Wednesday, September 5, 2012

அனுமனைத் தரிசிக்கும் அலங்காரங்களும், பயன்களும்

நாம் நினைக்கும் காரியம் வெற்றியாவதற்கு அதற்குத் தகுந்த அலங்காரத்தில் அனுமனைக் கண்டால் நாம் தேடிய வெற்றி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு அலங்காரங்களையும் தரிசித்து அதற்குரிய பலன்களைப் பெறுவீர்களாக. • முத்தங்கி சேவை அலங்காரம் தரிசிப்பதின் பலன்: ராஜயோகம் கிடைக்கும் • பட்டு அலங்காரம் தரிசிப்பதன் பலன்: துன்பங்கள் விலகும். • சந்தன காப்பு தரிசிப்பதன் பலன்: செல்வ வளர்ச்சி உண்டாகும். • சாதாரணத் தோற்றம் தரிசிப்பதன் பலன்: தடைகள் விலகிடும். • அனுமானுக்கு வடைமாலை சாற்றுவதன் வகைகள்: பேருருவம் கொண்ட ஆஞ்சநேயருக்கு வடைமாலை மூன்று வகையாக சாற்றப்படுகிறது. கூப்பிய கைக்கு மட்டும் வடைமாலை சாற்றுவது ஒரு வகை, இடுப்பு வரை இரண்டு மடங்கின முழங்கைகள் வரை வடைமாலை சாற்றுவது இரண்டாவது வகை. தலையிலிருந்து பாதம் வரை வடைமாலை சாற்றுவது மூன்றாவது வகை அவரவர் சக்திக்குத் தகுந்தாற்போல் வேண்டிக் கொண்டு வடை மாலை சாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment