Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 88மரக்கன்று நடும் பணி


ஒரு நகரில் வசித்த கந்தசுவாமி என்பவர் வீடு கட்டி முடித்தார். சாதாரண வீடல்ல! பங்களா தோற்றத்தில் ஈரடுக்கு மாடி கட்டி மிகுந்த பொருட்செலவில் கிரகப்பிரவேசம் செய்தார். அந்த வீட்டுக்கு ஒரு துறவி வந்தார். அவரை அன்போடு வரவேற்றார் கந்தசுவாமி. ""எங்கள் இல்லத்தின் கிரகப்பிரவேச நாளில் தாங்கள் வந்தது எங்களுக்கெல்லாம் பெருமை. காலையில் வீட்டுக்குள் பசு நுழைந்து, கோமியம் பெய்த போது பட்ட மகிழ்ச்சியை விட இரு மடங்கு மகிழ்கிறோம்,'' என்று முகமன் கூறினார். துறவி சிரித்துக் கொண்டார். அவருக்கு பால், பழம் தரப்பட்டு உபசரிக்கப்பட்டது. சாப்பிட்ட துறவி கந்தசுவாமியை தனியே அழைத்து, ""இவ்வளவு பெரிய வீடு கட்டியிருக்கிறாயே! ஆனால், இங்கே இருப்பவர்களை அம்மை நோய் தாக்கும் போல் தாக்கும் போல் தெரிகிறதே!'' என்றதும், அதிர்ந்தார் அவர்.""சுவாமி! என்ன காரணம்! ஏதேனும் வாஸ்து தோஷம் தங்கள் பார்வைக்கு படுகிறதா?'' படபடத்தார் கந்தசுவாமி.""அதெல்லாம் இல்லை அப்பனே! இவ்வளவு பெரிய வீட்டில் எங்காவது ஒரு மரம் இருக்கிறதா! "இடம்பட வீடு எடேல்' என்று அவ்வைப் பாட்டி சொன்னது <உனக்குத் தெரியாதா? வீடு கட்டினால், சுற்றிலும் இடம் விட வேண்டும் என்பது இதன் பொருள். நீ நிறைய இடம் விட்டிருக்கிறாய். ஆனால், அதில் மரக்கன்றுகள் நடவில்லையே! இடம் விடுவதன் நோக்கமே அதுதான். மரங்கள் சூழ்ந்துள்ள வீடு குளிர்ச்சியாக இருக்கும். குளிர்ச்சியுள்ள வீட்டில் அம்மை தாக்குவதில்லை. நீ வேம்பு போன்ற மரக்கனறுகளை சுற்றிலும் நடு,'' என்றார். கந்தசுவாமி நிம்மதி பெருமூச்சு விட்டார்.அன்றே மரக்கன்று நடும் பணியைத் துவக்கி விட்டார்.

No comments:

Post a Comment