Monday, June 18, 2012

ராமராஜ்யம்


ராமச்சந்திர மூர்த்தி புதுசாக ராஜநீதி என்று எதுவும் செய்து ராஜ்யத்தை நடத்தவில்லை. தன் அபிப்ராயம், தன் காரியம் என்று சொந்தமாக எதுவும் இல்லாமல், எல்லாமே சாஸ்திர அடிப்படையிலேயே பின்பற்றினார். அவரது முன்னோர் முதல் சக்கரவர்த்தி தசதரர் வரை எந்த தர்மவழியில் ஆட்சி நடந்ததோ அதையே அவரும் பின்பற்றி நடந்தார்.
தசரதர் ராமபட்டாபிஷேகம் செய்ய உத்தேசித்ததும், தன் குமாரன் ஸர்வ ஜன அபிமானத்தையும் பெற்றவன் என்று தெரிந்தபோதிலும், சபையைக் கூட்டி பலதரப்புகளையும் சேர்ந்த பிரதிநிதிகளிடமும் அபிப்ராயம் கேட்டார் என்று ராமாயணத்தில் சொல்லி இருக்கிறது. ஜனங்களின் அபிப்ராயங்களை உள்ளது உள்ளபடி கேட்டுத் தெரிந் து கொள்ளத்தான் வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். ஒரு நாய் கூட ராமரிடம் நியாயம் கேட்க நேராகத் தானே வழக்குக் கொடுத்திருப்பதாக உத்தர காண்டத்தில் வருகிறது.
"ராமாயணமா! அது திரேதாயுக சமாச்சாரமாச்சே!' என்று ஒதுக்கி விடக்கூடாது. மக்களின் அபிப்ராயம், திறமையான, தூய்மையான நிர்வாகம் என்ற இரண்டையும் எந்த அளவில் இணைக்கலாமோ, அப்படி கலந்து ஆட்சி நடத்த வேண்டும். வெறும் பழம் பெருமையோடு மட்டும் நின்றுவிடாமல், இன்றும் ராமராஜ்யம் நமக்கு வழிகாட்டியாவதற்கு ஸ்ரீராமசந்திரமூர்த்தி கிருபை செய்வாராக.

No comments:

Post a Comment