Monday, October 1, 2012

காரைக்கால் அம்மையார்

மனித வாழ்க்கை குறைபாடு உடையது தான் முழுநிறைவான இறைவனை அடையவும் அருள்பெறவும் நம்மால் முடியுமா?முடியும் ,உள்ளம் உருகிக் கண்ணீர் மல்கி வணங்கி வழிபட்டால் இறைவன் நமக்கு எல்லாம் தருவான் , அவனை மறவாதிருந்தால் போதும்,நினைத்து நினைத்து நிறைந்து நிறைந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணிரதனால் உடம்பு நனைந்து நனைந்து போற்றி துதித்தல் போதும்.அதனால் தான் காரைக்கால் அம்மையார் சிவபெருமானைப் பார்த்து இறவாத இன்ப அன்பு வேண்டும்,பிரவாமை வேண்டும்,மீண்டும் பிறப்பு உண்டானால் உன்னை என்றும் எப்பொழுதும் மறவாமை வேண்டும்.மேலும் திருநடனம் புரியும் போது உன் அருகிலேயே நான் மகிழ்ந்து பாடிப் கொண்டு இருக்க வேண்டும் என்றார். ஆண்டவர் அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்தார் .காரைக்கால் அம்மையார்க்கு இறைவன் அருகிலே இடம் கிடைத்தது.

No comments:

Post a Comment