Monday, November 25, 2013

பொய் , பயனற்ற சொல் , கடுஞ்சொல் ஆகியவற்றை தவிர்த்துவிடுங்கள்

 
பொய் , பயனற்ற சொல் , கடுஞ்சொல் ஆகியவற்றை தவிர்த்துவிடுங்கள் ...

"ஒருவன் பொய்யுரையைத் தவிர்த்து விட்டாலே, அவன் உண்மை பேசுபவனாகிவிடுகிறான்; நம்பகமானவனாகி விடுகிறான், பொறுப்பானவனாகி விடுகிறான்;

எவரும் அவனை நம்பி வாழலாம். அவன் இவ்வுலகத்தை ஏமாற்ற மாட்டான்....

தீய எண்ணங் கொண்ட வார்த்தைகளை அவன் என்று விட்டு விட்டானோ,

அன்றே அங்கு பேசுவதை இங்கும், இங்கு பேசுவதை அங்கும் புனைந்து, புறங்கூற மாட்டான்.

அவன் பிரிந்திருப்பவர்களை ஒன்று சேர்ப்பான்; நண்பர்களை மேலும் நெருங்கிய நண்பர்களாக்குவான்;

ஒற்றுமையே அவனது மகிழ்ச்சி; ஒற்றுமையே அவனது தெளிவு; ஒற்றுமையே அவனது அன்பு; அவனது பேச்சுக்களின் நோக்கமே இவைதாம்:

கடுஞ்சொற்களைத் தவிர்த்தல்;

அவனது சொற்கள் குற்றமற்றவை; குறையற்றவை; காதுகளுக்கு இனிமையானவை; எல்லாராலும் ஏற்று கொள்ளக் கூடியவை;

உள்ளத்தைத் தொடுபவை; நாகரிகமானவை; எல்லாராலும் விரும்பப்படுபவை; பயனற்ற பேச்சைத் தவிர்த்துச் சரியான நேரத்தில்,

சரியானவற்றை மட்டுமே அறத்தைப் பற்றியும் ஒழுக்கத்தைப்பற்றியும் பேச வேண்டியவை பற்றிமட்டுமே பேசுவான்.

அவன் பேசுஞ் சொற்கள் புதையலைப் போன்று காக்க வேண்டியவை; காலத்துக்குகந்தவை; சரியான காரணங்களுடையவை; எதை விளக்க வேண்டுமோ, அதைமட்டும் மிகச்சரியாக விளக்குபவை. "

No comments:

Post a Comment