கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்பு மூல விக்கிரத்தில் உள்ள சக்தியை கும்பத்துக்கு வரவழைப்பார்கள். அதாவது மூலவர் ஆற்றல் பிம்பத்தில் இருந்து கும்பத்துக்கு வந்து விடும்.
இதையடுத்து திருப்பணிகள் நடைபெறும். இதற்கிடையே கும்பத்தில் உள்ள சக்தியை பாலாயம் செய்து பூஜைகள் செய்து வருவார்கள். யாக சாலை பூஜைகள் தொடங்கியதும் பாலாலயத்தில் இருந்து சக்தியை பெற்று புனித நீர் நிரம்பிய கும்பத்தில் வைத்து சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படும்.
யாக சாலை பூஜைகள் முடிந்ததும் வேத பாராயணங்களால், திருமுறை பாராயணத்தால் சக்தி ஏற்றப்பட்ட புனித நீர் அபிஷேகம் செய்யப்படும். இதன் மூலம் மூலவர் விக்கிரகம் புதிய சக்தியை பெறும். மக்களும் அதன் அருளால் நன்மைகள் பெறுவார்கள்.
மகா கும்பாபிஷேகத்தின் போது புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்படும். இந்த புனித நீர் நம் மீது பட்டால் நமது பாவம் எல்லாம் தொலைந்து போகும். நாம் சுத்தப்படுத்தப்பட்டு விட்டோம் என்பது ஐதீ கமாகும்.
45 நாட்களுக்கு பலன் உண்டு
மகா கும்பாபிஷேகம் நடக்கும் போது கோவில் உள்ளேயும், பிரகாரங்களிலும் பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் நிறைந்து இருப்பார்கள். இதனால் சாதாரண பக்தர்கள் மகா கும்பாபிஷேகத்தை நேரில் கண்டுகளிக்க முடியாமல் போய் விடுவதுண்டு.
இது சாதாரண பக்தர்களுக்கு ஏமாற்றமாக கூட மாறலாம். ஆனால் ஆகம விதிகளை நன்கு அறிந்தவர்கள், "எந்த ஒரு பக்தரும் மனக்குறை அடைய தேவை இல்லை'' என்கிறார்கள். ஏனெனில் மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பிறகு 45 நாட்களுக்கு மண்டல பூஜைகள் தினமும் நடத்தப்படும்.
இந்த 45 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கோவிலுக்கு சென்று மனம் உருகி வழிபட்டால் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசிக்க இயலாத பக்தர்கள், அதன் பிறகு நடக்கும் 45 நாள் மண்டல பூஜையில் ஏதேனும் ஒரு நாள் பங்கேற்று முழுப் பலன்களையும் பெற முடியும்.
No comments:
Post a Comment