சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்றொரு பழமொழி உண்டு. அன்னாபிஷேகத்தை வைத்துதான் இந்த
பழமொழி ஏற்பட்டிருக்க வேண்டும். அன்னாபிஷேகம் செய்யப்பட்ட சிவனை தரிசிப்போருக்கு,
அவரது அருள் பரிபூரணமாகக் கிடைப்பதுடன் முக்தியும் கிடைக்கும் என்பதால் இவ்வாறு
சொல்லியிருக்க வேண்டும். அன்னாபிஷேக வேளையில் சுவாமியைத் தரிசித்தால், வாழும்
காலத்தில் உணவிற்கு பஞ்சமில்லாத நிலையும், வாழ்க்கைக்குப் பின் சொர்க்கமும்
கிடைக்கும்.
No comments:
Post a Comment