Wednesday, September 5, 2012

தீப எண்ணை பலன்கள்

1- நல்லெண்ணை - தீபத்துக்கு உகந்தது. சனி பரிகாரம் தரும். லட்சுமி கடாட்சம் கிட்டும். 2- தேங்காய்எண்ணை - நல்லதேவதைகள் வீட்டில் வாசம் செய்யும். துர்தேவதைகள் அண்டாது. கணவன்-மனைவி பாசம் கூடும் . பழைய பாவங்கள் அனைத்தும் போகும். பிளைளையாருக்கு தினமும் தேங்காய் எண்ணை தீபம் ஏற்ற எண்ணியதெல்லாம் நடக்கும். 3- இலுப்பை எண்ணை -எல்லா பாவங்களும் தீரும். மோட்சம் கிட்டும். சிவனுக்கு இலுப்பை எண்ணை தீபம் ஏற்றி வழிபட நல்ல பலன்கள் அனைத்தும் கிடைக்கும். 4-விளக்கெண்ணை- தெய்வ அருள்கிட்டும். புகழ் ,கீர்த்தி, ஜீவனசுகம் கிட்டும். தாம்பத்தியம் சிறப்பாக இருக்கும். 5- வேப்ப எண்ணை - குல தெய்வம் எதுவானாலும் அதற்கு ஏற்றது இந்த எண்ணை. 6- பசு நெய் - லட்சுமி வாசம் புரிவாள். மன மகிழ்ந்து எல்லா சுகமும், சந்தோஷமும்கிடைக்கும். அம்பிகைக்கு நெய் விளக்கெண்ணை, வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, தேங்காய் எண்ணை கலந்து ஒரு மண்டலம் (45நாட்கள்) தொடர்ந்து தீபம் ஏற்ற அம்பாளின் அருள் பரிபூரணமாய் கிட்டும்.

No comments:

Post a Comment