Tuesday, February 17, 2015

பிருகு முனிவரின் சோதனை :

பிருகு முனிவரின் சோதனை :
பிருகு முனிவர் சோதனையின் முதல் பகுதியாக பிரம்ம லோகத்துக்கு முதலில் சென்றார்!! அதுவும் எப்படி? பிரம்மா மனைவி சரஸ்வதியுடன் தனித்திருக்கும் நேரமாகப் பார்த்து உள்ளே போனார்!! பெரும் தபஸ்வியான அவரைத் தடுத்து நிறுத்தும் துணிச்சல் அங்கு யாருக்கும் இல்லை!!!
பிரம்மா ரஜோ குணத்துக்கு அதிபதி!! வேகம், கோபம் போன்றவை ரஜோ குணத்துடன் இணைந்தவை!! மனைவியுடன் இருந்த பிரம்மா திடீரென உள்ளே நுழைந்த முனிவரைப் பார்த்துக் கடும் கோபமடைந்தார்!! முனிவரைக் கடுமையான வார்த்தைகளால் ஏசினார்!! உடனே கோபமடைந்த பிருகு முனிவர் '' தபஸ்வியான என்னைக் கடும் வார்த்தைகளால் திட்டிய உனக்கு பூலோகத்தில் ஆலய வழிபாடே இல்லாமல் போகட்டும் !!'' என்று சாபமிட்டார்!! இந்தக் காரணத்தால்தான் பிரம்மாவுக்கு என்று கோவில்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது!! (சில ஸ்தல புராணங்கள் காரணமாக ஓரிரு கோவில்கள் உள்ளன!)
அடுத்து கைலாயம் !! கயிலையில் சிவபெருமான் சக்தியுடன் தனித்திருந்த நேரம் முனிவர் திடீரென உள்ளே நுழைந்தார்!! சிவபெருமான் தமோ குணத்தின் அதிபதி!! அது புறக்கணிப்பு, அழிவு ஆகியவற்றுடன் இணைந்தது!! (இதன் பொருள் இதுவல்ல!! இது பற்றி பின் வரும் பதிவுகளில் விளக்கமாக வரும்!). முனிவர் உள்ளே நுழைந்ததைக் கண்ட சிவபெருமான் எரிச்சலாகி அவரைக் கண்டுகொள்ளாதது போல இருந்தார்!! அதுமட்டுமின்றி தேவியிடம் இந்த முட்டாள் முனிவனைப் பார் எந்த நேரத்தில் அனுமதியின்றி வருவது என்று கூட இவனுக்குத் தெரியவில்லை என்று சொல்லிச் சிரித்தார்!! கோபமான முனிவர் '' தபஸ்வியான என்னை வந்தது கூடத் தெரியாதது போலக் காட்டிக் கொண்டு தேவியுடன் சிரித்துப் பேசிய சிவனே!! என்னை விட சக்தியுடன் பேசுவதே முக்கியம் என்று எண்ணிய உனக்கு பூமியில் வழிபாடுகள் உன் உருவத்துக்கு அன்றி உன் லிங்கத்துக்கே இருக்கட்டும் !!'' என்று சாபமிட்டார்!! இதனால்தான் பூமியில் சிவபெருமான் லிங்க வடிவிலேயே வணங்கப்படுகிறார்!!
அடுத்து வைகுந்தம்!! அதே போல பிருகு முனிவர் திருமாலும் லட்சுமியும் தனித்திருந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார்!! அவர் நுழைந்ததைக் கண்ட திருமால் இதர இடங்களில் நடந்ததை உணர்ந்து முனிவர் என்னதான் செய்கிறார் என்று பார்ப்போமே என்று எண்ணி இரு கண்களையும் மூடினாற்போல் பாவனை செய்தார்!! திருமால் தான் வந்ததைக் கவனித்து விட்டு உறங்குவது போல பாவனை செய்தது கண்ட பிருகு கடும் கோபமடைந்தார்!! நேராக வந்தவர் விஷ்ணுவின் இடது மார்பில் தமது வலது காலால் எட்டி உதைத்தார்!! திருமால் சத்வ குணம் கொண்டவர்!! சத்வ குணம் பொறுமை, நிதானம் போன்றவற்றோடு தொடர்புடையது!! திருமால் கண்விழித்தார்!! முனிவரைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தவர் '' என்ன பிருகு கால் வலிக்கிறதா ?" என்று கேட்டு முனிவரின் காலைப் பிடித்து விடுவது போலப் பிடித்து அந்தக் காலில் இருந்த ஞானக் கண்ணையும் பிடுங்கி விட்டார்!! தாம் எட்டி உதைத்த போதும் கோபமடைந்து தன்னை அழிக்காத சத்வ குணமுடைய திருமாலே யஞ ஆகுதிகளை முழுதும் பெறத் தக்கவர் என்று பிருகு முனிவர் முடிவு செய்து பூலோகம் திரும்பி அதனை சக முனிவர்களிடம் உரைத்தார்!!

No comments:

Post a Comment