Thursday, July 28, 2011

யாகம் என்பது என்ன?

ஹோம சமித்துக்களை திரட்டிக்கொண்டு அக்னி குண்டங்கள் எழுப்பி வேதியர்களால் செய்யப்படுவது மட்டும் யாகம் ஆகிவிடாது. எந்த மனிதனிடமும் மிருகத்திடமும் பகைபாராட்டாமல் இருத்தல், இருப்பதைக் கொண்டு சிறப்போடு வாழ்தல், ஒழுக்கத்தை உயிர்மூச்சாக கொள்ளுதல், கர்வம் இன்மை, தியானம் செய்தல், மனதை கட்டுப்படுத்துதல், உண்மையே பேசுதல், தானம் கொடுத்தல் ஆகிய குணங்கள் ஒரு மனிதனுக்கு இருந்தாலே அவன் பெரிய பெரிய வேள்விகளை செய்தவனுக்கு சமமானவன் ஆவான்.

No comments:

Post a Comment