Saturday, December 21, 2013

படித்ததில் பிடித்தது

# படித்ததில் பிடித்தது
 
ஒருவர் தன்
சொத்துக்களை கணக்கு பார்த்து விட்டு,
ஏக்கத்துடன் "எட்டு கோடி!" யென
பெருமூச்சு விட்டார்.
அவ்வளவுதான் மார்பு வலிக்க..!...
எதிரே எமன் தோன்றி.., "ம்...
புறப்படு..!" என்றான்.
அழுது புரண்டு "தன்
சொத்து அனைத்தையும் தருகிறேன்.
என்னை இன்னும் சிறிதுகாலம்
வாழவிடு..!" என்
பந்தங்களையாவது ஒரு முறை காண
விடு..!" என கதறினார்.
எமன் சிரித்து விட்டு,
"உனக்கு இருப்பது இரண்டே வினாடிகள்
தான்.
எதுவேண்டுமானாலும்
செய்துகொள்..!" என்றான். உடனே
அவசரமாய் இப்படி எழுதினார்..
"இதை படிப்பவர்கள்
உணரவே வேண்டியது என்ன என்றால்.
எட்டுகோடியிருந்தும்..
அதைவைத்து ஒரு நாழிகையைகூட
என்னால் வாங்க முடியவில்லை.."
# படித்ததில் பிடித்தது
 
 
 
 

No comments:

Post a Comment