"எந்த ஒரு வினைக்கும் அதற்கு இணையான எதிர் வினை உண்டு." என்பது நவீன அறிவியல் நமக்குத் தந்த நியூட்டனின் மூன்றாம் விதி. நமது மரபியலில் இந்த ”வினையின் எதிர் வினை” ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பேசப் பட்டு வருகிறது.ஆனால் அவை மதம் சார்ந்த அல்லது ஒருவரின் எண்ணம்,செயல்,சிந்தனை சார்ந்த நம்பிக்கையின் அங்கமாக சொல்லப் பட்டிருக்கிறது.
ஒருவர் தனது முந்தைய பிறவிகளில் செய்த நல்வினை, தீவினை பலன்கள் அவர்களையே வந்து சேரும்.அதே போல பெற்றவர்கள் செய்த பாவ புண்ணியங்களின் பலன்கள் அவர்களின் சந்ததிகளுக்கு வந்து சேரும் என்கிற நம்பிக்கையும் உள்ளது.நம்மில் பலரும் இந்த கருதுகோளைத்தான் கொண்டிருக்கிறோம்.ஆனால், குதம்பைச் சித்தர் வித்தியாசமான ஒரு கருத்தினை முன் வைக்கிறார். அதாவது பெற்றோர்கள் செய்த பாவ புண்ணிய பலன்கள் சந்ததியினருக்கு வந்து சேராது. அதே போல பிள்ளைகள் செய்த தரும பலன்கள் பெற்றோரைச் சென்றடையாது. அவரவர் செய்த, செய்கிற வினைகளின் பலன் அவரவரையே சாரும் என்கிறார்.
"தந்தைதாய் செய்தவினை சந்ததிக்குஆமென்பார்
சிந்தை தெளிந்திலரேகுதம்பாய்
சிந்தை அதளிந்திலரே."
வெள்ளறிவு ஆகுமடிகுதம்பாய்
வெள்ளறிவு ஆகுமடி."
“என்னுடைய பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்னைக் காக்கவில்லையே" என்று யாராவது புலம்பினால் அது அவர்கள் அறியாமைக் குறிக்கும்.
No comments:
Post a Comment