Wednesday, June 8, 2011

கொடிசுற்றிப் பிறக்கும் குழந்தைக்கு தோஷ பரிகாரம்

கொடிசுற்றிப் பிறக்கும் குழந்தைக்கு தோஷ பரிகாரம்


  சில நேரங்களில் பிரசவத்தின் போது குழந்தைகள் கொடி சுற்றிப் பிறப்பார்கள்.
* ஒரு கொடி சுற்றினால் தாய்மாமனுக்கு ஆகாது என்றும்
* இரண்டு கொடி சுற்றினால் தாய்க்கு தோஷம் என்றும்
* மூன்று கொடி சுற்றினால் பிறந்த குழந்தைக்கு தோஷம் என்றும்
* பக்கவாட்டில் சுற்றினால் தந்தைக்கு தோஷம் என்றும்
* இடது பூரம் சுற்றினால் சகோதரிக்கு தோஷம் என்றும்
* வலது பூரம் சுற்றினால் சகோதரனுக்கு தோஷம் என்றும் கூறுவார்கள்.
எப்படிப்பட்ட தோஷம் என்றாலும் அதற்கு பரிகாரம் உள்ளது.
1) கொடி சுற்றிப் பிறந்த குழந்தை எந்த ராசியாய் இருந்தாலும் பவளம் அணிந்து கொள்வது நல்லது.
2) கொடி சுற்றிப் பிறந்த குழந்தைக்கு அதன் மேல் உள்ள கோடியில் ஒரு பாகத்தை எடுத்து தாய்மாமன் மூலம் கத்தியால் அதை வெட்டச் செய்யலாம்..
3) தாய் தன் குழந்தையைக் கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு இரும்புப் பாத்திரத்தில் நிறைய நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். பின் தாயும் பிள்ளையும் நல்லெண்ணையில் முகம் பார்க்க வேண்டும். இவர்கள் முகம் பார்க்கும் பொழுது வேறு யாரும் அவர்களைப் பார்க்காமல் திரையிட வேண்டும். அவர்கள் முகம் பார்த்ததும் அப்படியே இரும்புப் பாத்திரத்துடன் உள்ள எண்ணெய்யை யாருக்காவது தானம் அளித்து விட வேண்டும்.
மேலே குறிப்பிட்ட முறைகளில் ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றி தோஷத்தை கழிக்கலாம்

No comments:

Post a Comment