Monday, April 21, 2014

நதிகளைப் பாதுகாப்போம்:

நதிகளைப் பாதுகாப்போம்:
கங்கைக்கரைக்கு வந்தார் ஒரு மகாமுனிவர். தவத்தால் மிகவும் சிறந்தவர். கர்வம் சிறிதும் இல்லாதவர், ஆனால், தன் பலத்தை தானே அறியாதவர். கங்கைக்கு வரும் சாதாரண மக்களெல்லாம், நதியில் மூழ்கி தங்கள் பாவத்தைக் கரைப்பவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால், தவவலிமை மிக்க முனிவர் பெருமக்கள் அதில் நீராடினால் அவள் மகிழ்வாள். ஏனெனில், அவள் சுமக்கும் பாவங்கள் அனைத்தும் அந்த மகான்களின் தவவலிமையால் ஆவியாகி விடும். கங்கை பாரம் குறைந்து மகிழ்ச்சியுடன் செல்வாள். அதனால் தான் தீர்த்த...ங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், மண மதத்தினர் தங்கள் துறவிகளுக்கு "தீர்த்தங்கரர்' என்று பெயர் வைத்தனர்.
"நாரம்' என்றால் "தீர்த்தம்'. நாராயணன், நாரதர் போன்ற பெயர்களும் தீர்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதே.
ஒரு சமயம் ஏராளமான பாவிகள் கங்கையில் வந்து நீராடினர். அவர்களில் கொலைக்குற்றம் செய்தவர்கள், மனைவியைக் கைவிட்டவர்கள், கன்னிப்பெண்களின் வாழ்வில் விளையாடி அவர்களை ஏமாற்றிய கொடும்பாவிகள் ஆகியோரெல்லாம் இருந்தனர். அவர்கள் கரைத்த பாவச்சுமையைத் தாங்கமுடியாமல் கங்கை கஷ்டப்பட்டாள். போதாக்குறைக்கு, பாழாய் போன மக்கள் சாக்கடையையும் கங்கையில் விழும்படி செய்தனர். இதனால் அவள் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. இந்த நேரத்தில் தான் நாம் மேற்சொன்ன தவமுனிவர் வந்தார். கங்கையைப் பார்த்தார். சாக்கடை கலந்ததைப் பார்த்ததும் அவர் முகம் சுளித்தார். அப்படியே திரும்பி விட்டார்.
கங்கைக்கு மனது கனத்தது. ""ஐயோ! இப்படி நல்லவர்களெல்லாம் என்னைப் புறக்கணித்தால் நிலைமை என்னாவது? நான் பாவச்சுமை தாளாமல் மடிந்தும் வற்றியும் போவேனே!'' என நினைத்தவள், சாதாரணப் பெண் போல் மாறி, முனிவர் முன் சென்றாள்.
"மகானே! ! கங்கையில் தங்களைப் போன்றவர்களை நீராடாவிட்டால் அவள் எப்படி புனிதமாவாள்! இதில் கலக்கும் சாக்கடை மகான்களின் உடலுக்கு பாதகம் ஏதும் செய்யாதே! தயவுசெய்து தாங்கள் நீராடிச் செல்லுங்கள்,'' என்றாள்.
முனிவர் சம்மதிக்கவில்லை. எதும் பேசாமல் தன் வழியில் சென்றார். உடனே கங்கையே சுயரூபத்தில் காட்சி தந்தாள். முனிவர் அவளை வணங்கினார்.
"அன்னையே! உன்னில் கரையும் பாவங்கள் என்னவாகின்றன என்பதை எனக்கு
விளக்கியருளினால், நான் மகிழ்வுடன் உன்னில் நீராடிச்செல்வேன்,'' என்றார்.
"ஐயனே! பாவிகள் என்னுள் கரைக்கும் பாவங்களை நான் கடலரசனிடம் சேர்த்து விடுகிறேன். அது பாவக்கடல் என்று பெயர் பெறுகிறது. கடல்நீர் ஆவியாகி சூரியபகவானை அடைகிறது. சூரியபகவான் அதை மேகமண்டலத்திடம் ஒப்படைக்கிறான். அது மழையாய் கொட்டுகிறது. மீண்டும் அது பூமிமாதா மூலம் என்னையே வந்தடைகிறது. என்னிலுள்ளதை கரைக்கும் சக்தி உங்களைப் போன்ற மகான்களுக்கே உண்டு. அதனால் தான் கும்பமேளாவில் சாதுக்கள் நீராடுகின்றனர். அவர்களது சக்தியால் கரையும் பாவம், என் நாதனான சிவனின் நெற்றிக்கண் வெப்பத்தில் பஸ்பமாகி காணாமல் போய்விடுகிறது. எனவே தான் இங்கு வந்து குளிப்பதை உயர்ந்தது என்கிறார்கள்,'' என்றாள்.
மனத்தெளிவு பெற்ற முனிவர் கங்கையில் நீராடினார்.
கங்கையின் பாவம் கரைந்தது. பார்த்தீர்களா! ஆறுகளில் சாக்கடையைக் கலப்பதால், நதித்தாய்கள் வருந்துவதை! இனியேனும், நமது ஊர் நதிகளை பெற்ற தாயைப் போலவும், பிள்ளைகளைப் போலவும் பாதுகாப்போம்.

கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?

கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
பூதனை எனும் அரக்கி தன்னை ஒரு அழகான பெண்ணாக மாற்றிக் கொண்டு, தனது மார்பகங்களில் விஷத்தைத் தடவிக் குழந்தையாக இருந்த கிருஷ்ணர்க்குப் பால் கொடுக்கவந்தாள்.
கிருஷ்ணர் அவள் பாலைக் குடித்துக் கொண்டே, அவளது உயிரையும் குடித்தார்.
...
பாலைக் குடிக்கும் நேரத்தில் அவர் கண்களை மூடிக் கொண்டி ருந்தார் என்றும் அதற்குப் பலரும் பல விளக்கங்களைக் கூறுகிறார்கள். அவர்கள் சொல்லும் விளக்கங்களைக் காண்போம்.
1. அவள் மனத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு, வெளியில் நல்லவள் போல வேடம் போட்டாள். இதனால் கிருஷ்ணர் அவளைப் பார்க்க விரும்பவில்லை.
2. கிருஷ்ணர் கண்களைத் திறந்து கொண்டு இருந்தால் தம்முடைய கருணைப் பார்வை அவள் மீது பட்டிருக்கும். அவளைக் கொன்றிருக்க முடியாது.
3. கிருஷ்ணர், “பாலை நான் சாப்பிடுகிறேன். அதிலிருக்கும் விஷத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சிவ பெருமானை வேண்டுவதற்காகக் கண்ணை மூடினார்.
4. இராமாவதாரத்தின் போது முதன் முதலாக ஒரு பெண்ணைக் கொன்றோம். இந்த அவதாரத்திலும் முதன் முதலாக ஒரு பெண்ணா என்று வெட்கப்பட்டுக் கொண்டு கண்ணைமூடினார்.
இப்படி எத்தனையோ விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.
தீயவற்றைப் பார்க்காதிருப்பது சிறந்த முறைதானே..?

மனதை தாமரை போல, வைத்து கொள்ளவேண்டும்



உண்மையை சொல்வதென்றால் மனதை (சுருக்க) அடக்கக்கூடாது மனதை விரிக்க வேண்டும் குறிப்பாக தாமரை மலரை மனதோடு நம் முன்னோர்கள் ஒப்பிட்டு கூறுவார்கள் காரணம் தாமரை மொட்டாக இருக்கும் போது அழகாக இருக்காது அதை தாமரை விரிந்து(மலர்ந்து )இருக்கும்போது அழகாகவும் அருமையாகவும் இருக்கும்,
இதை போலதான் நம் மனதை விரிந்து (மலர்ந்து ) வைத்து கொள்ளவேண்டும் இந்த தத்துவத்தை நாம் கோவில் வழிபாடுகளில் பார்க்கலாம் கோவில் வாசலில் தாமரை மொட்டை வாங்கி கடவுளுக்கு அர்ப்பணம் பண்ணும் போது கோவிலுக்குள் உள்ள பூசாரி தாமரையை விரித்து இறைவனின் பாதத்தில் வைத்து பூசை செய்வார்
இதில் இருந்து நாம் உணர்ந்து கொள்வது மனதை மலர்ந்து (விரித்து) வைத்து கொள்ள இறைவனை உணர முடியும்.
நீங்கள் சிறகுகளோடு பிறந்திருக்கிறீர்கள். ஆனால் அது தெரியாமல் தவழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் பறக்கப் பிறந்தவர்கள். உங்கள் சிறகுகளை உணருங்கள், பறந்து செல்லுங்கள் – என்கிறார் சூஃபி கவிஞர் ஜலாலுத்தீன் ரூமி.
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! உண்மைக்குத்தான் எவ்வளவு அழகு! ஆமாம், வெற்றி வானில் பறக்கவேண்டுமென்றால் மன ஒருமை தேவை. அது இல்லாவிட்டால் அதை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்.
தொடர்ந்த பயிற்சியானது ஒரு பழக்கத்தை ஏற்படுத்திவிடும். நல்லதானாலும் சரி, கெட்டதானாலும் சரி. தினமும் ஒரு க்வாட்டர் அடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் எவ்வளவு படித்தவராக இருந்தாலும், குடி குடியைக் கெடுக்கும் என்ற வாசகத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டே உங்களால் குடிக்க முடியும்! அதேபோல, ஒரு நல்ல காரியத்தை தினமும் செய்துவந்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஒரு விஷயம் பழக்கமாகிவிட்டால் அதனால் வரும் நன்மைகளும் அல்லது தீமைகளும் தாமாகவே வர ஆரம்பிக்கும்.
வெற்றிபெற்ற அனைவரிடமும் இரண்டு உள்ளது. ஒன்று முயற்சி, இரண்டாவது பயிற்சி. இவைகள் மட்டும்தான் பயிற்சிகள் என்பதல்ல. அனேக பயிற்சிகள் உள்ளன. நிலவு இருக்கும் திசையை மட்டுமே நான் சுட்டுகிறேன். ஆயிரம் மைல்களுக்கான பயணம் முதல் அடியில் தொடங்குகிறது என்றார் லாசூ.
பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிபந்தனை உண்டு. அதிகம் உணர்ச்சி வசப்படாதவராக நீங்கள் இருக்கவேண்டும். இல்லையெனில் பயிற்சி செய்யமுடியாமல் போய்விடும். பத்துபேரை எடுத்துக்கொண்டால் பத்துபேருக்குமே இந்தப்பிரச்சனை இருக்கும். மனிதர்கள் பெரும்பாலான நேரம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களே. எவ்வளவு படித்தவராக இருந்தாலும் சரி. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.
நீங்கள் நாடறிந்த அறிஞர், ஆன்மிகவாதி என்று வைத்துக்கொள்வோம். சிங்காரச் சென்னையில் ஒரு ஆட்டோவில் போகிறீர்கள். ஆட்டோ ஓட்டுநர் ஒரு வினாடிக்கு மூன்று முறை வலது பக்கமாகக் குனிந்து, ஒவ்வொரு முறையும் ஒருகிலோ அளவுள்ள சமாச்சாரங்களை தன் வாயிலிருந்து துப்பிக்கொண்டே இருக்கிறார் (ஆமாமா என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது). நீங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் துப்புவதை நிறுத்தவேயில்லை. அப்போது எதிர்பாராமல், அல்லது எதிர்பார்த்த மாதிரியே, அவரது வாய்க்குள்ளிருந்து வெளியான திரவம் சட்டென்று காற்றின் உதவியுடன் உங்கள் வெள்ளை வேஷ்டியில் அல்லது சட்டையில் வந்து ’பச்சக்’ என்று அடைக்கலம் கொள்கிறது!
கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று ஆன்மிகக்கூட்டமொன்றில் பேசச்சென்றுகொண்டிருக்கும் உங்களுக்கு அப்போது எப்படி இருக்கும்? சென்னைத் தமிழுக்கு நீங்களும் இறங்கி வெறும் கைகளாலேயே அவன் மென்னியை நெரித்துக் கொன்றுபோட்டுவிடவேண்டும் என்று தோன்றுமல்லவா? அப்போது உங்களால் கீதையின் ஸ்லோகத்தையோ குர்’ஆனின் ஆயத்தையோ,பைபிளின் வாசகத்தை நினைவுக்குக்கொண்டுவர முடியுமா? நிச்சயமாக முடியாது.
நீங்கள் உணர்ச்சியின் கட்டுப்பாட்டில் அப்போது இருப்பீர்கள். உணர்ச்சிக்கு அடிமையாக இருக்கும் கணங்களில் எந்த மனிதனாலும் மனதை ஒருநிலைப்படுத்த முடியாது. பயிற்சிக்குப் போகும்முன் மேற்கண்ட தளைகளிலிலிருந்து மனரீதியாக உங்களை விடுவித்துக்கொண்டு செய்வதே சரியாகும்.
மனிதனாகப் பிறந்தவர்கள் நாம் அனைவரும், அடைய வேண்டிய எல்லை சப்தரிஷி மண்டலம்தான். இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. நம் உயிர்தான், நமக்குச் சொந்தமானது. இந்த உடலுக்காக வாழாமல், நம் உயிருக்காக, நாம் வாழ்ந்தோமென்றால், நம் பூமியில் வாழ்ந்த நம் முன்னோர்களான, மெய்ஞானிகளும், மகரிஷிகளும், தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளையும், இன்னல்களையும் எப்படி நீக்கினார்களோ, அந்த இயற்கையின் வழியில், நாமும் வாழலாம்.
இன்றைய விஞ்ஞானத்தின் பேரழிவிலிருந்து, நம்மைக் காக்கலாம், நம் குடும்பத்தைக் காக்கலாம், நம் ஊரைக் காக்கலாம், நம் நாட்டைக் காக்கலாம், உலக மக்கள் அனைவரையும் காக்கலாம், நம் தாய் பூமியைக் காக்கலாம், இந்த பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்கலாம். இதுதான் மனிதனின் வீரியத்தின் உண்மை,
அகண்ட அண்டத்திலே உருவான படைப்புகளிலேயே, உயரிய படைப்பான, மனிதன் ஒருவனுக்குத் தான், இத்தகைய நிலை பெறக் கூடிய தகுதி உண்டு. இதுவெல்லாம், நம் மகரிஷிகள் கண்ட பேருண்மைகள்.

என்ன கிழமையில் என்ன மூச்சு?

என்ன கிழமையில் என்ன மூச்சு?
எல்லோருக்கும் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மோட்டார் பைக்கா, சி.டி.பிளேயரா, கேமராவுடன் இணைந்த செல்போனா எதுவானாலும் நம்மிடம் இருக்க வேண்டும். இதையே இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லப் போனால் உயர்ந்ததான பொருள் நம்மிடம் இருக்க வேண்டும். நம்மிடம் ‘மட்டும்’தான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. இந்த எண்ணம் தவறா என்ற கேள்வி எழுந்தால், ‘தவறில்லை’ என்பதுதான் பதிலாக இருக்கும். அது நியாயமான பதிலும் கூட! ஆனால், பிரச்னை எங்கு வருகிறது என்றால், அவ்வாறு ஆசைப்படுவர்களில் 99.9 சதவீதத்தினர் அஸ்திவாரமே இல்லாமல் கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறோம். பிரச்னையே இங்குதான் வருகிறது. இதை, முன்னோர்கள் நகைச்சுவையாக, ஒரு சிறிய கதையின் மூலம் அறிவுறுத்துவார்கள்:
ஒரு பெரிய கோடீஸ்வரர், நாலு மாடிக் கட்டிடம் கட்டத் தீர்மானித்தார். கட்டிடம் வேலையை ஐந்து ஒப்பந்தக்காரர்களிடம் பொறுப்பாக ஒப்படைத்தார். பூமி பூஜை போட்டார். ஒப்பந்தக்காரர்களில் நால்வர் மட்டும் வந்திருந்தனர். ஒருவர் வரவில்லை. அதற்காகப் பணக்காரர் கவலைப்படவில்லை. அவர் பூமி பூஜையை முடித்தார். அது முடிந்ததும், வந்திருந்த ஒப்பந்தக்காரர்களிடம், ‘‘ம், பூமி பூஜை போட்டாச்சு. வேலையை ஆரம்பியுங்கள்’’ என்றார்.
ஒப்பந்தக்காரர்களோ, ‘‘அது எப்படிங்க முடியும்? அஸ்திவாரத்துக்குப் பொறுப்பு ஏத்துக்கிட்டவர் வர்லீங்களே! அவர் இல்லாம, நாங்க என்னத்தச் செய்ய முடியும்?’’ என்றார்கள்.
பணக்காரர் அசரவில்லை. ‘‘அட! அதனால் என்ன? அஸ்திவாரம் வெளியில் தெரியவா போகிறது? அது பாட்டுக்கு அடியில் கிடக்கப்போகிறது. அதனால், அஸ்திவாரத்தைப் பிறகு கட்டிக் கொள்ளலாம். முதலில் நீங்கள் நான்கு பேர்களும் உங்கள் வேலையை முடியுங்கள்!’’ என்றார். அதைக் கேட்டதும் ஒப்பந்தக்காரர்கள் சிரித்து விட்டார்கள். பிறகு? சிரிக்காமல் என்ன செய்வதாம்? அந்தப் பணக்காரரைப் போல்தான் நாமும் இருக்கிறோம். அஸ்திவாரத்தை பற்றிக் கவலையே படாமல், மேன்மேலும் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். அதாவது, உடம்பைப் பற்றிக் கவலைப்படாமல், அதே சமயம் உடல்பினால் அடையக் கூடிய அனைத்தையும் அடைய விரும்புகிறோம். வேட்டையாடுகிறோம். விளைவு?
உடம்பு கெட்டுப் போகிறது. அதன் பிறகு, எது கிடைத்து, எது இருந்துதான் என்ன பலன்? ஆரோக்கியம் இல்லாவிட்டால் அகில உலகமுமே நமக்குக் கிடைத்தும் பலனில்லை. அதை அடைய வழி? ‘காலைப் பிடி! காயம் நன்றாக இருக்கும்‘’என்றார்கள் நமது முன்னோர்கள். இதில், ‘கால்’ என்பது, நாம் நடந்து செல்ல உதவுகிறதே, அந்தக் கால்களைக் குறிக்காது; காற்றைக் குறிக்கும். தமிழில் ‘கால்’ என்றால் ‘காற்று’ என்று பொருள். ‘மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே’ என இப்பொருளில்தான். ஔவையார் விநாயகர் அகவலில் கூறி இருக்கிறார். ராமாயணத்தில், ஆஞ்சநேயர் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றார். அங்கே அவர் சீதையைச் சந்தித்தார். அப்போது சீதை, ‘‘ஆஞ்சநேயா! நீ எப்படி கடலைத் தாண்டி வந்தாய்’’ எனக் கேட்டார்.
அதற்கு ஆஞ்சநேயர் ‘‘இக் கருங் கடல் கடந்தது என் காலினால்’’ என்று பதில் கூறினார்(கம்ப ராமாயணம்-சுந்தரகாண்டம்.) ஆஞ்சநேயர் என்ன காலால் நடந்தா கடலைத் தாண்டினார்? ஆகாய வீதி வழியாகப் பறந்தல்லவா வந்தார்? மூச்சுக் காற்றை முறையாக அடக்கிப் பிராணாயாமப் பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு, அதில் சித்தி பெற்றவர்களுக்கு, ஆகாயத்தில் பறக்கும் சக்தி உண்டாகும். இதைத்தான் ஆஞ்சநேயர், காலால் கடலைக் கடந்ததாகக் குறிப்பிட்டார். இவ்வாறு கம்ப ராமாயணத்திலும் ‘கால்’ என்பது காற்றையே குறிக்கிறது. இதையே நமது முன்னோர்கள் ‘காலைப்பிடி, காயம் நன்றாக இருக்கும்’ என்று கூறினார்கள். காற்றைப் பிடித்தால், உடம்பு (காயம்) நன்றாக இருக்கும். என்பதே அதன் பொருள்.
அந்தக் காற்றைப் பிடித்து, உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளும் வழி வகைகளைப் பற்றித் திருமூலர் சொல்வதைச் சிந்திக்கலாம், வாருங்கள்!
ஒரு நாளைக்கு நாம் 21600 தடவை மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த மூச்சுக் காற்று, பிராணவாயு எனப்படும். அந்தப் பிராணவாயுவை இடகலை-பிங்கலை என்னும் இரண்டு நாடிகளில் மாறி மாறி இழுத்து வாங்கி இருத்தி விட்டால், நாடிகள் தூய்மையாகும். இடகலை-பிங்கலை என்பவை, இடது நாசித்துவாரம் வலது நாசித்துவாரம் ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றின் வழியாக நாம் சுவாசிக்கும் காற்றையும் வெளியே விடும் காற்றையும் அதன் போக்கிலே தான் செயல்பட வைத்திருக்கிறோம்.
அவ்வாறு விடாமல், இடகலையில் மூச்சை இழுத்து, பிங்கலையில் விட வேண்டும். பிங்கலையில் மூச்சை இழுத்து, இடகலையில் விட வேண்டும். இப்படிச் செய்வது சுழற்றிக் கொடுத்தல் எனப்படும். இவ்வாறு மாற்றி மாற்றி சுழற்றிக் கொடுக்கும்போது மூச்சுக் காற்றை உள்ளமெனும் தாமரையில் நிறுத்தி, அந்தத் தூய காற்றை நம் உடம்பில் உள்ள எல்லா நாடிகளிலும் பரவச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது ‘பூரித்தல்’ எனப்படும். இவ்வாறு செய்தால் நாடிகள் தூய்மையாகும். உள்ளே உள்ள அசுத்தம் எல்லாம் நீங்கி விடும். தூயகாற்று உள்ளத்தில் நிறைந்தால், நாடி-நரம்புகளில் பரவினால், உடம்பு தானே உறுதியாகும். உறுதியான அந்த உடம்பிற்குத் திருமூலர் ஓர் அற்புதமான உவமை சொல்கிறார். உடம்பு மை போல ஆகி விடுமாம்!
மாந்திரீக மையை, வசியம் முதலான விருப்பங்கள் நிறைவேறுவதற்காக உபயோகிப்பார்கள். அந்த மையை ஹோம அக்கினி மூலம் தயாரிப்பார்கள். அவ்வாறு தயாரிக்கப்பட்ட மையைக் கொண்டு பலப் பல காரியங்களைச் சாதிப்பார்கள். அதுபோல, நம் உடம்பு, ஹோம அக்கினியால் தயாரிக்கப்படாமலேயே, மை போல ஆகிவிடும். அதாவது, ஹோமத் தீயில் தயாரிக்கப்பட்ட மையைக் கொண்டு பலப்பல காரியங்களைச் சாதித்துக் கொள்வதைப்போல, ஹோமத் தீயில் தயாரிக்கப்படாத மை போன்ற இந்த உடம்பைக் கொண்டு நாமும் பலப்பலக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்பது கருத்து.
சூழற்றிக் கொடுக்கவே சுத்தி கழியுங்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
வழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்துடல் அஞ்சனமாமே
(திருமந்திரம்)
இவ்வாறு இடகலை, பிங்கலை, மூச்சுக் காற்றை இதயத்தில் நிறுத்துவது என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்த திருமூலர், அடுத்ததாக ஓர் அற்புதமான தகவலைச் சொல்கிறார். நமக்குத் தெரியாத, தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் அது. எந்த சீரியல் எத்தனை மணிக்கு, எந்தக் கடையில் எது கிடைக்கும், என்றைக்குப் போனால், தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்பதெல்லாம் நமக்கு நன்றாகவே அத்துபடியாக இருக்கிறது. இப்படி வெளி விவகாரங்களில் திறமைசாலிகளாக இருக்கும் நம்மை உள் விவகாரங்களில், அதாவது மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் செயல்களில், திறமைசாலிகளாக இருக்கச் சொல்கிறார் திருமூலவர். மூச்சுக்காற்றின் இயக்கத்தை நாம் சாதாரணமாக நினைத்திருந்தாலும் எந்தெந்த நாட்களில் எப்படியெப்படி மூச்சுக்காற்று இயங்குகிறது என்பதை திருமூலர் தெளிவாகவே சொல்கிறார்.
வெள்ளி வெண் திங்கள் விளங்கும்புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
எள்ளிய தேய்பிறைதான் வலம் ஆமே
(திருமந்திரம்)
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய நாட்களில் இடகலை(இடது மூக்கின்) வழியாகவும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில், பிங்கலை(வலது மூக்கின்) வழியாகவும் மூச்சுக் காற்றின் இயக்கம் இருக்கும். வியாழக்கிழமையில், வளர்பிறை நாளாக இருந்தால், இடகலை வழியாகவும் தேய்பிறை நாளாக இருந்தால் பிங்கலை வழியாகவும் மூச்சுக் காற்றின் இயக்கம் இருக்கும். இவ்வாறுதான் இயங்க வேண்டும்.
எந்தெந்தக் கிழமைகளில் எப்படியெப்படி மூச்சுக்காற்று இயங்கும், இயங்க வேண்டும் என்று கூறிய திருமூலர், அவ்வாறு இயங்குவதால் உண்டாகும் பலன்களையும் கூறுகிறார்.
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய நாட்களில் இடகலை (இடது மூக்கு) வழியாக சுவாசம் இயங்கினால் உயர்ந்ததான இந்த உடம்புக்கு ஒரு குறையும் இல்லை எனப் பரம்பொருளின் அருட்கருணை, மகிழ்வோடு எனக்குக் கூறியது என்கிறார். மற்ற நாட்களில் மூச்சுக் காற்றை ஏற்கனவே சொன்ன முறைப்படி இயக்கத் தெரிந்தவன் யோகியாவான். இறைவனாவான், ஆனந்தப் பரவச நிலையை அடைவான்.
செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு என்னும்
இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்தே புரியவிட்டு
அவ்வாறு அறிவார்க்கு ஆனந்தம் ஆமே
(திருமந்திரம்)
நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக, இவ்வாறு வழிவகைகளைச் சொல்லி வந்த திருமூலர். அந்த வழிவகைகளைச் செயல்படுத்தும் காலத்தையும் கூறுகிறார். ‘சுழற்றிக் கொடுக்கவே’ என்ற பாடலின்படி, உடம்பு உறுதி பெற்றாலும் அனைத்து நோய்களுக்கும் மூல காரணங்களான கபம், வாதம், பித்தம் என்னும் மூன்றும் வந்து தாக்குமே; அவை நீங்க வேண்டாமா? இதுவரை சொன்ன முறைப்படி மூச்சு இயக்கப் பயிற்சிகளை, மாலை நேரத்தில் செய்தால், கப நோய் நீங்கும்; நடுப் பகலில் செய்தால், வஞ்சகமான வாதநோய் நீங்கும்; விடியற்காலையில் செய்தால், பித்த நோய் நீங்கும் என நேரத்தையும் அறிவுறுத்தினார், திருமூலர்.
அதுமட்டுமல்ல ‘‘இவ்வாறெல்லாம் செய்தால் கப, வாத, பித்தங்கள் மட்டும்தான் நீங்கும் என எண்ண வேண்டாம். நரை, திரை (பார்வைக்குறைவு) கூட நீங்கும். இவ்வளவும் உங்கள் உடம்பில் உள்ள விஷத்தன்மை நீங்குவதற்காகத்தான் சொன்னோம்’’ என்கிறார், திருமூலர்.
அஞ்சனம் போன்றுடல் ஐ அறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில்
செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தனும்
நஞ்சறச் சொன்னோம் நரை திரை நாசமே
(திருமந்திரம்)
அனைத்திற்கும் காரணமானது அடிப்படையானது உடம்பு. அது நன்றாக இருக்க வேண்டுமானால் இடகலை-பிங்கலை என்னும் மூச்சுக் காற்றின் வழிவகைகளை அறிய வேண்டும். மூச்சுக்காற்று எந்தெந்தக் கிழமைகளில் எவ்வாறெல்லாம் இயங்குகிறது, இயங்க வேண்டிய அந்த முறைப்படி இயங்கினால், என்னென்ன நோய்கள் விலகும் என்றெல்லாம் நமது நன்மைக்காகவே திருமூலர் சொல்லியிருக்கிறார். திருமூலர் சொன்ன இந்த யோகப் பயிற்சி முறைகளை, நல்ல குருநாதரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். நூல்களில் கூறியிருப்பதை நாம் தனியாகப் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஏதேனும் தவறு நேர்ந்தால், அதை அறிவுறுத்தி, திருத்த நூல்களால் இயலாது. ஆகையால் தகுந்த குருநாதர் ஒருவர் மூலம் மூச்சுக்கலை பயிற்சியை மேற்கொள்வோம்! முழுமையான ஆரோக்கியத்தை அடைய முயல்வோம்!

சப்த கன்னிகைகள் யார்

சப்த கன்னிகைகள் யார்
பல ஆலயங்களிலும் நாம் சப்த கன்னிகைகள் என்ற ஏழு கன்னிகளின் சிலைகள் இருப்பதைப் பார்த்து இருக்கலாம். ஆலயங்களில் சென்று அங்குள்ள தெய்வங்களை துதித்தப் பின் அங்குள்ள சப்த கன்னிகைகளையும் துதித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள். அதற்குக் காரணம் யுத்தங்களில் தமக்கு உதவுவதற்கு சிவன். பார்வதி, விஷ்ணு, பிருமா, முருகன், துர்க்கை போன்ற கடவுட்களே அந்த தேவதைகளை படைத்துள்ளனர் என்று நம்பப்படுவதே . அந்த தேவதைகளை ஆராதிக்க த்யான ஸ்லோகங்கள் உள்ளன. ஆகவே அவர்களை ஆராதித்துத் துதித்தால் நமக்குள்ள எதிரிகள் ஓடி விடுவார்கள் . தீமைகள் அண்டாது. பயம் விலகும் என்பது பரவலான நம்பிக்கை.
அவர்கள் யார்? அந்த கன்னிகைகளை பற்றி தேவி மகாத்மியம், லிங்க புராணம், மத்சைய புராணம், வராக புராணம் போன்ற புராணங்களில் குறிப்புகள் உள்ளன. சிலவற்றில் அவர்கள் ஏழு கன்னிகைகள் இல்லை, அவர்கள் எட்டு (அஷ்ட ) கன்னிகாக்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் பொதுவாக உள்ள ஏழு கன்னிகைகள் சாமுண்ட, இந்திராணி, வைராலி அல்லது வராஹி , வைஷ்ணவி, கெளமாரி, மகேஸ்வரி மற்றும் பிரம்மி என்பவர்களே . அவர்கள் தோன்றியது எப்படி? அது குறித்து கூறப்படும் கதைகள் இவை.
சூரபத்மனை அழிக்க அதி சக்தி வாய்ந்த குழந்தையை பிறப்பிக்க நினைத்த சிவபெருமானின் மூன்றாம் கண்ணில் இருந்து தெறித்த கனலில் ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்களை அப்போது அங்கு வந்த ஆறு கன்னிகைகள் கவனித்துக் கொண்டனர். அதைக் கண்ட பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக இணைத்து ஒரே குழந்தையாக- முருகனாக - ஆக்கினாள். அந்த ஆறு குழந்தைகளையும் கவனித்துக் கொண்ட கன்னிகைகளை நட்ஷத்திரங்களாக மாற்றினாள். மேலும் அவர்கள் முருகன் பிற்காலத்தில் செய்ய உள்ள ஒரு யுத்தத்தில் அவருக்கு துணையாகப் போராடும் யுத்த கன்னிகைகளாக இருப்பார்கள் என்பதற்காக அவர்களை அப்படியாக மாற்றினாளாம். அவர்களே பார்வதியினால் ஏற்படுத்தப்பட்ட ஏழு கன்னிகைகள்.
இன்னொரு கதையின்படி கார்த்திகேயர் (முருகன் ) பிறந்ததும் அவரைக் கொல்ல இந்திரன் ஏழு பெண்களை அனுப்பினார். அந்த குழந்தையின் அருகில் வந்த அந்த கன்னிகைகளின் மார்பில் இருந்து பால் சுரக்கத் துவங்கி வெளியில் வழிய குழந்தைப் பாசம் சுரந்த அவர்கள் தாம் கொல்ல வந்த அந்த குழந்தைக்கு பாலூட்டி அவரை பாதுகாத்தனர். அவர்களே பின்னர் முருகன் புரிந்த போரில் அவருக்கு துணை இருந்தவர்கள்.
மூன்றாம் கதையின்படி அந்தகாரா என்ற அசுரனுடன் சிவபெருமான் புரிந்த போரில் அவருக்கு துணை புரிய அவர் ஏழு பயங்கரமான நெருப்புக் கக்கும் கன்னிகைகளையும் படைத்தாராம். அந்தகாராவின் ரத்தம் பூமியில் விழ விழ அதில் இருந்து மேலும் மேலும் அவனுக்கு துணை புரிய அசுரர்கள் தோன்றிக் கொண்டே இருந்தார்கள் என்பதினால் அந்த ரத்தம் பூமியில் விழாமல் அதை ஆகாயத்திலேயே அந்த ஏழு கன்னிகைகளும் குடித்து மேலும் அசுரர்கள் உயிர் எழாமல் இருக்க வைக்க சிவபெருமான் வெற்றி பெற்றார். இப்படியாக அந்த கன்னிகைகள் சிவபெருமானுக்கு அந்த யுத்தத்தில் உதவினார்களாம்.
வாமன புராணத்தில் காணப்படும் இன்னொரு கதை இது. ஒரு முறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பயங்கரமானப் போர் மூண்டது . ராஜபிக்ஷா என்ற அசுரன் 21870 தேர்கள் மற்றும் 65610 குதிரைகள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படையினரை கொண்டு வந்து யுத்தம் செய்தான். அதைக் கண்ட கௌசிக்கி, காளி மற்றும் மகேஸ்வரி பயங்கர கர்ஜனை செய்தனர். அப்போது மகேஸ்வரியின் வாயில் இருந்து அன்னத்தில் அமர்ந்தபடி பிராமணி, கண்களில் இருந்து மூன்று கண்களைக் கொண்டு காளை மீது அமர்ந்து வந்த ஒருவள் , தொடையில் இருந்து மயிலில் அமர்ந்து கௌமாரி, கைகளில் இருந்து கருடனில் அமர்ந்து வைஷாலி, புட்டத்தில் இருந்து பன்றித் தலையைக் கொண்ட நாகத்தின் மீது அமர்ந்து இருந்த பயங்கரமான வராஹி, இதயத்தில் இருந்து நரசிம்ஹை , காலில் இருந்து சாமுண்டி என கன்னிகைகள் வெளி வந்தனர். அவர்களே சப்த தேவதைகள் எனப்பட்டவர்கள். ஆனால் பின்னர் அந்த தேவதைகளைப் பற்றி கூறப்படும் காட்சிகள் மற்றும் அவர்களைக் குறிப்பிடும் பெயர்களில் சில வேறாக இருந்தன .
எது உண்மையோ நமக்குத் தெரியவில்லை ,ஆனால் ஏழு கன்னிகைகளின் சிலைகள் பல ஆலயங்களில், முக்கியமாக தேவி ஆலயங்களில் சாந்தமான ரூபங்களில் ஒரே இடத்தில் வரிசையாக வைக்கப்பட்டு உள்ளன. நம்பிக்கையின்படி அந்த தேவிகள் ஆலயங்களில் உள்ள அந்தந்த கடவுட்களுக்கு துணைப் புரியவே அங்கு ஸ்தாபிக்கப்பட்டு உள்ளார்கள் எனக் கருதுகிறார்கள். ஆனால் போரில் யுத்த தேவதைகளாக அந்த கன்னிகைகள் கலந்து கொண்ட போது அவர்களின் உருவங்கள் வெவ்வேறானவையாக இருந்தன .
அவை என்ன?
பத்து கைகளைக் கொண்ட சாமுண்டா என்பவள் மனிதத் தலையை ( கபாலம்) கையில் வைத்து கொண்டு பாம்புகளை மாலையாக அணிந்து மூன்று கண்களுடனும், நரியின் மீது அமர்ந்து கொண்டு பயங்கரமாகக் காட்சி அளிப்பவள். வைராலி என்பவளுக்கு மனித உடம்பு, ஆனால் பன்றித் தலை. வஜ்ராயுதம், வாள் போன்றவற்றை கைகளில் ஏந்தியவள். வாகனம் எருமைக் கடா மாடு. இந்திராணியும் கையில் அங்குசம், மற்றும் கதையை ஏந்திக் கொண்டு யானை மீது அமர்ந்துகொண்டு வருபவள். அவளுக்கு ஆயிரம் கண்களாம். ஆறு கைகளைக் கொண்ட வைஷாலி என்பவள் கருடன் மீது அமர்ந்து கைகளில் சங்கு சக்கரம் கொண்டு கருத்த உருவில் காணப்பட்டவள். மகேஸ்வரியோ வெளுத்து காணப்படுபவள். கையில் கோடாலி, திரிசூலம் மற்றும் மத்தளத்தை வைத்து இருந்தாள். மூன்று கண்கள் மற்றும் பத்து கைகள் உண்டு. பிரம்மியோ அன்னப் பறவை மீது அமர்ந்து வராக மற்றும் அபாய முத்திரை காட்டுபவள். அவள் உடலின் நிறம் மஞ்சள்.கைகளோ நான்கு. கவுமாரியும் மஞ்சள் நிறத்தவள். ஆறு தலைகளைக் கொண்டவள். பதிமூன்று கண்களைக் கொண்டவள். ஒரு முகத்தில் மூன்று கண்கள், மற்றதில் இரண்டு கண்கள். அவளும் அபய மற்றும் வராக முத்திரை காட்டுபவள். ஆயுதத்தை தன்னுடன் வைத்து இருப்பவள்.

Sunday, April 20, 2014

மனிதன் தன்னை மானிட சமூகமாகிய கடலுள் சேர்த்து கெள்ளா விட்டால் வரண்டுதான் போவான்

ஒரு துளி தண்ணீர்.
ஒரு சமயம் கெளதமர் சீடர்களை பார்த்து, "ஒரு துளி தண்ணீர்
எக்காலத்திலும் காய்ந்து போய் விடாமல் காப்பது எப்படி..?" என்று கேட்டார்.
...
எவர்க்கும் பதில் தெரியாது சிந்திக்கலாயினர். புன்னகைத்து விட்டு பெருமானே பதிலை சொன்னார். "அதை கடலுள் சேர்ப்பதால்..!"
மனிதன் தன்னை மானிட சமூகமாகிய கடலுள் சேர்த்து கெள்ளா விட்டால் வரண்டுதான் போவான்.

Saturday, April 19, 2014

மெளனமாக இருப்பவர்களின் பலம், திறன் என்ன என்பதை ஒருபோதும் மதிப்பிடவே முடியாது.

கூக்குரலின் இயலாமை.
-----------------------------------
முதன்முறையாக கழுகுகுஞ்சு இரையாக வாத்துகுஞ்சை தூக்கி வந்து விட்டு தனது தாயிடம் "இந்த குஞ்சை நான் கவ்வியபோது அதன் தாய் தன் குஞ்சை காப்பாற்ற முயற்சி செய்தாள். முடியாத போது மெளனமாக இருந்து விட்டாள்" என்றது. "அந்த வாத்தைப் பகைக்க வேண்டாம். இதை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு, வேறு இரை தேடி வா..!" என்றது தாய் கழுகு.
...
குஞ்கு மறுபடி ஒரு கோழிக்குஞ்சை கொண்டு வந்து விட்டு "அம்மா.., கோழி என்னை எகிறி எகிறித் துரத்தப் பார்த்தது. முடியாது போக எனக்கு ஏகப்பட்ட சாபம் கொடுத்தது. பேசாமல் விட்டுவிட்டு வந்து விடலாமா என்றுகூட யோசித்தேன்" என்றது. "அந்த கோழியால் பிரச்சனை இருக்காது. இதை நீ சாப்பிடலாம்..!" என்றது தாய்க்கழுகு.
கூக்குரல் போடுபவர்கள் தங்களின் இயலாமையை விரைவாகவே வெளிக்காட்டி விடுகிறார்கள். தன்னை பற்றி இரைச்சலாக சொல்லி கொள்ளாது மெளனமாக இருப்பவர்களின் பலம், திறன் என்ன என்பதை ஒருபோதும் மதிப்பிடவே முடியாது.
-ஈஷாப்கதை.

அக்னி நட்சத்திரத்தில் செய்யத்தகுந்தவை-------அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை*

அக்னி நட்சத்திரத்தில் செய்யத்தகுந்தவை*
*உபநயனம்
*கல்யாணம்
*யாகம்...
*சத்திரங்கள் கட்டுதல்

போன்ற சுபகார்யங்கள் செய்யலாம்.
இதில் கல்யாணம் செய்யலாம் என உள்ளது.ஆனால் பல பொதுமக்கள் கல்யாணம் வைக்க பயப்படுகிறார்கள்.இதுபோன்ற சமயங்களில் ஜோதிடர்கள்தான் அவர்களுக்கு புரியவைக்கவேண்டும்.
*அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை*
*செடிகள் வெட்டுவது
*நார் உரிப்பது
*வீடு கட்ட துவங்குவது
*கிரகபிரவேசம் செய்தல்
*விதை விதைத்தல்
*கிணறு வெட்டுதல்
*தேவதா பிரதிஷ்டை
போன்ற விஷயங்கள் கூடாது என சொல்லப்பட்டுள்ளது.
இங்கே தேவதா பிரதிஷ்டை என சொல்லப்பட்டது புதிதாக ஆலயநிர்மாணம் செய்து புதிய விக்ரஹங்களை ப்ரதிஷ்டை செய்வதையே குறிக்கும.
பழைய ஆலயங்களில் செய்யப்படுகின்ற ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகத்திற்கு இந்த விதி பொருந்தாது.எனவே பழைய ஆலயங்கள் சிதிலமடைந்த காரணத்தால் பாலஸ்தாபனம் செய்து ஆலயத்தை புதுப்பித்து செய்யப்படும் ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் செய்யலாம்.என்பது அடியேனின் கருத்து.
நன்றி.
-வெங்கடேச குருக்கள்

அஷ்டதிக் பாலகர்கள் வழிபாடு:-

அஷ்டதிக் பாலகர்கள் வழிபாடு:-
பொதுவாக மக்கள் செய்கின்ற நற்காரியங்களையும் தீயகாரியங்களையும் ஆதித்யன், சந்திரன், அஷ்டதிக் பாலகர்கள் கண்காணித்துக் கொண்டு அச்செயல்கள...ுக்கு ஸாக்ஷியாக இருக்கின்றனர். எனவே மனிதன், தர்ம வடிவாயமைந்த அவர்களுடைய அருளைப் பெறுவதற்கும் தீயவற்றை யகற்றி, நற்காரியங்களைச் செய்து வந்தால் எல்லா மங்களங்களையும் பெறுகின்றான் என்பது அச்செய்யுளின் கருத்தாகும். அஷ்டதிக் பாலகர்களைத் துதிப்பதால் எல்லா நிறைவுகளையும் பெறலாம்.
1.இந்திரன்
இந்திரன் - யுபாசிப்பதால் மக்கள் ஐச்வர்யத்தையும் ஸூகத்தையும் பெறுகின்றனர்.
ஐராவத கஜாரூடம்
ஸ்வர்ணவர்ணம் கிரீடிநம்
ஸகஸ்ர நயநம் ஸக்ரம்
வஜ்ரபாணிம் விபாவயேத்
2.அக்னி
அக்நி- யுபாசித்து ஒளி மிக்க திருமேனியைப் பெறுவதோடு, நற்பயன்களையும் அடையலாம்.
ஸப்தார்சிஷம் ச பிப்ராணம்
அக்ஷமாலாம் கமண்டலும்
ஜ்வாலாமாலாகுலம் ரக்தம்
ஸக்திஹஸ்தம் சகாஸநம்
3.எமன்
எமன் -யுபாசிப்பதால் தீவினைப் பயனை அகற்றி, நல்வினைப் பயனைப் பெற்று விளங்கலாம். இவன் தர்மத்தின் வடிவினன்.
க்ருதாந்தம் மஹிஷாரூடம்
தண்டஹஸ்தம் பயாநகம்
காலபாஸதரம் க்ருஷ்ணம்
த்யாயேத் தக்ஷிணதிக்பதிம்
4.நிருதி
நிருதி- யிபாசிப்பதால் பகைவர்கள் பயம் விலகும்.
ரக்தநேத்ரம் ஸவாரூடம்
நீலோத்பல தளப்ரபம்
க்ருபாணபாணி மாஸ்ரௌகம்
பிபந்தம் ராக்ஷஸேஸ்வரம்
5.வருணன்
வருணன் - மழையைப் பொழிந்து பயிர்களை வளரச் செய்து மக்களுக்குக் களிப்பை உண்டுபண்ணி ஸூகத்தைக் கொடுப்பவன்.
நாகபாஸதரம் ஹ்ருஷ்டம்
ரக்தௌகத்யுதி விக்ரஹம்
ஸஸாங்க தவளம் த்யாயேத்
வருணம் மகராஸநம்
6.வாயு
வாயு- வடிவமற்றவன். மக்களுடைய ப்ராணணுக்கு ஆதாரமாயுள்ளவன். இவனை உபாசிப்பதால் நீண்ட ஆயுளையும், பலத்தையும் பெறலாம்.
ஆபீதம் ஹரிதச்சாயம்
விலோலத்வஜ தாரிணம்
ப்ராணபூதம்ச பூதாநாம்
ஹரிணஸ்தம் ஸமீரணம்
7.குபேரன்
குபேரன் மக்களுக்கு ஸூகத்தைக் கொடுத்து ஸம்பத்தையும் செல்வத்தையும் வளரச் செய்பவன்.
குபேரம் மநுஜாஸீநம்
ஸகர்வம் கர்வவிக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம்
உத்தராதிபதிம் ஸ்மரேத்
8.ஈசானன்
ஈசாநன் - மங்கள வடிவினன். இவன் மக்களுக்கு அறிவை வளரச் செய்து ஞானத்தைப் பெருக்கி விடுதலையைக் கொடுப்பவன்.
ஈஸாநம் வ்ருஷபாரூடம்
த்ரிஸூலம் வ்யாலதாரிணம்
சரச்சந்த்ர ஸமாகாரம்
த்ரிநேத்ரம் நீலகண்டகம்.

கிரகண காலத்தில் கட்டாயம் குளிக்கத்தான் வேண்டுமா?

கிரகண காலத்தில் கட்டாயம் குளிக்கத்தான் வேண்டுமா?
சூரியன் அல்லது சந்திரன் மீது பூமியின் நிழல் படர்ந்து மறைக்கப்படுவதை கிரகணம் என்கிறோம். சூரிய, சந்திர ஒளி இல்லையேல் பகல், இரவு என்னும் காலங்கள் இல்லை. மழை பெய்யாது. பயிர்கள் விளையாது. பூமி மற்றும் அதில் வாழும் உயிர்கள், அவற்றின் உணவுப் பொருட்கள் எல்லாமே சூரிய சந்திர ஒளிக்கதிர்களினால் அன்றாடம் தமக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கின்றன. இப்படி இறையருளால் இயற்கையாக நமக்குக் கிடைக்கும் சூரிய சந்திரர்களின் இயல்பான ஒளி மறைக்கப்பட...்டு குறிப்பிட்ட நாழிகை அவற்றின் கிரகண கால ஒளி, பூமி மற்றும் அதில் உள்ள எல்லாவற்றின் மீதும் படுகிறது. இதனால் 'மஹா ஸ்பரிசம்' என்னும் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இன்றைய விஞ்ஞானிகளும் கிரகணத்தினால் சில மாறுபாடுகள் ஏற்படுவதையும் நேரடியாகக் கண்களால் பார்க்கக் கூடாது என்றும் கூறுகின்றனர். எனவே இந்த தோஷம் நீங்குவதற்காக கிரகணம் விட்ட பிறகு தலைக்கு குளித்து, விபூதி குங்குமம் இட்டுக் கொண்டு இறைவழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்

ஞானமடைவதற்கு இந்த இடம்தான் சிறந்தது

ஞானமடைவதற்கு இந்த இடம்தான் சிறந்தது என்று

எதுவுமில்லை
புத்தர் அந்த ஊருக்கு செல்ல தனது அரண்மனை வழியாக
...
செல்லவேண்டியதாக இருந்கிறது. எப்படியும் அவரின் ஊர்

வழியாக சென்றால், உற்றார் உறவினர், தம் குடும்பத்தாரை

எல்லாம் சந்திக்க வேண்டிவருமே.

அப்படி அவர்களை சந்தித்தால்.., அவர்கள் மிக

வருந்துவார்களே..! முக்கியமாய் அவரின் மனைவி யசோதா

இந்த செய்தியை கேள்விப்பட்டால் மிகுந்த மன உளைச்சலுக்கு

ஆளாவாளே என்று வருந்தினார் புத்தர்.

இருந்தாலும்.., எல்லாரையும் தன் அன்பால்

சமாதானப்படுத்திவிட முடியும் என்று முழுமையாய் நம்பினார்.

தன் பிறந்த தேசத்திற்குள் அடியெடுத்து வைத்ததும். மக்கள்

குதூகலித்தனர்.. கூக்குரலிட்ட விழுந்து தொழுது எதேதோ

செய்து தம் அன்பை வெளிப்படுத்தினர்.

அப்போது புத்தரின் முக்கிய சீடர் ஆனந்தர் கேட்டார். "உங்கள்

நாட்டில் இப்படி அன்பான மக்கள் இருக்க..! எப்படி

இவர்களைவிட்டு வர முடிந்தது..?"

புத்தர் சொன்னார், "அவர்கள் அன்பை வெளியில் தேடியும்..,

கண்டுகொண்டும்விடுகிறார்கள்.

நானோ உள்ளே தேடவேண்டி

இருந்தது. அதனால் வந்தேன்." என்றார்.

புத்தர் மீண்டும் சொன்னார்.

"ஆனந்தா.. நிச்சயம் நான் தடுமாற போகிறேன்.

என் பாதையை கவனி என்று புன்னகைத்தார்..!"

ஆனந்தருக்கோ ஆச்சரியம்.

மிகவும் சுத்தமான புதிதாக இடப்பட்ட தெருவில் கண்ணுகெட்டிய

தூரம் வரை எந்த பள்ளமோ கல்லோ கட்டைகளோ இல்லை.

புத்தரும் தெம்பாய் தெளிவாய் நடக்கிறார்.

எப்படி தடுமாற போகிறார் என்று சிந்தித்தபடியே நடந்தார்.

அங்கே தூரத்தில் ஒரு அரண்மனை தெரிந்தது.

அடுத்த சில நிமிடங்களில்.திடீரென, ஒரு பெரும் கூட்டமாக

மக்கள் அரண்மனையில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.

புத்தரை
நோக்கி கைக்கூப்பி நின்றனர்.

சிலர் சாஷ்டாங்கமாய் விழுந்து தொழுதனர்.

அப்போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்.

வணங்குவதற்கான எந்த செய்கைகளும் இல்லாமல்

புத்தரை நோக்கி வந்தாள்.

புத்தரும் நேரே சென்றவண்ணம் இருந்தார்.

அந்த பெண்ணின் கண்களில் நீர்விட ஆரம்பித்தார்.

கைகள் அதுவாக கூப்பிநின்றன.

அந்த அம்மையாரின் அருகில் வந்துநின்றார் புத்தர்.

"நலமா..?" என்றார் அந்த பெண்.

"நலம் யசோதா..!" என்றார் புத்தர்.

"ஒரு கேள்வி கேட்கலாமா..?" என்றாள் யசோதா.

"எங்கெங்கோ காடுமலைகள் சுற்றி திரிந்து அடைந்த ஒன்றை...!

இந்த அரண்மனையிலேயே அடைந்திருக்க முடியாதா..?"

என்றார்.

புத்தர் வாயெடுத்தார்...,

ஆனால் சொல் வரவில்லை.

முயன்றார். ஆனால் முடியவில்லை..!

இப்போதுதான் ஆனந்தர் புத்தர் முதல்முறையாக

தடுமாறுவதை பார்க்கிறார்.

எதுவும் பேசாமல் புத்தர் மெளனமாக அந்த இடத்தை விட்டு

விலகி சென்றார்.

ஆனந்தருக்கோ ஆச்சரியம்..!

புத்தரிடம் கேட்டார்.., "ஏன் தடுமாறினீர்கள் புத்தரே..?"

புத்தர் சொன்னார்..,

"ஞானமடைவதற்கு இந்த இடம்தான் சிறந்தது என்று

எதுவுமில்லை என்று எனக்கு தெரியும்.

அதை வீட்டிலும், காட்டிலும் எங்கும் அடையலாம்.

எங்கும் அடையலாம் என்று சொல்லி அவளுக்கு

புரியவைக்கவும் முடியுமா..?

அல்லது அரண்மனையில் முடியாது என்று அவளிடம் பொய்

சொல்லவும் முடியுமா..?" என்றார் புத்தர்.

ஆனந்தர் தெளிவாய் புன்னகைத்தார்.

புத்தருடன் பயணத்தை தொடர்ந்தார்.

சேவையே மேலான பாக்கியம்

சேவையே மேலான பாக்கியம்
மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலாக பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.
சேவை என்று தெரியாமலே அவரவரும் குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்திரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டங்களுக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக் கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதனாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும் என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும். நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.
மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடு போன்ற ஜீவன்களுக்கும் சேவை செய்ய வேண்டும். பழைய நாளில் கால்நடைகளுக்காக என்றே குளம் வெட்டுவது. அவை தினைவு தீர்த்துக்கொள்வதற்காக உராய்ந்துகொள்வதற்கு அங்கங்கே கல் போடுவது என்று வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தினமும் ஒவ்வொருவரும் ஒரு மாட்டுக்கேனும் ஒரு பிடி புல்லோ, அகத்திக் கீரையோ கொடுக்க வேண்டும். மாட்டுக்கு ஒரு பிடி புல் கொடுப்பதை “கோ க்ராஸம்” என்றால் ஒரு வாயளவு (Mouthful) இங்கிலீஷில் புல்லை grass என்பதுகூட இதிலிருந்தே வந்திருக்கலாம்.
யாகம், யக்ஞம், தர்ப்பணம், திவஸம் முதலிய இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, மற்ற உலகங்களிலிருப்ப வர்களுக்கும் நம் சேவையை விஸ்தரிக்கின்றன என்ற உணர்வோடு அவற்றைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மந்திரத்தோடு சேர்த்துச் செய்யப்படும் சேவை.
நம்மைப் போலவே செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக்கொண்டு எல்லோரும் ஒரே சங்கமாக ஒரே அபிப்ராயமாக இருந்துகொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது நிறையப் பண் செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கடங்கள் உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் அத்தியாவசியம். மான அவமானத்தைப் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.
பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கிற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவழிக்க வேண்டும்.
வாழ்க்கைத் தொல்லை களிலேயே கொஞ்சம் உல்லாச மாகப் போக்குவது ஒரு தப்பா என்று கேட்பீர்கள். உங்களுக்குச் சொல்கிறேன். பரோபகாரமாகச் சேவை செய்தால் அதுவே பெரிய உல்லாசம் என்று தெரியும். அதுவே விளையாட்டு. அதுவே இன்பம்.
கிருஷ்ண பரமாத்மா இப்படித்தான் வெளியிலே விளையாடுவதாகத் தெரிந்தாலும், உள்ளே அத்தனையும் பரோபகார சேவைதான் செய்தான். எத்தனை பேருடைய, எத்தனை எத்தனை கஷ்டங்களை விளையாட்டாகவே போக்கடித்தான். குன்றைத் தூக்கிப் பிடித்தது விளையாட்டு மாதிரி இருக்கும். ஆனால் கோபர்களைக் காப்பதற்கே அவ்வளவு பெரிய மலையை பாலகிருஷ்ணன் தூக்கினான். சின்னக் குழந்தை விஷம் கக்கும் காளிங்கனின் படத்திலே நர்த்தனம் செய்தது வெளியிலே பார்த்தால் விளையாட்டு. உண்மையில் அதுவும் ஜனங்களைக் காத்து அவர்களுக்கு நீர் நிலையை மீட்டுத் தருவதற்காகச் செய்த சேவைதான். இப்படித்தான் எத்தனையோ சேவைகள் செய்தான். இப்படித்தான் எத்தனையோ விளையாட்டுகள் செய்தான். அத்தனையும் சேவை. எவனைப் போல் விளையாடினவன் இல்லையோ அவனைப்போல் சேவை செய்தவனுமில்லை என்று கிருஷ்ண பரமாத்மாவின் உதாரணத்தில் பார்க்கிறோம்.
லெளகிக சேவை மட்டுமில்லை. ஞான சேவையும் நிறைய செய்தான். அர்ஜுனன், உத்தவர் போன்றவர்களுக்கு மகா உபதேசங்கள் செய்தான். சேவை, ஞானம், விளையாட்டு எல்லாம் அவனிடம் ஒன்றாக இருந்தன. துளிக்கூடப் பற்றுதல் இன்றியே இத்தனையும் செய்தான். அதனாலேயே அநாயாசமாகச் செய்ய முடிந்தது. நம்மிலும் சேவை செய்கிறவர்களுகெல்லாம் இந்தச் சிரிப்பும் சாந்தமும் எப்போதும் இருக்க வேண்டும். தைரியம், ஊக்கம் இவற்றோடு.
பகவான் எடுத்த பல அவதாரங்களில் கிருஷ்ணவதாரத்தில்தான் சேவை அதிகம். ராமாவதாரத்தில் சேவைக்கென்றே ஆஞ்சநேய ஸ்வாமி வந்தார். இவர்கள் இருவரையும் ஸ்மரித்து நாமும் சுத்தமான உள்ளத்துடன், எந்த சுயநலமும் கருதாமல் எவ்வித விளம்பரத்துக்கும் ஆசைப்படாமல் சேவை செய்ய வேண்டும். நமக்குத் தீட்டு ஏற்பட்டால் அச்சமயத்தில் உலகோடு சேர முடியாமல் ஒதுங்கியிருக்கிறோமல்லவா. அவ்விதமே உலகுக்கு உபயோக மாகச் சேவை செய்யாத ஒவ்வொரு நாளும் நமக்குத் தீட்டு நாள் என்று கருதி, அவரவரும் தம்மாலான சேவையில் ஈடுபடவேண்டும்.
ஜீவராசிகளுக்குச் செய்கிற உபகாரத்தால் சகல பிராணிகளுக்கும் மாதா பிதாவாக இருக்கப்பட்ட பரமேஸ்வரனுக்கே பூஜை பண்ணியதாக ஆகிறது. இதைத்தான் திருமூலர் திருமந்திரத்திலும் சொல்லியிருக்கிறது.
நடமாடக் கோயில் நம்பர்க் கொன் றீயின்
படமாடக் கோயில்பகவற்கீ தாமே.
இதற்கு அர்த்தம், மக்களுக்குச் செய்கிற உதவி சாட்சாத் ஈசுவர ப்ரீதியாகச் செய்கிற பூஜையே ஆகும் என்பது.

கலியுகத்தில், தர்மம் எப்படி இருக்கும்?

கலியுகத்தில், தர்மம் எப்படி இருக்கும்? மக்களின் எவ்வாறு வாழ்வார்கள், அவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்.. இதை பற்றி நம் வேதங்களிலும் புராணங்களிலும் இப்படியாக குறிப்பிடபட்டுள்ளன.!
ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாக்க மாட்டார்கள்.. வரி வசீலித்து மக்களை கொடுமை படுத்துவதில் குறியாய் இருப்பார்.
ஆட்சியாளர்களிடம் நல்லவர் மேன்மக்கள் வேலை செய்ய மாட்டார்கள்.. வெறும் திருடர்களே அவர்களிடம் இருப்பார்.. ஆட்சியாளர்களும் திருடர்களாகவே இருப்பார்.
அனைவரும், பணம் சேர்ப்பதிலும் கொள்ளை அடிப்பதிலும் குறியாய் இருப்பார்.
ஆட்சியை கைப்பற்ற, தற்காக்க, சொந்த குடிமக்களையே ஆட்சியாளர்கள் கொல்வர.
15 வயதுகளில் பெண்கள் தாயாவர்கள். பெண்கள் பணமே குறியாய் இருப்பார். பணத்திற்காக அன்னிய ஆடவர்களுடன் கூடுவர்.
ஆண்கள், தங்கள் மனைவியை விட்டு விட்டு, திருமணம் ஆன வேறு பெண்களிடம் கூடுவர்.. விருப்பபடி பெண்களை வைத்து கொள்வர்.
தாய்க்கும் சகோதரிக்கும் மனைவிக்கும் வித்தியாசம் தெரியாது..
சிறிதளவு கல்வி அறிவு பெற்றாலே , ஒருவன் பெரும் ஞானியாக அறியபடுவான்..எவனிடம் செல்வம் உள்ளதோ, அவனே பெரியவனாவான்.. எவன் பலசாலியோ, அவனே, தலைவனாவான்.
எந்த மனிதனையும் நம்ப முடியாது. திருட்டு, கொள்ளை, சூழ்ச்சி, வன்மம், வக்கீரம், நிறைந்து, மற்றவர்களுக்கு கொடுமை செய்பவர்களாகவே மக்கள் இருப்பார்.
மனிதனுக்கு ஆன்ம அறிவு அறவே இருக்காது.. பலாத்காரம் செய்தே.. தன் நம்பிக்கைகளை மற்றவர் மீது திணிப்பார்.
சொந்த நாட்டு மக்களையே கொடுமை செய்வர்.. பலர் அகதிகளாகி தாம் பிறந்த நாட்டை விட்டு பிரிந்து செல்வர்.
மிக கடுமையான கொச்சை மொழியையே பேசுவர். சுடு சொற்களால் மனதை வேதனை படுத்துவர்.
மனைவி கணவனை மதிக்க மாட்டாள்.. கணவன் மனைவியை அடிமையாக கருதுவான்.. பிள்ளைகள் பெற்றோர்களால் கைவிட படுவர். பிள்ளைகளும்.பெற்றோர்களை பாதுகாக்காமல் கைவிடுவர்.. ஒருகாலும் அவர்களை மதிக்க மாட்டார்கள்.
வியாபாரிகள் லாபமே குறிகோளாக இருப்பார். அனைத்திலும் கலப்படம் இருக்கும்..
உலகம் முழுவதும், போரும், படுகொலைகளும் நடக்கும். மக்கள் லட்சகணக்கில் மடிவர்..
மனிதன் செய்யும் பாவங்களால், மேலும் மேலும் நோய்கள் பெருகும். பஞ்சம், வறட்சி, நிலநடுக்கம், போன்றவை உண்டாகும்.. மேலும் மேலும் மக்கள் மடிவர்.
குழைந்தைகள் கர்பத்தில்கொலை செய்ய படுவர்.. கன்னி பெண்கள் வியாபார பொருளாவர்!
மக்கள் பஞ்சத்திலும் பட்டினியிலும் துன்ப படுவர்.. ஆட்சியாளர்கள் அதை கண்டு கொள்ள மாட்டார்கள்.. சுகபோகத்தில் வாழ்வதிலியே காலத்தை கழிப்பர்.
பசுக்கள் பெரும் அளவில் கொல்ல படும்.. விவசாயம் குறையும். மேலும் மேலும் உணவு பற்றாக்குறை உண்டாகி மக்கள் மடிவர்.
பெற்ற மகளை தந்தையும் தாயும், விலைக்கு விற்பர்.. அதை கொண்டு வயிற்றை நிரப்புவர்..
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆயுள் குறையும்.. முப்பது வயதில் மூப்படைவர்.. !
தர்மம் அறவே நசியும்.. யாகம் இருக்காது.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் இருக்காது.. ஏழைகளுக்கு தானம் இருக்காது.. பசிக்களிடம் அன்பு இருக்காது.. !
உடலில் சுத்தம் இருக்காது.. பேச்சில் சுத்தம் இருக்காது.. நடத்தையில் சுத்தம் இருக்காது..
வேதம் பழிக்க படும். வேத நியமனங்கள் மறக்க ப்படும்.
இது மட்டும் அல்ல.. இன்னும் எவ்வளவோ.. அநியாயங்கள் அக்கிரமங்கள் உலகில் நடக்கும் என்று நமது வேத இலக்கியங்கள் சொல்கின்றன..
அனைத்தையும் எழுதினால், பெரிய அளவில் நீண்டு கொண்டே போகும். அதனால், நிறுத்துவோம்.. இப்போது விசயத்திற்கு வருவோம்.
வேத தர்மத்தை அழிப்போம்.. ஹிந்து மதத்தை அழிப்போம்.. உலகம் முழுவதும் நாங்களே பெருகுவோம். என்று மேலே சொன்ன மூன்று தரபட்ட மக்கள் கூறுகிறார்கள் அல்லவா!..
அதையும்.. நம் வேத இலக்கியங்களில் கலியுகத்தில் மக்கள் எப்படி இருப்பார்கள்..அவர்களின் மன நிலை என்ன.. அவர்கள் நடைத்தைகள் என்ன என்பதை விரிவாக விளக்க பட்டிருப்பதையும் ஒப்பிட்டு பாருங்கள்..வேதம் வாக்கியம் ஒருகாலும் பொய்யாகாது!.
அறிவுக்கு எதாவது புலப்படுகிறதா? சிறிது சிந்தித்து பாருங்கள். நன்றாக புலப்படும். !
இதை படித்து, சிலர் கவலை கொள்ளலாம். ஆனால், அதற்கு அவசியம் இல்லை.. ஒருகாலும் இவ்வுலகில் வேத தர்மம் முழுமையாக நசியாது.. சர்வ லோக ரட்சகன்.. தேவாதி தேவன்.. ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா திருவாய்மொழியும் பொய்யாகாது!.
யாதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாமி அஹம்.!
எப்போது தர்மம் நசிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ, பாரத குல தோன்றலே (அர்ஜுனா) அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்.!
பரித்ராணாய சாதுனாம்
விநாசாய ச துஸ்கிர்தாம்
தர்ம சம்ஸ்தா பனார்தாய
சம்பவாமி யுகே யுகே..
பக்தர்களை காத்து கொடியவர்களை அழித்து தர்மத்தை நிலைநிறுத்த யுகந்தோறும் நான் அவதரிப்பேன்.
மீண்டும் படியுங்கள்..
சம்பவாமி யுகே யுகே.!
யுகந்தோறும் அவதரிப்பேன்!
நிச்சயம் அவதரிப்பான்!

கவலை!

கவலை!
விவேகானந்தரின் தந்தை இறந்த சமயம், அவரது குடும்பம் வறுமையிலும் கவலையிலும் தோய்ந்திருந்ததைக் கண்ட இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தரிடம், ""உன்னுடைய கவலைகளை அன்னையிடம் முறையிடு. அவள் பார்த்துக் கொள்வாள்'' என்று கூறி, அவரை ஆலயத்துக்கு அனுப்பி வைத்தார்.
சிறிது நேரம் கழித்து, கண்ணீருடன் திரும்பிய விவேகானந்தரிடம், ""என்ன முறையீடு செய்தாயா?'' என்று கேட்டார் பரமஹம்சர்.
...
""மன்னிக்க வேண்டும் குருநாதரே, நான் அன்னையின் முன்பு என்னையே மறந்துவிடுகிறேன். நானே அங்கு இல்லாதபோது, என் கவலைகள் எப்படி இருக்கும்? என்னால் அன்னையிடம் முறையிட முடியவில்லை...'' என்றார்.
பரமஹம்சர் சிரித்துக் கொண்டே, ""உன்னைச் சோதிக்கவே அன்னையிடம் அனுப்பினேன்... உன்னைப் பற்றி எனக்குத் தெரியும். இனி உன் நிழலில் ஆயிரம் பேர் அமர்வார்கள்'' என்று கூறி விவேகானந்தரை வாழ்த்தினார்.

அஷ்ட தனம் என்றால் என்ன?

அஷ்ட தனம் என்றால் என்ன?
ஆணோ, பெண்ணோ ஒருவரிடம் இருக்கவேண்டிய எட்டு செல்வங்கள் அஷ்டதனம் எனப்படும். அவை
...
1. ரூபம் அல்லது அழகு, 2. சம்பத்து (சொத்து முதலானவை), 3. வித்தை (பெற்றுள்ள திறமைகள்), 4. விவேகம் (அறிவுத்திறனும் பண்பும்), 5. குணம் (நற்குணம்), 6. தனம் (பொன், பொருள்), 7. குலம், 8. வயது (ஆயுள்).

மஹாபாரதம் – சுருக்கமாக:

மஹாபாரதம் – சுருக்கமாக:
=========================
மகாபாரதம் என்னும் இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்டது. குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.
மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்
சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். அதன் பின் மனைவி கங்கை மஹாராசா சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். மஹாராசா சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண் மீது ஆவல் கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும் போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.
இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார்.
வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள். அவர் செயற்கரிய சபதம் செய்ததனால் அன்றிலிருந்து அவர் பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.
சந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. மஹாராசா சந்தனுவுக்குப் பின்பு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்து கொள்ளாமலேயே இறந்து போகிறான். விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.
அம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்பில் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும் அம்பாலிகாவையும் விசித்ரவீர்யன் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.
இப்போது நாட்டை ஆள யாரும் இல்லை. பீஷ்மர் தான் செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள்தான் திருதராஷ்டிரனும் பாண்டுவும். கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.
திருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது. பாண்டுவுக்கு தோலில் நோய். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும்; பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்துவைக்கிறார் பீஷ்மர்.
திருதராஷ்டிரன்-காந்தாரி தம்பதிக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் முதலாமவன் துரியோதனன். இவர்கள் 100 பேரும் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குந்திக்கு மூன்று பையன்கள்: யுதிஷ்டிரன்(தருமர்), பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரு பையன்கள்: நகுலன், சகாதேவன். இந்த ஐவரும் சேர்ந்து பஞ்ச "பாண்டவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
குந்திக்கு ஒரு முனிவர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை முயற்சித்துப் பார்க்கிறாள். அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் கர்ணன்.
குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருப்பது துரியோதனன்தான்.
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. சிறுவர்களாக இருக்கும்போதே போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு துரோணர் என்ற குரு கலைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.
திருதராஷ்டிரன் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதால் பாண்டுவே நாட்டை ஆள்கிறார். ஆனால் காட்டில் இருக்கும்போது பாண்டுவுக்கு மரணம் ஏற்படுகிறது. பாண்டுவுடன் கூடவே மனைவி மாத்ரி உடன்கட்டை ஏறி இறக்கிறார்.
பாண்டவர்களும் கௌரவர்களும் அரசாளும் வயதை அடையும்போது, பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தருமருக்கே (யுதிஷ்டிரனுக்கே) முடி சூட்டுகின்றனர். இது கௌரவர்களுக்குக் கடும் கோபத்தை வரவழைக்கிறது. துரியோதனன் அரக்கால் ஆன மாளிகை ஒன்றைக் கட்டி, பாண்டவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களை அங்கு தங்கவைக்கிறான். இரவில் மாளிகையை எரித்துவிடுகிறான். ஆனால் துரியோதனைன் சதித் திட்டத்தை பாண்டவர்கள் (இதனை முன்னமேயே) ஊகித்து, தப்பி, காட்டுக்குள் சென்று விடுகின்றனர். காட்டில் இருக்கும்போது ஒரு சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான். தாய் குந்தியின் ஆணைப்படி பாண்டவர்கள் ஐந்துபேரும் திரௌபதியை மணக்கின்றனர்.
பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களுக்கான நிலத்தைப் பங்குபோடுமாறு கேட்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்த காண்டவ வனம் என்ற பகுதியை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்ற நாடாக மாற்றுகின்றனர். அவர்களது அழகான நாட்டைப் பார்த்து ஆசைப்படும் துரியோதனனுக்கு அவன் மாமா சகுனி உதவி செய்ய வருகிறார்.
சூதாட்ட விருந்து ஒன்றை துரியோதனன் ஏற்படுத்தி, (தருமரை)யுதிஷ்டிரனை அதில் கலந்துகொள்ள அழைக்கிறான். சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் (தருமர்) வரிசையாகத் தோற்று தன் நாடு, சொத்து அனைத்தையும் இழக்கிறான். அத்துடன் நில்லாமல், தன் தம்பிகள், தான், தன் மனைவி திரௌபதி என அனைத்தையும் இழக்கிறான். முடிவில் பெரியவர்கள் தலைப்பட்டு அடிமை நிலையை மாற்றி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டிலும், ஓராண்டு யாராலும் கண்டுபிடிக்கமுடியாமலும் நாட்டிலும் இருக்கவேண்டும் என்று சொல்கின்றனர்.
இந்தக் காலம் முடிவுற்றதும் பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து; தங்கள் சொத்துகளைத் திரும்பக் கேட்கின்றனர். கிருஷ்ணர் பாண்டவர்கள் தரப்பில் தூது செல்கிறார். ஆனால் துரியோதனன் ஊசி முனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இதன் விளைவாக மகாபாரதப் போர் குருட்சேத்திரத்தில் நடைபெறுகிறது.
போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம். பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர். கௌரவர்கள் 100 பேரும் கொல்லப்படுகின்றனர். கர்ணனும் கொல்லப்படுகிறான்.
பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு ஒன்று மட்டும் உயிர் பிழைக்கிறது. அந்தக் குழந்தைதான் பரீட்சித்து.
பரீட்சித்து வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, பாண்டவர்கள் அனைவரும் இமய மலைக்குச் சென்று உயிர் நீர்த்தனர்.

Friday, April 18, 2014

சிவசிவாஸ்துதி

சிவசிவாஸ்துதி
---------------------
அன்னையும் பிதாவும் முதன்மை என்கின்றன இதிகாச, புராணங்கள். அவர்களைப் பணிந்தாலே போதும், சகல வளமும் நலமும் சேரும் என்பது நிச்சயம். சிவபாலன் முருகன் தன் பெற்றோரைப் பணிந்து பாடிய இத்துதியைச் சொல்வது வற்றாத செல்வமும், குன்றாத ஆயுளும் தரும் என்பது குமரக்கடவுளின் வாக்கு. துதியைச் சொல்வதோடு தூய மனதுடன் உங்கள் தாய் தந்தையரையும் பணியுங்கள். நிச்சயம் உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும் - அவர்கள் ஆசியால்.
நமோ நமஸ்தே கிரீஸாய துப்யம்
நமோ நமஸ்தே கிரிகன்யகாயை
நமோ நமஸ்தே வ்ருஷபத்வஜாய
சிம்ஹத்வஜாய ச நமோ நமஸ்தே ||
கயிலை நாதரான கிரீசரைப் போற்றுகிறேன். மலையரசன் மகளான கிரிஜாவை வணங்குகிறேன். ரிஷபக்கொடியுடைவருக்கு நமஸ்காரம். நமஸ்காரம். சிம்மக்கொடியைக் கொண்ட சிவைக்கு வணக்கம்.
நமோ நமஸ்தே பூதிவிபூணாய
நமோ நமஸ்தே சந்தனருஷிதாயை
நமோ நம: பாலவிலோசனாய
நமோ நம: பத்மவிலோசனாயை ||
மகிமைமிக்க விபூதியை தரிப்பவருக்கு வணக்கம். சந்தனாபிஷேகப்ரியரை போற்றுகிறேன். வணக்கம். கொம்பின் நுனி போன்ற கூர்விழியாள் ஈஸ்வரிக்கு வணக்கம். தாமரைக் கண்ணாளைப் போற்றித் துதிக்கிறேன்.
த்ரிசூல ஹஸ்தாய நமோ நமஸ்தே
நமோ நம: பத்மாலமத்கராயை
நமோ நமோ திக்வமனாயதுப்யம்
சித்ராம்பராயை ச நமோ நமஸ்தே ||
திரிசூலமேந்தியவரே, உமக்கு நமஸ்காரம். ஒளிரும் தாமரையைக் கையில் ஏந்தியவளுக்கு வணக்கம். திசைகளையே ஆடைகளாகக் கொண்ட திகம்பரருக்கு நமஸ்காரம். பல வண்ண ஆடைகளை உடுத்தும் சிவைக்கு வணக்கம்.
சந்த்ராவதம்பாய நமோ நமஸ்தே
நமோஸ்து சந்த்ராபரணாஞ் சிதாயை
நம: சுவர்ணாங்கித குண்டலாய
நமோஸ்து ரத்னோஜ்வல குண்டலாயை ||
சந்திரனை அணியாகக் கொண்டவருக்கு வணக்கம். ஒளிரும் பல ஆபரணங்களை அணிந்து திகழும் சிவைக்கு நமஸ்காரம். பொன்னாலான தோடுகளை அணிந்தவர்க்கு வணக்கம். ரத்னங்கள் பதித்த காது வளையங்களணிந்த சிவைக்கு நமஸ்காரம்.
நமோஸ்து தாராக்ரஹ மாலிகாய
நமோஸ்து ஹாரான்வித சுந்தராயை
சுவர்ண வர்ணாய நமோ நமஸ்தே
நம: ஸ்வர்ணாதிக சுந்தராயை ||
நட்சத்திரங்களையும் கோள்களையும் மாலையாக அணிந்தவர்க்கு வணக்கம். தோள்களில் மாலை துவள ஒளிரும் சிவைக்கு நமஸ்காரம். பொன்னார் மேனியனுக்குப் போற்றி வணக்கம். பொன்னை விட அழகான, ஒளிரும் மேனி பெற்ற சிவைக்கு நமஸ்காரம்.
நமோ நமஸ்தே த்ரிபுராந்தகாய
நமோ நமஸ்தே மது நாசனாயை
நமோ நமஸ்துத்வந்தக சூதனாயை
நமோ நம: கைடப சூதனாயை ||
த்ரிபுராசுரனை அழித்தவனே போற்றி. மது என்னும் அரக்கனை அழித்தவரே போற்றி. அந்தகனை அழித்தவரே போற்றி. கைடபரை அழித்தவரே போற்றி. வணக்கம்.
(மது, கைடபர் இருவரையும் திருமால் அழித்தார். பரமனின் ஒரு பாதி பார்வதி என்பது போல சங்கர நாராயணனின் ஒரு பகுதியானவர் நாராயணன். பார்வதியின் பகுதி தான் அவளின் சோதரன் நாராயணன் பகுதி. அப்பகுதிக்குரிய பெருமைதான் மது, கைடப சம்ஹார வைபவம். சிவ பாகம் பொன்மேனி. பார்வதி பாகம் கருமை. நீலமேக வண்ணம் திருமாலுடையது.)
நமோ நமோ ஞான மயாய நித்யம்
நமஸ் சிதானந்தன ப்ரதாயை
நமோ ஜடா ஜுட விராஜிதாய
நமோஸ்து வேணி பணி மண்டிதாயை ||
பரமஞான வடிவானவர்க்கு நமஸ்காரம். வானமழைபோல் அருளை அள்ளிப் பொழியும் சிவைக்கு வணக்கம். பனித்த சடையுடைய ஜடாதரனைப் போற்றுகிறேன். வணக்கம். கருநாகம் போன்ற கருங்குழலையுடையவளுக்கு வணக்கம்.
நமோஸ்து கற்பூர சாகராய
நமோ லமத் குங்கும மண்டிதாயை
நமோஸ்து வில்வாம்ர பலார்ச்சிதாய
நமோஸ்து குந்தப்ரஸவார்ச்சிதாயை ||
கற்பூர வாசனையில் மகிழ்பவரே போற்றி ! குங்குமம் தரிப்பதில் ஆனந்திக்கும் சுந்தரியாளே போற்றி ! வில்வம், மாம்பழம் ஆகியவற்றை பிரசாதமாக விரும்பி ஏற்றுக் கொள்பவரே நமஸ்காரம். மல்லிகை மணத்தால் கவரப்பட்டவளே வணக்கம்.
நமோ ஜகன் மண்டல மண்டனாய
நமோ மணிப்ராஜித மண்டனாயை
நமோஸ்து வேதாந்த கணஸ்துதாய
நமோஸ்து விஸ்வேஸ்வர சம்ஸ்துதாயை ||
பூமண்டலம் அனைத்தையும் அலங்கரிப்பவரே வணக்கம். அழகான அபூர்வமான மணிகளாலான ஆபரணங்களால் ஜொலிப்பவளே வணக்கம். வேத வேதாந்தங்களால் போற்றப்படுபவருக்கு வணக்கம். அந்த விஸ்வேஸ்வரராலேயே நாளும் போற்றப்படுபவளுக்கு நமஸ்காரம்.
நமோஸ்து சர்வாமர பூஜிதாய
நமோஸ்து பத்மார்ச்சித பாதுகாயை
நம: சிவாலிங்கித விக்ரஹாய
நம: சிவாலிங்கித விக்ரஹாயை ||
அனைத்து தேவர்களாலும் பூஜிக்கப்படுபவருக்கு வணக்கம். பத்மா (மகாலக்ஷ்மி) யால் சமர்ப்பிக்கப்பட்ட பாதுகையை உடையவனுக்கு வணக்கம். சிவையால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சிவனுக்கு நமஸ்காரம். சிவனால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சிவைக்கு வணக்கம்.
நமோ நமஸ்தே ஜனகாய நித்யம்
நமோ நமஸ்தே கிரிஜே ஜனன்யை
நமோ நமோ அனங்கஹராய நித்யே
நமோ நமோ அனங்க விவர்தனாய ||
உலகின் ஆதியான பிதாவைப் போற்றுகிறேன். வணக்கம். மலைமகளாகிய மகேஸ்வரிக்கு வணக்கம். மன்மதனை அழித்தவரே போற்றி. பக்தர்கள் வேண்டியவற்றை நிறைவேற்றும் காமாட்சியே போற்றி.
நமோ நமஸ்தேஸ்து விஷாசனாய
நமோ நமஸ்தேஸ்து சுதாசனாயை
நமோ நமஸ்தேஸ்து மகேஸ்வராய
ஸ்ரீசந்தனே தேவி நமோ நமஸ்து ||
பிரபஞ்சத்தை ஆலகால விஷத்திலிருந்து காப்பாற்ற தானே அதை உண்டவரே வணக்கம். அமுதத்தையே தானாக வரித்து அமுதமயமானவளே வணக்கம். உலக ரட்சகரான மகேஸ்வரனுக்கு வணக்கம். மணம் கமழும் சந்தனமயமான தேவிக்கு வணக்கம். உலகத்துக்கே தாயும் தந்தையுமாக விளங்கும் உமாமகேஸ்வரனுக்கு வணக்கம். உமது ஆசியால் சகல வளமும் நலமும் பெருகிட அருள்வீராக...!
நன்றி: குமுதம் பக்தி ஸ்பெஷல்

மந்திரங்களை புத்தகத்திலிருந்து படிக்கலாமா?

மந்திரங்களை புத்தகத்திலிருந்து படிக்கலாமா?
--லண்டன் சுவாமிநாதன் தொகுப்பு
நம்முடைய பலருடைய மனதில் எழும் கேள்விகள்: மந்திரங்களை யாரும் கற்கலாமா? மந்திரங்களை புத்த...கத்திலிருந்து படிக்கலாமா?---இந்தக் கேள்விகளுக்கு இப்போதைய சிருங்கேரி ஜகத்குருவுக்கு இரண்டு தலைமுறை முன்னால் இருந்த 33ஆவது சங்கராசார்யார் ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானதா சிவ அபிநவ நரசிம்ம பாரதி சுவாமிகள் ஒரு சுவையான கதை மூலம் பதில் தந்துள்ளார்.
(இதை நான் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்துள்ளதால் தமிழ் சொற்கள் என்னுடையவை. பிழை இருந்தால் பொருத்தருள்க-லண்டன் சுவாமிநாதன்)
ஒரு பக்தர் இந்தக் கேள்வியைக் கேட்டார்.
பக்தர்: சுவாமிகளே! ஏன் சில மந்திரங்களை ஒரு சில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று சொல்லுகிறீர்கள்? ஏன் ஒரு சில தகுதி அல்லது நிலையிலுள்ளவர்கள் மட்டுமே படிக்கலாம் என்று விதிமுறைகள் விதித்துள்ளனர்?
சுவாமிகள் பதில்: யாருக்காக ஒரு மந்திரம் உருவாக்கப்பட்டுள்ளதோ அவர் சொல்லும்போதுதான் அது மந்திரம். மற்றவர் சொன்னால் அது வெறும் சப்தங்களின் தொகுப்புதான்.
பக்தர்: அது எப்படி? மந்திரங்களும் சப்தங்களின் தொகுப்புதானே?
சுவாமிகள் பதில்: சப்தங்களின் தொகுப்பு எல்லாம் மந்திரம் ஆகிவிடாது. தகுதிபெற்றவர் ஒருவர் உச்சரிக்கும்போதுதான் அவை மந்திரம் ஆகும்.
பக்தர்: எனக்குப் புரியவில்லையே?
சுவாமிகள் பதில்: உங்கள் கேள்விக்கு ஒரு சம்பவம் மூலம் பதில் சொல்லுகிறேன். நாயக்க வம்சத்தைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னரிடம் ஒரு பிராமண மந்திரி வேலை பார்த்தார். அவர் மிகவும் புத்திசாலி. அவரது மேதாவிலாசத்துக்கு அவர் தினமும் சொல்லும் காயத்ரீ மந்திரமே காரணம் என்பதை மன்னர் அறிந்தார்.
தனக்கும் காயத்ரீ மந்திரத்தை உபதேசம் செய்யவேண்டும் என்று மந்திரியை மன்னர் நச்சரிக்கத் துவங்கினார். ஆனால் மந்திரி மறுத்துவிட்டார். அந்த மன்னரிடம் வேறு ஒரு பிராமணர் சமையல்காரராக வேலை பார்த்துவந்தார். அவரை மன்னர் அழைத்தபோது அவருக்கும் காயத்ரீ மந்திரம் தெரியும் என்பதை மன்னர் அறிந்தார். மிரட்டியோ லஞ்சம் கொடுத்தோ காயத்ரீ மந்திரத்தை அவரிடம் கற்றுத்தேர்ந்தார்.
ஒருநாள் அரசவையில் எல்லோருக்கும் முன்பாக மன்னர் தனக்கும் காயத்ரீ மந்திரம் தெரியும் என்று சொல்லவே மந்திரி வியப்புடன் அதைச் சொல்லும்படி மன்னரிடம் வேண்டினார். மன்னர் கம்பீரமாக மந்திர உச்சாடனம் செய்தார். மந்திரியோவெனில் அது காயத்ரீ மந்திரம் இல்லை என்று சொல்லிவிட்டார். மன்னர் உடனே சமையல்காரனை அழைத்து காயத்ரீயைச் சொல்லச் சொன்னார். இதுதான் காயத்ரீ என்று மந்திரி சொன்னார். அதைத் தானே நானும் சொன்னேன் என்று மன்னர் சொல்ல , அது காயத்ரீ மந்திரம் இல்லை என்று மந்திரி மீண்டும் கூறினார்.
மன்னருக்கு ஒரே ஆத்திரம். ஒரு வேளை மந்திரிக்கு மனக் கோளாறுபோல என்று எண்ணினார். மன்னரின் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பது மந்திரிக்குப் புரிந்தது. திடீரென்று மந்திரி சேவகனைப் பார்த்து, “ஏ! சேவகா மன்னர் கன்னத்தில் பளார் என்று இரண்டு அரை கொடு” என்றார். எல்லோரும் திகைத்து நின்றனர். மீண்டும் மந்திரி அதே குரலில் அதே உத்திரவைச் சொன்னார். சேவகன் ஒன்றும் செய்யவில்லை.
மந்திரிக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென்று எண்ணியிருந்த மன்னர், கோபத்தில் “ஏ! சேவகா மந்திரி கன்னத்தில் பளார் என்று இரண்டு அரை கொடு” என்றார். சேவகன் ஒரு நொடி கூட தாமதிக்காமல், மந்திரியின் கன்னத்தில் இரண்டு அரை விட்டான்.
மன்னரே! இதுதான் வித்தியாசம்! நானும் ஒரே கட்டளையைத் தான் இட்டேன். நீரும் அதே கட்டளையைத் தான் இட்டீர். நீர் சொன்னவுடன் என் கன்னத்தில் இரண்டு அரை கிடைத்தது. நான் சொன்னபோது ஒன்றும் நடக்கவில்லை. சொல்லக் கூடாதவர் சொன்னதால் எனக்கு தண்டனை கிடைத்தது. இதுபோலத்தான் சில மந்திரங்களும் சொல்லக்கூடாதவர், சொல்லத் தகுதி இல்லாதவர் சொன்னால் எதிரிடை விளைவுகளை உண்டாக்கும்.
rigveda2
Picture shows Rig Vedic Mantra from a book.
ஒரு மந்திரம் என்பது சப்தங்களின் தொகுப்புதான் என்றாலும் தகுதி உடைய ஒருவருக்கு, சாஸ்திர விதிகளின் படி, ஒரு குரு சொல்லும்போதுதான் அது மந்திர ரூபம் பெறுகிறது. இதனால்தான் புத்தகத்தில் இருந்து கற்கும் மந்திரங்கள் பலன் தருவதில்லை. இதை அறியாததால் மந்திரங்களைக் குறைத்து மதிப்பிடுகின்றனர்.
தகுதி உடைய ஒருவர்கூட சாஸ்திர விதிகளின்படி மந்திரங்களைச் சொன்னால்தான் பலன் கிடைக்கும்.அப்படி இருக்கையில் தகுதி இல்லாதோர் விதிமுறைகளைப் பின்பற்றாதவாறு மந்திரங்களைச் சொன்னால் நல்ல விளைவுகளைவிட எதிரிடை விளைவுகளைத்தான் எதிர்பார்க்கலாம். மந்திர விஷயங்களில் சாஸ்திரங்கள் சொல்லுவதைத்தான் நாம் பின்பற்றவேண்டும்.
(1969 ஆம் ஆண்டில் மதுரை ஜில்லா தென்கரையில் உள்ள ஸ்ரீ ஞானானந்த க்ரந்தப் ப்ரகாசன சமிதி வெளியிட்ட பொன்மொழிகள் என்ற ஆங்கிலப் என்ற புத்தகத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது)


மந்திரங்களை யாரும் கற்கலாமா?

மந்திரங்களை யாரும் கற்கலாமா?
ஒரு பக்தர் இந்தக் கேள்வியைக் கேட்டார்.
பக்தர்: சுவாமிகளே! ஏன் சில மந்திரங்களை ஒரு சில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று சொல்லுகிறீர்கள்? ஏன் ஒரு சில தகுதி அல்லது நிலையிலுள்ளவர்கள் மட்டுமே படிக்கலாம் என்று விதிமுறைகள் விதித்துள்ளனர்?
சுவாமிகள் பதில்: யாருக்காக ஒரு மந்திரம் உருவாக்கப்பட்டுள்ளதோ அவர் சொல்லும்போதுதான் அது மந்திரம். மற்றவர் சொன்னால் அது வெறும் சப்தங்களின் தொகுப்புதான்.
பக்தர்: அது எப்படி? மந்திரங்களும் சப்தங்களின் தொகுப்புதானே?
சுவாமிகள் பதில்: சப்தங்களின் தொகுப்பு எல்லாம் மந்திரம் ஆகிவிடாது. தகுதிபெற்றவர் ஒருவர் உச்சரிக்கும்போதுதான் அவை மந்திரம் ஆகும்.
பக்தர்: எனக்குப் புரியவில்லையே?
சுவாமிகள் பதில்: உங்கள் கேள்விக்கு ஒரு சம்பவம் மூலம் பதில் சொல்லுகிறேன். நாயக்க வம்சத்தைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னரிடம் ஒரு பிராமண மந்திரி வேலை பார்த்தார். அவர் மிகவும் புத்திசாலி. அவரது மேதாவிலாசத்துக்கு அவர் தினமும் சொல்லும் காயத்ரீ மந்திரமே காரணம் என்பதை மன்னர் அறிந்தார்.
தனக்கும் காயத்ரீ மந்திரத்தை உபதேசம் செய்யவேண்டும் என்று மந்திரியை மன்னர் நச்சரிக்கத் துவங்கினார். ஆனால் மந்திரி மறுத்துவிட்டார். அந்த மன்னரிடம் வேறு ஒரு பிராமணர் சமையல்காரராக வேலை பார்த்துவந்தார். அவரை மன்னர் அழைத்தபோது அவருக்கும் காயத்ரீ மந்திரம் தெரியும் என்பதை மன்னர் அறிந்தார். மிரட்டியோ லஞ்சம் கொடுத்தோ காயத்ரீ மந்திரத்தை அவரிடம் கற்றுத்தேர்ந்தார்.
ஒருநாள் அரசவையில் எல்லோருக்கும் முன்பாக மன்னர் தனக்கும் காயத்ரீ மந்திரம் தெரியும் என்று சொல்லவே மந்திரி வியப்புடன் அதைச் சொல்லும்படி மன்னரிடம் வேண்டினார். மன்னர் கம்பீரமாக மந்திர உச்சாடனம் செய்தார். மந்திரியோவெனில் அது காயத்ரீ மந்திரம் இல்லை என்று சொல்லிவிட்டார். மன்னர் உடனே சமையல்காரனை அழைத்து காயத்ரீயைச் சொல்லச் சொன்னார். இதுதான் காயத்ரீ என்று மந்திரி சொன்னார். அதைத் தானே நானும் சொன்னேன் என்று மன்னர் சொல்ல , அது காயத்ரீ மந்திரம் இல்லை என்று மந்திரி மீண்டும் கூறினார்.
மன்னருக்கு ஒரே ஆத்திரம். ஒரு வேளை மந்திரிக்கு மனக் கோளாறுபோல என்று எண்ணினார். மன்னரின் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பது மந்திரிக்குப் புரிந்தது. திடீரென்று மந்திரி சேவகனைப் பார்த்து, “ஏ! சேவகா மன்னர் கன்னத்தில் பளார் என்று இரண்டு அரை கொடு” என்றார். எல்லோரும் திகைத்து நின்றனர். மீண்டும் மந்திரி அதே குரலில் அதே உத்திரவைச் சொன்னார். சேவகன் ஒன்றும் செய்யவில்லை.
மந்திரிக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென்று எண்ணியிருந்த மன்னர், கோபத்தில் “ஏ! சேவகா மந்திரி கன்னத்தில் பளார் என்று இரண்டு அரை கொடு” என்றார். சேவகன் ஒரு நொடி கூட தாமதிக்காமல், மந்திரியின் கன்னத்தில் இரண்டு அரை விட்டான்.
மன்னரே! இதுதான் வித்தியாசம்! நானும் ஒரே கட்டளையைத் தான் இட்டேன். நீரும் அதே கட்டளையைத் தான் இட்டீர். நீர் சொன்னவுடன் என் கன்னத்தில் இரண்டு அரை கிடைத்தது. நான் சொன்னபோது ஒன்றும் நடக்கவில்லை. சொல்லக் கூடாதவர் சொன்னதால் எனக்கு தண்டனை கிடைத்தது. இதுபோலத்தான் சில மந்திரங்களும் சொல்லக்கூடாதவர், சொல்லத் தகுதி இல்லாதவர் சொன்னால் எதிரிடை விளைவுகளை உண்டாக்கும்.
ஒரு மந்திரம் என்பது சப்தங்களின் தொகுப்புதான் என்றாலும் தகுதி உடைய ஒருவருக்கு, சாஸ்திர விதிகளின் படி, ஒரு குரு சொல்லும்போதுதான் அது மந்திர ரூபம் பெறுகிறது. இதனால்தான் புத்தகத்தில் இருந்து கற்கும் மந்திரங்கள் பலன் தருவதில்லை. இதை அறியாததால் மந்திரங்களைக் குறைத்து மதிப்பிடுகின்றனர்.
தகுதி உடைய ஒருவர்கூட சாஸ்திர விதிகளின்படி மந்திரங்களைச் சொன்னால்தான் பலன் கிடைக்கும்.அப்படி இருக்கையில் தகுதி இல்லாதோர் விதிமுறைகளைப் பின்பற்றாதவாறு மந்திரங்களைச் சொன்னால் நல்ல விளைவுகளைவிட எதிரிடை விளைவுகளைத்தான் எதிர்பார்க்கலாம். மந்திர விஷயங்களில் சாஸ்திரங்கள் சொல்லுவதைத்தான் நாம் பின்பற்றவேண்டும்.

ஸ்ரீ பரமாசாரியார்

ஸ்ரீ பரமாசாரியார்
தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திர்ம,தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகத்தில்தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினால்மு, கை கால் முதிலியவற்றாலும் பாபம் செய்து கொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கையும், மனசையும் அவையவங்களையும் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.
எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்படுபவைதாம் ஆசாரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டு விடக்கூடாது.
...
ஜோதிர்லிங்கம் குளிர்ந்தால் உலகமெல்லாம் குளிரும்; அதற்காகத்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்கிறோம்.
நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிய தண்ணிரில் அமுக்கிவிடவேண்டாம் அப்போது ஜலத்துக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம் பரம லேசாகிவிடும்.
ஏழு அஞ்சில் என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகரஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக் கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைத்துவிடும் என்கிறார்கள்.
பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும் இப்படியே அவன் பக்கமாக நகர்ந்து போய் முடிவில் அவனிடம் ஒட்டிக் கொண்டு ஒன்றாகிவிடவேண்டும.
நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி? கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவிருத்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நிவிருந்தியானால் அயேகமாகப் பூஜையையும் அதோடு விட்டுவிடுவோம். ஆகாவிட்டாலோ ஸ்வாமியையே திட்டுவோம். நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வருவதற்கு வழி என்ன?
ஒரு ராஜகுமாரன் காட்டில் வேடர்கள் மத்தியில் – அதே வேஷத்தில் வளரும்போது தன்னையும் வேடன் என்று நினைத்துக் கொள்கிறான். அதே மாதிரி நாமெல்லாம் ஜவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸரிகளாகவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தாலும் வாஸ்தவத்தில் நாமும் பரமாத்மாவேதான். வேஷம் இப்படியானாலும் நமக்கு உள்ளே இருக்கிற வஸ்து இப்போதும் பரமாத்மாதான்.
ஜசும், ஸபடிகமும் ஒரே மாதிரிரான் வெளிப்பார்வைக்ககு இருக்கின்றன. ஆனால், ஐஸ்தான் உருகி ஜலமாகுமே தவிர ஸ்டிகம் ஜலமாகாது. ஏனென்றால் எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்த வேறே வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறதோ… அதுதான் உருகி மறுபடியும் தான் ஸவயமான பூர்வ ரூபத்தை அடையமுடியும்.
நாம் நல்லது பண்ணிக்கொண்டு போனால் ஈஸ்வரன் நமக்கும் கை கொடுப்பார். அவர்தான் நமக்கு கை கொடுக்கிறார். கால் கொடுக்கிறார். கண் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஆலோசிப்பதற்குப் புத்தியும் கொடுத்திருக்கிறார். இந்த சக்தியும் புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான ஸத்காரியம் செய்ய வேண்டும்.
ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கின்ற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதனால் பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது

தாயை விட தாரத்தின் அக்கறைக்கு சற்று மதிப்பு கொடுப்பதில் தவறில்லை

தாயை விட தாரத்தின் அக்கறைக்கு சற்று மதிப்பு கொடுப்பதில் தவறில்லை...
ஒரு வீட்டில் சின்ன பூசல். வழக்கமான மாமியார்- மருமகள் சண்டை தான். பிள்ளைக்குப் பிடித்தமானது ...என ஒரு பொருள் பற்றி தாய் சொல்வதைத் தாரம் மறுக்க...
முறுக்க என ஒரே சத்தம்!
அவ்வழியே ஒரு ஞானி சென்றார்.
அவரிடம் தாய் முறையிட்டாள்.""சுவாமி.....! பெற்றெடுத்தவள், வளர்த்து ஆளாக்கினவள் நான். எனக்கில்லாத பாசமா நேற்று வந்தவளுக்கு இருக்கும்....? நீங்களே சொல்லுங்கள்... தாயின் பாசம் தானே பெரிது....?''
மருமகளும் அவ்விதமே முறையிட்டாள்.
ஞானி சிரித்தபடிச் சொன்னார்.
""தாயின் பாசம் சிறந்தது. ; ஆனால், தாரத்தின் அக்கறையே பெரிது. தாய், தன் மகன் தன்னைப் போலிருப்பான்; துணையிருப்பான் என்ற நோக்கம் கொண்டே வளர்க்கிறாள். இருபது வருடங்கள் வளர்த்துப் பழகியதாலான பாசமும் அதில் உண்டு.
தாரமோ, இருபது வருடங்கள் எங்கோ வளர்ந்து, யாருடனோ வாழ்ந்து மணமாகிய பின் புகுந்த வீடு வருகிறாள். இவர் தான் புருஷன் என இதுவரை அறியாதவனோடு வாழ்வை ஆரம்பிக்கிறாள்.
தன் தேவை எல்லாம் பெற்றோரால் நிறைவேற்றப்பட்ட நிலையிலிருந்து, தன் கணவனின் தேவை, விருப்பம், உணவு என சகலத்துக்கும் அக்கறை கொள்கிறாள்.
ஆக, தாயை விட தாரத்தின் அக்கறைக்கு சற்று மதிப்பு கொடுப்பதில் தவறில்லை...''
இதைக் கேட்டதும், தானும் ஒரு காலத்தில் தாரமாக இருந்தவள் தானே என நினைத்த அந்த தாயின் மனம் அமைதியானது.

உழவாரப் பணி

சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர், "தாண்டக வேந்தர்' என்று போற்றப்படுபவர். மருணீக்கியராக இருந்த இவருக்கு சிவபெருமான் சூட்டிய பெயர் நாவுக்கரசர். "வாகீசர்' என்ற பெயரும் உண்டு. "அப்பர்' என்று அழைத்து அகமகிழ்ந்தவர் ஞானசம்பந்தர். இவர் ஐந்தெழுத்து ("ஓம் நமசிவாய - மந்திரத்தை) படைக்கலத்தை நாவிலும், "உழவாரம்' என்ற விவசாயக் கருவியைக் கையிலும் கைக்கொண்டவர். அவர் செய்த உழவாரப்பணி எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதைக் காண்போம்:
திருஞானசம்பந்தர் கையில் பொற்றாளமும், அப்பர் கையில் உழவாரமும், சுந்தரர் கையில் செங்கோலும், மாணிக்கவாசகர் கையில் திருவாசகமும் இருக்கும். இப்படி சிவபெருமான் நால்வருக்கும் ஓர் அடையாளத்தைத் தந்து, அந்த அடையாளத்தின் மூலம் அவர்கள் செய்த செயற்கரிய செயல்களை உலகறியச் செய்துள்ளார்.
சைவ சமயத்தைச் சார்ந்த அப்பர் பெருமான், சகோதரி திலகவதியாரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைத்து, மனம் நொந்து சில காலம் சமணம் சார்ந்து பல இன்னல்களுக்கு ஆளானார்.
சிவபக்தையான திலகவதியாரின் வேண்டுகோளுக்கிணங்கி, சிவபெருமான் திருவருளால்அவர் மீண்டும் சைவ சமயம் சார்ந்தார் என்பது வரலாறு.
சமணர்களின் ஆதிக்கத்தால் பல சிவன் கோயில்கள் பாழடைந்து கிடந்தன. அவற்றைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும், இறைவன் குடிகொண்ட ஆலயத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் உலகுக்கு உணர்த்துவதற்காகவே அப்பரடிகள் கோயில்களில் முளைத்திருந்த புல்பூண்டுகளை தம் கரங்களால் களைந்து கோயிலைத் தூய்மையாக்கி திருப்பணியைத் தொடங்கிவைத்தார். அதற்கு அவர் பயன்படுத்திய ஆயுதம் உழவாரம் என்னும் புல் செதுக்கும் கருவி.
வரலாற்று ஆதாரம்
இராசராசர், அப்பர் முதலிய உருவங்களை ஸ்தாபித்ததும் - தானம் செய்ததும்; கி.பி.1017இல் இராஜேந்திரன் மூன்றாம் ஆண்டு, அப்பர் முதலிய 4 உருவங்கள் தானம் செய்துள்ளான் என்ற சான்றுகளும்; அவரின் முட்டிக்கு மேல் வேட்டி, உருத்திராட்ச மாலை, கையில் உழவாரப்படை போன்ற உருவங்கள் வைத்துப் படைத்துள்ளான் என்பதையும் அறிய முடிகிறது.
எனவே, அப்போதிலிருந்தே அப்பர் அவர் கையில் உழவாரப்படை இருந்துள்ளது. இதற்கு சான்றாக சேக்கிழார் பெருமான் பின்வருமாறு பாடியுள்ளார்:
"மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாரும் திருவடிவம் மதுரவாக்கிற்
சேர்வாகுந் திருவாயிற் தீந்தமிழின் மாலைகளுஞ் செம்பொற்றாளே
சார்வான திருமனமும் உழவாரத் தனிப் படையும் தாமும் ஆகிப்
பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்தேத்திப் பரவிச் செல்வார்''எது உழவாரம்?
உழவாரம், உழைவாரம், உழவாரப்படை - இது ஓர் ஆயுதம். புல் செதுக்கும் ஒரு கருவி (புற்செதுக்கி) என்பர். உழவாரத்தினால் செய்யும் பணி உழவாரப்பணி. அப்பர் பெருமான் தோளில் சுமந்திருக்கும் இக்கருவி முழுவதும் இரும்பினால் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
அப்பர் கையில் இருக்கும் இக்கருவி, விவசாயக் கருவிகளுள் ஒன்றாக இருந்துள்ளது. தென்னார்க்காடு மாவட்டமான (தற்போது அரியலூர் மாவட்டம்) திருக்களப்பூர் என்ற ஊரில் விவசாயக் கருவிகளுள் ஒரு கருவியின் பெயர் உழவாரம். இன்றும் அக்கருவிக்கு உழவாரம் என்ற பெயரே இருந்து வருகிறது. இன்று திருக்களப்பூரில் கால்நடைகளுக்கு புல்லை செதுக்க இக்கருவி பயன்பட்டு வருவதாக அறியமுடிகிறது.
சேக்கிழாரின் பெரியபுராணப் பாடல்களின் படி (416,417) திருப்புகலூரில் அப்பர் பெருமான் இறைவனின் திருவடியை அடைவதற்கு முன்பு அவர், "அக்கோயிலின் குளக்கரையில் உழவாரப் பணியை மேற்கொண்டிருந்தபோது பொன்னும், மணியும் உழவாரம் நுழைந்திட்ட இடமெல்லாம் தோன்றின' என்கிறார். இதை, ""வாகீசப் பெருமான் உழவாரத்திலேந்தி வாவியினிற் புக எறிந்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நீரில் (வாவி) பொன்னும் மணியும் பருக்கைகளும் நீரில் அமிழ்ந்து, மறைந்து போகும்படி உழவாரத்தில் ஏந்தி எறிந்தார் என்கிறார். இன்று உழவாரம் என்றால் திருக்கோயிலை சுத்தம் செய்வதையே குறிக்கிறது. ஆனால் இதன் பழைய பொருள் மாடு, ஆடுகளுக்குப் புல்லைச் செதுக்குவதைக் குறித்ததாம். வட்டார வழக்கில் உழவாரம், ஒழவாரம் (அரியலூர்), உலவாரம், எழவாரம் (புதுக்கோட்டை), புல்லுசெத்தி (கன்னியாகுமரி, கேரளா) முதலிய பெயர்களால் குறிக்கப்படுகிறது.
முக்தி மார்கங்கள்
இறைவனை அடைவதற்குரிய - வழிபடுவதற்குரிய நால்வகை நெறிமுறைகளை சைவ சமயம் வகுத்துக் கொடுத்துள்ளது. அவை:
சரியை (தொண்டு நெறி - அப்பர்), கிரியை(வழிபாட்டு நெறி-ஞானசம்பந்தர்), யோகம்(அகவழிபாடு-சுந்தரர்), ஞானம்(மெய்யுணர்வு-மாணிக்கவாசகர்). இதில் சரியை நெறியைப் பின்பற்றி முத்தி அடைந்தவர் அப்பர் பெருமான். இந்நால்வகை நெறியை முறையே அரும்பு, மலர், காய், கனி என்னும் நான்கு படி நிலைகளாகவும் கூறுவர். இச் சரியைத் தொண்டை மேற்கொள்பவர் மனத்தில் உள்ள மாசுகள் முற்றிலும் அகலும். தூய்மையான இடத்தில் இறைவன் இருப்பது போல, தூய்மையான மனத்திலும் இறைவன் குடிகொள்வான். மனத்தில் மாற்றம் ஏற்பட்டால் வாழ்விலும் மாற்றம் ஏற்படும்.
"வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசி குளத்தில்வீழ் கல்லால்மனம் பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற்று அண்ணலை
நேசித்து இருந்த நினைவு அறியாரே''
என்பார் திருமூலர். கோயில் திருக்குளத்தில் படிந்த பாசியின் மீது கல்லை விட்டெறிந்தால், அந்தக் கல் நீரில் விழும்போது மட்டும் பாசி விலகும். பின் மீண்டும் பாசி தண்ணீரை மூடிக்கொள்ளும். அதுபோல, ஒருவன், தன் மனத்தை மாற்ற வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல், எவ்வளவுதான் இறைவன் புகழ் கூறும் நூல்களைக் கற்றாலும், பூஜித்தாலும், மலர் பறித்துக் கொடுத்தல் போன்ற தொண்டுகளைச் செய்தாலும், அப்போதைக்கு வேண்டுமானால் இறைவனிடம் அவனது மனம் குவியும் - ஒருமைப்படும். பின்னர் மீண்டும் மனம் உலகப் பற்றுகளில் - உலக ஆசைகளில் திரும்பிவிடும் என்கிறார் திருமூலர். ஆகவே, உழவாரப் பணியின் முதன்மை நோக்கம் மனமாற்றமே என்பதை விளக்கியுள்ளார் அப்பரடிகள்.
சரியை சரியை என்பது உடலால் வழிபடுவது, அதாவது, திருக்கோயிலை வலம் வருவது, திருக்கோயிலுக்குப் பூ மாலை தொடுத்துக் கொடுப்பது, திருக்கோயிலில் உள்ளும் புறமும் பெருக்கி, துப்புரவுப் பணி செய்வது, திருக்கோயில் தரையைச் சுத்தமான பசுஞ்சாணம் கொண்டு மெழுகுவது, அதிகாலையில் குளித்து, வண்டுகள் மொய்ப்பதற்கு முன், கை நகம் படாமல் மலர்களைக் கொய்து திருக்கோயிலில் கொடுப்பது, பாசி படர்ந்த குளத்தைத் தூய்மை செய்வது, பன்னிரு திருமுறைகளைப் பாடுதல், பசுவின் நெய், எள், எண்ணெய் முதலியவற்றால் தீபம் ஏற்றுதல், நல்ல நறுமணம் மிக்க மலர்களைத் தரும் மரங்களைக் கொண்ட நந்தவனம் அமைத்தல், சிவனடியார்களை சிவமாகவே நினைத்து வணங்குதல் - வழிபடுதல் முதலியன உடலால் வழிபடுவது ஆகும். சரியை நெறியில் நின்று வழிபாடு செய்தவர்கள் சிவலோகத்திற்குச் சென்று அவ்வுலகத்தில் உள்ள போகங்களை அனுபவிப்பர்.
ஒருமுறை திருப்புகலூரில் அப்பரடிகள் உழவாரப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிவபெருமான் அவரைச் சோதிப்பதற்காக, குப்பைகளோடு பொன்னையும் ஓட்டையும் அவர் கண்ணில் படும்படியாக இருக்கச் செய்தாராம். ஆனால் அப்பருடைய சொல், சிந்தை, செயல் எல்லாம் சிவமயமாகவே இருந்ததால், பொன்னையும் ஓட்டையும் சமமாகவே பாவித்து, புல்லோடும் கல்லோடும் சேர்த்து அங்கிருந்த பொய்கையிலே எறிந்தாராம். அத்தகைய மனப்பக்குவத்தை அவர் அடைந்திருந்தார். சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று வழிபாடுகளையும் ஒருவர் தவறாமல் செய்துவந்தால், இறைவன் அவர்களுக்கு ஞானத்தை உணர்த்துவான். அவ்வாறு உணர்த்தும்போது, ஜீவன் முக்தர்களை அதிட்டுத்து வந்தோ, குருநாதராக வந்தோ, மானுடச் சட்டை தாங்கியோ வந்து உணர்த்துவான். எனவே, குருபீடத்தில் அமர்ந்துள்ள ஞானிகளை வழிபடுவது ஞானநெறியில் செய்யும் வழிபாடாகும்.
மனம், வாக்கு, காயங்களால் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த மானுடப் பிறவி நமக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற உண்மையை, அருணந்தி சிவாச்சாரியார் சிவஞானசித்தியார் என்ற நூலில்(பா.182) விளக்கியுள்ளார். மேலும், இந்நால்வகை நெறிகளில் உள்ள உறவு முறையை "சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாசமார்க்கம்' (280) என்கிறார். சரியை நெறியில் இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு முறை ஆண்டானுக்கும் அடிமைக்கும் உள்ளது போன்றதாகும். அத்தகைய ஆண்டான்-அடிமை நெறியில் வாழ்ந்தவர் அப்பர் பெருமான்.
சிவ புண்ணியங்கள்
"புண்ணியம் பதி புண்ணியம், பசு புண்ணியம் என இருவகைப்படும். பதி(இறைவன்) புண்ணியம் சிவபுண்ணியம் என்றும் கூறப்படும். சிவ புண்ணியம் என்பது சிவபெருமானை நினைத்துச் செய்யும் நற்செயல்களாகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கித் செய்யும் நற்செயல்கள் பசு(உயிர்) புண்ணியம் எனப்படும். பதி புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முக்தியைக் கொடுக்கும். பசு புண்ணியங்களுக்கும் பலன் உண்டு. ஆனால், அப்பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியப் பயன் சிவபெருமானால் அனுபவிக்கப் படாததால் அழிவில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும்' என்கிறது சைவ சித்தாந்தம்.
சைவ சமயக் குரவர்களும் நாயன்மார்களும் காட்டிய, செய்த, நெறிகளே சிவ புண்ணியம். சரியை, கிரியை போன்றவைகளே சிவ புண்ணியங்களாகும். இப்புண்ணியங்களில் ஈடுபடுவதற்கு முதற்கண் நற்குருவை நாடவேண்டும். சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றையும் உணர்த்துபவர் "கிரியாகுரு' எனப்படுவார். ஞானத்தை உணர்த்துபவர் "ஞானகுரு' எனப்படுவார்.
அப்பரடிகள் சரியை நெறியில் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றவர். சிவனை வழிபடுவதைவிட சிவனடியாரை (ஜீவன் முக்தர்கள்) வணங்குவதும், அவர் காட்டிய நெறியில் வாழ்ந்து காட்டுவதும்தான் இறைவனுக்கு மிகவும் உகந்தது. இன்றைக்கு அப்பர் காட்டிய நெறியைப் பின்பற்றி எத்தனையோ உழவாரப்பணி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
இவ் உழவாரப் பணியை - இச் சிவபுண்ணியத்தை மேற்கொண்டால் என்ன பயன் கிட்டும் தெரியுமா? 21 தலைமுறைகள் தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நெறி பெற்று சிவபுண்ணியம் ஈட்டி, சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுவார்களாம். அத்தகைய உழவாரப்பணி புரியும் அவ்வடியார்களுக்கு உதவிக்கரம் நீட்டி, அப்பணியில் நம்மை உடலாலும், பிற வகைகளாலும் (பொருள் கொடுத்து உதவி) ஈடுபடுத்திக்கொண்டு கோயில் திருப்பணியை மேற்கொண்டு அப்பரடிகளின் உழவாரத்தை நாமும் கைக்கொண்டு வாழ்வோம்.
சித்திரை சதயம் (24.4.14) அப்பரடிகள் குருபூஜை

தர்மம்

தர்மம்
பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர் தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள். தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணம் கண்ணபிரானுக்கு ஏற்பட்டது.
எனவே அவர் தர்மருடன் மலைநாட்டுக்கு சென்றார். அந்த நாட்டை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார். அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். அவ்விட்டு பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர...் கொடுத்தாள். அவர்கள் குடித்து முடித்ததும் செம்பை வீசி எறிந்து விட்டாள். தர்மர் அவளிடம், "தங்கச் செம்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டாமா? தெருவில் வீசி எறிந்துவிட்டீர்களே,'' என ஆச்சரியமாகக் கேட்டார்.
அதற்கு அந்த பெண்மணி, ""எங்கள் நாட்டில் ஒரு முறை பயன்படுத்திய பொருளை மறுமுறை பயன்படுத்துவதில்லை,'' என அலட்சியமாக சொல்லிவிட்டு போய்விட்டாள். அந்நாட்டின் செல்வச் செழிப்பை எண்ணி வியந்தார் தர்மராஜன்.
அவர்கள் மகாபலியின் அரசவைக்கு சென்றனர். கண்ணபிரான் தர்மரை மகாபலியிடம் அறிமுகப்படுத்தி, "இவர் தான் இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர்,'' என்றார்.
மகாபலி தர்மரின் முகத்தில் கூட விழிக்கவில்லை. "கண்ணபிரானே! தாங்கள் சொல்வதெல்லாம் சரி தான். என் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை.
எல்லோரிடமும் செல்வம் குவிந்துகிடக்கிறது. எனவே "பிச்சை' என்ற சொல்லுக்கே இடமில்லை. அதனால் "தர்மம்' என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை.
எனவே அவர்கள் தானம் பெற வேண்டிய அவசியமும் இல்லை. இவரது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் போலும். எனவே தான் எல்லோரும் தானம் கேட்டு வருகின்றனர். இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த தர்மரின் முகத்தைப்பார்க்க வெட்கப்படுகிறேன்,'' என்றார்.
தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து தலைகுனிந்தார் தர்மராஜா.

மச்ச சாத்திரம் பெண்களுக்கு..

மச்ச சாத்திரம் பெண்களுக்கு..
ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.
நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.
நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.
மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.
மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.
மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.
மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.
இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.
வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.
கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.
தலையில் மச்சம்
தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.
ஆடம்பர வாழ்வு
நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.
கன்னத்தில் மச்சம்
காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.
இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.
கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.
அந்தஸ்து
மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.
காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.
நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.
கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.
இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.
மார்பில் மச்சம்
பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.
நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.
தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.
தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.
முதுகில் மச்சம்
கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.
உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.
பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.
தொடை
இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.
இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.
ஆதாரம்: சாமுத்ரிகா லட்சணம் நூல்.

குறையில்லாத மனிதன் உலகிலேயே கிடையாதப்பா

குறையில்லாத மனிதன் உலகிலேயே கிடையாதப்பா
ஒரு மாற்றுத் திறனாளி; காது கேளாதவர், கடவுளின் மேல் கோபம் கொண்டார்.
திருக்கோயிலுக்குச் சென்று முறையிட்டார்.
அங்கிருந்து வெளியே வரும்போது, ஒரு கை இழந்த மனிதன், தன்னாலான பூக்களை நந்தவன மரத்தில் இருந்து பறிக்க முயல்வதைக் கண்டார்; கேட்டார்.
""எனக்கு காது கேட்கவில்லை; உங்களுக்கு ஒரு கை இல்லை. இப்படி குறைபாட்டைக் கொடுத்த ஆண்டவனுக்கேன் வஞ்சம்...?''...
ஒரு கை மனிதர் சொன்னார்.
""உங்களால் எழுத முடியும்; பூ பறிக்கலாம். என்னால் உங்கள் குரலைக் கேட்க முடியும். அதோ.. அந்த மனிதருக்கு பார்வையே இல்லை. மற்றொருவருக்கு ஒரு கால் இல்லை. ஆக, நமக்கும் கீழே பார்க்கையில் நாம் பரவாயில்லை அல்லவா...? ஆக, கடவுளுக்கு நாம் நன்றியே சொல்ல வேண்டும்..''ஓசையற்றவர் கேட்டார்.
""நன்றாய் இருப்பவர் கோடி பேர் இருக்க, நன்றாக இல்லாதவர்களை ஏன் ஒப்பிட வேண்டும். நாமும் நல்லபடி இருந்திருக்கலாமே...?''
ஒரு கை மனிதர் சிரித்தார்.
""இக்கோயில் மடப்பள்ளியின் சர்க்கரைப் பொங்கல் வெகு பிரசித்தம். அதை தயாரிப்பவர்... எக்குறையுமற்றவர். ஆனால், அவருக்கு சர்க்கரைநோய்; ஒரு துளி இனிப்பு கூட உண்ண முடியாது. நாமோ எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம்.
உடல்குறை இல்லார்க்கு மனக்குறையிருக்கும். ஆரோக்கியக் குறையிருக்கும்.
ஆக, குறையில்லாத மனிதன் உலகிலேயே கிடையாதப்பா....'' ஓசையற்றவருக்கு தெளிந்தது

Thursday, April 17, 2014

கண் திருஷ்டி

கண் திருஷ்டி உண்மையா?
உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் உறுப்பு கண். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லக் காரணம் கண்கள் தான். நேர்மையானவர்கள் மற்றவர் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவர். ஆனால், பொய் சொல்பவர்கள் நேருக்கு நேர் பேசத் தயங்குவர். அன்பு, கருணை, பாசம், காதல், ஆசை, வெறுப்பு, பொறாமை, கோபம் என்று அனைத்து உணர்ச்சிகளும் ஒருவரின் கண் வழியே மற்றவருக்குப் பரவுகின்றன. இதில் மற்றவரைப் பெரிதும் பாதிப்பது பொறாமை. அதையே கண்திருஷ்டி என்கிறார்கள்.

63 நாயன்மார்கள்


சிவபுராணம் பற்றிய முழுமையான விளக்கம்

சிவபுராணம் என்று பெயர் கொண்ட இப்பதிகம் சீவபுராணமல்லவா பேசுகின்றது? ஏன் சிவபுராணம் எனப் பெயர் பெற்றது? மாணிக்கவாசகப் பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமானைப் பலவாறெல்லாம் போற்றி அவர் பூவார் திருவடிகளுக்குத் தம்முடைய உளமார்ந்த வணக்கங்களைக் கூறித் த...ுவங்குகிறார்.

ஜீவனான உயிர் மும்மலச் சேற்றில் அகப்பட்டுத் திகைத்து நிற்கும் காலமும், அச்ஜீவனுக்கு சிவபெருமான் திருவருளால் ஏற்படும் மேம்பாடுகளையும் கூறி இறுதியாக அச்சிவபெருமானின் திருவடிக்குச் செல்லும் பெருநிலையை நமக்குக் காட்டுகின்றார். ஜீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும் தாழ்நிலையிலிருந்து, சிவனார் பெருங்கருணையால் சிவகதி அடையும் தன்னிகரற்ற பெருநிலை பற்றிக் கூறுவதால் இது சிவபுராணமே.

திருவாசகம் பெரிதும் எளிய நடையைக் கொண்டதாக இருப்பது காரணமாக உரையின் துணையின்றியே அன்பர்கள் படித்துப் பயன்பெறுவது. எனினும் சந்தி பிரித்து தினமும் பேசும் மொழியில் வழக்கத்தில் இப்போது இல்லாத சில சொற்களுக்குப் பொருளும், அங்கங்கே தொடர்புடைய சில கருத்துக்கள் குறிப்பதுவும் அன்பர்களுக்கு பயன்படக்கூடும் என்ற கருத்துடன் இவ்வுரை வரையப்பட்டுள்ளது. நேயத்தே நின்ற நிர்மலனார் பிழைகளை மன்னித்தும் தவிர்த்தும் அருள அவர்தம் செம்மலரடிகளுக்குப் போற்றுதல்கள்.

தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும் அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள்.

கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.

நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு மணிக்கு நிமிடம் 60. ஒரு நிமிடத்துக்கு வினாடி 60. இப்படி 60 என்று தான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்

நமையாளும் நாயன்மார்கள் அறுபத்திமூவர்

தில்லைவாழ் அந்தணர்: சித்திரை-முதல்நாள்-தில்லையில் வாழும் தீட்சதர்கள். தொகையடியார்களின் ஒன்பதுபேரில் முதலாவதாக வணங்கப்படுபவர்கள்.

1. திருநீலகண்ட நாயனார்:தை-விசாகம். குயவர்-சோழநாடு, சிதம்பரம். அயலறியா வண்ணிம் மனைவியின் சபதத்திற்கு உடன்படடு அவளைத் தீண்டாது, இளமையிலும் முதுமையிலும் இல்லறம் நடத்தி இறைவன் திருவருளால் இளமை பெற்றார்.

2. இயற்பகை நாயனார்:மார்கழி-உத்திரம். வணிகர்-சோழநாடு- காவிரிப்பூம்பட்டினம். சிவனடியார்க்குத் தம் மனைவியிடமே தானமாகக் கொடுத்தவர்.

3. இளையான் குடிமாற நாயனார்:ஆவணி-பூசம். வேளாளர் இளையான்குடி. விதைத்த நெல் எடுத்து அலங்கெரித்து அடியார்க்கு அமுது அளித்தல்.

4. மெய்ப்பொருள் நாயனார்:கார்த்திகை-உத்திரம் குறுநில மன்னர்-நடுநாடு, திருக்கோவலூர். வஞ்சித்துத் தம்மைக் கொல்லும் சிவவேடதாரியைக் காப்பாற்றித் தம் உயிரைவிட்டவர்.

5. விறன்மீண்ட நாயனார்:சித்திரை-திருவாதிரை. வேளாளர்-மலைநாடு, செங்குன்றூர். சுந்திர மூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுதற்குக் காரணமாய் இருந்தவர்.

6. அமர்நீதி நாயனார்:ஆனி-பூரம். வணிகர்-சோழநாடு, பழையாறை, கோவணத்திற்கு நிறையாக மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்மையும் சிவனடியார்க்குத் தந்தவர்.

7. எறிபத்த நாயனார்-மாசி-அஸ்தம். சோழநாடு, கருவூர். பூக்குடலையைச் சிவனடியாரிடமிருந்து பிடித்திழுத்துச் சிதறவைத்த பட்டத்து யானையை வெட்டியவர்.

8. ஏனாதினாத நாயனார்-புரட்டாசி-உத்திராடம். சான்றோர்-சோழநாடு, எயினனூர். போர் புரியும் பகைவன் நெற்றியில் திருநீற்றைக் கண்டதும் அவனார் கொல்லப்படும்படி நடந்து கொண்வர்.

9. கண்ணப்ப நாயனார்:தை-மிருகசீரிடம். வேடர்-தொண்டை நாடு-உடுப்பூர். ஆறே நாளில் அளவுகடந்த பக்திசெய்து காளத்தியப்பருக்குத் தம் கண்ணை அப்பியவர்

10. குங்கிலியக் கலய நாயனார்:ஆவணி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருக்கடவூர். மனைவியின் மாங்கல்யத்தை விற்றும் குங்கிலியம் வாங்கியவர். சாய்ந்த லிங்கத்தைக் கழுத்தில் பூமாலை கொண்டு நிமிர்த்தியவர்.

11. மானக்கஞ்சாற நாயனார்:மார்கழி-சுவாதி, வேளாளர்-கஞ்சாறூர்-திருமணம் தொடங்கும்போது திருமணப் பெண்ணாகிய தமது மகளின் தலைமயிரை அறுத்துச் சிவனடியாருக்குத் தந்தவர்.

12. அரிவட்டாய நாயனார்-தை-திருவாதிரை. வேளாளர்-சோழநாடு, கணமங்கலம். சிவ நிவேதனத்துக்குரிய பொருள் கீழே சிந்தியதற்காகத் தமது கழுத்தை அரித்து கொண்டவர்.

13. ஆனாய நாயனார்:கார்த்திகை-அஸ்தம். இடையர்-மழநாடு, மங்களவூர், பசு மேய்க்கும் போது, ஜந்தெழுத்தைப் புல்லாங்குழலில் அமைத்துவாசித்தவர்.

14. மூர்த்திநாயனார்-ஆடி-கிருத்திகை. வணிகர்-பாண்டியநாடு, மதுரை. சந்தனம் தருகின்ற திருப்பணியில் முட்டுப்பாடு நேரவே, முழங்கையை அரைத்தவர். திருநீறு, உத்திராட்சம், சடைமுடி ஆகிய மூம்மையால் உலகாண்டவர்.

15. முருக நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருப்புகலூர். மலர்த்தொண்டு செய்து திருஞான சம்பந்தர் திருமணத்தில் முக்தி பெற்றவர்.

16. உருத்திர பசுபதி நாயனார்:புரட்டாசி-அஸ்வினி. அந்தனர்-சோழநாடு. திருத்தலையூர். இரவும் பகலும் திருக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று ஸ்ரீ ருத்ர மந்த்ரம் ஜபித்தவர்.

17.திருநாளைப்போவார் நாயனார்: புரட்டாசி-ரோகினி (நந்தனார்) புளையர்- சோழநாடு. ஆத்தனூர். தில்லை நடராஜப் பெருமானைப் காணவிரும்பித் தீப் புகுந்து முனிவராய் எழுந்து சிற்றம்பலவன் திருமுன்பு மறைந்தவர்.

18. திருக்குறிப்புதொண்ட நாயனார்:சித்திரை-சுவாதி. ஏகாலீயர்-தொண்டைநாடு காஞ்சீபுரம். சிவனடியார்க்கு வாக்களித்தபடி மழையின் காரணமாக உடையை துவைத்து உலர்த்தித்தர முடியாமல் போனதால் தமது தலையை கல்லின்மீது மோதிக் கொண்டவர் .
அறுபத்து மூவரையும் தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் தொடர்ந்து !

சண்டேஸ்வர நாயனார்:தை-உத்திரம். அந்தணர்-சோழநாடு, திருச்சேயஞ்ஞலூர் அபிஷேகப்பாற்குடத்தை இடரியை தந்தையின் காலை வெட்டித் தொண்டர்க்கு தலைவனாக (சண்ணிப் சப்பதம்) இருக்கும் அருள் பெற்றவர்.

20. திருநாவுக்கரச நாயனார்:சித்திரை-சதயம், வேளாளர்-நடுநாடு, திருவாமூர், ஐந்தெழுத்து ஒதி கருங் கல்லின்மேல் கடலில் மிதந்து கரையேரிப் பல தேவாரப்பாடல்கள் பாடி கைத்தொண்டு செய்து முக்தி பெற்றவர்.

21. குளச்சிறை நாயனார்:ஆவணி-அனுஷம், பாண்டிய நாடு-மனமேற்குடி, அரசன் சமணனாய் இருந்தபோதும் தாம் சிவனடியாரை வழிபட்டார். திருஞானசம்பந்தரை அழைத்துவந்து அரசனையும் நாட்டினையும் சைவ மாக்கியவர்.

22. பெருமிழலைக் குரும்ப நாயனார்:ஆடி-சித்திரை, பெருமிழலையூர் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளை வழிபட்டு, அவர் கயிலை செல்வதையறிந்து யோகத்தால் தானும் கயிலை சென்றவர்.

23. காரைக்கால் அம்மையார்:பங்குனி-ஸ்வாதி (பேயார்) , வணிகர்-சோழநாடு. காரைக்கால், சிவபெருமானை வேண்டி மாம்பழம் பெற்றவர். பேய் வடிவம் பெற்றவர். ஆலங்காட்டில் ஈசனாடலையும் பெற்றவர்.

24. அப்புதியடிகள் நாயனார்:தை-சதயம். அந்தணர்-சோழநாடு. திங்களூர். பிள்ளை இறந்ததையும் மறைத்து திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு அமுது அளித்தவர்.

25. திருநீலநக்க நாயனார். வைகாசி-மூலம்:அந்தணர்-சோழநாடு. சாத்தமங்கை. அன்போடு சிவலிங்கத்தின் மீதிருந்த சிலந்தியை ஊதியதால் எச்சில் பட்டதென்று மனைவியை விட்டுச்சென்றவர். பாணர்க்கு வேதிகையில் இடம் தந்தவர். திருஞானசம்பந்தர் திருமணத்தை நடத்தி முக்தி பெற்றவர்.

26. நமிநந்தி அடிகள் நாயனார்:வைகாசி-பூசம். அந்தணர்-சோழநாடு. ஏமப்பேறூர். தண்ணீரால் விளக்கெரித்தவர். திருவாரூர்ப் பிறந்தாரை எல்லாம் சிவசாரூப்பியராகக் கண்டவர்.

27. திருஞானசம்பந்த நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு. சீகாழி. உமாதேவியாரால் ஞானப்பால் ஊட்டப்பெற்றவர். தேவாரம்பாடி எலும்பைப் பொன்னாக்கியவர். பல அற்புதங்கள் செய்த இவர் தமது திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் முக்தி தந்தவர்.

28. ஏயகோன் கலிக்காம நாயனார்:ஆனி-ரேவதி. வேளாளர் சோழநாடு திருப்பெரும் மங்களம். சிவபெருமானைப் தூதராகவிடுத்த வண்றொண்டரை இகழ்ந்து பின்பு திருவருள் விளையாட்டால் அவருடைய நண்பரானவர்.

29, திருமூல நாயனார். ஐப்பசி-அசுவினி:இடையர்-சோழநாடு, சாத்தனூர். மூலன் உடலில் தாம் புகுந்து, மூவாயிரம் ஆண்டிருந்து, திருமந்திரம் அருளிச் செய்தவர்.

30. தண்டியடிகள் நாயனார்-பங்குனி-சதயம். சோழநாடு-திருவாரூர். பிரவிக் குருடாக இருந்தும் திருவாரூர் குளத்தை, கரையில் குச்சி கட்டி, இடையே கயிறு கட்டி திருக்குளப்பணி செய்து குருடு நீங்கிச் சமணரை வென்றவர்.

31. மூர்க்க நாயனார்-கார்த்திகை, மூலம். வேளாளர், தொண்டைநாடு, திருவேர்க்காடு. சூதாட்டத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்தவர்.

32. சோமாச்சிமாற நாயனார்-வைகாசி-ஆயில்யம். அந்தணர். சோழநாடு. திரு அம்பர். வேத வேள்வி செய்து, சாதிமத பேதமின்றி, பஞ்சாட்சரவிதிப்படி அடியயார்களுக்கு அன்னதானம் செய்தவர்.

33. சாக்கிய நாயனார்:மார்கழி-பூராடம். வேளாளர்-திருச்சங்கமங்கை. சமணக் கோலமாயினும் மனதார சிவபூசை செய்தவர். மனதில் மலராக எண்ணி இறைவ மீது இட்டகற்களை இறைவன் மீது இட்டகற்களை இறைவன் மலராக ஏற்று அருள் பெற்றவர்.

34. சிறப்புலி நாயனார்-கார்த்திகை-பூராடம். அந்தணர்-சோழநாடு. திரு ஆக்கூர். குல ஆசாரவிதிப்படி, வேதம் ஒதியும், ஒதுவித்தும், சிவனடியைச் சிந்தித்தும் அடியார்கட்கு, அமுதும் பொருளும் தந்தவர்.

35. சிருத்தொண்ட நாயனார்-சித்திரை-பரணி. மாமாத்திரப் பிராமணர்-சோழநாடு, திருச்செங்காட்டாங்குடி வாதாவியைப் போரில் வென்றவர். சிவனடியார்க்குத் தமது ஒரே பிள்ளையைக் கறியாகச் சமைத்து வைத்தவர்.Lord-Shiv

36. சோமான் பெருமாள் நாயனார்-ஆடி, சுவாதி (கழறிற்றறிவார் நாயனார்) அரசர், மலைநாடு, கொடுங்கோளூர். நடராஜர் பாதச் சிலம்பொலி கேட்கக் காலம் தகுந்தமையால் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகள் தோழமை பெற்றவர். சிவ பெருமானுடையதிருமுகப் பாசுரம் பெற்றவர். கயிலை சென்று ஞானவுலா பாடியவர்.

37. கணநாத நாயனார்-ஆடி-திருவாதிரை. அந்தணர், சோழநாடு, சீர்காழி. சிவனடியாரைப் போற்றுவதோடு, சிவநெறிப் பணிகள் செய்பவருக்கு பயிற்சி அளித்தவர். திருஞான சம்பந்தரை வழிபட்டவர்.

38. கூற்றுவ நாயனார்-ஆடி-திருவாதிரை. குறுநில மன்னர், திருக்களத்தை. தில்லைவாழ் அந்தணர் தமக்கு முடிசூட்ட மறுக்கவே, தில்லையம்பலவன் திருவடிகளையே முடியாகச் சூடப்பெற்றவர்.

39. புகழ்ச்சோழ நாயனார்:ஆடி-கிருத்திகை. அரசர் சோழநாடு. உறையூர். பகைவனது அறுபட்ட தலையில் சிவ சின்னமாகிய சடையிருப்பதைக் கண்டு அஞ்சி உயிர்விட்டவர்.

40. நரைசிங்க முனையரைய நாயனார்-புரட்டாசி-சதயம். குருநில மன்னர்-நடுநாடு. சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்தவர். திருவாதிரை தோறும் சிவனடியார்களுக்கு அன்னமிடுவதுடன் 100 பொற்காசுகள் வழங்குவார். சிவவேடம் பூண்ட காமக்குறி மலர்ந்த தூதர்களையும் வணங்கியவர்.

41. அதிபந்த நாயனார்-ஆவணி-ஆயில்யம். நுளையர் (மீன் பிடிப்பவர்) சோழநாடு-நாகப்பட்டினம். நவரத்தினம் இழைத்த பொன்மீனைத்தாமே வைத்துக் கொள்ளாமல் சிவார்பணம் செய்தவர்.

42. கலிக்கம்ப நாயனார்-தை-ரேவதி. வணிகர்-நடுநாடு. பெண்ணாடகம். தமது பழைய வேலையாள் சிவனடியாராக வந்தபோது, தாம் அவனை வழிபட்டு, வழிபடாத தமது மனைவி கையை வெட்டியவர்.

43. கலிய நாயனார்:ஆடி-கேட்டை. செக்கர்- (எண்ணெய் வியாபாரி) தொண்டைநாடு-திருவெற்றியூர். திருவிளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாததால் தமது இரத்தத்தைக் கொண்டு எரிக்க முயன்றவர்

44. சக்தி நாயனார்-ஐப்பசி-பூசம். வேளாளர்-சோழநாடு. வரிஞ்சியூர். சிவனடியாளர்களைக் குறை கூறுபவர்களின் நாக்கை அறுத்தவர்.

45. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்-ஐப்பசி-மூலம். குறுநில மன்னர்- தொண்டைநாடு. காஞ்சிபுரம். பதவியை வெறுத்துத் ஸ்தல யாத்திரை செய்தவர். க்ஷேத்திர வெண்பாவால் நிலையாமையைக் கூறியவர்

46. கணம்புல்ல நாயனார்-கார்த்திகை-கிருத்திகை. இருக்குவேளூர். புல்விற்று நெய்கொண்டு திருவிளக்கெரித்தவர். நெய்யின்மையால் திருப்புலீஸ்வர சிவன் சன்னதியில் தமது தலைமயிரை விளக்காக எரித்தவர்.

47. காரிநாயனார்-மாசி-பூராடம்.. சோழநாடு. திருக்கடவூர். கோவைப்பாடி பொருள்பெற்று, ஆலயப்பணி செய்தவர்.

48. நின்றசீர் நெடுமாற நாயனார்-ஐப்பசி-பரணி. அரசர்-பான்டிய நாடு. மதுரை. திருஞானசம்பந்தர் தந்த திருநீற்றால் சுரம் நீக்கியவர். அவர் திருவாக்கால், கூன் நிமிரப்பெற்று சைவரானவர்.

49. வாயிலார் நாயனார்-மார்கழி-ரேsivan_par_jpg1வதி. வேளாளர், தொண்டைநாடு-மயிலாப்பூர். மானசீகமான ஞானபூஜை செய்தவர்.

50. முனையடுவார் நாயனார்-பங்குனி-பூசம். வேளாளர், சோழநாடு, திருநீடூர். கூலிக்குப் போர் செய்து அக்கூலிகொண்டு சிவனடியாரை வழிபட்டவர்.

51. கழற்சிங்க நாயனார்-வைகாசி-பரணி. குறுகிய மன்னர்-சிவபூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் தமது மனைவியின் மூக்கை ஒரு சிவனடியார் அறுத்த தண்டனை போதாது என்று, அவள் கைகளையும் வெட்டியவர்.

52. இடங்கழி நாயனார்-ஐப்பசி-கார்த்திகை. அரசன்-கோனாடு, கொடும்பாளூர். அடியார் வழிபாடு செய்ய நெய் நெல் திருடினவர்க்கு மேலும் பொருளும் நெல்லும் தந்தவர்.

53. செருத்துணை நாயனார்-ஆவணி-பூசம். வேளாளர், சோழநாடு, தஞ்சாவூர். கழற்சிங்க நாயனாருடைய மனைவி, பூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் அவர் மூக்கை அரித்தவர்.

54. புகழ்த்துணை நாயனார்-ஆவணி-ஆயில்யம். ஆதிசைவர். செருவிலிபுத்தூர். சிவபூஜைக்கு உதவியாக அரிசிற்கரைப்புத்தூர் சிவபெருமானால் பஞ்சகாலத்தில் காசு அளிக்கப்பெற்று தொண்டு செய்தவர்

55. கோட்புலி நாயனார்-ஆடி -கேட்டை. வேளாளர். சோழநாடு. திருநாட்டியத்தான்குடி. சிங்கடி, வனப்பகை என்ற இரண்டு புதல்வியரைத் சுந்தர மூர்த்தி ஸ்வாமிக்கு அரிப்பணம் செய்தவர். சிவபூஜைக்குரிய நெல்லையுன்ட சுற்றத்தார் அனைவரையும், குழந்தை உட்பட அனைவரையும் கொன்றவர்.

56. பூசலார் நாயனார்-ஐப்பசி-அனுஷம். அந்தணர். தொண்டைநாடு. திருநின்றவூர். மனத்தினாலேயே கோயில்கட்டிச் சிவ வழிபாடு செய்தவர்.

57. மங்கையர்க்கரசியார்-சித்திரை-ரோகினி. (மாணியார்) அரசியார், பாண்டியநாடு, திருஞானசம்பந்தரை வரவழைத்துத் தமது கணவரையும், பாண்டிய நாட்டையும் சைவமாக்கியவர்.

58. நேச நாயனார்-பங்குனி-ரோகிணி. சாலியர்-கம்பீரநகரம் சிவனடியார்களுக்கு உடையும் கோவணமும் செய்து கொடுக்கும் பணியைச் செய்தவர்.

59. கோச்செங்கட்சோழ நாயனார்:மாசி-சதயம். அரசர் சோழநாடு. எழுபது சிவாலயங்கள் கட்டியவர். முப்பிறவியில் சிலந்தியாகப் பூஜை செய்தவர்.

60. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்-வைகாசி-மூலம். பாணர், நடுநாடு- திருஎருக்கத்தம்புலியூர், திருஞானசம்பந்தருடன் சென்று, யாழ்த்தொண்டு புரிந்தவர்.

61. சடைய நாயனார்-மார்கழி-திருவாதிரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர். சுந்திரமூர்த்தி சுவாமிகளைப் பிள்ளைகளாகப் பெற்றவர். அவருக்குச் சடங்கவி சிவாச்சாரியார் புதல்வியைத் திருமணம் செய்விக்க முயற்சித்தவர்.

62. இசைஞானியர்-சித்திரை-சித்திரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர், சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளைப் பிள்ளையாகப் பெற்று வளர்த்த பெண்மணியார்.

63. சுந்தரமூர்த்தி நாயனார்-ஆடி-சுவாதி. ஆதிசைவர், நடுநாடு-திருநாவலூர். திருத்தொண்டர் தொகைபாடியவர். இறைவனைத் தூது அனுப்பியவர். முதலையுண்ட மகனா வருவித்தவர்