Tuesday, June 7, 2016

> நாம் வணங்குவது வெறும் கல்லோ / ஐம்பொன்னோ அல்ல அறிவியலை

> நாம் வணங்குவது வெறும் கல்லோ / ஐம்பொன்னோ அல்ல அறிவியலை !! <
நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்களை பற்றி ஆராய்ந்தால் ஒரு உண்மை தெரியவரும் அது யாதெனில் ஒவ்வொரு ஆலயமும் அமைய பெற்ற இடமானது ஒரு அறிவியல் சார்ந்த அல்லது அறிவியலுக்கு நேர்மாறான ஏதாவது ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்கும் எடுத்துக்காட்டாக திருநள்ளாறு, சிதம்பரம், போரூர் போன்ற இடங்களில் அமைய பெற்ற ஊர் மற்றும் ஆலயங்களை எடுத்துகொள்ளலாம்.
இவ்வாறு அமைய பெற்ற ஆலயங்களில் மூலவராக அமைக்கப்படும் சிலைகள் சாதாரண கல்லாக இருக்க வாய்ப்பு இல்லை. பெரும்பாலான கோவில்களின் மூலவர்கள் சிலாதோரணம், ஸ்படிகம், நவபாசனம், தசபாசனம், மாணிக்கம், மரகதம், ஐம்பொன், என்று இன்னும் கிடைபதற்கரிய பெயர் தெரியாத பலவிதமான பொருட்க்களால் செய்யப்பட்டவையே. அல்லது கதிர் வீச்சு சார்ந்த அறிவியல் உள்ள இடத்தில் மட்டுமே மூலஸ்தானம் அமைக்கப்படும்.
இப்படி அமைக்கப்பெற்ற மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருள்களும் மாறுபடுவதை காணலாம். குறிப்பிட்ட இடத்தில் இருந்து தான் நீர் எடுத்து அபிஷேகம் செய்யப்படும். அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள் அதன் அருகில் உள்ள குளத்தில் கலக்கும் வண்ணம் அமைக்க பட்டு இருக்கும்.
ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம். நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர்.
நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.
தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.
அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது.
முன்னோர்கள் (சித்தர்கள்) குறிப்பிட்ட நோய்க்கு குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று குறிப்பிட்ட பொருளால் அபிஷேகம் செய்து குறிப்பிட்ட நாட்கள் அதனை பிரசாதமாக சாப்பிட்டால் நோய் தீரும் என சொல்ல நாம் கேட்டு இருக்கலாம்.
ஆனால் இன்று கால மாற்றாத்தினால் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
இது தெரியாத பல அறிவீலிகள் நாம் அபிஷேகம் என்ற பெயரில் அனைத்தையும் வினாக்குவதாக கேலி செய்துகொண்டு திரிகின்றன.
மீண்டும் சொல்கிறேன் நாம் வணங்குவது வெறும் கல்லோ / ஐம்பொன்னோ அல்ல அறிவியலை !!

No comments:

Post a Comment