Wednesday, September 5, 2012

யாரை எப்படி கும்பிட வேண்டும்?

தெய்வத்தை வழிபடும் போதும், பொதுவாக மற்றவர்களை நாம் சந்திக்கும் போதும் நம்முடைய இரு கைகளையும் இணைத்து குவித்து நாம் கும்பிடுகிறோம். இதன் தத்துவம் வருமாறு:- நமது உடல் ஐந்து கோசங்களால் ஆனது. உணவினால் ஆனது - அன்ன மயக்கோசம் மூச்சுக்காற்றினால் ஆனது - பிராண மயக்கோசம் எண்ணங்களால் ஆனது - மனோ மயக்கோசம் அறிவினால் ஆனது - விஞ்ஞான மயக்கோசம் மகிழ்ச்சியினால் ஆனது - ஆனந்த மயக்கோசம். இந்த ஐந்து கோசங்களையும் காப்பாற்றுவது நம்முள் இருக்கும் ஆன்மா. நம்முடைய ஐந்து விரல்களும், இந்த ஐந்து கோசங்களையும், உள்ளங்கை ஆன்மாவையும் குறிக்கும். இதே அமைப்பு மற்றவர்களிடம் இருந்தாலும், `ஆன்மா ஒன்றே' என்கிற மனோபாவத்தில், இரு கைகளையும் இணைத்துக் கும்பிடுகிறோம். இறைவனைக் கும்பிடும் போது, இரு கைகளையும் இணைப்பது, பரமாத்மா-ஜீவாத்மா ஐக்கியத்தை தெரியப்படுத்துகிறது. கும்பிடுவதில் சில முறைகள் உள்ளன. * தெய்வங்கள், மகான்கள், சித்தர்கள்- இவர்களை, தலைக்கு மேல் கரங்களை உயர்த்தி கும்பிட வேண்டும். * ஆசிரியரையும், குருவையும் கும்பிடும் போது, குவித்த கரங்களை, நெற்றிக்கு நேராக வைத்து, ஞானச்சுடர் ஏற்றியதற்கு அவர் களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவிக்க வேண்டும். * தாயை, வயிற்றின் முன் கரம் கூப்பி வணங்க வேண்டும். * தந்தை, அரசன்- இவர்களை நம் வாய்க்கு நேராக கைகளை இணைத்து கும்பிட வேண்டும். * மற்றவர்களை, நாம் நம் மார்பு முன்பு கரம் சேர்த்து கும்பிட வேண்டும்.

No comments:

Post a Comment