Tuesday, February 17, 2015

நோய் நீக்கும் மந்திரங்கள்:-

நோய் நீக்கும் மந்திரங்கள்:-
1.அமிர்த சஞ்சீவினி மந்திரம்:-
ஓம் நமோ பகவதி |மிருதசஞ்சீவினி |சாந்தி குரு குரு ஸ்வாஹா||
அசுரகுரு சுக்ராச்சாரியார் இம்மந்திரத்தை உபயோகித்தே இறந்தவர்களைக்கூட மீண்டும் உயிர் பெறச்செய்தார்.வியக்கத்தக்க வகையிலும்,உடனடியான பலன்களையும் தரும் இம்மந்திரத்தை உபயோகித்து பலனடையுங்கள் .நமக்காக ஜெபிப்பதானால் மேற்கண்ட மந்திரத்தை அப்படியே ஜெபிக்கலாம் .பிறருக்காக ஜெபிப்பதானால் சாந்தி என்ற வார்த்தைக்கு முன்னதாக சம்பந்தப்பட்டவரின் பெயரை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
உதாரணமாக:- முருகன் என்பவருக்காக ஜெபிப்பதானால்
ஓம் நமோ பகவதி |மிருதசஞ்சீவினி |முருகன் சாந்தி குரு குரு ஸ்வாஹா||
என ஜெபிக்க வேண்டும்.
2.தன்வந்திரி மந்திரம்:-
ஓம் |நமோ பகவதே வாசுதேவாய|தன்வந்திரியே |அமிர்தகலச ஹஸ்தாய |
சர்வ ஆமய நசனாய|த்ரைலோக்ய நாதாய |ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு,சக்கரம்,அட்டைபூச்சி,அமிர்தகலசம் இவற்றுடன் தோன்றியவர்தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான்.ஆயுர்வேதம் அவரால் தோன்றியது.கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து வந்தாலும் வியாதிகள் நீங்கும்.வெண்ணையில் மந்திரித்து உண்ணலாம்,மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை இடது கையில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.

No comments:

Post a Comment