Wednesday, June 8, 2011

மந்திரம், தந்திரம், யந்திரம்

        ந்திரம், தந்திரம், யந்திரம் என்னும் மூன்றும் வேறுபட்ட கோணங்களில் செயல்படுபவை. அவற்றின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக இங்கு காண்போம்.

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்பது ஆன்றோர் வாக்கு. எண்களையும் எழுத்துகளையும் முறையோடு இணைத்துச் செயல்பட்டால் இயற்கை தரும் இன்ப- துன்பம், ஏற்ற- இறக்கம் போன்றவற்றை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும். ஞானிகளும் சித்தர்களும் முன்னோர்களும் கூறிய இக்கருத்தை, "வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என உணர்ந்து செயல்பட்டால், ஓரளவு வரும்முன் காக்கலாம்.

மந்திரம், தந்திரம், யந்திரம் என்பவை இறை சக்தியை மறைமுகமாகத் தந்து அருளைப் பெற வழிவகை செய்யும். நெடுங்காலமாக இதனைக் கடைப்பிடித்து பலர் உயரிய பலனைப் பெற்றுள்ளனர்.

பௌர்ணமியில்தான் முயல் குட்டிகளை ஈன்றெடுக்கும். இதனை விஞ்ஞானரீதியாக மாற்ற முடியாது. அதுபோல் நம் பிறப்பும் காலனின் கணக்கிற்கு ஏற்பவே நடைபெறுகிறது. அதையொட்டியே ஜாதகம் கணிக்கப்படுகிறது. அதில் காணப்படும் நல்லவை- கெட்டவை, பிறந்த தேதியில் காணப்படும் ஏற்ற- தாழ்வுகள் போன்றவற்றை யந்திரங்கள் மூலமாக சமன் செய்து, தீமைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.

ப் மந்திரங்கள் என்பவை முறையான உச்சரிப்புகளை கண்டிப்புடன் வைத்து செயல்படுபவை.


* தந்திரம் என்பது அயராது இறைவனை வேண்டி, சில அற்புத சக்திகளைத் தன்னகத்தே வைத்து, அதில் உயர்வான மனோபலம், ஆத்ம சக்தி பெற்று, பிறருக்காக அதனைப் பிரயோகிப்பது.


* யந்திரம் என்பது எண்கள், எழுத்துகள், வண்ணங்கள், பஞ்சபூத வடிவங்கள், அதற்குரிய உலோகங்கள், பீஜ மந்திரங்கள் ஆகியவற்றின் மூலமாக உருவாக்கப்படுவது. நம் ஜாதக நிலை, பிறந்த தேதி, உள்ளங்கை அமைப்பு போன்றவற்றை ஆராய்ந்து, அதில் உள்ள கெடுதலான அமைப்புகளைக் கண்டறிந்து, அதற்கேற்ப யந்திரங்களை உருவாக்கிப் பயன்படுத்தினால் நன்மைகள் பெறலாம்

No comments:

Post a Comment