Monday, March 21, 2011

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் -
ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுதான் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று ஆகிவிட்டது.

நம் நாட்டில் சித்த வைத்தியம்தான் சிறப்பாகவும், சீராகவும் இருந்து வந்தது. அதை அடிப்படையாகவு‌ம் வைத்தியர்களை மன‌தி‌ல் வை‌த்து‌ம் சொல்லப்பட்டதுதா‌ன் இது.
வைத்தியன் என்பவர் குறைந்தபட்சம் 50,000 வேர், செடி, கொடிகளை எடுத்து இலைகளைப் பறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும். அதுபோல, குறை‌ந்தப‌ட்ச‌ம் ஆயிரம் வேரையாவது கொன்றிருந்தால்தா‌ன் அரை வைத்தியனாகவாவது ஆகியிருக்க முடியும் என்ற அடிப்படையில் சொன்னதுதான் இந்தப் பழமொழி.

1 comment:

  1. ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வயித்தியன் என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமே தவிர கொன்றவன் என்று பொருள் கொள்ளக் கூடாது.எந்த மூலிகையையும் கொன்றால் அவன் வைத்தியனே அல்ல.எந்த மூலிகையைப் பறித்தாலும் அந்த மூலிகைகள் உயிரோடு இருக்க சாப நிவர்த்தி மந்திரங்களைச் சொல்லி மூலிகைகளின் உயிர் அதன் உடலில் தங்கச் செய்து அதன்பின் அவற்றை மருந்தாக்கி உபயோகிப்பதே சித்தர்களின் உயரிய சித்த மருத்துவம் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete