Monday, September 3, 2012

லட்சியத்தில் உறுதியான பிடிப்புடன் இருங்கள். விவேகானந்தர்

* மகத்தான செயல்களைச் செய்வதற்காக கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். அந்தச் செயல்களை விரைந்து செய்து முடிப்போம். உங்களுக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உங்களுக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன. * எதைச் செய்தாலும் அதன்பொருட்டு மனம், இதயம், ஆன்மா என்று அனைத்தையும் அர்ப்பணித்து விடுங்கள். எதிர்நீச்சல் போடுவதன் மூலம் நிச்சயம் வெற்றி உங்களைத் தேடிவரும். * எதிர்காலத்தில் நாம் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை நாம் இப்போதைய செயல்களால் உருவாக்கிக் கொள்ள முடியும். * நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக நாம் இருக்கிறோம். எப்போதும் நம்மை நல்ல எண்ணங்களின் கருவி களாக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். * சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். அடிமைத் தளையில் இருந்து விடுதலை பெறச் செய்யும். * தூய்மை,பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு அடிப்படையானவை. இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். * எழுந்திருங்கள். விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்கவேண்டாம். வாழ்க்கை ஒரு போர்க்களம். ஆனாலும், எல்லாவற்றையும் சாதிக்க வல்ல பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது. * மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர உங்களின் அறிவாற்றல் பன்மடங்கு பெருகி விடும். * விடாமுயற்சி உடையவன் சமுத்திரத்தையே குடித்துவிடுவான். மலையையும் நொறுங்கிவிழச் செய்யும் வலிமை அவனுக்கு வந்துவிடும். * லட்சியத்தில் உறுதியான பிடிப்புடன் இருங்கள். யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாதீர்கள். நிச்சயம் ஒருநாள் உலகம் உங்கள் காலடியில் பணிந்து கிடக்கும். * ஒருகருத்தை எடுத்துக் கொண்டு அதையே வாழ்வின் ஆதாரமாக்கிக் கொள்ளுங்கள். அக்கருத்தை ஒட்டியே வாழ்க்கை நடத்துங்கள். வெற்றியை அடைய இதுவே எளியவழி. * தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாராம்சமாகும். * மற்றவர்களுக்காக நாம் செய்யும் மிகச் சிறிய உழைப்புகூட நமக்குள்ளே இருக்கும் சக்தியை தட்டி எழுப்பிவிடப் போதுமானது.

No comments:

Post a Comment