸ்து பகவான் விழித்தெழும் காலம் காலை 9.30 மணி முதல் 10.32 மணி வரை என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆரம்ப நேரத்தில் விநாயகர் பூஜையைத் தொடங்கிவிட வேண்டும்.

வாஸ்து பூஜைக்கான பொருட்கள்:-

மஞ்சள்தூள், குங்குமம், கலச சொம்பு, கலசநூல், தேங்காய்-4, பூசணிக்காய்-1, எலுமிச்சம் பழம்-5, அவல் பொரி கடலை, நாட்டுச்சக்கரை-100, நுனிவாழை இலை, வெற்றிலை பாக்கு, நெய்-200 கிராம், ஊதுபத்தி, கற்பூரம், நவசமித்துக்கட்டு, நவரத்தினம், பஞ்சலோகம் நவதான்யம்-200

யாகக்கூட்டு பொருட்கள்:-

நெல்பொரி, வாழைப்பழம்-1 டசன், சிவப்பு கலசத்துண்டு செங்கல்-15, காமாட்சி தீபம்-1, குத்து விளக்கு, மணி கற்பூரத் தட்டு, மாஇலை கொத்து, பச்சரிசி, பூ மாலை-1, கதம்பசரம் 10 முழம், வாஸ்து படம்! வாஸ்துக்கு வர லட்சுமி!

முதலில் படத்தில் காட்டியபடி கற்களை ஈசான்யத்தில் 3+3,அளவுள்ள குழிபோட்ட இடத்தில் அமைத்து மூன்று குடங்களில் நீர் வைத்து (நிறை குடம்) கங்காதி தீர்த்தங்களுக்கு வணக்கம், அதில் எல்லா தீர்த்தங்களும் எழுந்தருள வேண்டும் என்று எண்ணி பகங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேங்மின் சன்னிதிம் குரு-என்று கூறுக.

அங்கு பூஜை பொருட்கள் வைக்கப்பட்டுள்ளகற்களில் தெளிக்க வேண்டும். விநாயகர் பூஜையை முதலில் செய்து ஓம் ஸ்ரீகஜானனா போற்றி!
யானை முருனே போற்றி செவ்வேள் அண்ணனே போற்றி!
சிவந்த மேனியனே போற்றி இல்லதோஷம் களை வாய் போற்றி!
ஒம் வாஸ்து வஸ்யகணபதியே ஓம் அம்ரிங் அங்கம் கணபதியே நம

என்று பிள்ளையார் வணக்கம் செய்து அடுத்து கலசத்தில் கங்காதி தீர்த்த தேவதைகளே! ஸ்வாசுதம் என்று மும்முறை சொல்லி.

ஓம் வாஸ்து புருஷாய வித்மஹே யோக மூர்த்தியாய தீமகி
தந்நோ: கிருஹராஜ ப்ரசோதயாத்

என்று 3 தடவை சொல்க.

கும்பத்தில் அர்ச்சனை........

ஆதார சக்தியே போற்றி!
ஓம் அனந்த தேவா போற்றி!
ஓம் தர்மதேவா போற்றி!
ஓம் ஞானவா போற்றி!
ஓம் வைராக்ய தேவனே போற்றி!
ஓம் ஐஸ்வர்ய உருவே போற்றி!
ஓம் தாமரை முகமே போற்றி!
ஓம் வாஸ்துக்குஹருபனே போற்றி!
ஓம் வம்ஆம் ஸ்ரீம் வாஸ்துக்குஹலட்சுமிருபா போற்றி!

தூபம் தீபம் நிவேதனம் கற்பூரம் காட்டி கட்டியுள்ள 4 கற்கள் கொண்ட சிறு அக்னி குண்டத்தில் போட்டு நான்கு பக்கங்களிலும் தர்பை போட்டு நெய், நெல் பொரி, ஓமப்பொருளால்

ஓம் வாஸ்தோஷ்பதே சஞ்சதுஷ்பதே இதம்
நம அக்னிம் ப்ரவேசய-ப்ரவேசய

என்று கூறி நெல் பொரி இட்டு அக்னி பூஜை செய்யவும். யக்ஞமாக 10 நிமிடத்துக்குள்

ஓம் வாஸ்து தேவாய ஸ்வாஹா
ஓம் பூமிபுத்ராய ஸ்வாஹா
ஓம் கணராஜாய ஸ்வாஹா,
ஓம் கணாதி ராஜாய ஸ்வாஹா
ஓம் சிவநேசாய ஸ்வாஹா,
ஓம் கிருஷ்ணாங்காய ஸ்வாகா,
ஓம் யோகரூபாய ஸ்வாகா,
ஓம் ஆனந்த நித்ராயஸ்வாஹா
ஓம் சம்பத் ரூபினே ஸ்வாகா
ஓம் சர்வசுவாய ஸ்வாகா,
ஓம் பர்வதபாவனாய ஸ்வாகா

என்று வாஸ்து அக்னி பூஜை செய்தபிறகு

ஓம் இந்திராய சுவாகா,
ஓம் அக்னியே சுவாகா,
ஓம்யமாய சுவாகா,
ஓம் நிருதியே சுவாகா,
ஓம் வருணாய சுவாகா,
ஓம் வாயுவே சுவாகா,
ஓம் குபேராய சுவாகா,
ஓம் ஈசானாய சுவாகா!
 ஓம் ஆதித்யாதி நவக்ரக தேவதாயை சுவாகா

என்று நெய் ஓமம் செய்து அக்னிக்கு ஆரத்தி காட்டி வீடு கட்டும் எஜமானர், மனைவி பிரசாதம் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்தபடியாக 5 பெண்களை வைத்துக்கொண்டு வைக்கப்பட்ட முறையில் கற்களை பால் தயிர் விட்டு சுத்தம் செய்து பூ பொட்டுயிட வேண்டும்.

பிறகு வீடு கட்டுமானப்பணி செய்யும் என்ஜினீயர், மேஸ்திரி அந்த கற்களுக்கு வெண்பொங்கல் வைத்து தேங்காய் உடைத்து ஆரத்திகாட்ட வேண்டும். அடுத்து அந்தக் கற்களைத்தலைப்பிலிருந்து ஒவ்ஒன்றாக எடுத்து வாஸ்து புருஷன், பூமிதேவி நவக்கிரஹங்களை வணங்கி புரஷசுக்த ஜபம் செய்தபடி குழியில் வைக்கவேண்டும்.

நிறைகுடம் நீரை ஈசான பாகத்திலிருந்து பெண்களை ஊற்றச்செய்தால் நல்லது. நவரத்தினம் பஞ்சலோகங்களை கற்களின் அடியில் பதியச் செய்துவிட்டு நவதான்யங்களை வாஸ்து புருஷன் அருளோடு செல்வச் செழிப்போடு இருக்கவும். வீடு அதிவிரைவில் கட்டவும் குலதெய்வத்தை நினைத்து குழியைச் சுற்றிச்போட வேண்டும்.

கலச நீரை கும்பத்தோடு எடுத்து மாவிலை வழியாக 3 முறை குழியைச்சுற்றி வந்து சிவம்சிவம் என்று கூறியபடி மெதுவாக விட்டு வரவேண்டும். பிறகு வாஸ்து புருஷனுக்கு பூசணிக்காய் எலுமிச்சம்பழம் விடலைத்தேங்காய் உடைத்து வணங்க வேண்டும்.

அடுத்து வந்திருக்கும் 5 சுமங்கலிப்பெண்களுக்கு வீடு கட்டப்போகும் யஜமானி தாம்பூலம் பூவைத்து கொடுத்து ஆசிபெறவேண்டும். அப்போது 7 பெண்கள் வந்தாலும் தாம்பூலம் அளித்தல் நலம் தரும் *

No comments:

Post a Comment