Monday, July 25, 2011

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை!

பல சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரு கோயில் இருந்தது. அதில் முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அங்கு வந்த இளைஞன் ஒருவன், இந்த வழியே போனால் நான் எங்கே போய்ச் சேருவேன் ? என்று கேட்டான். முதியவர் கேட்டார், நீ எங்கே போக விரும்புகிறாய் ? இளைஞன் சொன்னான். எனக்கு அது தெரியவில்லை. அப்படியானால் நீ எந்த வழியே போனாலும் ஒன்றுதான் ! என்றார் பெரியவர். வாழ்க்கையில் குறிக்கோள் எதுவும் இல்லாவிட்டால் எல்லா வழியும் ஒன்றுதான்!

No comments:

Post a Comment