Sunday, May 17, 2015

நாட்டிய முத்திரைகள்:

நாட்டிய முத்திரைகள்:
நாட்டிய முத்திரைகள் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்துக்கு  ஏற்ப  அந்தப் பாத்திரம் செயல்படும் கதைக்கேற்ப அமையவேண்டும். நட்டுவனாருக்கு இந்த முத்திரைகள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டியம் ஆடுவோருக்கு அவர் சரியான முத்திரைகளை, அடவுகளை சொல்லித்தர முடியும்.  நடன முத்திரையில் பாவங்களைக் காட்ட எந்த விரலோடு எந்த விரலை சேர்த்தால் அந்தக் குறிப்பிட்ட பாவம் வரும் என்று  தெரிந்துகொண்டு  அமைத்து பாவம் காட்டி  நடனமாடுவது.
1.பதாகம்    கொடி பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடித்தல்.    
2.திரிப்பதாகம்      மூன்று பாகம் கொண்ட கொடி அல்லது மரம்  பதாகத்தில் மோதிர விரலை மடித்தல்.   
3.அர்த்தப்பதாகம்   அரைக்கொடி திரிப்பதாகத்தில் சுண்டி விரலை மடித்தல்.    
4.கர்த்தரீமுகம்     கத்தரிக்கோல்      திரிப்பதாகத்தின் மடித்த விரல்களுடன் பெருவிரலை சேர்த்தல்.     
5.மயூரம்     மயில் திரிப்பதாகத்தில் மடித்த மோதிர விரலுடன் பெருவிரலை சேர்த்தல்.     
6.அர்த்தச்சந்திரன்   அரைச்சந்திரன்     பதாகத்தில் உள்ள பெருவிரலை நீட்டுதல்.    
7.அராளம்    வளைந்தது  சுட்டு விரலுடன் பெருவிரலை சேர்த்துப் பிடித்தல்.  
8.சுகதுண்டம் கிளி மூக்கு  பதாகத்தில் சுட்டு விரலையும் மோதிர விரலையும் மடித்தல்.    
9.முட்டி(முஷ்டி)    முட்டிகை   அனைத்து விரல்களையும் பொத்துதல்.
10.சிகரம்     உச்சி  முட்டியில் உள்ள பெருவிரலை விரித்தல்.   
11.கபித்தம்   விளாம்பழம் சிகரத்தின் பெருவிரலை சுட்டு விரலால் பொத்துதல்.
12.கடகாமுகம்      வளையின் வாய்   நடுவிரல் பெருவிரல் மற்றும் சுட்டுவிரல் ஆகியவற்றை சேர்த்துப் பிடித்தல்.
13.சூசி ஊசி  முட்டியில் உள்ள சுட்டு விரலை நீட்டுதல்.   
14.சந்திரகலா பிறைச்சந்திரன்     சூசியில் உள்ள பெரு விரலை நீட்டுதல்.
15.பத்மகோசம்     தாமரை மொட்டு   கையின் விரல்களை அரைவாசிக்கு மடித்தல்.
16.சர்ப்பசீசம் பாம்பின் படம்     பத்மகோசத்தைவிட சற்று மடித்து S வடிவில் சுற்றல்.     
17.மிருகசீசம் மான் தலை பெருவிரல் மற்றும் சுண்டிவிரல் தவிர்ந்த விரல்களை 45° இல் மடித்தல்.
18.சிம்மமுகம்      சிங்கத்தின் முகம்   நீட்டியபடியுள்ள நடுவிரலையும் மோதிரவிரலையும் பெருவிரலுடன் சேர்த்தல்.
19.காங்கூலம் அங்குலத்தை விட குறைந்தது   மோதிரவிரலை மடித்து மற்ற விரல்களால் மடித்துப் பிடித்தல்.   
20.அலபத்மம் மலர்ந்த தாமரை   சுண்டி விரலை அதிகம் மதிப்பதோடு மோதிரவிரலையும் சற்று மடித்தல்.   
21.சதுரம்    சாதூர்யம்   மிருகசீசத்தில் உள்ள பெருவிரலை உள்ளே மடித்தல்.
22.பிரமறம்  வண்டு      ஆட்காட்டி விரலை உள்ளே மடித்து பெருவிரலையும் நடு விரலையும் சேர்த்துப் பிடித்தல்.
23.கம்சாசியம்      அன்னத்தின் அலகு பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் நீட்டியபடி சேர்த்தல்.மற்ற விரல்கள் விரிந்து இருக்கும். 
24.கம்சபக்சம் அன்னத்தின் சிறகு  மிருகசீசத்தில் நீட்டி உள்ள பெருவிரலை ஆட்காட்டி விரல் பக்கமாக சேர்த்தல்.   
25.சம்தம்சம் இடுக்கி      விரல்களை நீட்டியபடி மூடி திறந்து மூடுதல். 
26.முகுளம்  மொட்டு     விரல்களை நீட்டியபடி சேர்த்துப் பிடித்தல்.   
27.தாம்ரசூடம்      சேவல்      மற்ற விரல்கள் பொத்திய நிலையில் ஆட்காட்டிவிரலைஅரைவாசி மடித்தல்.   
28.திரிசூலம்  சூலம் மற்ற விரல்கள் மூடிய நிலையில் சுண்டிவிரளையும் பெருவிரலையும் சேர்த்துப் பிடித்தல்.    ஆகிய முத்திரைகள் உள்ளன.

No comments:

Post a Comment