Wednesday, October 3, 2012

ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?

ஸ்ரீமத் பாகவதம் எனும் மகா புராணத்தில் 11 வது ஸ்கந்தத்தில் அவதூத - யது - ஸம்வாதம் என்ற 9 வது அத்தியாயத்தில் 24 வது சுலோகத்தில் யதுவம்சோ அவதீர்ணஸ்ய பவக: புருசோத்தம: சரஸ்சதம் வ்யதீதாய பஞ்ச விம்சாதிகம் ப்ரபோ: பொருள்: “புருசோத்தமரே! பிரபுவே! யதுவம்சத்தில் அவதரித்த தங்களுக்கு 125 ஆண்டுகள் சென்று விட்டன. இதில் கூறியிருப்பதன்படி ஸ்ரீ கிருஷ்ணன் பூலோக வாழ்க்கை 125 வருடங்கள். மகாபாரதம் ஆதிபர்வம் 115 வது அத்தியாயத்தில் பின் வரும் கால அட்டவணை இருக்கிறது. திருதராஷ்டிரருடன் அஸ்தினாபுர வாசம் - 13 வருடங்கள் அரக்கு மாளிகையில் - 1 வருடம் பாஞ்சால மன்னன் வீட்டில் - 1 வருடம் ஏகசக்ரபுரத்தில் - 1 வருடம் மீண்டும் திருதராஷ்டிரனுடன் - 5 வருடங்கள் இந்திரப்பிரஸ்தத்தில் தனி அரசு - 23 வருடங்கள் வனவாசமும், அஞ்ஞாதவாசமும் - 13 வருடங்கள் குருசேத்திர போருக்குப் பின்பு ஆட்சி - 36 வருடங்கள் இதன் பிறகு பர்சித் மகா சக்கரவர்த்திக்கு பட்டாபிசேகம் செய்து விட்டு மகா பிரஸ்தானம் இப்படி கணக்கெடுக்கும் போது, மொத்தம் 93 வருடங்கள். பாண்டவர்கள் அஸ்தினாபுரம் வந்த பொழுது; யுதிஷ்டிரன் வயது - 16 வருடங்கள் பீமன் வயது - 15 வருடங்கள் அர்ச்சுணன் வயது - 14 வருடங்கள் ஸ்ரீ கிருஷ்ணர் வயது அர்ச்சுணனை விட 3 மாதங்கள் அதிகம், தர்மரை விட பதின்மூன்றே கால் வருடம் குறைவு. இந்தக் கணக்குப்படி ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் வாழ்ந்தது 106 வருடங்கள் எனக் கணக்கிடப்படுகிறது.

No comments:

Post a Comment