Monday, November 14, 2011

தாய்க்குப் பின் "மனைவி' என்று ஏன் சொல்வதில்லை

 

ஒரு ஆணின் பெயர் ரேஷன் கார்டில் மட்டும் வீட்டுத்தலைவர் என்ற இடத்தில் இருந்து பயனில்லை. நிஜமாகவே, அவன் வீட்டுத்தலைவனாக இருக்க வேண்டும். சம்பாதிக்கிற பணத்தை பொறுப்புடன் அம்மாவிடமோ, மனைவியிடமோ ஒப்படைக்க வேண்டும். "என் புருஷன் எனக்கு ஒண்ணுமே தருவதில்லை' என்று ஒரு மனைவி சொன்னால், அது அந்த ஆணுக்குத்தான் கேவலம். காரணம், "புருஷன்' என்ற சொல்லின் முதல் இரண்டெழுத்தான "புரு'என்பதற்கு "நிறையக் கொடுக்கிறவன்' என்றும், "எடுக்க எடுக்க குறைவில்லாதவன்' என்றும் அர்த்தம். அதாவது, குடும்பத்துக்கு தேவையான அளவு பொருளைக் கொடுக்க வேண்டும். மேலும், தேவைப்பட்டாலும் கொடுக்க தயாராகும் அளவு உழைப்பாளியாகத் திகழ வேண்டும். இனியாவது, "புருஷன்' என்ற பட்டத்தை பெயரளவுக்கு வச்சுக்காம, வீட்டுக்கு ஏதாச்சும் கொடுக்கிற வழியைப் பாருங்க!
 தாய்க்குப் பின் "மனைவி' என்று ஏன் சொல்வதில்லை

தாய்க்குப் பின் மனைவி' என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் "தாரம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. "தாரம்' என்றால் "மகிழ்ச்சி'. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள். ஆன்மிகத்திலும் ஒரு "தாரம்' இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை "தாரம்' என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும். 

No comments:

Post a Comment