Tuesday, February 17, 2015

மனிதனுக்கு பத்துவிதமான பற்றுகள் இருக்கிறது. பசி வந்தால் அவை அற்றுப்போகும் என்பதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்…”

.பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்னு சொல்வாங்க, அது பத்து அல்ல..பற்று..மனிதனுக்கு பத்துவிதமான பற்றுகள் இருக்கிறது. பசி வந்தால் அவை அற்றுப்போகும் என்பதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்…”
(சமஸ்கிருதுத்துல அந்த 10 பற்றுகளையும் பட்டியலிட்டார்)
அதை உணர்த்துவதுபோல பரிணாம வளர்ச்சியோடு பெருமாள் எடுத்ததுதான் பத்து அவதாரம்…தசாவதாரம்..!
முதல் அவதாரம்…மச்ச அவதாரம்.
ஒருசெல் உயிரிதான் முதல்ல தோன்றின உயிரினம்.அது கடல்லதான் உருவானது.அதுக்கு பயலாஜிக்கலா புரோட்டோசோவான்னு சொல்லுவாங்க.
மீன்..இதுக்கு நீந்த யாரும் சொல்லித்தரவேண்டியதில்லை…இந்த அவதாரம் உணர்த்துவது..நீந்துதல்…சர்வைவல்..ஒவ்வொரு மனுஷனும் வாழ்வதற்கு தேவையான விஷயங்கள் அவனுக்குள்ளேயே இருக்குன்னு உணர்த்தறதுதான் இந்த அவதாரம்.
இரண்டாவது..கூர்ம அவதாரம்..ஆமை
சீரான மூச்சு..நிதானம்..இதெல்லாம் தான் ஆமையோட தனித்தன்மை. மூச்சு கட்டுப்பாட்டுக்கு ஆமை மிகச்சிறந்த உதாரணம்.
மூவ் பண்ணுகிற நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் கண்களை மூடியபடியே இருப்பது ஆமையின் வழக்கம்.
ஆழ்ந்து கவனித்தால் ஒன்றை புரிந்துகொள்ளலாம்…நமது உறுப்புகளில் கண்ணை மட்டும்தான் நம்மால் மூட முடியும்..
இந்த அவதாரம் நமக்கு உணர்த்துவது கண்களை மூடி இருக்கச்சொல்வது.
உள்ளே போய் வெளியே வரும் மூச்சை கவனிக்கச்சொல்வது இந்த அவதாரம்.
(இனி..அடுத்தடுத்த அவதாரம் ஜம்ப் பண்ணி போயிடுவோம்…ரொம்ப விளக்கம் இங்க வேணாம்)
மூனாவது அவதாரம்…வராக அவதாரம்…
இதுல ஆழ்ந்து கவனிச்சீங்கன்னா ஒரு விஷயம் புரியும்…அந்த பன்றி ரூபம் தன்னோட மூக்கு நுனியில உலக உருண்டைய தாங்கி பிடிச்சிருக்கற மாதிரி இருக்கும்..
இதோட அடிப்படை என்னன்னா..மூக்கு நுனியை கவனிப்பதன் மூலம் மூச்சை எளிதா கவனிக்கலாம்…எல்லா தியானத்துலயும் சொல்லித்தரும் விஷயம்தான்.
மூச்சை கவனிக்கிறது மூலமா..ஞானமடையலாம்ங்கறதுதான் இந்த அவதாரம் சொல்வது.
அடுத்தது நரசிம்ம அவதாரம்..குழந்தை உள்ளத்தோடு இருந்தால் கூப்பிட்ட உடனே வருவார் என்பதுதான்..
அடுத்தது வாமன அவதாரம்..நீ என் திருவடி தத்துவத்தை புரிந்துகொண்டால் நீ நானாகிறாய் என்பதுதான்
அடுத்த அவதாரம் பரசுராமர்..உடல் வலிமை உலகத்தை ஆளுதலை உணர்த்துவது.
அடுத்தது ராமர்..வாழ்வின் லட்சியம் ..ஞானமடைதல்
கிருஷ்ணர்…நான் இறை அனுபூதி..என்னை நீ அனுமதி
பலராமர்..விவசாயத்தை விட்டுவிடாதே என்பதை உணர்த்துவது.
இனி வரும்காலத்தில் கட்டியிருக்கும் வீடுகளை இடித்துவிட்டு விவசாயம் செய்யும் நிலை வரப்போகிறது.
பத்தாவது அவதாரம்..தசாவதாரம்..இனிதான் வரப்போவதாக சொல்லியிருக்கும் அந்த அவதாரம்..கல்கி

No comments:

Post a Comment