Tuesday, February 1, 2011

கோலம் போடுவது ஏன்?

கோலம்-

கோலம் போடுவதற்கும் நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோலம் போடுவது பூமிக்கு செய்யும் மரியாதை. அதிகாலையில் வீட்டுமுன் சாணம் தெளித்து கோலம் போடுவதில் அர்த்தம் உள்ளது. சாணம் கிருமி நாசினி வீட்டுக்குள் கிருமிகளை நுழையவிடாது.
மார்கழி பனிக் காற்றில் மருத்துவ குணமுள்ள ஓசோன் இருப்பதால் அதிகாலையில் கோலம் போடும் பெண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். கோலத்தை வைத்தே ஒரு வீட்டின் சூழ்நிலையை, அன்று எத்தகைய நாள் என்பதை முன்னோர்கள் கணிக்கும் வழக்கம் இருந்தது.
நம் மூதாதையர்கள் அரிசி மாவில்தான் கோலம் போட்டனர். அது அன்னதானத்துக்கு சமமாக கருதப்பட்டது. அறிவியல் வளர்ச்சியால் நம் வாழ்க்கை சூழல் மாறி இன்று கோலம் போடும் கலாச்சாரம் குறைந்துவிட்டது.
கோலம் போட சில விதிகள் உள்ளது. அதற்கு ஏற்ப கோலமிட்டால் வாழ்க்கையில் வளம் சேரும்.
* சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும்.
* வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.
* தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம்போடக்கூடாது.
* கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும். சாணத்தின் பசுமை விஷ்ணுவையும், கோல மாவின் வெண்மை பிரம்மாவையும் காவியோட செம்மை சிவனையும் குறிக்கிறது.
* கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும். * வியாழக்கிழமை துளசி மாட கோலம், வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம் போடுவது நல்லது.
* சனிக்கிழமை பவளமல்லி கோலம் போட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
* பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம் போடுவது சிறப்பு.
* ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலம், திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம் போடுவது நல்லது.
* வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது.
* செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன் மாவிலைக்கோலம் போடவேண்டும்.
* விழா நாட்களில் இலை கோலம் போடுவது சிறப்பாக இருக்கும்.
* கோலத்தின் 8 பக்கத்திலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
* இறந்தவர்களுக்கு செய்யும் விஷேசம், பித்ரு நாட்களில் கோலமிடக்கூடாது.
* இடது கையால் கோலம் போடக்கூடாது.
* பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும் உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும்.
* கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும்.
* கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும்.
* ஞாயிற்றுக்கிழமை சூரிய கோலம் நல்லது.
* ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும்.

* கிழமைக்கு ஏற்ப வாசலில் கோலமிட்டால் கெட்ட ஆவிகள் நம் வீட்டை நெருங்காது.
சுபகாரியங்களுக்கு ஒரு கோடு போடக்கூடாது.அசுப காரியங்களுக்கு இரட்டைக்கோடு கூடாது.வேலைக்காரர்களைக்கொண்டு கோலமிடக்கூடாது.
கோலம்
கோலமானது குடும்பத்தின் வாசலிலும், பூஜையறையிலும் பெண்கள் அரிசி மாவினால் மண்ணின் மீது வரையும் ஓவியக்கலையாகும். இது பெரும்பாலான இந்துக்களால் தென்னிந்தியாவில் வரையப்படும் வழக்கமான ஒரு கலையாகும். கோலமும் ஒரு வகையான வழிபாடே. இக்கோலமானது குறிப்பிட்ட என்ணிக்கையிலான புள்ளிகளை மையமாக வைத்து அதனைச் சுற்றி வளைகோடுகளாக வரையப்படும் கலையாகும். கோலம் ஈரமான நிலத்தில் அரிசி மாவினால் பெரும்பாலும் வரையப்படும். நிலத்தை நீரினை மட்டும் தெளித்தோ அல்லது பசுஞ்சானத்தை நீருடன் கலந்து தெளித்தோ ஈரப்படுத்துவர். பசுஞ்சானம் மூலம் நிலத்தை ஈரப்படுத்துவதால் அரிசி மாவினால் வரையப்படும் கோலத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும், அதே சமயம் அது வீட்டிற்கு கிருமிநாசினியாகவும் செயல்படும்.
கோலத்தின் அமைப்பானது வீட்டிற்கு லஷ்மி கடாஷத்தை அளித்து துர்தேவதைகளை துரத்தும் என இந்துக்கள் நம்புகின்றனர். அரிசி மாவினால் கோலமிடுவதால் சிறு பூச்சிகளான எரும்புகளுக்கு அது உனவாகவும் பயன்படுகிறது. வெள்ளை கல்லின் மாவானது கோலம் வரைவதற்கு எளிதாக இருப்பதாலும் நல்ல நிறத்தை அளிப்பதாலும் தற்போது வெள்ளை கல்லின் மாவினை கோலத்தை வரைய பயன்பதுத்துகின்றனர். கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் கோலம் எளிதில் கலையாமல் இருக்க ஈரமான அரிசி மாவினால் கோலம் இடுவர். கிருஷ்ன ஜெயந்தி தினத்தன்று வாசல் முதல் பூஜையறை வரை சிறு குழந்தைகளின் பாதம் போன்ற கோலம் இடுவர். இதன் மூலம் பகவான் கிருஷ்னரே வீட்டிற்கு வருவதாக இந்துக்களால் நம்பப்படுகிறது.

கோலம் வரைவது மனிதனுக்கு ஒழுக்கத்தையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலையும் தந்து நமது பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் மனப்பக்குவத்தை அளிக்கிறது எனவும் நம்பப்படுகிறது. கோலத்தில் நிறைய வகைகள் உள்ளன. வட இந்தியாவில் வன்னமயமான கோலத்தை ரங்கோலி என்று அழைப்பர். தென்னிந்தியாவில் புள்ளி கோலமும், நெளி கோலமும் பிரசித்திப் பெற்றது. கோலத்தில் இடும் புள்ளிகளானது நமது வாழ்வின் அன்றாட பிரச்சினைகளாகவும் வளைகோடுகள் வாழ்வின் நமது பயனங்களாகவும் கருதப்படுகிறது
வீட்டின் முன் கோலம் - ஏன்?

ஆதி காலத்தில் மனிதன் மரங்களிலும், குகைகளிலும் வாழ்ந்து வந்தான். பின்னர் காலம் செல்லச் செல்ல சிறு சிறு வீடுகளை கட்ட ஆரம்பித்தான். அவ்வாறு வீடு கட்டும் போது, கண்ணுக்கு தெரியாத பல நுண்ணுயிர்கள் மடிந்தன. உயிர்களை கொல்வது பாவச் செயலாகும். இது மனிதனை மிகவும் வதைத்தது. ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தான்.
வீடு கட்டி முடித்த பின்னர், அரிசி மாவை மணல் போல திரித்து அதில் வீட்டின் முன் கோலம் போட ஆரம்பித்தான். கோலத்தில் இருக்கும் அரிசியை சாப்பிட எறும்பு மற்றும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் வந்தன. இதனால் உயிர்களை கொன்ற பாவங்கள் தீர்ந்து விட்டது என்று நிம்மதியாக இருந்தான். கோலமும் வீட்டின் முன் மிகவும் அழகாக இருந்தது.
ஆனால் இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, அரிசி கோலம், ரசாயன கோலமானது பின்னர் ஜவ்வு காகிதத்தில் கோலம் அச்சு அடிக்கப்பட்டு வீட்டின் முன் ஒட்டப்பட்டது. இதனால் மேலும் பல நுண்ணுயிர்கள் மடிந்தன, மடிந்து கொண்டிருக்கின்றன. இதனோடு கோல போட்டிகள் வேறு உருவானது.
அழகுக்கு முக்கியத்துவமா இல்லை உயிர்களுக்கா? செய்யும் செயலை ஏன், எதற்காக என்று தெரிந்து செய்தால் நன்மை பயக்கும். இல்லையேல் கேலிக்கும் கூத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும். நம் முன்னோர்கள் கோலத்தை உருவாக்கிய காரணத்தையே நாம் இன்று மறந்துவிட்டோம். இவை நமக்கு நன்மை பயக்குமா? சிந்திப்போம்! செயல்படுவோம்!





No comments:

Post a Comment