Tuesday, February 8, 2011

தவறு செய்யாதவர் யாருமில்லை -காந்திஜி

தவறு செய்யாதவர் யாருமில்லை

* பகுத்தறிவு இல்லாதவர்களும், சுகபோகத்திற்காகவே வாழ்கின்றவர்களும் தங்கள் பிழைகளை ஒருநாளும் அறிந்து கொள்ள முயற்சிக்க மாட்டார்கள்.
* தவறு செய்தல் மனித இயல்பு என்பர். ஆனால், தவறு என்று கண்டதும் இனிச் செய்வதில்லை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த உறுதியில் இருந்து விலகாமல் வெற்றி பெற்றுவிட்டால் நாம் முன்பு செய்த தவறுகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் விலகி ஓடி விடும்.
* நான் தவறே செய்யாதவன் என்று யார் ஒருவனும் கூறிக் கொள்ள முடியாது. தவறு திருத்தத்திற்கு உரியது. திருத்தப்படும்போது பிழைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
* தவறு செய்து விட்டதாக பகிரங்கமாக ஒத்துக் கொள்வதில் தோல்வி என்பதே கிடையாது. அவமானமும் கிடையாது. அதுதான் நிஜமான வெற்றி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
* ஒரு மனிதன் தவறு செய்தபின் அதை எண்ணி வருந்துவதோ அல்லது அதனைத் திருத்திக் கொள்ள முற்படுவதோ சரியானது தான். ஆனால், அதைக் காட்டிலும் எளிய காரியம் ஒன்று உண்டு. விழுந்து எழுந்திருப்பதைவிட விழாமல் இருப்பதே சிறந்தது.
* நம் தவறுகளை புறம்காட்டும் கண்ணாடி போல வெளிப்படையாகவும், பிறரது தவறுகளை உள்முகம் காட்டும் கண்ணாடி போல மறைவாகவும் பார்க்கப் பழகுங்கள். தவறுகளின் உண்மையான தன்மையை அறிய இதுவே சிறந்தவழி.

-காந்திஜி

No comments:

Post a Comment