Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 89 வாயுவுக்கு ஏன் அனுமான் பிறந்தார்?

உலகில் இருக்கிற ஒன்றை விட இல்லாத ஒன்றுக்கு தான் மதிப்பு. சூரியன் பகலில் இருக்கிறது. இரவில் மறைந்து இல்லாததாகி விடுகிறது. ஆக, இல்லாத ஒன்று காலையில் உதயமானதும் உயிர்கள் மகிழ்கின்றன. ஆனால், வாயுவான காற்று எப்போதும் இருக்கிறது. 24 மணி நேரமும் இருக்கிறது. சூரிய ஒளியைக்கூட பந்தல் போட்டு மறைத்து விடலாம். ஆனால், காற்று புகாத இடம் உலகில் உண்டா? ஒருவரை, இருட்டறையில் அடைத்துப் போட்டாலும் சுவாசத்துக்கு இடைஞ்சல் இருக்காது. இப்படி, காற்றாகிய வாயுபகவான் எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்கள் சேவை செய்பவர். எனவே தான், அனுமானும் அவரைத் தனது தந்தையாகத் தேர்ந்தெடுத்து அவரது பிள்ளையானார். அவரது குணம் இயற்கையாகவே அமைந்தது. முன்பின் தெரியாத ராமனுக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்தார். காற்று புக முடியாத அளவு பாதுகாப்புமிக்க இலங்கைக்குள் அவர் புகுந்தார். அரக்கர்களை அழித்தார். இந்த சேவைக்காக அவர் ராமபிரானிடம் பாராட்டு பெற்ற போது, அவரது திருவடிகளில் விழுந்து, ""இந்த புகழெல்லாம் பகவானுக்கே உரியவை'' என்றார். தனது எஜமானனுக்கு மாறாத நம்பிக்கையும், பக்தியும் கொண்டிருந்த அனுமானின் இந்த அரிய பண்பை நாமும் நம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும்

2 comments:

  1. உங்கள் ஆக்கம் மிகவும் அற்புதம்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete